Showing posts with label Current Affairs 2024. Show all posts
Showing posts with label Current Affairs 2024. Show all posts

Monday, January 22, 2024

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

 உலக முதலீட்டாளர் மாநாடு 2024

அறிமுகம்

  • சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

  • இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கஉள்ளது.

நோக்கங்கள்

  • தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக தரம் உயர்த்துதல்.

  • உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளா்ச்சிக்கு அடித்தளம் அமைத்தல்.

  • சீரான, பரவலான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, ஈா்க்கப்பட்ட முதலீடுகள் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்தல். 


அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகள்

1.சிங்கப்பூர், 

2.கொரியா,

3. இங்கிலாந்து,

4. ஜப்பான்,

5. பிரான்ஸ்,

6. ஆஸ்திரேலியா, 

7.ஜெர்மனி, 

8.டென்மார்க் 

9.அமெரிக்கா 

மேற்கண்ட 9 பங்குதாரர் நாடுகள்மற்றும் 50 நாடுகளைச் சார்ந்த தொழில் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

சிறப்பம்சங்கள்

  • உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 177 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. 

  • இதனால், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடியாகவும், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேருக்கு மறைமுகமாகவும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.



துறைவாரியான முதலீடுகள்

  • குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை - ரூ.63,573 கோடி

  • எரிசக்தித் துறை - ரூ.1 ,35,157 கோடி

  • வீட்டுவசதி - நகா்ப்புற வளா்ச்சித் துறை - ரூ.62,939 கோடி

  • கைத்தறி - ஜவுளித் துறை - ரூ.572 கோடி

  • தகவல் தொழில்நுட்பவியல் துறை - ரூ.22,130 கோடி

  • தொழில் துறை - ரூ.3, 79 ,809 கோடி

  • மொத்தம்: ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 177 கோடி.


கொள்கைகள்

  • தமிழ்நாடு குறைக் கடத்தி (செமிகண்டக்டர்) மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024.

  • முதலீடுகளை ஈா்ப்பதற்காக, தனியாா் மற்றும் அரசுத் துறைகளின் நடைமுறைகளை இணைத்து பொது-தனியாா் கூட்டாண்மைக் கொள்கை 2024 வெளியிடப்பட்டுள்ளது.

  • 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை எய்துவதற்கான செயல்திட்ட அறிக்கை. 



உலக முதலீட்டாளர் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

  • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 கோடிக்கான 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

  • இதன் மூலம்நேரடியாகவும், மறைமுகமாகவும் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கஉள்ளது. 

  • அதிகபட்சமாக டாடா குழுமத்தின் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெ நிறுவனம் ரூ.70,800 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

  • அதானி கிரீன் எனர்ஜி ரூ.24,500 கோடி

  • அம்புஜாசிமெண்ட் ரூ.3,500 கோடி

  • அதானி கனெக்ஸ் ரூ.13,200 கோடி, 

  • டோட்டல் காஸ் & சிஎன்ஜி ரூ.1,568 கோடி என அதானி குழும நிறுவனம் மொத்தம் ரூ.42,768 கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

  • செம்பகார்ப் நிறுவனம் ரூ.37, 538 கோடி 

  • டாடா எலெக்ட் ரானிக்ஸ் ரூ.12,082 கோடி 

  • ஜேஎஸ்டபிள்யூ குழுமம் 12,000 கோடி. 

  • ஹூண்டாய் நிறுவனம் ரூ.6,180 கோடி

  • டிவிஎஸ் நிறுவனம் ரூ.5,000 கோடி 

  • செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.3,400 கோடி 

  • பெகாட்ரான் ரூ.1,000 கோடி.

புரிந்துணா்வு ஒப்பந்த செயலாக்கக் குழு

  • உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவர தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும்.

இலக்கை விஞ்சிய முதலீடு

  • உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் ரூ. 5.5 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈா்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், அதைவிட ரூ. 1.14 லட்சம் கோடி கூடுதல் முதலீடுகள் ஈா்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 


இதர முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகள்

  •  “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக, ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தபட்டது. 

  • ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டது.

  • 2021ஆண்டில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 27 தொழிற்சாலைகளை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுஉள்ளது.

  • மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது.

  • சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த முதலீடுகள் எல்லாம், மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 










தேர்தல் சீர்திருத்தங்கள் 2024 Current Affairs

 தேர்தல் சீர்திருத்தங்கள் 



  1. 61 வது சட்ட திருத்தம் 1984 இன் படி வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது


  1. 1989 ஆம் ஆண்டு முதல் வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்ட நிலையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம் அல்லது மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடலாம் என்ற விதி கொண்டுவரப்பட்டது


  1. 1993 முதல் இந்திய முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது


  1. தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கடைகள் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மது விற்க விநியோகிக்க தடை செய்யப்பட்டது


  1. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும்


  1. வேட்பாளர் அவரது மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகள் சொத்து விவரம் குறித்து தகவல் அளிக்க வேண்டும்


  1. 2017 ஆம் ஆண்டு வட்டி இல்லா பத்திரமாக ,தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது இதன் மூலம் ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ இந்த பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்,2000 ரூபாய்க்கு மேல் வழங்கும் நன்கொடையாளர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.


  1. 2010 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


  1. 2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது


  1. 2013 ஆம் ஆண்டு முதல் வாக்காளர் பதிவை இணைய வழி மூலம் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.


  1. 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற ஆணைப்படி தண்டனை பெற்ற நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் முன்பு போன்று மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.


  1. 2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது அதன்படி கருத்துக் கணிப்பு முடிவுகள் கடைசி கட்ட தேர்தல் முடிந்த பின்னர் மட்டுமே ஒளிபரப்பப்பட வேண்டும்



நன்றி : Manorama Tamil Year Book 2024

Manorama Year Book 2024 Purchase Link  : Click Here




Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...