● சிங்கப்பூரின் டிஎஸ்-இஓ உள்பட 3 வணிகப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 53 ராக்கெட் வெற்றிகரமாக வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.
● ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் தீப்பிழம்புகளை உமிழ்ந்தவாறு பாய்ந்து சென்றது. அடுத்த சில நிமிடங்களில் அதன் இயக்கமும், செயல்பாடுகளும் நிா்ணயித்த இலக்குகள் அனைத்தையும் துல்லியமாகக் கடந்ததையடுத்து, பிஎஸ்எல்வி - சி 53 திட்டம் வெற்றி பெற்ாக இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தனா். அதன் தொடா்ச்சியாக, பரஸ்பரம் அவா்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பகிா்ந்து கொண்டனா்.
● திட்டமிட்டபடி நிலைநிறுத்தம்: ராக்கெட்டைச் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை நிறைவடைந்து வியாழக்கிழமை மாலை சரியாக 6.02 மணிக்கு பிஎஸ்எல்வி - சி 53 விண்ணில் சீறிப் பாய்ந்தது.
● ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் அதில் இருந்த ஒவ்வொரு நிலைகளும் படிப்படியாக பிரியத் தொடங்கின. ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடம் 57 வினாடியில் முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது. தொடா்ந்து சில நிமிடங்களில் மீதமுள்ள 2 செயற்கைக்கோள்களும் ஒன்றன்பின் ஒன்றாக அதன் சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன.
● முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 665 கிலோ எடை கொண்டது. புவி ஆய்வுக்கான துல்லிய புகைப்படங்களை எடுப்பதற்காக சிங்கப்பூா் சாா்பில் அது அனுப்பப்பட்டுள்ளது.
● இதைத் தவிர சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய சிங்கப்பூரின் நியூசா் செயற்கைக்கோளும் நிலைநிறுத்தப்பட்டது. இது அனைத்துப் பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பக்கூடியது.
● இதனுடன் கல்விசாா் பணிக்காக சிங்கப்பூா் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவா்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
● நான்காம் நிலை: பிஎஸ்எல்வி வரலாற்றில் முதல்முறையாக செயற்கைக்கோள்களை விடுவித்த பிறகு பயன்பாடற்று இருக்கும் ராக்கெட்டின் நான்காம் நிலையையும் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்த இம்முறை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டின் இறுதிபாகமான பிஎஸ் 4 பகுதியில் ஆறு ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.
● பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டானது நியூ ஸ்பேஸ் இந்திய நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) மூலம் வணிக ரீதியாக செலுத்தப்படும் இரண்டாவது திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
6. இந்திய கலாச்சாரம் , தத்துவ இயலில் மனித உரிமைகள் என்ற மாநாட்டை டெல்லியில் தொடக்கிவைத்தவர் ?
அ) நரேந்திர மோடி
ஆ) ராம்நாத் கோவிந்த்
இ) அருண்குமார் மிஸ்ரா
ஈ) வெங்கையா நாயுடு
விடை : (இ) அருண்குமார் மிஸ்ரா
● டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்திய கலாச்சாரம் , தத்துவ இயலில் மனித உரிமைகள் என்ற மாநாட்டை தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் அருண்குமார் மிஸ்ரா தொடக்கிவைத்தவர் .
7. பொருத்துக :
( 47 வது GST கவுன்சில் கூட்டத்தில் புதிதாக இறுதி செய்யப்பட்ட வரி விதிப்பை பொருத்துக )
1) தோல் பொருள்கள் - 1) 5%
2) நிதி நிறுவன சேவைகள் - 2) 0
3) ஃபிலேரியாசிஸ் மாத்திரைகள் - 3) 18%
4) மருத்துவமனை அறை வாடகை- 4) 12%
அ) 4 3 2 1
ஆ) 3 4 1 2
இ) 1 2 3 4
ஈ) 2 1 3 4
விடை : (அ) 4 3 2 1
● 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
● இந்த வரி விதிப்பு ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
III . விளையாட்டுச்செய்திகள்
8. தமிழகத்தில் எங்கு முதல்முறையாக சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது ?
அ) மதுரை
ஆ) சென்னை
இ) சேலம்
ஈ) கன்னியாகுமரி
விடை : (ஆ) சென்னை
● சென்னை ஓபன் டபிள்யூடிஏ சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 12 முதல் 18 -ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
● இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.1.96 கோடியாகும். பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு கோப்பையுடன் சுமார் ரூ. 22 லட்சம் பரிசும் 280 புள்ளிகளும் வழங்கப்படும்.
● 2-வது இடத்தை பெறும் வீராங்கனை ரூ.15.60 லட்சத்துடன் 180 புள்ளிகளை பெறுவார்.
● இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி கோப்பையுடன் ரூ.9.47 லட்சம் பரிசுத் தொகையாக பெறும். 2-வது இடத்தை பிடிக்கும் ஜோடிக்கு ரூ.5.29 லட்சம் வழங்கப்படும்.
IV. முக்கிய தினங்கள்
9. தேசிய மருத்துவர்கள் தினம் ( National Doctor's Day ) 2022 ?
அ) ஜூன் 30
ஆ) ஜூன் 29
இ) ஜூலை 02
ஈ) ஜூலை 01
விடை : (ஈ) ஜூலை 01
● ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1ம் தேதி இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) சார்பில் "தேசிய மருத்துவர்கள் தினம்" கொண்டாடுகிறது. வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
● மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் பெரும் பங்களிப்புடன் இருந்த வங்காளத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் பி.சி.ராய் நினைவாக 1991ம் ஆண்டு முதல் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment