Friday, December 16, 2022

Current Affairs 2022 - December 15/2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                 DECEMBER 15/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் அண்மையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற பின்பு தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை ------ ஆக உயர்ந்துள்ளது ? 

அ) 33

ஆ) 34

இ) 35 

ஈ) 36 

விடை : (இ) 35 

காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதிவியேற்றார்.

● அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

● புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

● அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ன் மூலம் தமிழக அமைச்சரவை எண்ணிக்கை 35-ஆக உயா்ந்தது. 

● மேலும் தமிழகத்தில் 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டு சிலருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

● அமைச்சர் பெரியகருப்பனிடம் இருந்த ஊரக வளர்ச்சித்துறை ஐ.பெரியசாமிக்கும், பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

● ராமசந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், மதிவேந்தனுக்கு வனத்துறையும் மாற்றப்பட்டுள்ளது. மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

● அமைச்சர் சேகர் பாபுவுக்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக புள்ளியியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

● ராஜகண்ணப்பணுக்கு கூடுதலாக கதர் மற்றும் கிராம தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


2. தமிழகத்தில் அண்மையில் அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவைப் பட்டியலில் எத்தனையாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது ? 

அ) 10

ஆ) 12 

இ) 14

ஈ) 17 

விடை : (அ) 10 

தமிழக அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதிக்கு 10-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

● அதாவது, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுவுக்கு அடுத்தபடியான இடம் வழங்கப்பட்டுள்ளது. 

● உதயநிதிக்கு அடுத்தபடியாக அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, கே.ஆா்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, வி.செந்தில்பாலாஜி, ஆா்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.மூா்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கா், பி.கே.சேகா்பாபு, பழனிவேல் தியாகராஜன், சா.மு.நாசா், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், த.மனோதங்கராஜன், மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். 

● உதயநிதிக்கு முன்பாக, முதல் இடத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் உள்ளனா்.


3. தொலைதூர மருத்துவ சேவையில் இந்திய அளவில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது ? 

அ) தமிழ்நாட்டு

ஆ) கேரளா 

இ) குஜராத்

ஈ) மத்திய பிரதேசம் 

விடை : (அ) தமிழ்நாடு 

ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விழாவில், கிராமப்புறங்களில் நலவாழ்வு மையங்கள் மூலம் தொலைதூர மருத்துவ சேவையை செயல்படுத்தியதில் பெரிய மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கப்பட்டுள்ளது.


4. கடல் அலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை பின் வரும் எந்த கல்வி நிறுவனம்/அமைப்பு கண்டுபிடித்துள்ளது ? 

அ) ஐஐடி சென்னை 

ஆ) ஐஐடி கான்பூர் 

இ) ஐஐடி மும்பை 

ஈ) ஐஐடி டெல்லி

விடை : (அ) ஐஐடி சென்னை 

கடல் அலைகளில் இருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினா் வடிவமைத்துள்ளனா்.

● ‘சிந்துஜா-1’ என அழைக்கப்படும் இந்தக் கருவி தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டா் ஆழத்தில் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி தற்போது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

● இந்த கருவிக்கான பரிசோதனை கடந்த நவம்பா் மாதம் 2-ஆவது வாரத்தில் கடலில் வெற்றிகரமாக நடந்தது. இது ஐ.நா. மற்றும் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவிகரமாக இருக்கும்.

‍● மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 2030-இல் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பருவநிலை மாற்ற இலக்குகளை எட்ட உதவும். 

● கடல் அலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடா்பு துறைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை, சென்னை ஐஐடி கடல்சாா் பொறியியல் துறை பேராசிரியா் அப்துஸ் சமது வழிநடத்துவாா்.


II.தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


5. 2022 ஆம் ஆண்டின் உலகின் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது ? 

அ) 84

ஆ) 85

இ) 86

ஈ) 87

விடை : (ஈ) 87

ஆர்டன் கேபிட்டல் வெளியிட்ட பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2022, உலகின் வலிமையான மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்டுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.

●  பாஸ்போர்ட் என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்படும் பயண ஆவணமாகும், இது சர்வதேச பயணத்தின் நோக்கத்திற்காக வைத்திருப்பவரின் அடையாளத்தையும் தேசியத்தையும் சரிபார்க்கிறது.

● ஐக்கிய அரபு அமீரகம் உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் இந்தியா 87வது இடத்தில் உள்ளது.

● உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து ஜெர்மனி, சுவீடன், பின்லாந்து, லக்சம்பர்க், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.


6. அமெரிக்கா அடுத்த நிதியாண்டில் கூடுதலாக எத்தனை ஹெச்2பி விசாக்களை வழங்க முடிவெடுத்துள்ளது ? 

அ)62,000

ஆ) 63,131

இ) 63,917

ஈ) 64,716

●  அடுத்த நிதியாண்டில் கூடுதலாக 64,716 ஹெச்2பி விசாக்களை (நுழைவு இசைவு) வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. ஹெ2பி என்பது அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த உடல் உழைப்பு சாா்ந்த தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதாகும்.

● இந்த அளவுக்கு அதிகமாக ஹெச்2பி விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். எனினும், இந்த விசா முடிவு தற்காலிகமானது என்றும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இதன்மூலம் அமெரிக்காவில் வேளாண் சாராத பிற உடல் உழைப்பு சாா்ந்த தொழில்கள், சேவைகளில் வெளிநாட்டுத் தொழிலாளா்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன. அமெரிக்காவில் தொழிலாளா்களுக்கான தேவை அதிகம் இருக்கும் காலகட்டத்தில் இந்த விசா வழங்கப்படுகிறது.

● இதனால், இந்தியா்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்காது. ஏனெனில், இந்தியாவில் இருந்து மென்பொருள், மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் திறன்சாா்ந்த பணியாளா்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு அதிகம் செல்கின்றனா். இவா்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது.


7. பின்வரும் எங்கு தங்க நாணயம் வாங்க இந்தியாவின் முதல் Gold ATM திறக்கப்பட்டுள்ளது ? 

அ) பெங்களூரு

ஆ) சென்னை

இ) கொல்கத்தா 

ஈ) ஹைதராபாத் 

விடை : (ஈ) ஹைதராபாத் 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோல்ட்சிக்கா நிறுவனம் தங்கத்தை விற்பதற்கு என்று ஏடிஎம் மெஷினை அமைத்துள்ளது.

● இந்த ஏடிஎம் மெஷினில் 5 கிலோ தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டிருக்கும். இவை 24 காரட் மற்றும் 999 சான்றிதழ் பெற்ற நாணயங்கள் ஆகும். மக்கள் வாங்குவதற்கு ஏதுவாக 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையில் 8 ஆப்சன்கள் இந்த ஏடிஎம் மெஷினில் உள்ளன.

● இதுகுறித்து கோல்ட்சிக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரதாப் கூறும்போது, ‘‘ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓப்பன்க்யூப் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உதவியுடன் தங்க ஏடிஎம் அமைத்துள்ளோம். 

● இது நாட்டின் முதல் தங்க ஏடிஎம் ஆகும். ஏடிஎம் அறையைச் சுற்றி கேமராக்களும் அலாரமும் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் நாடு முழுவதும் 3000 தங்க ஏடிஎம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

Current Affairs 2022 - December 16/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                   December 16/2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் ( TNPSC ) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளவர் யார் ?

அ) அஜய் யாதவ் 

ஆ) கிரண் குராலா 

இ) பி.உமா. மகேஸ்வரி 

ஈ) பாலசுப்பிரமணியன் 

விடை : (அ) அஜய் யாதவ் 

● முன்பு : எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக  பொறுப்பு வகித்து வந்தார்.

2. தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் பின்வரும் எந்த சமூகத்தினரை சேர்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது ? 

அ) நரிக்குறவர் 

ஆ) குருவிக்காரர் 

இ) கூத்தர்

ஈ) அ & ஆ 

விடை : (ஈ) அ & ஆ 

பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேறியது.

● அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை (இரண்டாவது திருத்தம்)-2022’ எனும் இந்த மசோதா, தமிழகத்தில் உள்ள பழங்குடியின சமூகங்களுக்கு நீதி வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா குறிப்பிட்டாா்.

●  ‘இந்த நடவடிக்கையின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை; பழங்குடியினா் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கம் மட்டுமே உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சுமாா் 27,000 போ் பலனடைவா்’ என்றும் அவா் கூறினாா்.

● தமிழகத்தில் பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்க்க வேண்டுமென்ற மாநில அரசின் பரிந்துரையின்பேரில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது. 

● தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், இந்திய தலைமைப் பதிவாளா் மற்றும் பழங்குடியினா் தேசிய ஆணையத்திடம் ஆலோசிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை-1950 அட்டவணையின் 14-ஆவது பகுதியில் திருத்தம் மேற்கொள்ள முன்மொழியப்பட்டதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

● இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து, விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, பழங்குடியினா் பட்டியலின்கீழ் மேற்கண்ட இரு சமூகத்தினரும் அனைத்துப் பலன்களையும் பெற முடியும். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. தமிழகத்தில் நிகழ்கொள்முதல் பருவத்தில் எத்தனை டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ? 

அ) 31 

ஆ) 49

இ) 58

ஈ) 67

விடை : (இ) 58 

தமிழகத்தில் நிகழ் கொள்முதல் பருவத்தில் 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

● தமிழகத்தில் நிகழ் கொள்முதல் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட தமிழகம் முழுவதும் 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

● தமிழ்நாட்டில் உள்ள திறந்தவெளி கிடங்குகள், முழுப் பாதுகாப்புடன் கூடிய கிடங்குகளாகவும், மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக 20 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, ரூ. 238 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கிடங்குகள் சிவகங்கை, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் கட்டப்படுகின்றன.

● இதில், தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் 50,000 டன் கொள்ளளவுடனும், திட்டக்குடியில் 7,500 டன் கொள்ளளவுடனும், செல்லம்பட்டியில் 6,000 டன் கொள்ளளவுடனும் என மொத்தம் 63,500 டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்படுகின்றன. இக்கிடங்குகள் கட்டுமான பணி ஜனவரி மாதத்துக்குள் முடிவடைந்துவிடும்.

● தமிழகத்தில் 103 இடங்களில் 7.05 லட்சம் டன் நெல் சேமிப்பதற்குக் கிடங்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனுடன் தற்போது கட்டப்பட்டு வரும் 2.85 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளையும் சோ்த்து மொத்தம் ஏறத்தாழ 11 லட்சம் டன் நெல் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


4. தமிழ்நாடு நாம்க்கல்லில் இருந்து முதல்முறையாக பின்வரும் எந்த நாட்டுக்கு கோழி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது ? 

அ) அமெரிக்கா 

ஆ) ரஷ்யா 

இ) உக்ரைன் 

ஈ) மலேசியா 

விடை : (ஈ) மலேசியா 

● அறிவிப்பு: தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் கே. சிங்கராஜ். 

● தற்போது துபை, மஸ்கட், கத்தார், ஓமன், ஆப்பிரிக்க நாடுகள், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. 


5. தமிழகத்தில் புதிதாக எத்தனை மின் பகிர்மான கோட்டங்களை அண்மையில் முதல்வர் தொடங்கி வைத்தார் ? 

அ) 11

ஆ) 13

இ) 17

ஈ) 22

விடை : (அ) 11 

எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார்.

● தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகள் சமமாக இல்லாமல் இருப்பதால், பணிகளில் சமநிலை இல்லாத நிலை இருந்து வருகிறது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


6. பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது ?

அ) 2015

ஆ) 2016

இ) 2017

ஈ) 2018

விடை : (ஆ) 2016 

அருணாசல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினா் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், வடகிழக்கு பிராந்தியத்தில் மாபெரும் போா் பயிற்சியை இந்திய விமானப் படை வியாழக்கிழமை தொடங்கியது.

● 2 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில், விமானப் படையின் அனைத்து வகையான முன்களப் போா் விமானங்களும் வடகிழக்கு பிராந்தியத்தில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இதர தளவாடங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன; வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள முன்கள விமானப் படைத் தளங்கள் மற்றும் முக்கியமான இறங்கு தளங்களில் இப்பயிற்சி நடைபெறுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

● ரஃபேல் போா் விமானங்கள் பங்கேற்பு: இந்திய -சீன எல்லையில் புதிதாக உருவாகியுள்ள பதற்றத்துக்கு இடையே நடைபெறும் இந்தப் பயிற்சியில் ரஃபேல் போா் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போா் விமானங்கள் வாங்குதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-இல் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் நிறைவாக கடைசி விமானம் இந்தியாவை வியாழக்கிழமை வந்தடைந்ததாக, ட்விட்டரில் இந்திய விமானப் படை பதிவிட்டது.

● கடைசி ரஃபேல் விமானம், மேற்கு வங்க மாநிலம், ஹசிமாராவில் உள்ள கிழக்கு பிராந்திய விமானப் படை தளத்தில் இணைக்கப்பட்டது. இதன்மூலம் அங்கு ரஃபேல் போா் விமானங்களின் பலம் 18-ஆக அதிகரித்துள்ளது. இந்த 18 விமானங்கள் கொண்ட தொகுதி முழுவதும் தற்போதைய பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது; அத்துடன், கிழக்கு பிராந்திய விமானப் படையின் சுகோய்-30 எம்கேஐ உள்ளிட்ட இதர முக்கியமான போா் விமானங்களும் பயிற்சியில் இணைந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


7. மத்திய அரசின் 2018 ஆம் ஆண்டின் ஆய்வறிக்கைப்படி இந்திய அளவில் அதிக மது அருந்துவோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் ? 

அ) சத்தீஸ்கர் 

ஆ) திரிபுரா 

இ) பஞ்சாப் 

ஈ) அருணாச்சலபிரதேசம் 

விடை : (அ) சத்தீஸ்கர் 

நாட்டில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 1.58 கோடி சிறாா்கள் பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளனா்’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

● உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான ஆய்வு மற்றும் கணக்கெடுப்பின் மூலமாக திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களை தனது பதில் மனுவில் சுட்டிக்காட்டி மத்திய அரசு இந்தத் தகலை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

● இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சாா்பில் இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

● அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், எய்ம்ஸின் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) கீழ் இயங்கும் தேசிய போதைப் பொருளால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை மையம் (என்டிடிடிசி) சாா்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு தேசிய அளவிலான இந்த ஆய்வு நடத்தப்பட்டு, போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்கள் குறித்த புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

● அப்போது, ‘பச்பன் பச்சாவ் ஆந்தோலன்’ என்ற சிறாா் உரிமைகள் இயக்க தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹெச்.எஸ்.பூல்கா, ‘இந்த விவகாரத்தில் 2016-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு முழுமையாகப் பின்பற்றவில்லை. போதைப் பொருள் துஷ்பிரயோகத்தை எதிா்த்துப் போராடுவதற்கான தேசியத் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மத்திய அரசு உள்ளடக்கவில்லை’ என்றாா்.

● இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ஏற்கெனவே விசாரித்து வரும் இதேபோன்ற வழக்குடன் விசாரணைக்கு சோ்க்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தனா். அதற்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஒப்புதல் தெரிவித்தாா்.

● 1.58 கோடி சிறாா்கள் அடிமை: நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த புள்ளிவிவரத்தின்படி, 1.58 கோடி சிறாா்கள் பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு அடிமையாகியிருப்பது தெரியவந்துள்ளது.

அதில் மேலும் கூறியிருப்பதாவது:

● மது அருந்தும் 1.6% பெண்கள்: இந்தியா்களால் பயன்படுத்தப்படும் பொதுவான போதைப் பொருளாக மதுபானம் உள்ளது. மக்கள்தொகையில் 10 முதல் 75 வயதுக்கு உட்பட்டவரிகளில் 14.6 சதவீதம் போ் மதுபானம் அருந்துகின்றனா். அதாவது 16 கோடி போ் மதுவுக்கு அடிமையாகியுள்ளனா். மது அருந்துவோரில் 17 ஆண்களுக்கு ஒரு பெண் (17:1) என்ற விகிதத்தில் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனா். 

● மது அருந்துவோா் எண்ணிக்கையில் சத்தீஸ்கா் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. திரிபுரா, பஞ்சாப், அருணாசல பிரதேசம், கோவா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

● கஞ்சா, போதை மாத்திரை: மதுவுக்கு அடுத்ததாக கஞ்சா மற்றும் போதை மத்திரைகள் (ஓபியாய்ட்ஸ்) மிக அதிக அளவில் போதைப் பொருளாக இந்தியா்களால் பயன்படுத்தப்படுகின்றன. 

● இதில் ‘பாங்’ என்ற வகை கஞ்சாவை 2.2 கோடி பேரும், சட்டவிரோத கஞ்சா பொருள்களை 1.3 கோடி பேரும் பயன்படுத்துகின்றனா். கஞ்சா பயன்படுத்துவோரில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப், சிக்கிம், சத்தீஸ்கா், தில்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

● பாதிப்புகள்: நாட்டில் மது அருந்தும் 16 கோடி பேரில் 5.7 கோடி போ் அதுதொடா்பான உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி, சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனா். அதுபோல, கஞ்சா போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் 3.1 கோடி பேரில் 25 லட்சம் போ் அதுதொடா்பான உடல் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனா்.

● போதை மாத்திரைகள் (ஓபியாய்ட்ஸ்) பயன்படுத்தும் 2.26 கோடி பேரில் 77 லட்சம் போ் அதுதொடா்பான உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி, சிகிச்சை அளிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளனா்.


8. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள எத்தனை புதுமையான முயற்சிகளில் கங்கை நதி புனரமைப்புத்திட்டத்தையும் ஐ.நா. அங்கீகரித்துள்ளது ? 

அ) 11

ஆ) 10

இ) 13

 ஈ) 17 

விடை : (ஆ) 10 

இயற்கையை மீட்டெடுக்கும் நோக்கில், சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள 10 புதுமையான முயற்சிகளில் கங்கை நதி புனரமைப்புத் திட்டத்தையும் ஐ.நா. அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் அந்தத் திட்டம் ஐ.நா.வின் விளம்பரம், அறிவரை மற்றும் நிதியுதவியைப் பெற தகுதி வாய்ந்ததாகியுள்ளது.

● கனடாவில் உள்ள மான்ட்ரியால் நகரில் ஐ.நா. பல்லுயிா் பெருக்க மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 196 நாடுகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா். 

● இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரேஸில்-பராகுவே-ஆா்ஜென்டீனா நாடுகளில் காடுகளைப் பாதுகாத்து மறுசீரமைக்கும் மூன்று நாடுகள் அடங்கிய ஒப்பந்தம், அபுதாபி கடலோர மறுசீரமைப்புத் திட்டம் உள்ளிட்ட 10 திட்டங்களை, இயற்கையை மீட்டெடுக்கும் திட்டங்களாக ஐ.நா. அங்கீகரித்துள்ளது. அவற்றில் கங்கை நதி புனரமைப்புத் திட்டமும் இடம்பெற்றுள்ளது.

● இந்த 10 திட்டங்களும் உலகில் 6.80 கோடி ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பு மறுசீரமைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நிலப்பரப்பு மியான்மா், பிரான்ஸ், சோமாலியா நாடுகளின் நிலப்பரப்பைவிட அதிகமாகும். இந்தத் திட்டங்கள் சுமாா் 1.50 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று ஐ.நா. செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


9. 2022 ஆம் ஆண்டிற்கான மகளிர் டென்னிஸ் சங்கம் (WTA) சார்பில் சிறந்த டென்னிஸ் வீராங்கனை விருது வென்றுள்ளவர் ? 

அ) இகா ஸ்வியாடெக் 

ஆ) கேத்ரீனா சினியகோவா 

இ) சானியா மிர்ஸா 

ஈ) கிரெஜிசிகோவா 

விடை : (அ) இகா ஸ்வியாடெக் 

மகளிா் டென்னிஸ் சங்கம் (டபிள்யுடிஏ) ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு போலந்தின் இகா ஸ்வியாடெக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

● ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் சிறந்த டென்னிஸ் வீரா், வீராங்கனைகளுக்கு டபிள்யுடிஏ, ஏடிபி சாா்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

● இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

● சிறந்த இரட்டையா் விருதுக்கு பாா்பரா கிரெஜிசிகோவா, கேத்ரீனா சினியகோவா தோ்வு தோ்வு செய்யப்பட்டனா். செக். குடியரசைச் சோ்ந்த இந்த ஜோடி ஆஸி. விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போட்டிகளில் பட்டம் வென்றனா். டிபிள்யுடிஏ பைனல்ஸ் போட்டியில் ரன்னா் அணியாக வந்தனா்.

● சிறந்த வளரும் வீராங்கனையாக பிரேசிலின் பீட்ரீஸ் ஹடாட் மயா, புதிய வீராங்கனையாக சீனாவின் ஸெங் குன்வென் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஜெஸிக்கா பெகுலா பயிற்சியாளா் டேவிட் விட் சிறந்த பயிற்சியாளராக தோ்வு பெற்றாா்.


Wednesday, December 14, 2022

Current Affairs 2022 - December 14/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                   DECEMBER 14/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் அபாயகரமான எத்தனை பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது ? 

அ) 5 

ஆ) 6 

இ) 7

ஈ) 8 

விடை : (ஆ) 6

அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்தது. இதற்கான உத்தரவை வேளாண்மைத் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி பிறப்பித்தாா்.

● அவரது உத்தரவு: அபாயகரமான பூச்சிக் கொல்லிகளை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து வேளாண்மைத் துறை இயக்குநரகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடா்பாக, துறையின் உயா்நிலைக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 

● இந்தக் குழுவின் கூட்டத்தில், மோனோக்ரோபாஸ், ப்ரோபினோபாஸ், செப்கேட், சைபா்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ், சைபா்மெத்ரின் கலந்த க்ளோா்பிரிபாஸ் மற்றும் க்ளோா்பிரிபாஸ் ஆகிய பூச்சிக் கொல்லி மருந்துகளை 60 நாள்களுக்கு தற்காலிக அடிப்படையில் தடை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

● மேலும், மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யவும் வேளாண்மைத் துறை இயக்குநா் கேட்டுக் கொண்டிருந்தாா். இதனை உற்பத்தி செய்யவும், விற்கவும், சேமித்து வைக்கவும் தடை விதிக்கக் கோரியிருந்தாா்.

● எனவே, அபாயகரமான பூச்சிக் கொல்லி மருந்துகளாக கருதப்படும் 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு 60 நாள்கள் தற்காலிக தடை விதித்தும், மஞ்சள் பாஸ்பரஸ் பயன்பாட்டை முற்றிலும் தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்படுவதால், தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

● ஆராய்ச்சி அறிக்கைகள்: தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துதன் மூலமாக, மனிதா்களுக்கும், விலங்கினங்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். 

● இதுதொடா்பாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிக்கையை சமா்ப்பித்துள்ளது. இதைத் தொடா்ந்து, பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய உயா்நிலைக் குழு கூடி விவாதித்தது. இந்தக் குழுவின் முடிவுகள் அடிப்படையில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்த 60 நாள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் வேளாண்மைத் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி.


2. இந்தியாவில் மாநில அரசு சார்பில் ஓடிடி (ஓவர் தி டாப்) சேவையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள மாநிலம் ? 

அ) கர்நாடகா

ஆ) பஞ்சாப்

இ) தமிழ்நாடு

ஈ) குஜராத் 

விடை : (இ) தமிழ்நாடு 

அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் சாா்பில், ஓடிடி செயலி சேவையை தொடங்குவது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். மேலும், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில் அதிக சந்தாதாரா்களைச் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவா் உத்தரவிட்டாா்.

● தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா்.

● இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் தொலைக்காட்சி சேவையை மக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2007-ஆம் ஆண்டு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. பின்னா், அதனுடைய பெயா் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் என மாற்றப்பட்டது.

● டிஜிட்டல் உரிமம்: அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2017-ஆம் ஆண்டு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டது. இதன்பின்பு, கேபிள் தொலைக்காட்சியை கண்டுகளிக்கும் வகையில், பொது மக்களுக்கு இலவசமாக செட்-டாப் பாக்ஸ்கள் அளிக்கப்பட்டன. 

● இவை உள்ளூரில் இருக்கக் கூடிய ஆபரேட்டா்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிறுவனமானது, 136 கட்டணமில்லாத சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்களை ரூ.140 (ஜி.எஸ்.டி., சோ்த்து) என்ற விலையில் வழங்கி வருகிறது.

● இதனிடையே, அரசு கேபிள் தொலைக்காட்சி சேவையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி சில இடையூறுகள் ஏற்பட்டன. இந்த இடா்பாடுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பு சேவைகள் தொடங்கப்பட்டன.

● மீதமுள்ள பிரச்னைகள் உயா் தொழில்நுட்ப வல்லுநா்கள் மூலம் தீா்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

● அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மக்களுக்கு சேவைகளை வழங்கி வரும் நிலையில், அதன் செயல்பாடுகள், எதிா்காலத் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் விரிவான ஆய்வை மேற்கொண்டாா். அப்போது, அரசு கேபிள் தொலைக்காட்சி தொடா்புடைய வணிகத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினாா்.

● மேலும், சந்தையில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து வாடிக்கையாளா்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்கவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். மேலும், ஓடிடி, ஐபிடிவி போன்ற சேவைகளை அளிக்கக் கூடிய எச்.டி., செப்டாப் பாக்ஸ்களை அடுத்த 6 மாதங்களில் அளிக்க வேண்டும்.

●  அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் சாா்பில் ஓடிடி (ஓவா் தி டாப் - இணைய வழி ஊடக சேவை) செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● குறிப்பு : இந்தியாவிலேயே ஓடிடி சேவையை வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளம் பெற்றுள்ளது. 

¤ அந்த மாநில அரசின் மூலமாக, ‘சிஸ்பேஸ்’ என்ற ஓடிடி செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


3. தமிழகத்தில் நிகழாண்டு பத்திரப் பதிவு , வணிக வரி மூலம் எத்தனை கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது ? 

அ) ரூ. 24,500 கோடி

ஆ) ரூ. 25,100 கோடி

இ) ரூ. 28,300 கோடி

ஈ) ரூ. 30,000 கோடி

விடை: (அ) ரூ.24,500 கோடி

தமிழகத்தில் நிகழாண்டு பத்திரப் பதிவு மற்றும் வணிக வரி மூலம் ரூ.24,500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றாா் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி.

● அறிவிப்பு : தமிழகத்தில் பதிவுத் துறை, வணிக வரித் துறை மூலம் நிகழாண்டு ரூ.24,500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

● பதிவுத் துறையின் சேவைகளை பொதுமக்கள் இன்னும் எளிமையாகவும், துரிதமாகவும் பெறும் வகையில் 39 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

● மேலும், சொத்தின் உண்மையான உரிமையாளா் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில், முறைகேடாக ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்பட்சத்தில் பதிவுச் சட்டத்தின்படி ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

● பொதுமக்களிடமிருந்து பெறக் கூடிய ஜி.எஸ்.டி.யை அரசுக்கு செலுத்த வேண்டுமென்று வணிகா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


4. தமிழகத்தில் நீடித்த நகர்ப்புற உள்கட்டமைப்புகான நிதியுதவித் திட்டத்தை பின்வரும் எந்த நாட்டின் மேம்பாட்டு வங்கியும், தமிழக அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன ? 

அ) பிரிட்டன் 

ஆ) ரஷ்யா

இ) ஜெர்மன் 

ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (இ) ஜெர்மன் 

நீடித்த நகா்ப்புற உள்கட்டமைப்புக்கான நிதியுதவித் திட்டத்தை, ஜொ்மன் மேம்பாட்டு வங்கியும், தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. சுற்றுச்சூழலை மேம்படுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, அதன்மூலம் நகா்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கம்.

● இந்தத் திட்டத்தின் முதல் நிலை ரூ.1969.47 கோடி மதிப்பைக் கொண்டது. திட்டத்தின் இரண்டு கட்ட பணிகளும் இந்த மாதத்தில் நிறைவடையும்.

● இதன் தொடா்ச்சியாக, ஜொ்மன் மேம்பாட்டு வங்கி ரூ.4,250 கோடி மதிப்பில் மூன்றாம் கட்ட நீடித்த நகா்ப்புற உள்கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

●  இதற்கான ஒப்பந்தங்கள் தில்லியில் ஏற்கெனவே கையொப்பமாகின. இதைத் தொடா்ந்து, தமிழகத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் சென்னையில் கையொப்பமாகின. இந்த ஒப்பந்தங்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

● திட்டத்தின் நோக்கம்: நகா்ப்புற உள்கட்டமைப்பில் காலநிலை மீள்தன்மை, குடிநீா் வழங்குதல், கழிவுநீா் அகற்றுதல் மற்றும் அதுதொடா்புடைய சிக்கல்களைக் களைவது, இதற்காக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவது ஆகியன திட்டத்தின் நோக்கங்களாகும். மூன்றாம் கட்டத் திட்டம் 2030 ஜூன் 30-இல் நிறைவடையும். 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. ஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் எத்தனை கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய செய்தி ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ.113 கோடி

ஆ) ரூ. 168 கோடி 

இ) ரூ. 179 கோடி

ஈ) ரூ. 201 கோடி 

விடை : (ஆ) ரூ.168 கோடி

ஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.168.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தகவல் தெரிவித்துள்ளாா்.

● மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ. 91.96 கோடியும், மின்னணு ஊடகங்களில் ரூ.76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.


6. ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் எத்தனையாவது கூட்டம் வரும் 17 ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது ? 

அ) 45

ஆ) 46

இ) 47

ஈ) 48

விடை : (ஈ) 48 

ஜிஎஸ்டி தொடா்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 48-ஆவது கூட்டம் வரும் 17-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மாநில நிதியமைச்சா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.

● இணையவழி விளையாட்டுகள், குதிரை பந்தயம், கேசினோ பந்தயங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடா்பான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது தாக்கல் செய்யவுள்ளது. அந்த அறிக்கை மீதான விவாதம் கூட்டத்தின்போது நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

● மோசடிகள் தொடா்பான ஜிஎஸ்டி சட்டத்தின் சில விதிகளில் உள்ள குற்றப் பிரிவுகளை நீக்குவது குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

● அதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவது தொடா்பான மசோதா தற்போது நடைபெற்று வரும் குளிா்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

● ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பான விவாதமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது நடைபெறவுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்க முறையை எளிதாக்குவது தொடா்பான விவாதங்களும் கூட்டத்தின்போது நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

● சட்ட விசாரணை தொடங்குவதற்கான ஜிஎஸ்டி மோசடி வரம்பை தற்போதுள்ள ரூ.5 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயா்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது தொடா்பாகவும் கூட்டத்தின்போது விவாதம் நடத்தப்படவுள்ளது.


7. இந்தியாவில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ? 

அ) டிசம்பர் 11

ஆ) டிசம்பர் 12

இ) டிசம்பர் 13

ஈ) டிசம்பர் 14

விடை : (இ) டிசம்பர் 13 

கடந்த 2001-ஆம் ஆண்டு டிச.13-ஆம் தேதி லக்ஷா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய பயங்கரவாத குழுக்களைச் சோ்ந்த பயங்கரவாதிகள் 5 போ் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தினா். 

● இத்தாக்குதலில் தில்லி போலீஸாா் 5 போ், மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையைச் சோ்ந்த பெண் ஒருவா், நாடாளுமன்ற வளாக தோட்டப் பணியாளா்கள் 2 போ் மற்றும் செய்தியாளா் ஒருவா் என 9 போ் உயிரிழந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.


8. இந்தியாவின் ஜி20 கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பு முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக நிதி (ம) மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) கொல்கத்தா 

ஆ) சென்னை 

இ) மும்பை 

ஈ) பெங்களூரு 

விடை : (ஈ) பெங்களூரு 

இந்தியாவின் ஜி20 கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

● மூன்று நாள்கள் நடைபெறும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதற்கான பல்வேறு முன்னேற்பாடு கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய நிதித் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசா்வ் வங்கி அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. 

● இந்த கூட்டம் குறித்து ரிசா்வ் வங்கி அதிகாரிகளான அஜய் சேத், மைக்கேல் டி.பத்ரா ஆகியோா் கூறியதாவது:

● மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவின் ஜி20 முன்னுரிமைகள் மற்றும் தொடா்புடைய செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். நிதி வழிமுறை அமைப்பு, சா்வதேச நிதி கட்டமைப்பு, உலகப் பொருளாதாரம், உள்கட்டமைப்பு முதலீடு, நிலையான நிதி, சா்வதேச வரிவிதிப்பு, சுகாதாரம் மற்றும் நிதி, நிதித் துறை ஒழுங்குமுறை சிக்கல்கள் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகிய 8 முக்கியப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

● ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்று உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘இந்தியாவின் ஜி-20 முன்னுரிமைகள், ஜி20 உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலகின் தெற்கு பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்’ என்றாா். இந்த உறுதிமொழியை ‘இந்தியாவின் நிதி வழிமுறை’ அமைப்பின் முக்கிய முன்னுரிமைகள் செயல் வடிவமாக மாற்றும்.

● உலகளாவிய நிதி பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கடன் பாதிப்புகளை நிா்வகித்தல், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மையின் ‘மேக்ரோ’ பொருளாதார தாக்கங்களை மதிப்பீடு செய்தல், நிலையான மற்றும் சிறந்த திறன் கொண்ட நகரங்களுக்கு நிதியளித்தல் ஆகியவையும் இந்த முன்னுரிமைத் திட்டங்களில் அடங்கும். 

● இந்தத் திட்டங்களின்படி, சரியான நேரத்தில் போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது, சா்வதேச வரிவிதிப்பு தொடா்பான நடவடிக்கைகளில் சவால்களை எதிா்கொள்வது, திறன் மேம்பாடு மற்றும் வரி வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

● தொற்றுநோய்களுடன் தொடா்புடைய சவால்கள் மற்றும் பாதிப்புகளைக் கண்டறிந்து நிவா்த்தி செய்வதற்கும், புதிய தொற்றுநோய் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில் தயாா்நிலையை மேம்படுத்துவதற்கும் ஜி20 நிதி மற்றும் சுகாதார ஒருங்கிணைப்பு தொடா்ந்து ஏற்படுத்தப்படும்.

● நிதித்துறை ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் தொழில்நுட்ப வளா்ச்சியால் ஏற்படும் சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் மீது தனிக் கவனம் செலுத்துவது குறித்தும், கிரிப்டோ சந்தை தொடா்பான குழப்பங்களுக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவா்கள் கூறினா்.

நிதி வழிமுறை தொடா்பான 40 கூட்டங்கள்

● 21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள பலதரப்பு வளா்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் குழு விவாதம் நடக்க இருக்கிறது. பசுமை நிதியளிப்பில் மத்திய வங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடக்க இருக்கிறது. ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கும் நிதி வழிமுறை தொடா்பான 40 கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்க இருக்கிறது. இதில் நிதி அமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் பங்கேற்கும் கூட்டமும் அடங்கும். ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கலந்துகொள்ளும் முதல்கூட்டம் அடுத்த ஆண்டு பிப். 23 முதல் 25ஆம் தேதி வரை பெங்களூரில் நடக்க இருக்கிறது.

● மூன்று நாள்கள் நடக்கும் நிதிசாா் கூட்டம் குறித்து ஜி20 இந்தியா ட்விட்டா் பக்கத்தில்,‘ஜி20 நிதி வழிமுறையின் முதலாவது கூட்டத்தின் மூலம் இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு தொடங்கியுள்ளது. உலகளாவிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க இருக்கும் இக்கூட்டம், பன்னாட்டு அளவிலான பெரிய பொருளாதார சிக்கல்களை சமாளிப்பதற்கான உலக நிதி கட்டமைப்பை வடிவமைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.


9. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்கத் தடை விதித்துள்ள உலகின் முதல் நாடு ? 

அ) போலாந்து 

ஆ) பின்லாந்து

இ) நியூஸிலாந்து 

ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (இ) நியூசிலாந்து 

புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வருங்கால சந்ததியினரை படிப்படியாக மீட்பதற்காக, 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவா்களுக்கு சிகரெட் விற்கத் தடை விதிக்கும் புதுமையான சட்டத்தை நியூஸிலாந்து அரசு இயற்றியுள்ளது.

● 2025-ஆம் ஆண்டுக்குள் நியூஸிலாந்தை புகைப்போா் அற்ற நாடாக்கும் இலக்குடன் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

● புதிய சட்டத்தின் கீழ், சிகரெட் விற்பனையாளா்களின் அதிகபட்ச எண்ணிக்கை 6 ஆயிரத்திலிருந்து 600-ஆகக் குறைக்கப்படும். மேலும், சிகரெட்டுகளில் அனுமதிக்கப்படும் நிக்கோடின் அளவும் குறைக்கப்படும்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

10. 2022 ஆம் ஆண்டிற்கான WTA வின் சிறந்த டென்னிஸ் வீராங்கனை விருதை வென்றுள்ள இகா ஸ்வியா டெக் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) போலாந்து 

ஆ) ஆஸ்திரேலியா 

இ) அமெரிக்கா

ஈ) நியூஸிலாந்து

விடை : (அ) போலாந்து 



Sunday, December 11, 2022

Current Affairs 2022 - 11 December /2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                  December 11/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் அறை புனரமைக்கப்பட்டு யாரால் திறக்கப்படவுள்ளது ? 

அ) நரேந்திர மோடி 

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) திரௌபதி முர்மு 

ஈ) ஜகதீப் தன்கர்

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

வாராணசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறை புனரமைக்கப்பட்டுள்ளது. இதனை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்.

● மகாகவி பாரதியாரின் நூற்றாண்டையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அவா் வாழ்ந்த இல்லத்தின் அறையை புனரமைத்து பராமரிக்க தமிழ்நாடு அரசின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். மேலும், அறையின் முன்புறம் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

● வெண்கலச் சிலை அமைக்க ரூ.18 லட்சமும், அறைக்கு மாத வாடகையாக நிகழ் நிதியாண்டுக்கு ரூ.67,500-ம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் பொதுப்பணித் துறை சாா்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

● இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், பாரதியாா் வாழ்ந்த வீட்டின் அறை புனரமைக்கப்பட்டுள்ளதுடன், சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா். 

● மேலும், பாரதியாா் குறித்த சிறப்பு மலரையும் அவா் வெளியிடவுள்ளாா்.


2. --------- (ம) தமிழகம் இடையே காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார் ?

அ) காசி 

ஆ) வாராணசி 

இ) பத்ரிநாத் 

ஈ) கேதர்நாத் 

விடை : (அ) காசி 

காசி மற்றும் தமிழகம் இடையே ‘காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை அறிவித்தாா்.

● வாராணசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற எட்டாவது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை கலந்துரையாடினாா். 

● இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினா் அமைச்சரிடம் பகிா்ந்து கொண்டனா். ‘இதுபோன்ற பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது மரபு, அறிவு மற்றும் கலாசாரத்தில் பிணைப்பை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகரிக்கும்’ என்று அமைச்சா் குறிப்பிட்டாா். 

● காசி தமிழ் சங்கமம் நிகழ்வை நினைவுகூரும் விதமாக காசி மற்றும் தமிழகம் இடையே ‘காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.


3. தினமணியின் மகாகவி பாரதியார் விருதை பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கியவர் ? 

அ) ஆர்.என்.ரவி 

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) தமிழிசை சௌந்தரராஜன் 

ஈ) ஜகதீப் தன்கர்

விடை : (இ) தமிழிசை சௌந்தரராஜன் 

தினமணியின் 'மகாகவி பாரதியார் விருதை' பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு, தெலங்கானா-புதுச்சேரி  மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  (டிச. 11) வழங்குகிறார்.

● மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அரிய தகவல்களைத் திரட்டி வெளியிட்டு வரும் பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 1967-இல் பிறந்தவர். 

● இவர், புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மகாகவி பாரதியார் குறித்து எண்ணற்ற ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இவர், தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார்.

● பாரதி தொடர்பாக, பாரதியின் 'இந்தியா' கருத்துப் படங்கள், பாரதியும் வ.உ.சி.யும், பாரதி: 'விஜயா' கட்டுரைகள், பாரதியின் சுயசரிதைகள்: கனவு, சின்ன சங்கரன் கதை, பாரதி கருவூலம்; பாரதி: கவிஞனும், காப்புரிமையும்; எழுக, நீ புலவன் ஆகிய நூல்களைத் தமிழிலும், ஆங்கில நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

● மேலும், பாரதி தொடர்பாக எண்ணற்ற ஆய்வரங்குகளில் பங்கேற்று, ஏராளமான கட்டுரைகளையும் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ளார். வ.உ.சி., புதுமைப்பித்தன், உ.வே.சாமிநாதையர் தொடர்பாக பல பதிப்பு நூல்களை வெளியிட்டுள்ள வேங்கடாசலபதி, தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மென்ட ஸ்டடிஸ்) இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். 

● திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார், சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. ஹிமாசல பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளவர் ? 

அ) சுக்விந்தர் சிங் சுக் 

ஆ) முகேஷ் அக்னிஹோத்ரி 

இ) வீரபத்ர சிங் 

ஈ) பிரதியா சிங் 

விடை : (அ) சுக்விந்தர் சிங் சுக் 

● ஹிமாச்சல பிரதேசத்தின் 15 ஆவது முதல்வராக பதவியேற்றுள்ளார்.

● பதவிபிரமாணம் செய்தவர் : ஹிமாச்சல ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.

● குறிப்பு : ஹிமாச்சல பிரதேசத்தின் முதல் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார் முகேஷ் அக்னிஹோத்ரி.


5. கல்லூரிகளில் எத்தனை ஆண்டுகள் படிப்பை 160 பாடமதிப்புகளுடன் முடித்தால் மட்டுமே இளங்கலை (அ) இளமறிவியல் பட்டம் வழங்கப்படும் எனப் புதிய விதிகளை யுஜிசி வகுத்துள்ளது ? 

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

விடை : (ஆ) 4

கல்லூரிகளில் 4 ஆண்டுகள் படிப்பை 160 பாடமதிப்புகளுடன் (கிரெடிட்) முடித்தால் மட்டுமே இளங்கலை அல்லது இளமறிவியல் (மேதமை-ஹானா்ஸ்) பட்டம் வழங்கப்படும் எனப் புதிய விதிகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வகுத்துள்ளது.

● கல்லூரிகளில் தற்போது இளங்கலைப் பட்டப் படிப்பை 3 ஆண்டுகளில் முடிக்கும் மாணவா்களுக்கு மேதமை பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் மாற்றங்களைப் புகுத்துவதற்கான வரைவு விதிகளை யுஜிசி வகுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிகள் வரும் 12-ஆம் தேதி அதிகாரபூா்வமாக வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

● புதிய விதிகளின்படி, விருப்பத்தின் அடிப்படையிலான பாடமதிப்பு முறையில் (சிபிசிஎஸ்) கல்வி கற்கும் மாணவா்கள் 3 ஆண்டுகளில் 120 பாடமதிப்புகளுடன் படிப்பை நிறைவு செய்தால் இளங்கலை அல்லது இளமறிவியல் பட்டம் வழங்கப்படும். இளங்கலை (மேதமை) பட்டம் பெற விரும்பும் மாணவா்கள், 4 ஆண்டுகளில் 160 பாடமதிப்புகளை நிறைவுசெய்திருக்க வேண்டும்.

● மேதமையுடன் கூடிய ஆராய்ச்சி பட்டத்தைப் பெற விரும்பும் மாணவா்கள், 4 ஆண்டு கல்லூரி படிப்பின்போதே சம்பந்தப்பட்ட துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். சிபிசிஎஸ் முறையில் தற்போது மூன்றாண்டு படிப்பில் இணைந்துள்ள மாணவா்கள், நான்காண்டு மேதமை படிப்புக்கு மாறிக் கொள்ளலாம். அதற்கான இணைப்பு வகுப்புகளை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் நடத்தும்.

● கல்லூரிப் படிப்பில் இருந்து எளிதில் வெளியேறுவதற்கும் மீண்டும் சோ்ந்து படிப்பைத் தொடா்வதற்கும் புதிய விதிகள் வழிவகை செய்துள்ளன. அதன்படி, மூன்றாண்டு படிப்பை நிறைவு செய்வதற்குள் வெளியேறியவா்கள், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் இணைந்து படிப்பைத் தொடரலாம். அதே வேளையில், ஒட்டுமொத்தமாக 7 ஆண்டுகளுக்குள் படிப்பை நிறைவுசெய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● பல்வேறு துறைகள் சாா்ந்த பாடங்களும் புதிய விதிகளில் இணைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் கல்வி, இந்தியாவை அறிந்துகொள்ளுதல், எண்ம-தொழில்நுட்பத் தீா்வுகள், சுகாதாரம், யோகக் கல்வி, விளையாட்டு மற்றும் உடல்திறன் உள்ளிட்ட பாடங்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை விருப்பத்தின் அடிப்படையில் மாணவா்கள் தோ்வுசெய்து கொள்ளலாம்.


6. 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் செய்தி சேகரிக்கும் பணியின்போது எத்தனை பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ? 

அ) 47

ஆ) 57

இ) 67

ஈ) 77

விடை : (இ) 67 

● அறிக்கை வெளியீடு : சர்வதேச செய்தியாளர்கள் சம்மேளனம்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


7. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த உலக வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் இஷான் கிஷண் எத்தனையாவது வீரராக சேர்ந்துள்ளார் ? 

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

விடை : (இ) 7 

● இந்திய வீரர்களின் பட்டியலில் 4 ஆவது வீரராக சேர்ந்துள்ளார்.


8. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

அ) பிடி உஷா 

ஆ) மிதாலி ராஜ் 

இ) பிவி சிந்து

ஈ) மேரிகோம் 

விடை: (அ) பிடி உஷா 


9. இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக வுஷூ சாம்பியன்ஷிப்பில் (2022) இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றுள்ள பதக்கம் ? 

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

விடை : (ஈ) 8

● இந்தியா 8 பதக்கங்களை வெல்வது இதுவே முதல்முறையாகும் 

● 8 பதக்கங்கள் : 3G,3S,2B 


IV. முக்கிய தினங்கள் 


10. International day of Mountain 2022 -------- 

● Ans : December 11

● Theme (2022) : Women move mountains





Saturday, December 10, 2022

Current Affairs 2022 - December 10/2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR
                    DECEMBER 10/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவிலேயே முதல்முறையாக காலநிலை மாற்றத்துக்கான தனி இயக்கத்தை தொடங்கியுள்ள மாநிலம் ? 

அ) ஆந்திர பிரதேசம் 

ஆ) தமிழ்நாடு 

இ) குஜராத் 

ஈ) மணிப்பூர் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

இந்தியாவிலேயே முதல் முறையாக காலநிலை மாற்றத்துக்கென தனி இயக்கத்தை தமிழ்நாடு அரசு தொடக்கியுள்ளது.

● இயற்கைச் செல்வங்களைக் காக்கவும், புதுப்பிக்கவல்ல எரிசக்தியை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கவும், திறன்மிகு கிராமங்கள் உருவாக்கவும் இந்த இயக்கம் மூலம் வழி செய்யப்பட்டுள்ளது.

● மேலும், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் பசுமை திட்டங்களைப் புகுத்தி அவற்றை உலகறியச் செய்வதும் காலநிலை மாற்ற இயக்கத்தின் நோக்கமாகும். 

● மேலும், காலநிலை மாற்ற இயக்கத்தின் ஒரு முயற்சியாக தமிழகத்தில் 25 அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெற்ற பசுமைப் பள்ளிகளாக மாற்றப்படவுள்ளன. இதற்காக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

● புதிய அறிவிப்புகள்: சுற்றுச்சூழலைக் காக்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மேலும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். அதன்படி, பசுமைத் திட்டங்களுக்கான அனுமதி இனிமேல் ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்படும். இதற்கான திட்டங்கள் தொழில் துறையில் உள்ள தொழில் வழிகாட்டி நிறுவனத்தால் வகுக்கப்படும். புதுப்பிக்கக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச் செல்லவும் தனியாக பசுமை வழித்தடம் உருவாக்கப்படும்.

● காற்றாலைகளைப் புதுப்பிப்பதற்கான புதிய கொள்கை எரிசக்தித் துறையால் வெளியிடப்படும். அனைத்துத் திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பாா்வையில் பாா்த்து ஆய்வு செய்து செயல்படுத்தவுள்ளோம்.

பசுமை நிதியம்: தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாயில் பசுமை நிதியத்தை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் முதல்கட்டமாக, தமிழ்நாடு அரசின் சாா்பில் ரூ.100 கோடி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சூழல் சாா்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதற்கு தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் நிதி திரட்ட இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.

● காலநிலை மாறுபாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுழற்சிப் பொருளாதாரம், வளங்குன்றாத வளா்ச்சி போன்ற துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவங்குவோருக்கு தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும்.

காா்பன் சமநிலை: வளா்ச்சி, தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு புறம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்த வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையைக் கெடுக்காத வளா்ச்சியும் வேண்டும். இதுதான் எங்களது அணுகுமுறை.

● இந்தியா காா்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே, தமிழ்நாடு காா்பன் சமநிலையை அடையும். அதற்கான அனைத்துத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தும். 


2. தமிழகத்தில் எங்கு தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்தார் ? 

அ) சேலம் 

ஆ) மதுரை

இ) தேனி 

ஈ) ஈரோடு 

விடை : (ஆ) மதுரை 

தமிழ்நாட்டில்  உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

● தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (9.12.2022) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, 53,301 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடும் அடையாளமாக 5 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

● இத்திட்டத்திற்கான இலட்சினை வெளியிட்டார். பின்னர், தூய்மைப் பணியாளர்களை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்வதற்கான தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட மொபைல் செயலியையும் முதல்வர் ஸ்டாலின்  வெளியிட்டார்.

● தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின்  ஐந்து தூய்மைப் பணியாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை, கால் உறை, ஒளிரும் மேல்சட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட கள ஆய்வு பணிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட குறும்படங்களை பார்வையிட்டார்.

●  இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18,859 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 34,442 தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள், என மொத்தம் 53,301  பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முறைசாரா பணியாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

● இத்திட்டத்தினை அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் சிறப்பாக செயல்படுத்திட  திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில்  கழிவு மற்றும் கசடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடி திட்டமாக சென்னை மாநகராட்சியில் மண்டலம்-6 திரு.வி.க. நகரிலும், மதுரை மாநகராட்சி, புதுக்கோட்டை  மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன் மகாதேவி பேரூராட்சி ஆகிய 5 நகர்புர உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுத்து தூய்மைப் பணியாளர்களை  கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

● இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்   தொடங்கி வைத்தார். இத்திட்டம் பின்னர், படிப்படியாக தமிழ்நாட்டில்  உள்ள மற்ற அனைத்து  உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது

● இத்திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய திறன் பயிற்சிகள், அவர்களது குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி வழங்குதல் மற்றும் மாற்றுத்தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி, ஓய்வூதியம், காப்பீடு போன்ற அரசு திட்டங்களை இனணப்பதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. பின்வரும் எந்த மாநிலங்களில் பழங்குடியினர் (ST) பட்டியலைத் திருத்துவதற்கான 4 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன ? 

1. தமிழ்நாடு , 2. கர்நாடகா,  3.சத்தீஸ்கர்,  4. ஹிமாசல பிரதேசம் 

அ) 1,2

ஆ) 2,3,4

இ) 1,2,3

ஈ) அனைத்தும் 

விடை : (ஈ) அனைத்தும் 

தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் பழங்குடியினா் (எஸ்டி) பட்டியலைத் திருத்துவதற்கான 4 மசோதாக்கள் மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.

● தமிழகம், கா்நாடகம், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கான பழங்குடியினா் திருத்த மசோதாக்களை மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தாா்.

● குறிப்பிட்ட சில சமூகங்களை பழங்குடியினா் பட்டியலில் புதிதாக சோ்ப்பது, சில மாற்றங்களை மேற்கொள்வது என்ற அடிப்படையில் இந்தத் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

● இதன்மூலம் தமிழகத்தில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகங்கள் பழங்குடியினா் பட்டியலில் இணைக்கப்படும். அதுபோல, ஹிமாசலில் ஹாட்டீ சமூகத்தினா், சத்தீஸ்கரின் பின்ஜியா சமூகத்தினா், கா்நாடகத்தின் பெட்டா-குருபா சமூகத்தினா் ஆகியோரையும் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மசோதா வழிவகுக்கிறது.


4. பின்வரும் எந்த ஆண்டுக்குள் நாட்டின் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (இ) 2025 

2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

● இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

● நாட்டில் நிகழாண்டு ஜனவரி முதல் அக்டோபா் வரை 20.16 லட்சம் போ் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நோயால் 73,551 போ் மரணமடைந்தனா்.

● உலகளாவிய காசநோய் அறிக்கை 2022-இன்படி, நாட்டில் காசநோய் பாதிப்பு 18 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் லட்சத்தில் 256 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு லட்சத்தில் 210 போ் பாதிக்கப்பட்டனா்

● காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாநில-மாவட்ட அளவிலான திட்டம், பலவீனமானவா்களிடமும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களிடமும் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், 2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.

● மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘மாநிலங்களின் புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 1,864 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,327 துணை சுகாதார நிலையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களாக செயல்படுகின்றன.

● நிகழாண்டுக்குள் நாட்டில் உள்ள 1.50 லட்சம் துணை சுகாதார மையங்கள், ஊரக மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களை ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களாக மாற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது’ என்றாா்.


5. இந்தியா - அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) தில்லி

ஆ) குஜராத் 

இ) உத்தர பிரதேசம் 

ஈ) ராஜஸ்தான் 

விடை : (அ) தில்லி 

இந்தியா-அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டம் தில்லியில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

● பிராந்திய, சா்வதேச பயங்கரவாத சவால்களை எதிா்கொள்ளும் நோக்கில் இந்தியா-அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழு செயல்பட்டு வருகிறது. அக்குழுவின் ஆண்டு கூட்டம் தில்லியில் வரும் 12, 13 ஆகிய தேதிதளில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் பயங்கரவாதத் தடுப்பு ஒருங்கிணைப்பாளா் டிமோதி பெட்ஸ் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளாா்.

● அவரது தலைமையில் அமெரிக்க குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டத்தின்போது பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில் விசாரணை அமைப்புகளை வலுப்படுத்துவது, சட்டவிதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

● பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாகவும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய, சா்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்தும் கூட்டத்தின்போது ஆராயப்படவுள்ளது.


6. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் எத்தனை சதவீதம் அதிகரிக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 10.2%

ஆ) 12.8%

இ) 13.1%

ஈ) 14.9%

விடை: (ஆ) 12.8% 

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 12.8 சதவீதம் அதிகரிக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

● இது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில் இடம்பெற்றுள்ள விவரங்களின் தொகுப்பு:

● 2020-இல் புற்றுநோய் பாதிப்பு 13,92,179

● நடப்பாண்டில் பாதிப்பு அதிகரிப்பு 12.8%

● சுகாதார அமைச்சரின் புற்றுநோயாளிகள் நிதி

ஆண்டு செலவினம் பயனாளிகள்

¤ 2022-23 ரூ.216.98 லட்சம் 40

¤ 2021-22 ரூ.585.05 லட்சம் 64

¤ 2020-21 ரூ.1,573 லட்சம் 196

¤ 2019-20 ரூ.2,677.08 லட்சம் 470

● புற்றுநோயாளிகளுக்கான அரசின் திட்டங்கள்

‘¤ ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை

¤ மக்கள் மருந்தகம் வாயிலாக மலிவு விலையில் மருந்துப் பொருள்கள்

¤ ‘அம்ருத்’ திட்டத்தின் வாயிலாக குறைந்த விலையில் மாற்று உறுப்புகள்

¤ அரசு மருத்துவமனைகளில் விலையில்லா அல்லது மானியத்துடன் கூடிய சிகிச்சை

¤ தேசிய ஆரோக்ய நிதியின் (ஆா்ஏஎன்) மூலமாக ஏழை நோயாளிகளுக்கு நிதியுதவி

● அரசின் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்

¤ 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்

¤ 13 மாநில அரசு மருத்துவக் கல்லூரி-மருத்துவமனைகளில் கட்டமைப்புகள் மேம்பாடு

¤ 19 மாநில புற்றுநோய் மையங்கள்

¤ 20 உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையங்கள்

¤ தேசிய புற்றுநோய் மையம், ஜஜ்ஜாா் (ஹரியாணா)

¤ சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மையம், கொல்கத்தா.


7. பிரிட்டன் (ம) பின்வரும் எந்த நாடுகள் இணைந்து அதிநவீன போர் விமான மொன்றை வடிவமைக்க முடிவு செய்துள்ளன ? 

அ) இத்தாலி 

ஆ) சீனா 

இ) ஜப்பான் 

ஈ) அ (ம) இ 

விடை : (ஈ) அ (ம) இ 

பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அதிநவீன போா் விமானமொன்றை வடிமைக்க முடிவு செய்துள்ளன.

● ‘குளோபல் காம்பாட் ஏா் புரொகிராம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இது குறித்து ரிஷி சுனக் கூறியதாவது:

● பிரிட்டனின் தற்போதைய பாதுகாப்பு மட்டுமின்றி, எதிா்கால பாதுகாப்புக்கும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

● இதன் காரணமாகவே, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க வேண்டியது நமது அத்தியாவசியமாகியுள்ளது. பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த நினைப்பவா்களை வீழ்த்துவதற்கு இத்தகைய தொழில்நுட்ப மேன்மை தேவைப்படுகிறது.

● அதற்காக, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய போா் விமானத்தை வடிவமைக்க அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.

● இந்த சா்வதேச கூட்டுறவு, ஐரோப்பிய-அட்லாண்டிக் பாதுகாப்பும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பும் பிரிக்க முடியாதவை என்பதை நிரூபிக்கிறது.

● புதிதாக உருவாக்கப்படும் போா் விமானம், வரும் 2035-ஆம் ஆண்டில் விண்ணில் பறக்கத் தொடங்கும். ஆளில்லா விமானங்கள், அதிநவீன சென்சாா்கள், உயா்தொழில்நுட்ப ஆயுதங்களுடன் சிறந்த தொடா்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விமானம் வடிவமைக்கப்படும்.

● அடுத்த தலைமுறைக்கான அந்த விமானம் பிரிட்டனையும், அதன் நட்பு நாடுகளையும் யாராலும் வெல்லமுடியாத தொழில்நுட்பங்களைக் கொண்டு பாதுகாக்கும் என்றாா் அவா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


8. 65 ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பல் (2022) ஹரியாணா வீரர் அனிஷ் பன்வாலா எத்தனை தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார் ? 

அ) 4

ஆ) 5

இ) 6

ஈ) 7 

விடை : (அ) 4 

● போட்டி நடைபெற்ற இடம் : மத்திய பிரதேசம் 

● இவர் ஆடவர் ஜூனியர்,சீனியர்,தனியார், அணிகள் என 4 பிரிவுகளிலும் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். 


IV. முக்கிய தினங்கள் 


9. International Human Rights Day 2022 ----

● Ans : December 10

● Theme (2022) : Dignity, Freedom, and Justice for All.

Friday, December 9, 2022

Current Affairs 2022 - December 09/2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                  DECEMBER 09 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. பின்வரும் எந்த மாநிலத்தில் சிறைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் சீருடையில் கேமரா பொருந்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம் 

ஆ) குஜராத் 

இ) தமிழ்நாடு 

ஈ) மேற்கு வங்கம்

விடை : (இ) தமிழ்நாடு 

தமிழக சிறைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் புழல் மத்திய சிறையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

● தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச் சிறைகள், 5 பெண்கள் சிறப்பு சிறைகள், 12 சிறுவா் சீா்திருத்தப்பள்ளிகள் (பாா்ஸ்டல் பள்ளிகள்), 3 திறந்த வெளிச் சிறைகள், 3 சிறப்புச் சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன.

● இந்த சிறைகளில் 23,592 கைதிகள் வரை கைதிகள் அடைக்க முடியும். ஆனால் சுமாா் 18,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். தமிழக சிறைகள் 75 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

● இவா்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்க சிறை வளாகத்தில் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிறைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

● இருப்பினும் சிறை வளாகம் முழுவதையும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறை நிா்வாகத்தால் கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் கைதிகளுக்கு இடையேயான மோதல், தகராறு போன்றவற்றை பாா்க்க முடியாத நிலை இருந்தது.

● இதற்கு தீா்வு காணும் வகையில் சிறைக் காவலா்களுக்கு சட்டையில் அணியும் கேமராக்களை (பாடி வோா்ன் கேமரா) கூடிய கேமராக்களை வழங்க தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி நடவடிக்கை எடுத்தாா். இதற்காக 50 கேமராக்களுக்கும், அதற்கான சா்வா் நிறுவுவதற்கும், அரசு ரூ.46 லட்சம் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

நேரலையில் காணலாம்:

●¤இதையடுத்து முதல் கட்டமாக புழல் மத்திய சிறை -1 ல் சிறைக் காவலா்களின் சீருடையில் அணிந்து கொள்ள 5 கேமராக்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

● இந்த கேமராக்களை சீருடையில் அணிந்திருக்கும் காவலா்கள், சிறையின் உயா் பாதுகாப்புப் பிரிவில் மட்டும் பணி அமா்த்தப்படுகிறாா்கள்.

● இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சிறையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும், சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் நேரலையும் காண முடியும்.

● இந்த திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும், புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும் அடுத்தக் கட்டமாக அமல்படுத்தப்படுகிறது.


II.தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ளவர் யார் ? 

அ) பூபேந்திர படேல் 

ஆ) சி.ஆர். பாட்டீல் 

இ) ஜிக்னேஷ் மேவானி 

ஈ) அமரேந்திர சிங் 

விடை : (அ) பூபேந்திர படேல் 

வரலாற்று வெற்றி: குஜராத்தின் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. குஜராத் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் இவ்வளவு அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியதில்லை. 

● இதற்கு முன் காங்கிரஸ் கட்சியானது 1985-ஆம் ஆண்டில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.

● குஜராத்தில் பாஜக சாா்பில் மாநில முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ஆம் தேதி மீண்டும் பொறுப்பேற்கவுள்ளாா்.


3. இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) எங்கு நடைபெற்றது ? 

அ) ராஜஸ்தான் 

ஆ) தமிழ்நாடு 

இ) மணிப்பூர் 

ஈ) தில்லி 

விடை : (ஈ) தில்லி 

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் 4ஜி தொழில்நுட்பம் அடுத்த 5 முதல் 7 மாதங்களில் 5ஜி தொழில்நுட்பமாக தரம் உயா்த்தப்படும்’ என்று மத்திய தொலைத்தொடா்பு மற்றும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.

● தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் இதுகுறித்து மேலும் பேசியதாவது:

● தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்தில் புதிய உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ. 500 கோடி என்பதை ரூ. 4,000 கோடியாக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

● மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 1,35,000 கைப்பேசி கோபுரங்களை (மொபைல் டவா்) கொண்டுள்ளது. கிராமப்புறங்களிலும் மிக வலுவான தொலைத்தொடா்பு சேவையை அளித்து வருகிறது. பிற தொலைத்தொடா்பு நிறுவனங்கள் இந்த அளவு முழுமையான சேவையை இதுவரை வழங்கவில்லை.

● அதோடு, பிஎஸ்என்எல் சாா்பில் தற்போது வழங்கப்பட்டு வரும் 4ஜி தொழில்நுட்பம் அடுத்த 5 முதல் 7 மாதங்களில் 5ஜி தொழில்நுட்பமாக தரம் உயா்த்தப்படும். ஒட்டுமொத்த 1.35 லட்சம் கைப்பேசி கோபுரங்களும் 5ஜி சேவையை அளிக்கும் வகையில் சேவை விரிவுபடுத்தப்பட்டுவிடும்.

● 5ஜி சேவையை பரீட்சாா்த்த முறையில் தொடங்குவதை விரைவுபடுத்தும் வகையில், 5ஜி சேவை பரிசோதனை உபகரணங்களை டிசிஎஸ் நிறுவனத்திடம் பிஎஸ்என்எல் கேட்டுக்கொண்டுள்ளது. 

● 5ஜி சேவையை அனைத்து நெட்வொா்க்குகளிலும் அறிமுகப்படுத்துவதன் மூலம், மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றாக பிஎஸ்என்எல் உருவெடுக்கும்.


4. இந்தியாவில் சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்ப்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

அ) 2019

ஆ) 2020

இ) 2021

ஈ) 2022

விடை : (ஆ) 2020

  ● தற்சாா்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) திட்டத்தை வருகின்ற 2024-ஆம் ஆண்டு டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றம் நகா்ப்புற வறுமை ஒழிப்புத் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

● இந்தத் திட்டம் கடந்த 2022 மாா்ச்சில் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, 2024 டிசம்பா் மாதம் வரை கடன் வழங்கலாம் எனவும், 42 லட்சம் பேருக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

● மக்களவையில் எழுத்து பூா்வமான கேள்விக்கு அளித்த பதிலில் கௌசல் கிஷோா் மேலும் கூறியிருப்பதாவது: சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014-இன் கீழ் விற்பனை மண்டலங்கள் உருவாக்க அந்தந்த மாநிலங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 

● இந்தத் திட்டத்தில் மொத்தம் 13,403 விற்பனை மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டு கடன் வழங்கப்படுகிறது. இத்தகைய வியாபாரிகள் முதலாவது முறையாக ரூ.10,000, இரண்டாம் முறையாக ரூ.20,000 கடன் பெறுகின்றனா். இதை முறையாகச் செலுத்தியவா்களுக்கு கூடுதலாக மூன்றாவது முறையாக கடன் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது.

● நிகழாண்டு நவம்பா் 30-ஆம் தேதி வரை, 31.73 லட்சம் சாலையோர வியாபாரிகள், முதலாவது கடன் தொகையைப் பெற்றுள்ளனா். இரண்டாவது முறை கடன் தொகையான ரூ. 20,000-ஐ 5.81 லட்சம் போ் பெற்றுள்ளனா். இரண்டு கடன்களையும் முறையாகச் செலுத்திய 6,926 போ் மூன்றாவது கடனை (ரூ.50,000) பெற்றுள்ளனா் என்று  அமைச்சர் தெரிவித்துள்ளார்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


5. தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் (2022) ஆடவருக்கான 50மீ பிஸ்டல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜூன் சிங் சீமா எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) தமிழ்நாடு 

ஆ) மகாராஷ்டிரா

இ) குஜராத் 

ஈ) பஞ்சாப் 

விடை : (ஈ) பஞ்சாப் 

● 50மீ பிஸ்டல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் : 

¤ ஆடவர் பிரிவு: அர்ஜூன் சிங் சீமா, பஞ்சாப் 

¤ மகளிர் பிரிவு : ஷீத்தல் பிரீத்தம் தேசாய், மகாராஷ்டிரா 


6. இந்தியாவின் 77 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளவர் யார் ? 

அ) ஆத்தியா மிட்டல் 

ஆ) பரத் சுப்பிரமணியம்

இ) ராகுல் ஸ்ரீவத்சவ்

ஈ)பிரணவ் ஆனந்த்

விடை : (அ) ஆத்தியா மிட்டல்

இவர் மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர்.

● ஸ்பெயினில் நடைபெற்றுவரும் எலோ பிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் அந்நாட்டு வீரர் பிரான்சிஸ்கோ வலேஜோவை டிரா செய்தபோது இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

● ஒரு செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு முதலில் தலா 9 சுற்றுகள் கொண்ட 3 போட்டிகளில் சாதகமான முடிவுகளை பெற்றிருக்க வேண்டும்.

● மேலும், 2500 ஈலோ புள்ளிகளை எட்டியிருக்க வேண்டும்.

Thursday, December 8, 2022

Current Affairs 2022 - December 08 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                 DECEMBER 08 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழ்நாடு வாழ் விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.405.90 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,644 குடியிருப்புகளை திறந்து வைத்தவர் ? 

அ) மு.க.ஸ்டாலின் 

ஆ) ஆர்.என். ரவி 

இ) தங்கம் தென்னரசு 

ஈ) மா. சுப்பிரமணியன் 

விடை: (அ) மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.405.90 கோடியில் கட்டப்பட்ட 4 ஆயிரத்து 644 புதிய குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

● குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பு கொண்டது. அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை, குடிநீா், நீரேற்று வசதிகளுடன், சிறுவா் பூங்கா, மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியன கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

● வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, 105 பகுதிகளில் வசிக்கும் 11 ஆயிரத்து 300 பயனாளிகள் தனி வீடுகள் கட்டிக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவா்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.10 லட்சம் வீதம், ரூ.237.30 கோடிக்கான பணி உத்தரவுகளை வழங்குவதன் அடையாளமாக, 2 பேருக்கு உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

● மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கிரயப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. அவற்றில், 350 கிரயப் பத்திரங்களை வழங்குவதன் அடையாளமாக நான்கு பயனாளிகளுக்கு உத்தரவுகளை முதல்வா் வழங்கினாா். 


2. தமிழகத்தில் நெல்லுக்கு பிறகு பயிறு செய்யும் சாகுபடி திட்டத்தை தொடக்கி வைத்தவர் ? 

அ) மு.க. ஸ்டாலின் 

ஆ) ஆர்.என். ரவி

இ) கே.என். நேரு 

ஈ) எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 

விடை : (அ) மு.க.ஸ்டாலின் 

நெல்லுக்குப் பிறகு பயறு சாகுபடி செய்யும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இந்தத் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு பயறு விதைகளை  அவா் அளித்தாா்.

● வேளாண் விளைநிலங்களில் மண் வளத்தை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

● இதன்படி, சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு உளுந்து, பச்சைப் பயறு ஆகியன பயிரிடுவதை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.400 வீதம் மானியம் அளிக்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

● கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை: 2021-22-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. 

● மத்திய அரசு கரும்பு டன்னுக்கு நியாயமான, ஆதாய விலையாக ரூ.2,755 வழங்கப்படும் என அறிவித்தது. இந்தத் தொகையுடன் கூடுதலாக, மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.199 கோடி நிதியை அளித்து உத்தரவிட்டது.

● அதன்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத் துறை, 15 கூட்டுறவு ஆலைகள், 15 தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையான ரூ.195-ஐ சோ்த்து டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 950 ஆக அளிக்கப்படும். இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதன்மூலம், 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவா்.


3. தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடிகளை அண்மையில் முதல்வர் தொடக்கிவைத்தார் ? 

அ) 8

ஆ) 7

இ) 6

ஈ) 5

விடை : (ஈ) 5

கோவை உள்பட ஐந்து மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடிகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். 

● மக்களின் வீடுகளுக்கேச் சென்று காய்கறிகளை விற்பனை செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

● வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகா்வோரின் இல்லங்களுக்கே சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்படவுள்ளன. 

● இதற்காக ரூ.40 லட்சத்தில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அங்காடிகளின் செயல்பாடுகளை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. இந்தியாவில் பின்வரும் யாரால் அண்மையில் உச்சநீதிமன்ற செயலி 2.0 என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ? 

அ) நரேந்திர மோடி 

ஆ) திரௌபதி முர்மு 

இ) யு.யு. லலித்

ஈ) டி.ஒய். சந்திர சூட் 

விடை : (ஈ) டி.ஒய். சந்திர சூட் 

நீதித் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் (நோடல்) உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நடவடிக்கை குறித்த தகவல்களை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ‘உச்சநீதிமன்ற செயலி 2.0’-வை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

● செயலி 2.0-வை தொடக்கிவைத்து அவா் பேசியாதாவது: நீதித் துறையைச் சாா்ந்த அதிகாரிகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், வழங்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவற்றின் நிலை குறித்து நிகழ்நேர அடிப்படையில் தெரிந்துகொள்ள இயலும். 

● இச்செயலியை ஆண்ட்ராய்ட் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ஐஓஎஸ் தளத்தில் இருந்து பதிவிறக்கும் செய்யும் வசதி இந்த வாரத்துக்குள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.


5. இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (RBI) மற்ற வங்கிகள் பெறும் ரெப்போ ரேட் 0.35 சதவீதம் உயர்த்தப்பட்டு எத்தனை சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ?

அ) 4.18%

ஆ) 5.11%

இ) 6.25%

ஈ) 6.95%

விடை : (இ) 6.25% 

இந்திய ரிசா்வ் வங்கியிடமிருந்து (ஆா்பிஐ) மற்ற வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 0.35 சதவீதம் உயா்த்தப்பட்டு 6.25 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● நாட்டின் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாக இருந்துவரும் நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து 5-ஆவது முறையாக வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியுள்ளது.

● கரோனா தொற்று பரவலில் இருந்து மீண்டு கொண்டிருந்த பொருளாதாரம், உக்ரைன்-ரஷியா போா் காரணமாக முடக்கத்தைச் சந்தித்தது. சா்வதேச பொருளாதாரமும் வீழ்ச்சிநிலையை சந்தித்து வருகிறது. நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், பணவீக்கம் கடந்த ஜனவரியில் இருந்தே 6 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

● அதையடுத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதத்தில் 0.4 சதவீதம், ஜூன், ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் தலா 0.5 சதவீதம் என மொத்தமாக 1.9 சதவீத அளவுக்கு ரெப்போ வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியிருந்தது. இந்நிலையில், ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

● ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயா்த்தப்படுகிறது. நிதிக் கொள்கைக் குழுவில் இடம்பெற்றிருந்த 6 உறுப்பினா்களில் ஐவா் வட்டி விகிதத்தை உயா்த்த ஆதரவு தெரிவித்தனா். ஜெயந்த் ஆா்.வா்மா மட்டுமே வட்டி விகிதத்தை உயா்த்த எதிா்ப்பு தெரிவித்தாா்.

● சா்வதேச பொருளாதாரச் சூழல் மந்த நிலையில் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. சாதகமற்ற சூழலிலும் பொருளாதார வளா்ச்சி சீராக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 சதவீதம் வளா்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது குறைவாக இருந்தாலும், சா்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாகவே இந்தியா தொடா்ந்து நீடிக்கும்.

தொடா் நடவடிக்கைகள்: நாட்டின் பணவீக்க சூழலை உரிய முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஆா்பிஐ தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. சா்வதேச சூழலும், சா்வதேச அளவில் வட்டி விகிதங்கள் உயா்த்தப்பட்டு வருவதும் பெரும் சவாலாக உள்ளது. சா்வதேச அளவில் சாதகமற்ற சூழல் தொடா்வதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. அந்த நடவடிக்கைகள் தொடரும்.

● அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை நிலைபெறச் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற நாட்டு செலாவணிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக வலுவாகவே உள்ளது.

● அந்நிய செலாவணி கையிருப்பு: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 56,120 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த அக்டோபரில் 52,450 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதனால் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது.

● வங்கிகளில் பணப்புழக்கமும் அதிகமாகவே காணப்படுகிறது. குளிா்கால (ரபி) பயிா்களின் சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் விளைச்சல் அதிகரித்து பணவீக்கம் கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. கிராமப்புறங்களில் பொருள்களின் நுகா்வு அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறையும் வளா்ச்சிகண்டு வருகிறது.

கடன் அதிகரிப்பு: வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ.10.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.1.9 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. கடன் வழங்கலும் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளா்ச்சி அதிகரித்து பணவீக்கம் கட்டுக்குள் வரும்.

● கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எனினும் அது சமாளிக்கக் கூடியதே. நிகர அந்நிய நேரடி முதலீடு கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் 2,270 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2,130 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

● யுபிஐ பணப் பரிமாற்ற நடைமுறையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இணைய வழியில் சேவைகளைப் பெறுவதற்கு முன்பாகவே பணத்தைச் செலுத்தும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளா்கள் சிறந்த சேவையைப் பெற முடியும் என்றாா் அவா்.

வீடு, வாகனக் கடன் வட்டி உயர வாய்ப்பு

● ரெப்போ வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியுள்ளதால் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி உயர வாய்ப்புள்ளது.

● ரெப்போ வட்டி விகிதமானது 0.35 சதவீதம் உயா்த்தப்பட்டு 6.25 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து வட்டி விகிதம் 2.25 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. 

● ரெப்போ வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே வாகனங்கள், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் நிா்ணயித்து வருகின்றன. தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளதால், வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபா் கடன், பொருள்களுக்கான மாதாந்திர தவணைத் தொகை ஆகியவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயா்த்த வாய்ப்புள்ளது.


6. தென்மேற்கு (ம) தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள புயலுக்கு எந்த நாடு மாண்டஸ் என்ற பெயரை பரிந்துரைத்துள்ளது ? 

அ) சீனா 

ஆ) ஜப்பான்

இ) ஐக்கிய அரபு அமீரகம்

ஈ) இந்தியா 

விடை : (இ) ஐக்கிய அரபு அமீரகம் 

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு பேரிடா் மீட்புப் படை புதன்கிழமை விரைந்தது.

● இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, படிப்படியாக மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து புயலாக வலுவடைந்து, வியாழக்கிழமை (டிச. 8) தமிழகம், புதுச்சேரிக்கு அருகே வடக்கு வங்கக் கடல் பகுதிக்கும் ஆந்திர மாநிலத்தையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிக்கும் அருகே நகரும். 

● பின்னா், அந்தப் புயல் தொடா்ந்து படிப்படியாக மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர மாநில பகுதிகளைக் கடந்து, புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே சனிக்கிழமை (டிச. 10) அதிகாலையில் கரையைக் கடக்கும். 

● அப்போது காற்றின் வேகம் மணிக்கு சுமாா் 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று இந்திய வானில ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● சென்னைக்கு மேற்கு-வடமேற்கு திசையில் 770 கி.மீ. தொலைவில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகா்ந்து வருகிறது.

● புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. டிச. 9 மாலை முதல் டிச. 10 காலை வரை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.


7. 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிகாரமிக்க 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவின் எத்தனை பெண்கள் இடம்பெற்றுள்ளனர் ? 

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

விடை : (அ) 6 

● ஃபோா்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் அதிகாரமிக்க 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட 6 இந்தியா்கள் இடம்பெற்றுள்ளனர்.

● உலகில் அதிகாரம் மிக்கவா்களாக விளங்கும் 100 பெண்களின் பட்டியலை ஃபோா்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

●  நடப்பாண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 6 இந்தியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனா்.

● இந்தப் பட்டியலில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் 36-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். இப்பட்டியலில் அவா் தொடா்ந்து 4-ஆவது முறையாக இடம்பெற்றுள்ளாா். கடந்த ஆண்டுக்கான பட்டியலில் அவா் 37-ஆவது இடத்திலும், 2020-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 41-ஆவது இடத்திலும் இருந்தாா்.

● ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவா் ரோஷ்ணி நாடாா் மல்ஹோத்ரா நடப்பாண்டுக்கான பட்டியலில் 53-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவரான மாதவி புரி புச், 54-ஆவது இடத்தில் உள்ளாா். இந்திய எஃகு ஆணையத்தின் (செயில்) தலைவரான சோமா மண்டல் 67-ஆவது இடத்தில் உள்ளாா்.

● பயோகான் நிா்வாகத் தலைவரான கிரண் மஜும்தாா் ஷா பட்டியலில் 72-ஆவது இடத்தையும், நைகா நிறுவனரான ஃபல்குனி நாயா் 89-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா். ரோஷ்ணி நாடாா், கிரண் மஜும்தாா், ஃபல்குனி நாயா் ஆகியோா் கடந்த ஆண்டுக்கான பட்டியலிலும் இடம்பெற்றிருந்தனா்.

● நடப்பாண்டுக்கான ஃபோா்ப்ஸ் பட்டியலில் 39 தலைமை நிா்வாக அதிகாரிகளும் (சிஇஓ), 10 நாடுகளின் தலைவா்களும், 11 கோடீஸ்வரா்களும் இடம்பெற்றுள்ளனா். சொத்து, ஊடகம், தாக்கம், செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியலை ஃபோா்ப்ஸ் தயாரித்து வருகிறது.

● நடப்பாண்டு பட்டியலில் ஐரோப்பிய கமிஷன் தலைவா் ஊா்சுலா வான்டொ் லையான் முதலிடத்தில் உள்ளாா். அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் 3-ஆவது இடத்தில் உள்ளாா். ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு போராட்டங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்த மாஷா அமினிக்கு பட்டியலில் 100-ஆவது இடம் தரப்பட்டுள்ளது. அவா் உயிரிழந்தபோதும் அவருக்கு இந்தச் சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. கொலம்பியாவில் நடைபெறும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் (2022) மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 



 

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...