Wednesday, July 6, 2022

Current Affairs 2022 - July 06 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                       GK SHANKAR 
                      JULY 06 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்துக்கு உரிய உணவு மானிய நிலுவை தொகை ரூபாய் எத்தனை கோடியை விரைவில் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) ரூ. 2000 கோடி
ஆ) ரூ. 2,700 கோடி
இ) ரூ. 1,300 ,கோடி
ஈ) ரூ. 4,200 கோடி 

விடை : (அ) ரூ.2000 கோடி

2. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையில்லாத சூழலை உருவாக்கும் அரசு, தனியார் துறையினருக்கு 2 விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார் . 

2) இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது . 

அ) 1(ம) 2 
ஆ) 2 மட்டும்
இ) 1 மட்டும் 
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) 1 மட்டும் 

II. தேசியச் செய்திகள் 

3. இந்தியாவில் அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் நடப்பாண்டில் எத்தனை சதவீத பெண்கள் சேர்க்கப்படவுள்ளன ? 

அ) 50%
ஆ) 20%
இ) 30%
ஈ) 10%

விடை : (ஆ) 20% 

4. கீழ்கண்ட எந்த ஆண்டுக்குள் இந்தியாவின் யூரியா உற்பத்தி தன்னிறைலைக் காணும் என மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா தெரிவித்துள்ளர் ? 

அ) 2024
ஆ) 2030
இ) 2040
ஈ) 2025
விடை : (ஈ) 2025 

5. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழ்கண்ட யாரெல்லாம் சிறையில் இருந்து விடுவிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது ? 

1) 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 
2) அபராத தொகை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்கள்.
3) திருநங்கைகள் கைதிகள்
4) 75 வயதுக்கு மேற்பட்ட ஆண் கைதிகள். 

அ) 1,2,4 
ஆ) 2,3,4
இ) 1,2,3
 ஈ) 1,3,4
விடை : (இ) 1,2,3 

6. அமொிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் முதல்முறையாக பொறுப்பேற்றுள்ள முதல் கருப்பினப் பெண் நீதிபதி யார் ? 

அ) கேதான்ஜி பிரவுன்
ஆ) பிரியா மிஸ்ரா
இ) ஈஷா வேலண்டைன் 
ஈ) ரோஸிலின் மெர்சி

விடை : (அ) கேதான்ஜி பிரவுன் 

III. விளையாட்டுச் செய்திகள் 

7. கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக எந்த நாட்டின் வாரியம் ஆடவர், மகளிர் அணிகளுக்கு அனைத்து ஃபார்மட் போட்டிகளில் சமமான ஊதியம் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது ?
அ) ஆஸ்திரேலியா
ஆ) இந்தியா
இ) இங்கிலாந்து
ஈ) நியூசிலாந்து 

விடை : (ஈ) நியூசிலாந்து 

IV. முக்கிய தினங்கள் 

8. World Zoonosis Day - உலக ஜூனோசிஸ் தினம் 2022

அ)ஜூலை 03
ஆ) ஜூலை 04 
இ) ஜூலை 06
ஈ)ஜூலை 05 

விடை : (இ) ஜூலை 06 

Tuesday, July 5, 2022

Current Affairs 2022 - July 05 / 2022 - TNPSC Group 2 / 2A & Group 4

                       GK SHANKAR 
                       JULY 05 / 2022 

I.தமிழ்நாட்டுச் செய்திகள் 

1.  தமிழகத்தில் எங்கு 1,100 ஆண்டுகள் முந்தைய சமணர் பள்ளி தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன ? 

அ) சேலம்
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) விருதுநகர்

விடை : (ஈ) விருதுநகர் 

● விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் புல்லூர் கிராமத்தில் 1,100 ஆண்டுகள் பழமையான சமணர் பள்ளி தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

2. தமிழ்நாட்டில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் எத்தனை நிறுவனங்கள் தமிழக அரசுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளன ? 

அ) 60 
ஆ) 31
இ) 45
ஈ) 75 

விடை : (அ) 60

●சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது

● தலைப்பு : முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு என்ற தலைப்பிலான மாநாடு நடைபெற்றது. 

● முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாநாட்டில், ரூ.1 லட்சத்து 25,444 கோடி முதலீட்டுக்கான 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. ராம்ராஜ் காட்டன் எத்தனை கோடி முதலீட்டில் ஜவுளி ஆலை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது ? 

அ) ரூ. 1,700 கோடி
ஆ) ரூ. 1000 கோடி
இ) ரூ. 2,400 கோடி
ஈ) ரூ. 3,250 கோடி 

விடை : (ஆ) ரூ. 1000 கோடி

● இந்த ஆலையின் மூலம் தமிழகத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4. வேளாண்மை கழிவுகளைப் பயன்படுத்தி தொழில் துறை நொதிகள் (ம) இரண்டாம் தலைமுறை எரிபொருளான பயோ எத்தனால் தயாரிப்பது குறித்து கண்டறிந்துள்ள நிறுவனம் / அமைப்பு ? 

அ) ஐஐடி சென்னை
ஆ) டிஆர்டிஓ
இ) ஓஎன்ஜிசி
ஈ) ஐஐடி மும்பை 

விடை : (அ) ஐஐடி சென்னை 

இந்திய மருந்துப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆல்பா-அமைலஸ் மற்றும் செல்லுலாஸ் போன்ற தொழில்துறை நொதிகளுக்கு அதிகளவில் தேவை இருந்து வருகிறது.

• இந்நிலையில் வேளாண்மை கழிவுகளில் இருந்து தொழில்துறை நொதிகள் மற்றும் மதிப்புக் கூட்டுத் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய 'பேசிலஸ் எஸ்பி பிஎம்06' எனப்படும் பாக்டீரியா எவ்வாறு உதவுகிறது என்பதை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

II. தேசியச் செய்திகள் 

5. நிகழாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை ------------- சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது ? 

அ) 7.3%
ஆ) 8.4%
இ) 6.4%
ஈ) 5.9%

விடை : (இ) 6.4%

6. சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது 30 அடி உயர வெண்கலச் சிலையை திறந்து வைத்தவர் ? 

அ) ஜகன் மோகன் ரெட்டி
ஆ) மு.க. ஸ்டாலின்
இ) ராம்நாத் கோவிந்த்
ஈ) நரேந்திர மோடி

விடை : (ஈ) நரேந்திர மோடி

● ஆந்திர பிரதேச மாநிலம் , பீமா வரத்தில் உள்ள பெதாமிராம் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125 வது பிறந்த தினத்தையொட்டி அவரது 30 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

III. சர்வதேச செய்திகள் 

7. கரோனா தீநுண்மியை அழிக்க , புதிய என் - 95 முகக்கவசத்தை கீழ்கண்ட எந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் ? 

அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) இந்தியா 
ஈ) சீனா

விடை : (அ) அமெரிக்கா 

● கரோனா வைரசை அழிக்ககூடிய N-95 முகக்கவசம் .

● அமெரிக்காவை சேர்ந்த ரென்சீலர் பாலிடெக்னிக் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் .

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. கஜகஸ்தானில் நடைபெற்ற எலோர்டா கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கங்கள் ? 

அ) 13
ஆ) 31
இ) 23
ஈ) 14 

விடை : (ஈ) 14 

● இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் 33 பேர் கலந்துக்கொண்டனர். 
● வென்ற பதக்கங்கள் (14) : 
     2 G , 2 S & 10 B . 

9. இந்தியன் சூப்பர் லீக் ( ISL ) கால்பந்து போட்டியின் அணிகளில் ஒன்றான சென்னையின் எஃப்சி, எதிர்வரும் சீசனுக்காக எத்தனை தமிழக வீரர்களை அணியில் சேர்த்துள்ளனர் ? 

அ) 5 
ஆ) 2 
இ) 4
ஈ) 3 
விடை : (ஆ) 2 

● தமிழகத்தைச் சேர்ந்த லிஜோ ஃபிரான்சிஸ்,  ஜாக்சன் தாஸ் ஆகியோர் 2 ஆண்டு ஒப்பந்தத்தின் பேரில் சென்னை எஃப்சி அணியில் இணைந்துள்ளனர். 

Monday, July 4, 2022

Current Affairs 2022 - July 04 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                        GK SHANKAR 
                       JULY 04 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற தலைப்பில் எங்கு 9,000 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது ? 

அ) சேலம் 
ஆ) மதுரை
இ) நாமக்கல்
ஈ) தருமபுரி 

விடை: (இ) நாமக்கல்

தமிழக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், 21 மாநகராட்சி, 188 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் திமுக சாா்பிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பிலும் வெற்றி பெற்ற சுமாா் 9,000 வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்ற ‘உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்ற தலைப்பிலான நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக் குட்டைமேட்டில் நடைபெற்றது.

● இந்த மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

2. சென்னைக்கு அடுத்தபடியாக எந்த மாவட்டத்தில் வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன ? 

அ) வேலூர்
ஆ) சேலம்
இ) தருமபுரி
ஈ) தேனி 

விடை : (ஆ) சேலம்

சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வணிகவியல் நீதிமன்ற தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி வணிகவியல் நீதிமன்றத்தைத் திறந்துவைத்தார்.

● வணிகவியல் சாா்ந்த வழக்குகளுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

● சேலத்தில் 2 வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம் வணிக மையமாக மாறியுள்ளதைத் தொடா்ந்து வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

3. கூற்று : சேலம் மாவட்டம் ஜருகு மலையில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக 108 அவசர சிகிச்சை ஊர்தியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

காரணம் : ஜருகு மலை மக்கள் கோரிக்கை ஏற்று வழங்கப்பட்டது.

அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று தவறு , காரணம் சரி

விடை : (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

சேலம் மாவட்டம் ஜருகு மலையில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக 108 அவசர சிகிச்சை ஊா்தியை (ஆம்புலன்ஸ்) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

● சேலம், நாமக்கல் பகுதியில் ஆய்வுப் பணிகளுக்குச் சென்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், கடந்த சனிக்கிழமை (ஜூலை 2) வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள ஜருகுமலை எனும் மலைவாழ் கிராமத்துக்கு 14 கி.மீ. நடந்தே சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தாா்.

● இதையடுத்து, மலைப் பகுதியில் பிரசவ சிகிச்சை, அவசர சிகிச்சைகள் தேவைப்படும்போது வாகன வசதி எதுவும் இல்லை என்றும், அதற்கு பிரத்யேக வாகனம் வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை வைத்தனா்.

●இதையடுத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன், உடனடியாக ஜருகுமலை மக்களின் பயன்பாட்டுக்காக பிரத்யேக 108 அவசர சிகிச்சை ஊா்தி ஒன்றை வழங்க உத்தரவிட்டாா். அதன்படி, அங்கு அந்த வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.

II. தேசியச் செய்திகள் 

4. நாட்டின் பொது விநியோகத்தின் மூலம் அளிக்கப்படும் உணவு, ஊட்டச்சத்து, பாதுகாப்பு குறித்த ஒரு நாள் தேசிய மாநாடு மத்திய அரசால் எங்கு நடத்தப்படவுள்ளது ? 

அ) டெல்லி

ஆ) தமிழ்நாடு

இ) ராஜஸ்தான்

ஈ) மின்சாரம்

விடை : (அ) டெல்லி

● இந்த மாநாடு மத்திய உணவு, பொது விநியோகத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

● மத்திய அமைச்சர் பியூஷ் கோயில் தலைமையில் நடைபெறவுள்ளது.

● நோக்கம் : பொது விநியோக அமைப்பு முறையின் கீழ் இயங்கும் திட்டங்களில் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு ,சிறந்த நடைமுறைகளை காணவும் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகளை வலுப்படுத்தி அதற்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது போன்றவற்றுக்காகவும் இந்த மாநாட்டுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது . 

5. இந்தியாவின் தேஜஸ் இலகுரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய உள்ள நாடு எது ? 

அ) சீனா

ஆ) ரஷ்யா

இ) உக்ரைன்

ஈ) மலேசியா

விடை : ( ஈ ) மலேசியா

இந்தியாவின் தேஜஸ் இலகுரக போா் விமானங்களை மலேசியா கொள்முதல் செய்வது குறித்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) தெரிவித்துள்ளது.

6. நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்ற வெளிநாட்டினர்களின் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) முதலாவது

ஆ) இரண்டாவது

இ) ஏழாவது

ஈ) ஒன்பதாவது

விடை : (ஆ) இரண்டாவது 

● அறிவிப்பு: அமெரிக்காவின் நாட்டு குடியுரிமை (ம) குடியேற்ற சேவைகள் மையம்.

● முதல் மூன்று இடம் : 

1st - மெக்ஸிகோ (24,508)

2nd - இந்தியா (12,928)

3rd - பிலிப்பின்ஸ் (11,316).

7. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக:

1) ஜான்சி இரயில் நிலையமானது வீராங்கனை இலட்சுமிபாய் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.

2) ஜான்சி இரயில் நிலையம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

3)  1 மற்றும் 2 

4) ஏதுமில்லை

விடை : (அ) 1 மட்டும் 

உத்தரபிரதேசத்தின் ஜான்சி இரயில் நிலையமானது இலட்சுமிபாய் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட உள்ளது. 

Sunday, July 3, 2022

Current Affairs 2022 - July 03 /2022 - Group 2/2A & Group 4

                       GK SHANKAR 
                      JULY 03 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் : 

1. தமிழகத்தில் எங்கு ஜவுளி பொருட்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படவுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார் ? 

அ) ஈரோடு
ஆ) கரூர்
இ) திருப்பூர்
ஈ) மதுரை 
 
விடை : (ஆ) கரூர்

● ஜவுளி பொருட்களின் தரம், தொழில்நுட்பம் குறித்த பரிசோதனைகளை செய்ய சர்வதேச தரத்தில் கரூர் புதிய பேருந்து நிலையம் திருமாநிலையூரில் ரூ.47 கோடியில் ஜவுளி பொருட்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். 

2. தமிழகத்தில் பள்ளி மாணவ , மாணவியர் எத்தனை பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ? 

அ) 6 லட்சம்
ஆ) 13 லட்சம்
இ) 09 லட்சம்
ஈ) 10 லட்சம் 

விடை : (அ) 6 லட்சம் 

● அறிவிப்பு : பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்.
● மிதிவண்டிகள் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் ஜூலை 09 ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
● முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.

II. தேசியச் செய்திகள் 

3. வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடம் இருந்து ஆண்டுக்கு எத்தனை லட்சம் வரை அரசின் அனுமதியின்றி நிதி பெறும் வகையில் சட்ட திருத்தம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது ? 

 அ) ரூ. 8 லட்சம்
ஆ) ரூ. 3 லட்சம்
இ) ரூ. 10 லட்சம்
ஈ) ரூ. 11 லட்சம் 

விடை : (இ) 10 லட்சம் 

வெளிநாடுகளில் வசிக்கும் உறவினா்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை அரசின் அனுமதியின்றி நிதி பெறும் வகையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தங்களைச் செய்துள்ளது. முன்பு இந்தத் தொகை வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது.

● ‘வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த விதிகள் 2022’ என்ற பெயரில் புதிய விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:

● இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் உறவினா்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே அரசின் அனுமதியின்றி பெற முடியும். இனிமேல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை பெற முடியும்.

● இந்தத் தொகையைவிட அதிகமான தொகையை வெளிநாட்டில் இருந்து பெறுவதாக இருந்தால் இதற்கு முன்பு 30 நாள்களுக்கு முன் அரசிடம் தெரிவிக்க வேண்டும். இனி, 90 நாள்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம்-2011, விதி எண் 6-இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

4. தெலுங்கானா மாநிலம் பானூர் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் புதிய உற்பத்தி வசதிகளை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) அமித் ஷா

இ) ஜெய்சங்கர்

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (ஈ) ராஜ்நாத் சிங் 

தெலங்கானா மாநிலம், பானூா் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் புதிய உற்பத்தி வசதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

● பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் பிற பணியாளா்களிடம் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சா், பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதற்கும், பிரதமா் நரேந்திர மோடியின் ‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தை நனவாக்கும் வகையிலும் பொதுத் துறை நிறுவனத்தின் அா்ப்பணிப்புக்கான சான்றாக, உற்பத்தி வசதிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினாா்.

● அடுத்த ஐந்தாண்டுகளுக்கான உள்நாட்டுமயமாக்கல் திட்டத்தை தயாரித்து, முதல் இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கை வெற்றிகரமாக அடைந்ததற்காக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

5. கிரிசில் நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ------------------ ஆக குறைத்து கணித்துள்ளது ? 

அ) 7.3%

ஆ) 7.8%

இ) 8.1%

ஈ) 8.4%

விடை : (அ) 7.3%

● கிரிசில் நிறுவனம் - உள்நாட்டைச் சேர்ந்த தர மதிப்பீட்டு நிறுவனமாகும்.

● முந்தைய கணிப்பு : 7.8% 

6. வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான மிஸ் இந்தியா பட்டம் 2022 வென்றுள்ளவர் யார் ? 

அ) அனு குப்தா

ஆ) குஷி படேல் 

இ) ஈஷா வேலண்டைன்

ஈ) ரூபா சிங் 

விடை : (ஆ) குஷி படேல்

● NRI MISS INDIA WORLD WIDE 2022

● இது இந்தியாவிற்கு வெளியே பிற நாடுகளில் மிக நீண்ட காலமாக நடைபெறும் ஒரு இந்திய போட்டியாகும்.

● குஷி படேல் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ மாணவி ஆவார்.  

III. சர்வதேச செய்திகள் 

7. அண்மையில் கீழ்கண்ட எந்த நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ? 

அ) இந்தியா 

ஆ) கனடா

இ) ஆப்பிரிக்கா

ஈ) ஈரான்

விடை : (ஈ) ஈரான்

● ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

● குறிப்பு : 5 பேர் உயிரிழந்தனர், 44 பேர் காயமடைந்தனர்.

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. லண்டனில் , 2021 ஆம் ஆண்டிற்கான தங்கச் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியாவின் முதல் நபர் (ம) டென்னிஸ் வீரர் ? 

அ) விஜய் அமிர்தராஜ்

ஆ) நீரஜ் சோப்ரா 

இ) எம்.எஸ். தோனி 

ஈ) கே.எல்.ராகுல்

● இந்த விருது சர்வதேச டென்னிஸ் புகழ் மன்றம் (ம) சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ஆகியவற்றால் வழங்கப்படுகிறது.

● இந்த விருதை பெறும் முதல் இந்தியர் இவர் .

V. முக்கிய தினங்கள் 

9. சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் ( International Plastic Bag Free Day ) 2022 ?

அ) ஜூன் 30

ஆ) ஜூலை 02

இ) ஜூலை 03

ஈ) ஜூலை 01

விடை : (இ) ஜூலை 03


Saturday, July 2, 2022

Current Affairs 2022 - July 02 / 2022 - Group 2/2A & Group 4

                     GK SHANKAR 
                    JULY 02 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள்

1. சிங்கப்பூரை சேர்ந்த ஐஜிஎஸ்எஸ் கூட்டாண்மை நிறுவனம் பின்வரும் எந்த மாநிலத்தில் செமிகண்டக்டர் உயர்தொழில் நுட்பப் பூங்காவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவுள்ளது ? 

அ) தமிழ்நாடு
ஆ) கர்நாடகா
இ) குஜராத்
ஈ) ஜார்கண்ட்

விடை : (அ) தமிழ்நாடு

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் 'செமிகண்டக்டர்' உயர் தொழில்நுட்பப பூங்காவை அமைக்க உள்ளது. 

● இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

● இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தில் 25 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. 

●சர்க்யூட் வடிவமைப்பாளர்கள், உற்பத்தி பொருள் வினியோகஸ்தர்கள், உபகரண வினியோகஸ்தர்கள் மற்றும் செமிகண்டக்டர் அவுட்சோர்சிங் மற்றும் பரிசோதனை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான திட்டங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்படும். இதன் காரணமாக உருவாகக்கூடிய சூழல் அமைப்புகளின் மூலம் 25 ஆயிரம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

2. தமிழகத்தில் எத்தனை நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதல்வர் தொடக்கி வைத்தார் ? 

அ) 31
ஆ) 18
இ) 14
ஈ) 09 
விடை : (இ) 14 

தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டுக்காக ரூ.3 கோடியே 92 லட்சம் செலவில் 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. 

● குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வு செய்வோருக்கு அறிவியல் ரீதியான சேவைகளை வழங்க நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் பெரிதும் உதவும். 

● இதற்கென ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் குற்ற நிகழ்விடங்களை ஆய்வு செய்து தடயங்களை கண்டறியவும், தடய பொருள்களை ஆராய்ந்து குற்றம் எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என குற்றப் புலனாய்வு செய்வோருக்கு அறிக்கை வழங்கவும் ஒரு உதவி இயக்குநா் பணிபுரிகிறாா்.

● இந்த வாகனங்கள் சென்னை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா் மாநகர ஆணையரகங்கள், வேலூா், தருமபுரி, கோவை, நீலகிரி, மதுரை, விழுப்புரம், ராமநாதபுரம், தஞ்சாவூா் ஆகிய காவல் மாவட்டங்களில் பயன்படுத்தப்படும்.

3. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது தமிழக அரசு . 
2) அணை பாதுகாப்புச் சட்டம் 2020 ன் படி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது . 

அ) 1 மற்றும் 2 
ஆ) 1 மட்டும்
இ) 2 மட்டும் 
ஈ) ஏதுமில்லை

விடை : (ஆ) 1 மட்டும் 

அணை பாதுகாப்புச் சட்டம் 2021 ன் படி மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

● மத்திய அணை பாதுகாப்புச் சட்டத்தின் 11 ஆவது பிரிவின்படி மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் . அதன்படி, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

● இந்த அமைப்பின் தலைவராக தலைமைப் பொறியாளர் (பொது) இருப்பார். 

4. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் திருடப்பட்ட தமிழின் முதல் பைபிள் எங்கு கண்டறியப்பட்டுள்ளது ? 

அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) சீனா
ஈ) லண்டன்

விடை : (ஈ) லண்டன்

தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தில் திருடப்பட்ட தமிழின் முதல் பைபிள், லண்டனில் இருப்பதைக் கண்டறிந்த தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, அதை மீட்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

● பாா்த்தோலொமஸ் சீகன் பால்க் என்ற கிறிஸ்தவ மதபோதகா், 1682-ஆம் ஆண்டு ஜொ்மனி நாட்டில் உள்ள சாக்சானி என்ற நகரத்தில் பிறந்து பாலே பல்கலை.யில் படித்து லூதரன் தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றினாா். பின்னா், டென்மாா்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று, சீகன் பால்க்கும், கென்ரிக் என்ற மற்றொரு மதபோதகரும் தென்னிந்தியாவுக்கு கிறிஸ்தவத்தை பரப்ப வந்தனா். 

● 1706-ஆம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் டச்சு காலனி பகுதிக்கு வந்த இவா்கள், சீகன் பால்க் ஒரு அச்சகத்தை நிறுவி தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாசாரம், மதம் தொடா்பான புத்தகங்களை வெளியிட்டாா். இவா் பைபிளின் ‘புதிய அத்தியாயத்தை’ தமிழில் 1715-ஆம் ஆண்டு மொழி பெயா்த்தாா். அவா் 1719-ஆம் ஆண்டு மறைந்தாா்.

● சீகன் பால்க்கால் மொழி பெயா்க்கப்பட்டு அச்சிடப்பட்ட அரிய வகை பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போதைய தஞ்சாவூா் சரபோஜி மன்னருக்கு பரிசாக அந்த நேரத்தில் வழங்கப்பட்டது. அந்தப் புத்தகம் பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு, தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

●இந்த நிலையில், தமிழில் முதல் முதலாக மொழிபெயா்ப்பு செய்யப்பட்ட விலை மதிப்பில்லாத அந்த பைபிள் காணாமல் போனதாக 2015-ஆம் ஆண்டு அக். 10-ஆம் தேதி சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தின் நிா்வாக அலுவலா், தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்

● இதையடுத்து, தனிப்படையினா் பல்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் இணையதளங்களை ஆய்வு செய்தனா். அப்போது, சரஸ்வதி மகாலில் திருடப்பட்ட பைபிள் பிரிட்டன் நாட்டின் லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்ஷன் என்ற ஒரு நிறுவனத்தின் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

● இதைத் தொடா்ந்து, சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரின், அந்த பைபிள் குறித்து விசாரணை செய்தனா். அதில் அந்த பைபிள், சரஸ்வதி மகால் நூலகத்தில் திருடப்பட்டதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த பைபிளை யுனெஸ்கோ ஒப்பந்தம் மூலமாக மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வருவதற்குரிய முயற்சியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் ஈடுபட்டுள்ளனா்.


II. தேசியச் செய்திகள் 

5. ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி யார் ? 

அ) ஏ.எஸ். ராஜன்

ஆ) சங்க்கரன்

இ) கே. ஆறுமுகம்

ஈ) எல். ஆனந்த் பாபு 

விடை : (அ) ஏ.எஸ். ராஜன் 

● ஏ. சேர்மராஜன்,  1987 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சிபெற்ற தேனியைச் சேர்ந்தவர் ஆவார். 

6. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் (ம) தனியார் முதலீட்டுக்காக இந்தியாவுக்கு எவ்வளவு கடன் அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) 2.25 பில்லியன் டாலர்

ஆ) 1.15 பில்லியன் டாலர் 

இ) 1.75 பில்லியன் டாலர்

ஈ) 3.5 பில்லியன் டாலர்

விடை : (இ) 1.75 பில்லியன் டாலர்

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் தனியாா் முதலீட்டுக்காக இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.13,834 கோடி) கடன் அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

● சுகாதாரத்துக்கு 1 பில்லியன் டாலா், தனியாா் முதலீட்டுக்கு 750 மில்லியன் டாலா் என இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலா் கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்துக்கு அளிக்கப்படும் கடன், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு உதவும். இந்தியாவில் உள்ள பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்படும்.

● சுகாதாரத்துக்கான 1 பில்லியன் டாலரில் 500 மில்லியன் டாலா் மூலம் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், ஒடிஸா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மேகாலயம் ஆகிய 7 மாநிலங்கள் பலனடைய முன்னுரிமை அளிக்கப்படும்.

இதுதவிர, இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள நிதி இடைவெளிகளை தனியாா் துறை முதலீடு மூலம் நிரப்ப வளா்ச்சிக் கொள்கைக் கடனாக 750 மில்லியன் டாலா் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. DRDO மேற்கொண்ட முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிறிய ரக ஆளில்லா விமானம் (யுரவி) எங்கு வெற்றிகரமாக சோதனை மேற்கொண்டது ? 

அ) கேரளா 

ஆ) தமிழ்நாடு

இ) குஜராத் 

ஈ) கர்நாடகா

விடை : (ஈ) கர்நாடகா 

பெங்களூருவில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் முதன்மை ஆய்வுக்கூடமான ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு நிறுவனம் ஆளில்லா தானியங்கி விமானத்தை வடிவமைத்து தயாரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா தானியங்கி விமானம் நேற்று முதல் முறையாக சோதிக்கப்பட்டது.

● கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது, இந்த விமானம் வெற்றிகரமாக மேலெழும்பி பறந்ததுடன், வெற்றிகரமாக தரையிறங்கியும் சாதித்தது.

● முற்றிலும் தானியங்கி முறையில் செயல்பட்ட இந்த விமானம், ஒரு சிறிய டர்போபேன் என்ஜின் மூலம் இயங்குகிறது. இதற்கான உதிரி பாகங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என டி.ஆர்.டி.ஓ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

8. இந்தியாவின் எந்த மாநிலத்தில் வீட்டிற்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது ?

அ) தமிழ்நாடு

ஆ) பஞ்சாப்

இ) கேரளா

ஈ) ராஜஸ்தான்

விடை : (ஆ) பஞ்சாப்

● பஞ்சாபில் வீட்டிற்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

● பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தொடக்கிவைத்தார். 

III. விளையாட்டுச் செய்திகள் 

9. ஸ்வீடனில் நடைபெறும் டைமண்ட் லீக் மீட்டில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) ஏதுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● இப்போட்டியில் நீரஜ் சோப்ரா 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். 

IV. முக்கிய தினங்கள் : 

10. சர்வதேச கூட்டுறவு தினம் ( International Cooperative Day ) 2022 ? 

அ) ஜூலை 01

ஆ) ஜூலை 02

இ) ஜூலை 03

ஈ)ஜூலை 04

விடை : (ஆ) ஜூலை 02

11. உலக விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம் ( World Sports Journalists Day ) 2022 ? 

அ) ஜூன் 29

ஆ) ஜூன் 30

இ) ஜூலை 01

ஈ) ஜூலை 02

விடை : (ஈ) ஜூலை 02 



Current Affairs 2022 - July 01 / 2022 - Group 2/2A & Group 4

                        GK SHANKAR 
                       JULY 01 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் எங்கு மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்துள்ளார் ? 

அ) ராணிப்பேட்டை
ஆ) வேலூர்
இ) கடலூர் 
ஈ) சென்னை

விடை : (அ) ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 250 ஏக்கா் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தாா்.

● இதனால், சா்வதேச அளவில், தலைசிறந்த காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் மேலும் வலுப்பெறும். இந்தப் பூங்கா நிறுவப்படுவதால் , 20 ஆயிரம் பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

2. தமிழகத்தில் வேளாண்மை கூலித் தொழிலாளர்களின் விவரங்களை கீழ்க்கண்ட எந்த செயலி மூலம் பதிவு செய்ய வேளாண்மை (ம) உழவர் நலத்துறை  செயலாளர் அறிவித்துள்ளார் ? 

அ) உழவன் உதவி
ஆ) உழவன்
இ) வேளாண் உதவி
ஈ) உழவன் நலம்

விடை : (ஆ) உழவன்

● விவசாய கூலித் தொழிலாளர்கள் தங்களது விவரங்களை நேரடியாகவோ , முதல்வர் மூலமாகவோ, மாவட்டம், வட்டம் , கிராமம் வாரியாக உழவன் செயலி மூலம் பதிவு செய்வதற்கான உத்தரவை சி. சத்யமூர்த்தி பிறப்பித்துள்ளார்.

3. இந்திய அளவில் முன்னேற விழையும் மாவட்டங்களில் (2021) சிறுகுறு (ம) நடுத்தர தொழிலில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதலிடம் பெற்ற தமிழக மாவட்டம் ? 

அ) மதுரை
ஆ) ராமநாதபுரம்
இ) விருதுநகர்
ஈ) சேலம் 

விடை : (இ) விருதுநகர் 

● புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய விருதை வழங்கினார்.

● மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களை ஆய்வு செய்தனர்.

● அதில் 112 பின்தங்கிய மாவட்டங்கள் முன்னேற விழையும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டன.

● இதில் தமிழகத்தின் ராமநாதபுரம்,  விருதுநகர் மாவட்டங்களும் அடங்கும். 

II. தேசியச் செய்திகள் 

4. மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளவர் யார் ? 

அ) உத்தவ் தாக்கரே
ஆ) பகத் சிங் கோஷியாரி 
இ) தேவேந்திர ஃபட்னவீஸ் 
ஈ) ஏக்நாத் ஷிண்டே 

விடை : (ஈ) ஏக்நாத் ஷிண்டே 

● இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் 20 ஆவது முதல்வர் ஆவார் .
● பதவி பிரமாணம் : அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி செய்து வைத்தார் .

5. இஸ்ரோவால் ( ISRO ) 3 வணிகப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்களுடன் கீழ்கண்ட எந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ? 

அ) பிஎஸ்எல்வி - சி53
ஆ) பிஎஸ்எல்வி - பி53
இ) ஜிஎஸ்எல்வி - எஃப் 13
ஈ) ஜிஎஸ்எல்வி - எஃப் 31

விடை : (அ) பிஎஸ்எல்வி - சி53 

சிங்கப்பூரின் டிஎஸ்-இஓ உள்பட 3 வணிகப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 53 ராக்கெட் வெற்றிகரமாக வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

● ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் தீப்பிழம்புகளை உமிழ்ந்தவாறு பாய்ந்து சென்றது. அடுத்த சில நிமிடங்களில் அதன் இயக்கமும், செயல்பாடுகளும் நிா்ணயித்த இலக்குகள் அனைத்தையும் துல்லியமாகக் கடந்ததையடுத்து, பிஎஸ்எல்வி - சி 53 திட்டம் வெற்றி பெற்ாக இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தனா். அதன் தொடா்ச்சியாக, பரஸ்பரம் அவா்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பகிா்ந்து கொண்டனா்.

● திட்டமிட்டபடி நிலைநிறுத்தம்: ராக்கெட்டைச் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை நிறைவடைந்து வியாழக்கிழமை மாலை சரியாக 6.02 மணிக்கு பிஎஸ்எல்வி - சி 53 விண்ணில் சீறிப் பாய்ந்தது.

● ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் அதில் இருந்த ஒவ்வொரு நிலைகளும் படிப்படியாக பிரியத் தொடங்கின. ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடம் 57 வினாடியில் முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது. தொடா்ந்து சில நிமிடங்களில் மீதமுள்ள 2 செயற்கைக்கோள்களும் ஒன்றன்பின் ஒன்றாக அதன் சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன.

முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 665 கிலோ எடை கொண்டது. புவி ஆய்வுக்கான துல்லிய புகைப்படங்களை எடுப்பதற்காக சிங்கப்பூா் சாா்பில் அது அனுப்பப்பட்டுள்ளது.

● இதைத் தவிர சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய சிங்கப்பூரின் நியூசா் செயற்கைக்கோளும் நிலைநிறுத்தப்பட்டது. இது அனைத்துப் பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பக்கூடியது.

● இதனுடன் கல்விசாா் பணிக்காக சிங்கப்பூா் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவா்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

● நான்காம் நிலை: பிஎஸ்எல்வி வரலாற்றில் முதல்முறையாக செயற்கைக்கோள்களை விடுவித்த பிறகு பயன்பாடற்று இருக்கும் ராக்கெட்டின் நான்காம் நிலையையும் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்த இம்முறை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டின் இறுதிபாகமான பிஎஸ் 4 பகுதியில் ஆறு ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

● பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டானது நியூ ஸ்பேஸ் இந்திய நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) மூலம் வணிக ரீதியாக செலுத்தப்படும் இரண்டாவது திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

6. இந்திய கலாச்சாரம் , தத்துவ இயலில் மனித உரிமைகள் என்ற மாநாட்டை டெல்லியில் தொடக்கிவைத்தவர் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) ராம்நாத் கோவிந்த்

இ) அருண்குமார் மிஸ்ரா

ஈ) வெங்கையா நாயுடு

விடை : (இ) அருண்குமார் மிஸ்ரா

● டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்திய கலாச்சாரம் , தத்துவ இயலில் மனித உரிமைகள் என்ற மாநாட்டை தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் அருண்குமார் மிஸ்ரா தொடக்கிவைத்தவர் .

7. பொருத்துக : 

( 47 வது GST கவுன்சில் கூட்டத்தில் புதிதாக இறுதி செய்யப்பட்ட வரி விதிப்பை பொருத்துக ) 

1) தோல் பொருள்கள் -  1) 5%

2) நிதி நிறுவன சேவைகள் - 2) 0

3) ஃபிலேரியாசிஸ் மாத்திரைகள் - 3) 18%

4) மருத்துவமனை அறை வாடகை- 4) 12%

அ) 4 3 2 1

ஆ) 3 4 1 2

இ) 1 2 3 4

ஈ) 2 1 3 4 

விடை : (அ) 4 3 2 1

● 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

● இந்த வரி விதிப்பு ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


III . விளையாட்டுச்செய்திகள் 

8. தமிழகத்தில் எங்கு முதல்முறையாக சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது ? 

அ) மதுரை

ஆ) சென்னை

இ) சேலம்

ஈ) கன்னியாகுமரி

விடை : (ஆ) சென்னை

● சென்னை ஓபன் டபிள்யூடிஏ சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 12 முதல் 18 -ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

● இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.1.96 கோடியாகும். பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு கோப்பையுடன் சுமார் ரூ. 22 லட்சம் பரிசும் 280 புள்ளிகளும் வழங்கப்படும்.

● 2-வது இடத்தை பெறும் வீராங்கனை ரூ.15.60 லட்சத்துடன் 180 புள்ளிகளை பெறுவார். 

● இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி கோப்பையுடன் ரூ.9.47 லட்சம் பரிசுத் தொகையாக பெறும். 2-வது இடத்தை பிடிக்கும் ஜோடிக்கு ரூ.5.29 லட்சம் வழங்கப்படும்.

IV. முக்கிய தினங்கள்

9. தேசிய மருத்துவர்கள் தினம் ( National Doctor's Day ) 2022 ? 

அ) ஜூன் 30 

ஆ) ஜூன் 29 

இ) ஜூலை 02

ஈ) ஜூலை 01

விடை : (ஈ) ஜூலை 01

● ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1ம் தேதி இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) சார்பில் "தேசிய மருத்துவர்கள் தினம்" கொண்டாடுகிறது. வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 

மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் பெரும் பங்களிப்புடன் இருந்த வங்காளத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் பி.சி.ராய் நினைவாக 1991ம் ஆண்டு முதல் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Friday, July 1, 2022

Current Affairs 2022 - June 30 / 2022 - Group 2/2A & Group 4

                      GK SHANKAR 
                     JUNE 30 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் எடைக்குறைவுடன் பிறக்கும் குழந்தைகளைக் கண்காணிக்க தமிழக அரசு ஒதுக்கியுள்ள நீதி எவ்வளவு ? 

அ) 80 லட்சம்
ஆ) 85 லட்சம்
இ) 100 லட்சம்
ஈ) 75 லட்சம்

விடை : (ஆ) 85 லட்சம்

2. தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் ---------- மொழியை பயிற்றுவிக்கவும் , அதற்கான ஆசிரியர்களை நியமிக்கவும் --------------- அரசு முன்வந்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது ? 

அ) ஜப்பான், ஜப்பான் அரசு
ஆ) மலாய்,  சிங்கப்பூர்
இ) உருது, பாகிஸ்தான்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) ஜப்பான், ஜப்பான் அரசு 

3. தமிழகத்தில் எங்கு 150 அடி தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது ?
அ) நீலகிரி
ஆ) மதுரை
இ) கன்னியாகுமரி
ஈ) கடலூர்

விடை : (இ) கன்னியாகுமரி

II. தேசியச் செய்திகள்

4. கூற்று : குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது .
காரணம் : தற்போதைய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பதவியை ராஜிநாமா செய்தார்.

அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

இ) கூற்று தவறு , காரணம் சரி 

ஈ) கூற்று சரி, காரணம் தவறு 

விடை : (ஈ) கூற்று சரி , காரணம் தவறு . 

5. அட்டர்னி ஜெனரலாக ( மத்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் ) கே.கே. வேணுகோபால் அவர்களின் பதவிக்காலம் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது ? 

அ) ஓராண்டு
ஆ) ஆறு மாதங்கள்
இ) மூன்று மாதங்கள்
ஈ) எட்டு மாதங்கள்

விடை : (இ) மூன்று மாதங்கள்

6. 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த மாணவ நகரங்கள் பட்டியலில் சென்னை பிடித்துள்ள இடம் ? 

அ) 125 ஆவது
ஆ) 131 ஆவது
இ) 113 ஆவது
ஈ) 151 ஆவது

விடை : (அ) 125 ஆவது

7. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அப்யாஸ் அதிவேக வான்வழி இலக்கு வாகனம் (ஹீட்) எங்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது ? 

அ) டெல்லி
ஆ) ஒடிஸா
இ) கேரளா
ஈ) தமிழ்நாடு

விடை : (ஆ) ஒடிஸா

8. ஆஸ்கர் அகாதெமி விருது தேர்வுக் குழுவில் இடம்பெற அழைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் நடிகர் யார் ? 

அ) கமல் ஹாசன்
ஆ) மோகன் லால்
இ) சூர்யா
ஈ) சிரஞ்சீவி

III. விளையாட்டுச் செய்திகள்

9. பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றை தேர்ந்தெடுக: 

அ) இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் ஆட்டத்திற்கு இந்திய கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆ) கடந்த 35 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கேப்டனாவது இதுவே முதல்முறையாகும்.

இ) இதற்குமுன் 1998 இல் வேகப்பந்து வீச்சாளரான கபில் தேவ் கேப்டனாக இருந்தார்.

ஈ) இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கும் 36 வது கேப்டன் பும்ரா ஆவார் .

விடை : இ 

IV. முக்கிய தினங்கள் 

10. சர்வதேச பாராளுமன்ற தினம் ( International Day of Parliamentarism ) 2022 ? 
அ) ஜூன் 26
ஆ) ஜூன் 27
இ) ஜூன் 28 
ஈ) ஜூன் 30 

விடை : (ஈ) ஜூன் 30


Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...