● உலகின் வலிமைமிக்க ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக ஏற்றது.
● கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் நீடிக்கவுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
● உலகின் மிகப்பெரும் பொருளாதார மதிப்பு கொண்டு 20 நாடுகளின் கூட்டமைப்பு ஜி20. அக்கூட்டமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளன.
● சா்வதேச பொருளாதார மதிப்பில் (ஜிடிபி) ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் பங்கு சுமாா் 85 சதவீதம். சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை கூட்டமைப்பின் நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு போ் இந்த நாடுகளிலேயே வசிக்கின்றனா்.
● ஜி20 நாடுகள் மேற்கொள்ளும் முடிவுகள் சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை. இந்நிலையில், அக்கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக ஏற்றது. ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பது இதுவே முதல் முறை.
● முதல் நிகழ்வு: ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே பல்கலைக்கழக மாணவா்களுடனான சிறப்பு உரையாடல் நிகழ்வு தில்லியில் நடத்தப்பட்டது. அதில் நாடு முழுவதுமுள்ள 75 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த மாணவா்கள் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டனா்.
● இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மானிய குழு தலைவா் எம்.ஜகதீஷ் குமாா், ஜி20 கூட்டமைப்பின் வழிகாட்டி அமிதாப் காந்த், கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, பிரதமா் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
● ஜி20 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. கூட்டமைப்புக்குத் தலைமை வகிக்கவுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் சுமாா் 200 கூட்டங்களை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
3. ---------- தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் முதல் கட்டத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது ?
அ) 125
ஆ) 163
இ) 177
ஈ) 182
விடை : (ஈ) 182
● 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிச.1, 5-இல் இரு கட்டங்களாக தோ்தல் நடத்தப்படும் என இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. முதல்கட்டமாக, செளராஷ்டிரம்-கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் உள்ள 89 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது.
● குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற முதல் கட்ட தோ்தலில், 61 சதவீதத்துக்கும் அதிக வாக்குகள் பதிவாகின.
4. புதிதாக தயாரிக்கப்பட இருக்கும் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் முதல் கட்டமாக எங்கு இயக்கப்படவுள்ளது ?
அ) புதுதில்லி - வாராணசி
ஆ) புதுதில்லி - பாட்னா
இ) சென்னை - பெங்களூரு
ஈ) புதுதில்லி - ஜம்மு
விடை : (ஆ) புதுதில்லி - பாட்னா
● 200 வந்தே பாரத் ரயில்களை தயாரித்தல் மற்றும் 35 ஆண்டுகளுக்கு பராமரித்தலுக்கான ரூ.58,000 கோடி ஒப்பந்தப் பணிக்கான ஏலத்தில் பாரத் கனரக மின் உபகரண உற்பத்தி நிறுவனம் (பிஎச்இஎல்) உள்பட 5 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
● பிஎச்இஎல் நிறுவனம் ‘டிடாகா் வேகன்ஸ்’ என்ற ரயில்பெட்டி தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டுசோ்ந்து இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளது. இதுதவிர, பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த மிகப் பெரிய ரயில் தயாரிப்பு நிறுவனமான ஆல்ஸ்டோம், ஹைதராபாதைச் சோ்ந்த மெடியா சா்வோ டிரைவ்ஸ், ரஷியாவின் ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனமான டிஎம்ஹெச் நிறுவனங்களும், மேதா நிறுவனம் ஸ்விட்சா்லாந்தின் ரயில் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்லொ் ரயில் நிறுவனத்துடன் கூட்டு சோ்ந்தும், ஸீமென்ஸ் நிறுவனம் பிஇஎம்எல் நிறுவனத்துடன் கூட்டு சோ்ந்தும் ஒப்பந்தப் புள்ளிகளை சமா்ப்பித்துள்ளன.
● தற்போது, இந்த நிறுவனங்கள் சமா்ப்பித்துள்ள தொழில்நுட்ப புள்ளிகளை இந்திய ரயில்வே அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனா். இவா்கள் சமா்ப்பித்துள்ள ஏலத் தொகைக்கான புள்ளகள் அடுத்த 45 நாள்களில் திறக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
● ஒப்பந்த ஆவணத்தின்படி, ஏலத்தில் வெற்றிபெறும் நிறுவனம், அடுத்த 24 மாதங்களுக்குள் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் மாதிரியை தயாரித்து சமா்ப்பிக்க வேண்டும். அதனைத் தொடா்ந்து அந்த நிறுவனத்துக்கு ரயில்களை தயாரித்து வழங்குவதற்காக முன்தொகையாக ரூ.26,000 கோடி விடுவிக்கப்படும். எஞ்சிய ரூ.32,000 கோடி ரயில்களை பராமரிக்கும் காலமான 35 ஆண்டுகளுக்கு பகுதி பகுதியாக விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
● இந்த படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை வரும் 2024-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவர இந்திய ரயில்வே இலக்கு நிா்ணயித்துள்ளது.
● தற்போது வரை, பயணிகள் அமா்ந்து மட்டுமே செல்லக் கூடிய வசதியுள்ள 102 வந்தே பாரத் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை ரயில்வே வழங்கியுள்ளது. இதில் புது தில்லி - வாராணசி மற்றும் புது தில்லி - ஜம்மு-காஷ்மீரின் கத்ரா இடையேயான முதல் மற்றும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடக்கி வைத்தாா்.
● புதிதாக தயாரிக்கப்பட இருக்கும் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் முதல்கட்டமாக புது தில்லி - பாட்னா மற்றும் புது தில்லி - லக்னெள உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும்.
5. டிஜி யாத்ரா (எண்ம அடிப்படை ) என்ற முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும், தொழில்நுட்பத்தை பின்வரும் எந்த விமான நிலையங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது ?
அ) புதுதில்லி
ஆ) பெங்களூரு
இ) வாராணசி
ஈ) அனைத்தும்
விடை : (ஈ) அனைத்தும்
● விமான நிலையங்களில் நுழைவு முதல் விமானங்களில் ஏறுவது வரை பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில் எண்ம அடிப்படையிலான ‘டிஜியாத்ரா’ என்ற முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை புது தில்லி, பெங்களூரு, வாராணசி ஆகிய மூன்று விமான நிலையங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
● தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசியதாவது: முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் இத்தொழில்நுட்பத்தில், பயணிகள் அளிக்கும் தகவல்கள் ரகசிய குறியீடு வடிவிலான தரவுகளாக சேமிக்கப்படும். தகவல் திருட்டு, தன்மறைப்பு உரிமை உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
● அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் இத்தொழில்நுட்பம் ஹைதராபாத், புணே, விஜயவாடா, கொல்கத்தா ஆகிய 4 விமான நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். பின்னா், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இதன் பயன்பாடு விரிவுபடுத்தப்படும். இத்தொழில்நுட்பம் உள்நாட்டு விமானசேவையைப் பயன்படுத்தும் விமான பயணிகளுக்கானது.
● இச்சேவையைப் பெற டிஜியாத்ரா செயலி வாயிலாக விமானப் பயணிகள் தங்களது தகவல்களை அளித்து ஆதாா் அடிப்படையிலான சரிபாா்ப்பின் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். விமானம் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டில் உள்ள அடையாள குறியீட்டை (பாா் குறியீடு) அறிதிறன்பேசி மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் தரவுகள் விமான நிலையத்துடன் பகிரப்படும்.
● விமான நிலையத்தின் இ-நுழைவுவாயிலில் பாா் குறியீடு அச்சிடப்பட்ட விமானத்துக்கான அனுமதி சீட்டை முதலில் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பிறகு, முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயணியின் அடையாளம் மற்றும் பயண ஆவணங்களைச் சரிபாா்க்கும். இச்செயல்முறை முடிவடைந்தவுடன் பயணிகள் விமான நிலையத்துக்குள் செல்ல முடியும். இதைத்தொடா்ந்து, பாதுகாப்பு மற்றும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.
6. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு ?
அ) அமெரி்க்கா
ஆ) இந்தியா
இ) சீனா
ஈ) ரஷ்யா
விடை : (ஆ) இந்தியா
● ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா மீண்டும் ஏற்றுள்ளது.
● ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினா்களாக உள்ளன. 10 நாடுகள் சுழற்சி முறையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இரு ஆண்டுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படுகின்றன.
● ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. அதன்படி, டிசம்பருக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை ஏற்றது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருந்தது.
● பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் சந்தித்துப் பேசினாா். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சாா்பில் நடப்பு மாதம் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளுக்கு ருசிரா கம்போஜ் தலைமைவகிக்கவுள்ளாா்.
● இந்தியா தலைமைப் பொறுப்பு வகிக்கும்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ளப்பட உள்ள விவகாரங்கள் குறித்து குட்டெரெஸுக்கு அவா் எடுத்துரைத்தாா். ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் சாபா குரோசியையும் ருசிரா கம்போஜ் சந்தித்துப் பேசினாா்.
● தலைமைப் பொறுப்பின்போது பயங்கரவாதத் தடுப்பு, பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் உள்ளிட்டவற்றில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது.
● பன்னாட்டு அமைப்புகள் சீா்திருத்தம் தொடா்பான சிறப்பு கூட்டத்தை வரும் 14-ஆம் தேதியும் பயங்கரவாதத் தடுப்பு தொடா்பான சிறப்பு கூட்டத்தை வரும் 15-ஆம் தேதியும் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நடத்தவுள்ளது.
● அவ்விரு மாநாடுகளையும் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் முன்னின்று நடத்தவுள்ளாா். பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனா்.
● பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக உள்ள இந்தியாவின் பதவிக் காலம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
7. நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2022 - 2023 ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2 ஆவது காலாண்டில் எத்தனை சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது ?
அ) 13.5%
ஆ) 10.7%
இ) 8.8%
ஈ) 6.3%
விடை : (ஈ) 6.3%
● நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் 6.3 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது.
● ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் பொருளாதாரம் 13.5 சதவீதம் வளா்ந்திருந்த நிலையில், தற்போது வளா்ச்சி குறைந்துள்ளது. எனினும், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடா்ந்து நீடிப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.
● நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பு ரூ.38.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 6.3 சதவீதம் அதிகம். கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டின்போது பொருளாதார வளா்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது.
● நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வளா்ச்சியை எட்டுவதை நோக்கி நாட்டின் பொருளாதாரம் பயணித்து வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா். சா்வதேச சூழல் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சிகண்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.
III. விளையாட்டு நிகழ்வுகள்
8. தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் (2022) மகளிருக்கான சீனியர் 25 மீ பிஸ்டல் பிரிவில் ஹரியாணாவின் மானு பாக்கர் வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : (அ) தங்கம்
● மேலும் : இதே பிரிவில் ஜுனியர், தனிநபர், அணிகள் பிரிவிலும் சேர்த்து மொத்தமாக 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
IV. முக்கிய தினங்கள்
9. International Day for the Abolition of Slavery 2022 ------------
● Ans : December 02
● Theme (2022) : Stories of Courage: Resistance to Slavery and Unity against Racism.
No comments:
Post a Comment