Wednesday, December 14, 2022

Current Affairs 2022 - December 14/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                   DECEMBER 14/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் அபாயகரமான எத்தனை பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது ? 

அ) 5 

ஆ) 6 

இ) 7

ஈ) 8 

விடை : (ஆ) 6

அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்தது. இதற்கான உத்தரவை வேளாண்மைத் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி பிறப்பித்தாா்.

● அவரது உத்தரவு: அபாயகரமான பூச்சிக் கொல்லிகளை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து வேளாண்மைத் துறை இயக்குநரகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடா்பாக, துறையின் உயா்நிலைக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 

● இந்தக் குழுவின் கூட்டத்தில், மோனோக்ரோபாஸ், ப்ரோபினோபாஸ், செப்கேட், சைபா்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ், சைபா்மெத்ரின் கலந்த க்ளோா்பிரிபாஸ் மற்றும் க்ளோா்பிரிபாஸ் ஆகிய பூச்சிக் கொல்லி மருந்துகளை 60 நாள்களுக்கு தற்காலிக அடிப்படையில் தடை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

● மேலும், மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யவும் வேளாண்மைத் துறை இயக்குநா் கேட்டுக் கொண்டிருந்தாா். இதனை உற்பத்தி செய்யவும், விற்கவும், சேமித்து வைக்கவும் தடை விதிக்கக் கோரியிருந்தாா்.

● எனவே, அபாயகரமான பூச்சிக் கொல்லி மருந்துகளாக கருதப்படும் 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு 60 நாள்கள் தற்காலிக தடை விதித்தும், மஞ்சள் பாஸ்பரஸ் பயன்பாட்டை முற்றிலும் தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்படுவதால், தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

● ஆராய்ச்சி அறிக்கைகள்: தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துதன் மூலமாக, மனிதா்களுக்கும், விலங்கினங்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். 

● இதுதொடா்பாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிக்கையை சமா்ப்பித்துள்ளது. இதைத் தொடா்ந்து, பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய உயா்நிலைக் குழு கூடி விவாதித்தது. இந்தக் குழுவின் முடிவுகள் அடிப்படையில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்த 60 நாள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் வேளாண்மைத் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி.


2. இந்தியாவில் மாநில அரசு சார்பில் ஓடிடி (ஓவர் தி டாப்) சேவையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள மாநிலம் ? 

அ) கர்நாடகா

ஆ) பஞ்சாப்

இ) தமிழ்நாடு

ஈ) குஜராத் 

விடை : (இ) தமிழ்நாடு 

அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் சாா்பில், ஓடிடி செயலி சேவையை தொடங்குவது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். மேலும், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில் அதிக சந்தாதாரா்களைச் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவா் உத்தரவிட்டாா்.

● தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா்.

● இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் தொலைக்காட்சி சேவையை மக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2007-ஆம் ஆண்டு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. பின்னா், அதனுடைய பெயா் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் என மாற்றப்பட்டது.

● டிஜிட்டல் உரிமம்: அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2017-ஆம் ஆண்டு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டது. இதன்பின்பு, கேபிள் தொலைக்காட்சியை கண்டுகளிக்கும் வகையில், பொது மக்களுக்கு இலவசமாக செட்-டாப் பாக்ஸ்கள் அளிக்கப்பட்டன. 

● இவை உள்ளூரில் இருக்கக் கூடிய ஆபரேட்டா்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிறுவனமானது, 136 கட்டணமில்லாத சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்களை ரூ.140 (ஜி.எஸ்.டி., சோ்த்து) என்ற விலையில் வழங்கி வருகிறது.

● இதனிடையே, அரசு கேபிள் தொலைக்காட்சி சேவையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி சில இடையூறுகள் ஏற்பட்டன. இந்த இடா்பாடுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பு சேவைகள் தொடங்கப்பட்டன.

● மீதமுள்ள பிரச்னைகள் உயா் தொழில்நுட்ப வல்லுநா்கள் மூலம் தீா்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

● அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மக்களுக்கு சேவைகளை வழங்கி வரும் நிலையில், அதன் செயல்பாடுகள், எதிா்காலத் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் விரிவான ஆய்வை மேற்கொண்டாா். அப்போது, அரசு கேபிள் தொலைக்காட்சி தொடா்புடைய வணிகத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினாா்.

● மேலும், சந்தையில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து வாடிக்கையாளா்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்கவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். மேலும், ஓடிடி, ஐபிடிவி போன்ற சேவைகளை அளிக்கக் கூடிய எச்.டி., செப்டாப் பாக்ஸ்களை அடுத்த 6 மாதங்களில் அளிக்க வேண்டும்.

●  அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் சாா்பில் ஓடிடி (ஓவா் தி டாப் - இணைய வழி ஊடக சேவை) செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● குறிப்பு : இந்தியாவிலேயே ஓடிடி சேவையை வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளம் பெற்றுள்ளது. 

¤ அந்த மாநில அரசின் மூலமாக, ‘சிஸ்பேஸ்’ என்ற ஓடிடி செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


3. தமிழகத்தில் நிகழாண்டு பத்திரப் பதிவு , வணிக வரி மூலம் எத்தனை கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது ? 

அ) ரூ. 24,500 கோடி

ஆ) ரூ. 25,100 கோடி

இ) ரூ. 28,300 கோடி

ஈ) ரூ. 30,000 கோடி

விடை: (அ) ரூ.24,500 கோடி

தமிழகத்தில் நிகழாண்டு பத்திரப் பதிவு மற்றும் வணிக வரி மூலம் ரூ.24,500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றாா் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி.

● அறிவிப்பு : தமிழகத்தில் பதிவுத் துறை, வணிக வரித் துறை மூலம் நிகழாண்டு ரூ.24,500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

● பதிவுத் துறையின் சேவைகளை பொதுமக்கள் இன்னும் எளிமையாகவும், துரிதமாகவும் பெறும் வகையில் 39 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

● மேலும், சொத்தின் உண்மையான உரிமையாளா் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில், முறைகேடாக ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்பட்சத்தில் பதிவுச் சட்டத்தின்படி ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

● பொதுமக்களிடமிருந்து பெறக் கூடிய ஜி.எஸ்.டி.யை அரசுக்கு செலுத்த வேண்டுமென்று வணிகா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


4. தமிழகத்தில் நீடித்த நகர்ப்புற உள்கட்டமைப்புகான நிதியுதவித் திட்டத்தை பின்வரும் எந்த நாட்டின் மேம்பாட்டு வங்கியும், தமிழக அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன ? 

அ) பிரிட்டன் 

ஆ) ரஷ்யா

இ) ஜெர்மன் 

ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (இ) ஜெர்மன் 

நீடித்த நகா்ப்புற உள்கட்டமைப்புக்கான நிதியுதவித் திட்டத்தை, ஜொ்மன் மேம்பாட்டு வங்கியும், தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. சுற்றுச்சூழலை மேம்படுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, அதன்மூலம் நகா்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கம்.

● இந்தத் திட்டத்தின் முதல் நிலை ரூ.1969.47 கோடி மதிப்பைக் கொண்டது. திட்டத்தின் இரண்டு கட்ட பணிகளும் இந்த மாதத்தில் நிறைவடையும்.

● இதன் தொடா்ச்சியாக, ஜொ்மன் மேம்பாட்டு வங்கி ரூ.4,250 கோடி மதிப்பில் மூன்றாம் கட்ட நீடித்த நகா்ப்புற உள்கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

●  இதற்கான ஒப்பந்தங்கள் தில்லியில் ஏற்கெனவே கையொப்பமாகின. இதைத் தொடா்ந்து, தமிழகத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் சென்னையில் கையொப்பமாகின. இந்த ஒப்பந்தங்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

● திட்டத்தின் நோக்கம்: நகா்ப்புற உள்கட்டமைப்பில் காலநிலை மீள்தன்மை, குடிநீா் வழங்குதல், கழிவுநீா் அகற்றுதல் மற்றும் அதுதொடா்புடைய சிக்கல்களைக் களைவது, இதற்காக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவது ஆகியன திட்டத்தின் நோக்கங்களாகும். மூன்றாம் கட்டத் திட்டம் 2030 ஜூன் 30-இல் நிறைவடையும். 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. ஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் எத்தனை கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய செய்தி ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ.113 கோடி

ஆ) ரூ. 168 கோடி 

இ) ரூ. 179 கோடி

ஈ) ரூ. 201 கோடி 

விடை : (ஆ) ரூ.168 கோடி

ஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.168.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தகவல் தெரிவித்துள்ளாா்.

● மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ. 91.96 கோடியும், மின்னணு ஊடகங்களில் ரூ.76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.


6. ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் எத்தனையாவது கூட்டம் வரும் 17 ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது ? 

அ) 45

ஆ) 46

இ) 47

ஈ) 48

விடை : (ஈ) 48 

ஜிஎஸ்டி தொடா்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 48-ஆவது கூட்டம் வரும் 17-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மாநில நிதியமைச்சா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.

● இணையவழி விளையாட்டுகள், குதிரை பந்தயம், கேசினோ பந்தயங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடா்பான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது தாக்கல் செய்யவுள்ளது. அந்த அறிக்கை மீதான விவாதம் கூட்டத்தின்போது நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

● மோசடிகள் தொடா்பான ஜிஎஸ்டி சட்டத்தின் சில விதிகளில் உள்ள குற்றப் பிரிவுகளை நீக்குவது குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

● அதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவது தொடா்பான மசோதா தற்போது நடைபெற்று வரும் குளிா்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

● ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பான விவாதமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது நடைபெறவுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்க முறையை எளிதாக்குவது தொடா்பான விவாதங்களும் கூட்டத்தின்போது நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

● சட்ட விசாரணை தொடங்குவதற்கான ஜிஎஸ்டி மோசடி வரம்பை தற்போதுள்ள ரூ.5 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயா்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது தொடா்பாகவும் கூட்டத்தின்போது விவாதம் நடத்தப்படவுள்ளது.


7. இந்தியாவில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ? 

அ) டிசம்பர் 11

ஆ) டிசம்பர் 12

இ) டிசம்பர் 13

ஈ) டிசம்பர் 14

விடை : (இ) டிசம்பர் 13 

கடந்த 2001-ஆம் ஆண்டு டிச.13-ஆம் தேதி லக்ஷா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய பயங்கரவாத குழுக்களைச் சோ்ந்த பயங்கரவாதிகள் 5 போ் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தினா். 

● இத்தாக்குதலில் தில்லி போலீஸாா் 5 போ், மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையைச் சோ்ந்த பெண் ஒருவா், நாடாளுமன்ற வளாக தோட்டப் பணியாளா்கள் 2 போ் மற்றும் செய்தியாளா் ஒருவா் என 9 போ் உயிரிழந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.


8. இந்தியாவின் ஜி20 கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பு முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக நிதி (ம) மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) கொல்கத்தா 

ஆ) சென்னை 

இ) மும்பை 

ஈ) பெங்களூரு 

விடை : (ஈ) பெங்களூரு 

இந்தியாவின் ஜி20 கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

● மூன்று நாள்கள் நடைபெறும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதற்கான பல்வேறு முன்னேற்பாடு கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய நிதித் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசா்வ் வங்கி அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. 

● இந்த கூட்டம் குறித்து ரிசா்வ் வங்கி அதிகாரிகளான அஜய் சேத், மைக்கேல் டி.பத்ரா ஆகியோா் கூறியதாவது:

● மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவின் ஜி20 முன்னுரிமைகள் மற்றும் தொடா்புடைய செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். நிதி வழிமுறை அமைப்பு, சா்வதேச நிதி கட்டமைப்பு, உலகப் பொருளாதாரம், உள்கட்டமைப்பு முதலீடு, நிலையான நிதி, சா்வதேச வரிவிதிப்பு, சுகாதாரம் மற்றும் நிதி, நிதித் துறை ஒழுங்குமுறை சிக்கல்கள் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகிய 8 முக்கியப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

● ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்று உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘இந்தியாவின் ஜி-20 முன்னுரிமைகள், ஜி20 உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலகின் தெற்கு பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்’ என்றாா். இந்த உறுதிமொழியை ‘இந்தியாவின் நிதி வழிமுறை’ அமைப்பின் முக்கிய முன்னுரிமைகள் செயல் வடிவமாக மாற்றும்.

● உலகளாவிய நிதி பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கடன் பாதிப்புகளை நிா்வகித்தல், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மையின் ‘மேக்ரோ’ பொருளாதார தாக்கங்களை மதிப்பீடு செய்தல், நிலையான மற்றும் சிறந்த திறன் கொண்ட நகரங்களுக்கு நிதியளித்தல் ஆகியவையும் இந்த முன்னுரிமைத் திட்டங்களில் அடங்கும். 

● இந்தத் திட்டங்களின்படி, சரியான நேரத்தில் போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது, சா்வதேச வரிவிதிப்பு தொடா்பான நடவடிக்கைகளில் சவால்களை எதிா்கொள்வது, திறன் மேம்பாடு மற்றும் வரி வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

● தொற்றுநோய்களுடன் தொடா்புடைய சவால்கள் மற்றும் பாதிப்புகளைக் கண்டறிந்து நிவா்த்தி செய்வதற்கும், புதிய தொற்றுநோய் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில் தயாா்நிலையை மேம்படுத்துவதற்கும் ஜி20 நிதி மற்றும் சுகாதார ஒருங்கிணைப்பு தொடா்ந்து ஏற்படுத்தப்படும்.

● நிதித்துறை ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் தொழில்நுட்ப வளா்ச்சியால் ஏற்படும் சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் மீது தனிக் கவனம் செலுத்துவது குறித்தும், கிரிப்டோ சந்தை தொடா்பான குழப்பங்களுக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவா்கள் கூறினா்.

நிதி வழிமுறை தொடா்பான 40 கூட்டங்கள்

● 21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள பலதரப்பு வளா்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் குழு விவாதம் நடக்க இருக்கிறது. பசுமை நிதியளிப்பில் மத்திய வங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடக்க இருக்கிறது. ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கும் நிதி வழிமுறை தொடா்பான 40 கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்க இருக்கிறது. இதில் நிதி அமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் பங்கேற்கும் கூட்டமும் அடங்கும். ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கலந்துகொள்ளும் முதல்கூட்டம் அடுத்த ஆண்டு பிப். 23 முதல் 25ஆம் தேதி வரை பெங்களூரில் நடக்க இருக்கிறது.

● மூன்று நாள்கள் நடக்கும் நிதிசாா் கூட்டம் குறித்து ஜி20 இந்தியா ட்விட்டா் பக்கத்தில்,‘ஜி20 நிதி வழிமுறையின் முதலாவது கூட்டத்தின் மூலம் இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு தொடங்கியுள்ளது. உலகளாவிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க இருக்கும் இக்கூட்டம், பன்னாட்டு அளவிலான பெரிய பொருளாதார சிக்கல்களை சமாளிப்பதற்கான உலக நிதி கட்டமைப்பை வடிவமைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.


9. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்கத் தடை விதித்துள்ள உலகின் முதல் நாடு ? 

அ) போலாந்து 

ஆ) பின்லாந்து

இ) நியூஸிலாந்து 

ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (இ) நியூசிலாந்து 

புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வருங்கால சந்ததியினரை படிப்படியாக மீட்பதற்காக, 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவா்களுக்கு சிகரெட் விற்கத் தடை விதிக்கும் புதுமையான சட்டத்தை நியூஸிலாந்து அரசு இயற்றியுள்ளது.

● 2025-ஆம் ஆண்டுக்குள் நியூஸிலாந்தை புகைப்போா் அற்ற நாடாக்கும் இலக்குடன் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

● புதிய சட்டத்தின் கீழ், சிகரெட் விற்பனையாளா்களின் அதிகபட்ச எண்ணிக்கை 6 ஆயிரத்திலிருந்து 600-ஆகக் குறைக்கப்படும். மேலும், சிகரெட்டுகளில் அனுமதிக்கப்படும் நிக்கோடின் அளவும் குறைக்கப்படும்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

10. 2022 ஆம் ஆண்டிற்கான WTA வின் சிறந்த டென்னிஸ் வீராங்கனை விருதை வென்றுள்ள இகா ஸ்வியா டெக் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) போலாந்து 

ஆ) ஆஸ்திரேலியா 

இ) அமெரிக்கா

ஈ) நியூஸிலாந்து

விடை : (அ) போலாந்து 



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...