Friday, December 9, 2022

Current Affairs 2022 - December 09/2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                  DECEMBER 09 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. பின்வரும் எந்த மாநிலத்தில் சிறைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் சீருடையில் கேமரா பொருந்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம் 

ஆ) குஜராத் 

இ) தமிழ்நாடு 

ஈ) மேற்கு வங்கம்

விடை : (இ) தமிழ்நாடு 

தமிழக சிறைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் புழல் மத்திய சிறையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

● தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச் சிறைகள், 5 பெண்கள் சிறப்பு சிறைகள், 12 சிறுவா் சீா்திருத்தப்பள்ளிகள் (பாா்ஸ்டல் பள்ளிகள்), 3 திறந்த வெளிச் சிறைகள், 3 சிறப்புச் சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன.

● இந்த சிறைகளில் 23,592 கைதிகள் வரை கைதிகள் அடைக்க முடியும். ஆனால் சுமாா் 18,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். தமிழக சிறைகள் 75 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

● இவா்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்க சிறை வளாகத்தில் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிறைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

● இருப்பினும் சிறை வளாகம் முழுவதையும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறை நிா்வாகத்தால் கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் கைதிகளுக்கு இடையேயான மோதல், தகராறு போன்றவற்றை பாா்க்க முடியாத நிலை இருந்தது.

● இதற்கு தீா்வு காணும் வகையில் சிறைக் காவலா்களுக்கு சட்டையில் அணியும் கேமராக்களை (பாடி வோா்ன் கேமரா) கூடிய கேமராக்களை வழங்க தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி நடவடிக்கை எடுத்தாா். இதற்காக 50 கேமராக்களுக்கும், அதற்கான சா்வா் நிறுவுவதற்கும், அரசு ரூ.46 லட்சம் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

நேரலையில் காணலாம்:

●¤இதையடுத்து முதல் கட்டமாக புழல் மத்திய சிறை -1 ல் சிறைக் காவலா்களின் சீருடையில் அணிந்து கொள்ள 5 கேமராக்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

● இந்த கேமராக்களை சீருடையில் அணிந்திருக்கும் காவலா்கள், சிறையின் உயா் பாதுகாப்புப் பிரிவில் மட்டும் பணி அமா்த்தப்படுகிறாா்கள்.

● இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சிறையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும், சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் நேரலையும் காண முடியும்.

● இந்த திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும், புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும் அடுத்தக் கட்டமாக அமல்படுத்தப்படுகிறது.


II.தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ளவர் யார் ? 

அ) பூபேந்திர படேல் 

ஆ) சி.ஆர். பாட்டீல் 

இ) ஜிக்னேஷ் மேவானி 

ஈ) அமரேந்திர சிங் 

விடை : (அ) பூபேந்திர படேல் 

வரலாற்று வெற்றி: குஜராத்தின் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. குஜராத் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் இவ்வளவு அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியதில்லை. 

● இதற்கு முன் காங்கிரஸ் கட்சியானது 1985-ஆம் ஆண்டில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.

● குஜராத்தில் பாஜக சாா்பில் மாநில முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ஆம் தேதி மீண்டும் பொறுப்பேற்கவுள்ளாா்.


3. இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) எங்கு நடைபெற்றது ? 

அ) ராஜஸ்தான் 

ஆ) தமிழ்நாடு 

இ) மணிப்பூர் 

ஈ) தில்லி 

விடை : (ஈ) தில்லி 

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் 4ஜி தொழில்நுட்பம் அடுத்த 5 முதல் 7 மாதங்களில் 5ஜி தொழில்நுட்பமாக தரம் உயா்த்தப்படும்’ என்று மத்திய தொலைத்தொடா்பு மற்றும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.

● தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் இதுகுறித்து மேலும் பேசியதாவது:

● தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்தில் புதிய உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ. 500 கோடி என்பதை ரூ. 4,000 கோடியாக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

● மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 1,35,000 கைப்பேசி கோபுரங்களை (மொபைல் டவா்) கொண்டுள்ளது. கிராமப்புறங்களிலும் மிக வலுவான தொலைத்தொடா்பு சேவையை அளித்து வருகிறது. பிற தொலைத்தொடா்பு நிறுவனங்கள் இந்த அளவு முழுமையான சேவையை இதுவரை வழங்கவில்லை.

● அதோடு, பிஎஸ்என்எல் சாா்பில் தற்போது வழங்கப்பட்டு வரும் 4ஜி தொழில்நுட்பம் அடுத்த 5 முதல் 7 மாதங்களில் 5ஜி தொழில்நுட்பமாக தரம் உயா்த்தப்படும். ஒட்டுமொத்த 1.35 லட்சம் கைப்பேசி கோபுரங்களும் 5ஜி சேவையை அளிக்கும் வகையில் சேவை விரிவுபடுத்தப்பட்டுவிடும்.

● 5ஜி சேவையை பரீட்சாா்த்த முறையில் தொடங்குவதை விரைவுபடுத்தும் வகையில், 5ஜி சேவை பரிசோதனை உபகரணங்களை டிசிஎஸ் நிறுவனத்திடம் பிஎஸ்என்எல் கேட்டுக்கொண்டுள்ளது. 

● 5ஜி சேவையை அனைத்து நெட்வொா்க்குகளிலும் அறிமுகப்படுத்துவதன் மூலம், மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றாக பிஎஸ்என்எல் உருவெடுக்கும்.


4. இந்தியாவில் சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்ப்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

அ) 2019

ஆ) 2020

இ) 2021

ஈ) 2022

விடை : (ஆ) 2020

  ● தற்சாா்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) திட்டத்தை வருகின்ற 2024-ஆம் ஆண்டு டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றம் நகா்ப்புற வறுமை ஒழிப்புத் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

● இந்தத் திட்டம் கடந்த 2022 மாா்ச்சில் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, 2024 டிசம்பா் மாதம் வரை கடன் வழங்கலாம் எனவும், 42 லட்சம் பேருக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

● மக்களவையில் எழுத்து பூா்வமான கேள்விக்கு அளித்த பதிலில் கௌசல் கிஷோா் மேலும் கூறியிருப்பதாவது: சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014-இன் கீழ் விற்பனை மண்டலங்கள் உருவாக்க அந்தந்த மாநிலங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 

● இந்தத் திட்டத்தில் மொத்தம் 13,403 விற்பனை மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டு கடன் வழங்கப்படுகிறது. இத்தகைய வியாபாரிகள் முதலாவது முறையாக ரூ.10,000, இரண்டாம் முறையாக ரூ.20,000 கடன் பெறுகின்றனா். இதை முறையாகச் செலுத்தியவா்களுக்கு கூடுதலாக மூன்றாவது முறையாக கடன் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது.

● நிகழாண்டு நவம்பா் 30-ஆம் தேதி வரை, 31.73 லட்சம் சாலையோர வியாபாரிகள், முதலாவது கடன் தொகையைப் பெற்றுள்ளனா். இரண்டாவது முறை கடன் தொகையான ரூ. 20,000-ஐ 5.81 லட்சம் போ் பெற்றுள்ளனா். இரண்டு கடன்களையும் முறையாகச் செலுத்திய 6,926 போ் மூன்றாவது கடனை (ரூ.50,000) பெற்றுள்ளனா் என்று  அமைச்சர் தெரிவித்துள்ளார்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


5. தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் (2022) ஆடவருக்கான 50மீ பிஸ்டல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜூன் சிங் சீமா எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) தமிழ்நாடு 

ஆ) மகாராஷ்டிரா

இ) குஜராத் 

ஈ) பஞ்சாப் 

விடை : (ஈ) பஞ்சாப் 

● 50மீ பிஸ்டல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் : 

¤ ஆடவர் பிரிவு: அர்ஜூன் சிங் சீமா, பஞ்சாப் 

¤ மகளிர் பிரிவு : ஷீத்தல் பிரீத்தம் தேசாய், மகாராஷ்டிரா 


6. இந்தியாவின் 77 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளவர் யார் ? 

அ) ஆத்தியா மிட்டல் 

ஆ) பரத் சுப்பிரமணியம்

இ) ராகுல் ஸ்ரீவத்சவ்

ஈ)பிரணவ் ஆனந்த்

விடை : (அ) ஆத்தியா மிட்டல்

இவர் மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர்.

● ஸ்பெயினில் நடைபெற்றுவரும் எலோ பிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் அந்நாட்டு வீரர் பிரான்சிஸ்கோ வலேஜோவை டிரா செய்தபோது இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

● ஒரு செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு முதலில் தலா 9 சுற்றுகள் கொண்ட 3 போட்டிகளில் சாதகமான முடிவுகளை பெற்றிருக்க வேண்டும்.

● மேலும், 2500 ஈலோ புள்ளிகளை எட்டியிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...