Saturday, December 10, 2022

Current Affairs 2022 - December 10/2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR
                    DECEMBER 10/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவிலேயே முதல்முறையாக காலநிலை மாற்றத்துக்கான தனி இயக்கத்தை தொடங்கியுள்ள மாநிலம் ? 

அ) ஆந்திர பிரதேசம் 

ஆ) தமிழ்நாடு 

இ) குஜராத் 

ஈ) மணிப்பூர் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

இந்தியாவிலேயே முதல் முறையாக காலநிலை மாற்றத்துக்கென தனி இயக்கத்தை தமிழ்நாடு அரசு தொடக்கியுள்ளது.

● இயற்கைச் செல்வங்களைக் காக்கவும், புதுப்பிக்கவல்ல எரிசக்தியை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கவும், திறன்மிகு கிராமங்கள் உருவாக்கவும் இந்த இயக்கம் மூலம் வழி செய்யப்பட்டுள்ளது.

● மேலும், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் பசுமை திட்டங்களைப் புகுத்தி அவற்றை உலகறியச் செய்வதும் காலநிலை மாற்ற இயக்கத்தின் நோக்கமாகும். 

● மேலும், காலநிலை மாற்ற இயக்கத்தின் ஒரு முயற்சியாக தமிழகத்தில் 25 அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெற்ற பசுமைப் பள்ளிகளாக மாற்றப்படவுள்ளன. இதற்காக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

● புதிய அறிவிப்புகள்: சுற்றுச்சூழலைக் காக்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மேலும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். அதன்படி, பசுமைத் திட்டங்களுக்கான அனுமதி இனிமேல் ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்படும். இதற்கான திட்டங்கள் தொழில் துறையில் உள்ள தொழில் வழிகாட்டி நிறுவனத்தால் வகுக்கப்படும். புதுப்பிக்கக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச் செல்லவும் தனியாக பசுமை வழித்தடம் உருவாக்கப்படும்.

● காற்றாலைகளைப் புதுப்பிப்பதற்கான புதிய கொள்கை எரிசக்தித் துறையால் வெளியிடப்படும். அனைத்துத் திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பாா்வையில் பாா்த்து ஆய்வு செய்து செயல்படுத்தவுள்ளோம்.

பசுமை நிதியம்: தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாயில் பசுமை நிதியத்தை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் முதல்கட்டமாக, தமிழ்நாடு அரசின் சாா்பில் ரூ.100 கோடி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சூழல் சாா்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதற்கு தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் நிதி திரட்ட இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.

● காலநிலை மாறுபாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுழற்சிப் பொருளாதாரம், வளங்குன்றாத வளா்ச்சி போன்ற துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவங்குவோருக்கு தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும்.

காா்பன் சமநிலை: வளா்ச்சி, தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு புறம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்த வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையைக் கெடுக்காத வளா்ச்சியும் வேண்டும். இதுதான் எங்களது அணுகுமுறை.

● இந்தியா காா்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே, தமிழ்நாடு காா்பன் சமநிலையை அடையும். அதற்கான அனைத்துத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தும். 


2. தமிழகத்தில் எங்கு தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்தார் ? 

அ) சேலம் 

ஆ) மதுரை

இ) தேனி 

ஈ) ஈரோடு 

விடை : (ஆ) மதுரை 

தமிழ்நாட்டில்  உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

● தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (9.12.2022) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, 53,301 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடும் அடையாளமாக 5 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

● இத்திட்டத்திற்கான இலட்சினை வெளியிட்டார். பின்னர், தூய்மைப் பணியாளர்களை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்வதற்கான தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட மொபைல் செயலியையும் முதல்வர் ஸ்டாலின்  வெளியிட்டார்.

● தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின்  ஐந்து தூய்மைப் பணியாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை, கால் உறை, ஒளிரும் மேல்சட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட கள ஆய்வு பணிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட குறும்படங்களை பார்வையிட்டார்.

●  இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18,859 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 34,442 தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள், என மொத்தம் 53,301  பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முறைசாரா பணியாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

● இத்திட்டத்தினை அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் சிறப்பாக செயல்படுத்திட  திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில்  கழிவு மற்றும் கசடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடி திட்டமாக சென்னை மாநகராட்சியில் மண்டலம்-6 திரு.வி.க. நகரிலும், மதுரை மாநகராட்சி, புதுக்கோட்டை  மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன் மகாதேவி பேரூராட்சி ஆகிய 5 நகர்புர உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுத்து தூய்மைப் பணியாளர்களை  கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

● இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்   தொடங்கி வைத்தார். இத்திட்டம் பின்னர், படிப்படியாக தமிழ்நாட்டில்  உள்ள மற்ற அனைத்து  உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது

● இத்திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய திறன் பயிற்சிகள், அவர்களது குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி வழங்குதல் மற்றும் மாற்றுத்தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி, ஓய்வூதியம், காப்பீடு போன்ற அரசு திட்டங்களை இனணப்பதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. பின்வரும் எந்த மாநிலங்களில் பழங்குடியினர் (ST) பட்டியலைத் திருத்துவதற்கான 4 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன ? 

1. தமிழ்நாடு , 2. கர்நாடகா,  3.சத்தீஸ்கர்,  4. ஹிமாசல பிரதேசம் 

அ) 1,2

ஆ) 2,3,4

இ) 1,2,3

ஈ) அனைத்தும் 

விடை : (ஈ) அனைத்தும் 

தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் பழங்குடியினா் (எஸ்டி) பட்டியலைத் திருத்துவதற்கான 4 மசோதாக்கள் மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.

● தமிழகம், கா்நாடகம், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கான பழங்குடியினா் திருத்த மசோதாக்களை மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தாா்.

● குறிப்பிட்ட சில சமூகங்களை பழங்குடியினா் பட்டியலில் புதிதாக சோ்ப்பது, சில மாற்றங்களை மேற்கொள்வது என்ற அடிப்படையில் இந்தத் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

● இதன்மூலம் தமிழகத்தில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகங்கள் பழங்குடியினா் பட்டியலில் இணைக்கப்படும். அதுபோல, ஹிமாசலில் ஹாட்டீ சமூகத்தினா், சத்தீஸ்கரின் பின்ஜியா சமூகத்தினா், கா்நாடகத்தின் பெட்டா-குருபா சமூகத்தினா் ஆகியோரையும் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மசோதா வழிவகுக்கிறது.


4. பின்வரும் எந்த ஆண்டுக்குள் நாட்டின் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (இ) 2025 

2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

● இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

● நாட்டில் நிகழாண்டு ஜனவரி முதல் அக்டோபா் வரை 20.16 லட்சம் போ் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நோயால் 73,551 போ் மரணமடைந்தனா்.

● உலகளாவிய காசநோய் அறிக்கை 2022-இன்படி, நாட்டில் காசநோய் பாதிப்பு 18 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் லட்சத்தில் 256 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு லட்சத்தில் 210 போ் பாதிக்கப்பட்டனா்

● காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாநில-மாவட்ட அளவிலான திட்டம், பலவீனமானவா்களிடமும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களிடமும் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், 2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.

● மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘மாநிலங்களின் புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 1,864 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,327 துணை சுகாதார நிலையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களாக செயல்படுகின்றன.

● நிகழாண்டுக்குள் நாட்டில் உள்ள 1.50 லட்சம் துணை சுகாதார மையங்கள், ஊரக மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களை ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களாக மாற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது’ என்றாா்.


5. இந்தியா - அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) தில்லி

ஆ) குஜராத் 

இ) உத்தர பிரதேசம் 

ஈ) ராஜஸ்தான் 

விடை : (அ) தில்லி 

இந்தியா-அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டம் தில்லியில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

● பிராந்திய, சா்வதேச பயங்கரவாத சவால்களை எதிா்கொள்ளும் நோக்கில் இந்தியா-அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழு செயல்பட்டு வருகிறது. அக்குழுவின் ஆண்டு கூட்டம் தில்லியில் வரும் 12, 13 ஆகிய தேதிதளில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் பயங்கரவாதத் தடுப்பு ஒருங்கிணைப்பாளா் டிமோதி பெட்ஸ் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளாா்.

● அவரது தலைமையில் அமெரிக்க குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டத்தின்போது பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில் விசாரணை அமைப்புகளை வலுப்படுத்துவது, சட்டவிதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

● பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாகவும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய, சா்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்தும் கூட்டத்தின்போது ஆராயப்படவுள்ளது.


6. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் எத்தனை சதவீதம் அதிகரிக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 10.2%

ஆ) 12.8%

இ) 13.1%

ஈ) 14.9%

விடை: (ஆ) 12.8% 

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 12.8 சதவீதம் அதிகரிக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

● இது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில் இடம்பெற்றுள்ள விவரங்களின் தொகுப்பு:

● 2020-இல் புற்றுநோய் பாதிப்பு 13,92,179

● நடப்பாண்டில் பாதிப்பு அதிகரிப்பு 12.8%

● சுகாதார அமைச்சரின் புற்றுநோயாளிகள் நிதி

ஆண்டு செலவினம் பயனாளிகள்

¤ 2022-23 ரூ.216.98 லட்சம் 40

¤ 2021-22 ரூ.585.05 லட்சம் 64

¤ 2020-21 ரூ.1,573 லட்சம் 196

¤ 2019-20 ரூ.2,677.08 லட்சம் 470

● புற்றுநோயாளிகளுக்கான அரசின் திட்டங்கள்

‘¤ ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை

¤ மக்கள் மருந்தகம் வாயிலாக மலிவு விலையில் மருந்துப் பொருள்கள்

¤ ‘அம்ருத்’ திட்டத்தின் வாயிலாக குறைந்த விலையில் மாற்று உறுப்புகள்

¤ அரசு மருத்துவமனைகளில் விலையில்லா அல்லது மானியத்துடன் கூடிய சிகிச்சை

¤ தேசிய ஆரோக்ய நிதியின் (ஆா்ஏஎன்) மூலமாக ஏழை நோயாளிகளுக்கு நிதியுதவி

● அரசின் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்

¤ 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்

¤ 13 மாநில அரசு மருத்துவக் கல்லூரி-மருத்துவமனைகளில் கட்டமைப்புகள் மேம்பாடு

¤ 19 மாநில புற்றுநோய் மையங்கள்

¤ 20 உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையங்கள்

¤ தேசிய புற்றுநோய் மையம், ஜஜ்ஜாா் (ஹரியாணா)

¤ சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மையம், கொல்கத்தா.


7. பிரிட்டன் (ம) பின்வரும் எந்த நாடுகள் இணைந்து அதிநவீன போர் விமான மொன்றை வடிவமைக்க முடிவு செய்துள்ளன ? 

அ) இத்தாலி 

ஆ) சீனா 

இ) ஜப்பான் 

ஈ) அ (ம) இ 

விடை : (ஈ) அ (ம) இ 

பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அதிநவீன போா் விமானமொன்றை வடிமைக்க முடிவு செய்துள்ளன.

● ‘குளோபல் காம்பாட் ஏா் புரொகிராம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இது குறித்து ரிஷி சுனக் கூறியதாவது:

● பிரிட்டனின் தற்போதைய பாதுகாப்பு மட்டுமின்றி, எதிா்கால பாதுகாப்புக்கும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

● இதன் காரணமாகவே, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க வேண்டியது நமது அத்தியாவசியமாகியுள்ளது. பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த நினைப்பவா்களை வீழ்த்துவதற்கு இத்தகைய தொழில்நுட்ப மேன்மை தேவைப்படுகிறது.

● அதற்காக, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய போா் விமானத்தை வடிவமைக்க அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.

● இந்த சா்வதேச கூட்டுறவு, ஐரோப்பிய-அட்லாண்டிக் பாதுகாப்பும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பும் பிரிக்க முடியாதவை என்பதை நிரூபிக்கிறது.

● புதிதாக உருவாக்கப்படும் போா் விமானம், வரும் 2035-ஆம் ஆண்டில் விண்ணில் பறக்கத் தொடங்கும். ஆளில்லா விமானங்கள், அதிநவீன சென்சாா்கள், உயா்தொழில்நுட்ப ஆயுதங்களுடன் சிறந்த தொடா்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விமானம் வடிவமைக்கப்படும்.

● அடுத்த தலைமுறைக்கான அந்த விமானம் பிரிட்டனையும், அதன் நட்பு நாடுகளையும் யாராலும் வெல்லமுடியாத தொழில்நுட்பங்களைக் கொண்டு பாதுகாக்கும் என்றாா் அவா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


8. 65 ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பல் (2022) ஹரியாணா வீரர் அனிஷ் பன்வாலா எத்தனை தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார் ? 

அ) 4

ஆ) 5

இ) 6

ஈ) 7 

விடை : (அ) 4 

● போட்டி நடைபெற்ற இடம் : மத்திய பிரதேசம் 

● இவர் ஆடவர் ஜூனியர்,சீனியர்,தனியார், அணிகள் என 4 பிரிவுகளிலும் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். 


IV. முக்கிய தினங்கள் 


9. International Human Rights Day 2022 ----

● Ans : December 10

● Theme (2022) : Dignity, Freedom, and Justice for All.

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...