Sunday, October 16, 2022

Current Affairs 2022 - October 16 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                  OCTOBER 16 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்க திருக்குறள் உள்ளிட்ட எத்தனை தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது ? 

அ) 46 

ஆ) 50 

இ) 55

ஈ) 60 

விடை : (அ) 46 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்பை உலகெங்கும் கொண்டு சோ்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

● செம்மொழி நிறுவனத்தின் வளா்ச்சிப் பணியில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைவது பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புத் திட்டமாகும். 

● செம்மொழி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளுள் பாா்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் தொல்காப்பியம், நன்னூல், திருக்கு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புானூறு ஆகியவை உள்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் தற்போது நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

● இவற்றில் 41 நூல்கள் செவ்வியல் நூல்களாகும். இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையிலும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றிருக்கும். கடந்த மாா்ச் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம் வரும் டிசம்பா் மாதம் நிறைவுற்றவுடன் அச்சிடப்படும் அனைத்து நூல்களும் பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக பின்வரும் எதனை மத்திய அரசால் அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது ? 

அ) தஞ்சாவூர் வீணை 

ஆ) தஞ்சாவூர் கலைத்தட்டு 

இ) தஞ்சாவூர் ஓவியம் 

ஈ) நரசிங்கம் பேட்டை நாதஸ்வரம் 

விடை : (ஆ) தஞ்சாவூர் கலைத்தட்டு 

மத்திய அரசு இணையதளம் மூலம் நடத்திய பொது வாக்கெடுப்பில், இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத் தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

● மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில், இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பை இணையதளம் மூலம் நடத்தியது.

● இந்தப் போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன. இதில், கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் இடம்பெற்றது. இதில் அதிக வாக்குகளைப் பெற்று கைவினை பொருளுக்கான பிரிவில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

● இதையடுத்து கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு அமைச்சகத்திடம் அதற்கான சான்றிதழை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

● குறிப்பு : கலைநயமிக்க தஞ்சாவூர் கலைத் தட்டுக்கு 2006-ம் ஆண்டு புவிசார் குறியீடு பதிவுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2007 புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022 என்ற இருநாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் தொடங்கி வைக்கவுள்ளவர் ? 

அ) திரௌபதி முர்மு 

ஆ) எஸ். ஜெய்சங்கர் 

இ) நரேந்திர மோடி 

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (இ) நரேந்திர மோடி 

பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (அக்டோபா் -17) தொடங்கிவைக்கிறாா்.

● இந்த நிகழ்வில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் 12-ஆவது தவணையான ரூ. 16,000 கோடியை பிரதமா் மோடி விடுவிக்கிறாா்.

● மத்திய வேளாண்மைத் துறையும், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும் இணைந்து ‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ நிகழ்ச்சியை இரு நாட்கள் நடத்துகின்றன.

● இந்த மாநாட்டில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12-ஆவது தவணையாக, ரூ. 16,000 கோடியை நேரடி பணப் பரிவா்த்தனையின் மூலம் மின்னணு முறையில் பிரதமா் விடுவிப்பாா்.

● மத்திய வேளாண்மை துறையின் ‘பிரதமரின் விவசாய கௌரவ நிதி‘ திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்ததிட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000, மூன்று தவணையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு (11 தவணைகளில்) இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

● இந்த நிகழ்ச்சியில் ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தையும் பிரதமா் தொடங்கிவைக்கிறாா். பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும் இந்த திட்டத்தின் கீழ் பிரதமா் அறிமுகப்படுத்துவாா்.

● இதே நிகழ்ச்சியில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 ‘பிரதமரின் வளமை மையங்களை‘ பிரதமா் திறந்துவைப்பாா்.

● நாட்டில் தற்போதுள்ள 2.7 லட்சம் சில்லறை உர விற்பனையகங்கள் படிப்படியாக ‘பிஎம் வளமை மையங்கள்‘ என மாற்றப்படும். விவசாயிகளின் பல்வேறு தேவைகளை இந்த மையங்கள் பூா்த்தி செய்யும். விதைகள், மண், உரங்கள் பரிசோதனைக்கான வசதிகள் திட்டங்கள் குறித்த தகவல்கள் முதலியவற்றை இந்த மையங்கள் வழங்கும்.

● இந்த மாநாட்டில் வேளாண் புத்தொழில் முனைவோா் கண்காட்சியையும் பிரதமா் திறந்து வைப்பாா். சுமாா் 300 நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது என்றாா் தோமா்.

4. ஆசிய கடலோர காவல்படை முகமை தலைவர்களில் 18 ஆவது கூட்டம் பின்வரும் எங்கு நடைபெற்றது ? 

அ) உத்தரப்பிரதேசம் 

ஆ) மகாராஷ்டிரா 

இ) தமிழ்நாடு 

ஈ) தில்லி 

விடை : (ஈ) தில்லி 

● ஆசிய கடலோர காவல்படை முகமையில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பிரான்ஸ், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவுகள், பாகிஸ்தான், சிங்கப்பூா், இலங்கை உள்பட 23 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

● குறிப்பு : இந்தோ-பசிபிக் பகுதியில் வெளிப்படையான, சுதந்திரமான விதிகள் அடிப்படையில் கடல் எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்றார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 

5. சர்வதேச பட்டினி குறியீடு 2022 அறிக்கையில் இந்தியா இடம் பிடித்துள்ளது ? 

அ) 100

ஆ) 107 

இ) 109 

ஈ) 121 

விடை : (ஆ) 107 

நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 

● 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. 

● சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. 

● அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

● குறிப்பு : கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் போல்வால்ட் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ? 

அ) ரோஸி மீனா 

ஆ) பவித்ரா 

இ) ரவீணா 

ஈ) வந்தனா 

விடை : (அ) ரோஸி மீனா

● போல்வால்ட் பிரிவில் ரோஸி மீனா பால்ராஜ் புதிய தேசிய சாதனையுடன் (4.21மீ) தங்கம் வென்றுள்ளார்

மகளிர் 20 கி.மீ. நடை ஓட்டத்தில் ரவீணா புதிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.

7.. ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) வங்கதேசம் 

ஆ) ஆஸ்திரேலியா

இ) இங்கிலாந்து 

ஈ) இந்தியா 

விடை : (ஈ) இந்தியா 

● குறிப்பு : இதுவரை 8 முறை நடைபெற்ற ஆசிய மகளிர் டி20 கோப்பை போட்டிகளில் இந்தியா 7 ஆவது முறையாக சாம்பியன் ஓட்டத்தை வென்றுள்ளது. 

IV. முக்கிய தினங்கள் 

8. World Food Day 2022 -------------

● Ans : October 16 

● Theme(2022) : Leave No One Behind .




Friday, October 14, 2022

Current Affairs 2022 - October 14 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                   OCTOBER 14 / 2022

I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் : 

1. சர்வதேச நாடாளுமன்றங்களுக்கு இடையேயான யூனியனின் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர் ? 

அ) அபராஜிதா சாராங்கி 

ஆ) வினி மஹாஜன் 

இ) சிவ்தாஸ் மீனா 

ஈ) அஜிஷா சிங் 

விடை : (அ) அபராஜிதா சாரங்கி 

மக்களவை பாஜக உறுப்பினரான அபராஜிதா சாரங்கி, சா்வதேச நாடாளுமன்றங்களுக்கிடையேயான யூனியனின் செயற்குழு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா். ருவாண்டாவில் நடைபெற்று வரும் இந்த யூனியன் கூட்டத்தில் இந்தத் தோ்தல் நடைபெற்றதாக மாநிலங்களவை அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

● சுமாா் 178 நாடுகள் உறுப்பினா்களாக கொண்டு கடந்த 133 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் சா்வதேச நாடாளுமன்றங்களுக்கிடையேயான யூனியனின்(ஐபியூ) 145 -ஆவது பேரவைக் கூட்டம் ருவாண்டா தலைநகா் கிகாலியில் நடைபெற்று வருகிறது. 

● இதில் இந்திய நாடாளுமன்றம் சாா்பில் மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இந்த கூட்டத்திற்கிடையே ஐபியூ-இன் செயற்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் கிகாலி கூட்டத்தில் நடைபெற்றது.

● இதில் பல்வேறு குழு நாடுகளின் உறுப்பினா் தோ்வு செய்யப்படுவதில் ’ஆசிய பசிபிக் குழும’ நாடுகளில் இருந்து ஐபியூ செயற்குழுவிற்கு ஒரு உறுப்பினரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த நாடுகளைச் சோ்ந்த உறுப்பினா்களிடம் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. 

● இதில் போட்டியிட்ட இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் பாஜக உறுப்பினரான அபராஜிதா சாரங்கி(படம்) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று செயற்குழுவிற்கு தோ்வாகியிருப்பதாக மாநிலங்களவை அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் மேலும் எத்தனை கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ. 4,200 கோடி 

ஆ) ரூ. 3,800 கோடி 

இ) ரூ. 2,700 கோடி

ஈ) ரூ. 1,300 கோடி 

விடை : (ஆ) ரூ. 3,800 கோடி 

தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் மேலும் ரூ.3,800 திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

● இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சாா்பில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

●தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.1,500  கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கடன் பத்திரங்கள் 24 ஆண்டுகளில் முதிா்ச்சியடையும். இவை தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இதன்மூலம் முதலீட்டாளா்கள் முதலீடு செய்யவும் வா்த்தகம் செய்யவும் முடியும்.

● தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இதுவரை ரூ.8,000 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.3,800 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

● உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியம் என்பது பரஸ்பர நிதி போல உருவாக்கப்படும். இதன்மூலம் முதலீட்டாளா்களிடம் இருந்து பணத்தைப் பெற்று முதலீடு செய்து, ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பணத்தை மீண்டும் ஈட்டி திரும்ப அளிக்க முடியும்.

● உலக அளவில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் இந்த வளா்ச்சியில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை சாலைகள் மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் வலுவாக இணைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

● இது தவிர அனைத்துவிதமான காலநிலைகளிலும் முக்கிய ஆன்மிகத் தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வரும் வகையில் சாலைகள் மேம்படுத்தப்படும். இந்தியாவில் மக்களின் போக்குவரத்துக்கான செலவைக் குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

3. நாட்டின் எத்தனையாவது வந்தே பாரத் ரயில் சேவையை உனா - தில்லி இடையே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் ? 

அ) 3 ஆவது

ஆ) 4 ஆவது 

இ) 5 ஆவது 

ஈ) 6 ஆவது 

விடை : (ஆ) 4 ஆவது

ஹிமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

● நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

● வந்தே பாரத் விரைவு ரயிலின் 3-ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.

● இந்நிலையில், 4-ஆவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார். 

4. இந்தியாவின் முதல் 4.20 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி இயந்திரம் எங்கு நிறுவப்பட்டுள்ளது ? 

அ) சென்னை 

ஆ) கன்னியாகுமரி 

இ) தேனி 

ஈ) திருநெல்வேலி 

விடை : (ஈ) திருநெல்வேலி 

● திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் இந்தியாவின் முதல் 4.20 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

● இது மிகப்பெரிய உற்பத்தி திறன் கொண்ட ஒற்றை அலகைக் கொண்டது.

● இதுவரை, ஆரல்வாய்மொழிக் கணவாயில் நிறுவப்பட்டுள்ள 3,000 தனிக் காற்றாலை அமைப்புகள் 2 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது ஆகும். 

II. விளையாட்டு நிகழ்வுகள் 

5. இந்திய லீக் கிரிக்கெட்டின் மகளிர் ஐபிஎல் போட்டியின் அறிமுக சீசன் பின்வரும் எந்த ஆண்டு நடைபெறவுள்ளது ? 

அ) 2026

ஆ) 2025 

இ) 2024 

ஈ) 2023 

விடை : (ஈ) 2023 

● இந்திய லீக் கிரிக்கெட்டின் மகளிர் ஐபிஎல் போட்டியின் அறிமுக சீசன் அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெறவுள்ளது. 

6. எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் மகளிருக்கான 25 மீ பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) வெண்கலம்

● இந்திய அணி : ஈஷா சிங், நாம்யா கபூர், விபூகி பாட்டியா. 

III. முக்கிய தினங்கள் 

7. பின்வரும் எந்த மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது ? 

அ) செப்டம்பர் 

ஆ) அக்டோபர் 

இ) நவம்பர் 

ஈ) டிசம்பர் 

விடை : (ஆ) அக்டோபர் 

● இது அமெரிக்கப் புற்றுநோய் சங்கத்தால் 1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 

● இது மார்பகப் புற்றுநோயைப் பற்றி மக்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு வருடாந்திரப் பிரச்சாரமாகும்.

8. World Egg Day 2022 ----------

● Ans : October 14

● Theme (2022) : Egg for a Better life. 

9. World Standards Day 2022 ---------

● Ans : October 14 

● Theme (2022) : Shared Vision for a Better World.


Thursday, October 13, 2022

Current Affairs 2022 - October 13 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                   OCTOBER 13 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயங்கள் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது ? 
அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) உத்தர பிரதேசம்

ஈ) ராஜஸ்தான் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

● அறிவிப்பு : தமிழக அரசு 

● அழிந்து வரும் தேவாங்கு இனத்தைப் பாதுகாக்கும் வகையில் கரூர் , திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டர் பரப்பிலான நிலத்தை கடவூர் தேவாங்கு சரணாலயமாக அறிவித்து அறிவிக்கை செய்துள்ளது.

● காரணம் : தேவாங்கு , இரவு நேர பாலூட்டி வகையைச் சேர்ந்தது. 
¤ இவை பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை செய்கிறது.
¤ இதனால் சுற்றுச்சூழல் (ம) நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் தேவாங்குகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

● குறிப்பு : இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச மையமானது தேவாங்கை அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இணைநதுள்ளது.

2. தமிழகத்தில் குட்டி காவலர் எனும் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) பொன்மூடி 

ஈ) மா. சுப்பிரமணியன் 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

● முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து 'குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

● நோக்கம் : இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். 

3. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான தனி இதழ்களை வெளியிட்டவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) ஆர்.என்.ரவி

இ) பொன்முடி 

ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

விடை : (அ) மு.க.ஸடாலின் 

பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தேன்சிட்டு’, ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ ஆகிய இதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன், பாரதி இளங்கவிஞர் விருதை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

● அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பருவஇதழ்களை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது. அதன்படி, 4 மற்றும் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்ற இதழும் மாதமிரு முறை இதழாக வெளியிடப்படுகிறது. 

● குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இந்த இதழ்களில் வெளியிடப்படும். 

● இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கென தனியே ‘கனவு ஆசிரியர்’ என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களின் படைப்புகளோடும் வகுப்பறைஅனுபவங்கள், அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளோடு ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளியாக உள்ளது. ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’ ஆகிய 3 இதழ்களையும் முதல்வர் ஸ்டாலின்நேற்று வெளியிட்டார். பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

● பாரதி இளங்கவிஞர் விருது: மேலும், மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக செப். 11-ம் தேதி அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவிநாள்’ கடைபிடிக்கப்படும் என்றும், இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்திமாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ‘பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். 

● அதன்படி, மகாகவி பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் பா.பிரவீன் மற்றும் தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ர.சைனி ஆகியோருக்கு ‘பாரதி இளங்கவிஞர் விருது’ மற்றும் பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சம் வழங்கி, வாழ்த்தினார். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை கடந்த இரண்டு இரண்டு ஆண்டுகளாக குறைந்த விலையில் விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய எத்தனை கோடியை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) ரூ.31,000 கோடி

ஆ) ரூ. 28,000 கோடி 

இ) ரூ. 26,000 கோடி 

ஈ) ரூ. 22,000 கோடி

விடை : (ஈ) ரூ.22,000 கோடி 

அமைச்சரவை ஒப்புதல்கள் : 2020, ஜூன் முதல் 2022, ஜூன் வரையில் சந்தை விலையைவிட குறைவான விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுசெய்ய ஒருமுறை தொகையாக ரூ.22,000 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

● இந்தத் தொகை ஐஓசி, பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.

● ரயில்வே ஊழியா்களுக்கு போனஸ்: ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்களுக்கு இணையான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கியதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

● குஜராத் துறைமுகத்தில் கன்டெய்னா் முனையம்: அரசு - தனியாா் பங்கேற்பு முறையின் கீழ், குஜராத்தில் உள்ள தீனதயாள் துறைமுகத்தில் கன்டெய்னா் முனையம் அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்துக்கு ரூ.4,234.64 கோடி செலவாகும்.

● கூட்டுறவு சங்க சட்டத்தில் திருத்தம்: பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

● வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்தும் வகையில் ரூ.6,600 கோடியில் புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

4. இந்தியாவில் மாநில அரசு பகல் நேர பள்ளிகளுக்கான தரவரிசையில் பின்வரும் எந்த மாநில பள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது ? 

அ) தில்லி

ஆ) தமிழ்நாடு 

இ) மணிப்பூர்

ஈ) ஜார்க்கண்ட் 

விடை : (அ) தில்லி 

கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான "உலக கல்வி' இணையதளம் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகளுக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

● இதன் சமீபத்திய தரவரிசையில், தில்லி அரசு நடத்தும் துவாரகா செக்டார் 10-இல் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா பள்ளி முதலிடத்தையும், யமுனா விஹாரில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. 

● குறிப்பு : தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஐந்து பள்ளிகள் தில்லியைச் சேர்ந்தவை ஆகும்.

5. இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாடுக்கு இடையே எண்ணெய் (ம) எரிவாயு துறைகளில் 4 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் அண்மையில் கையொப்பமாகியுள்ளது ? 

அ) ரஷ்யா 

அ) ஜப்பான் 

இ) அமெரிக்கா 

ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (இ) அமெரிக்கா 

பருவநிலை நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்னைகளுக்குத் தீா்வு காண இந்தியாவும் அமெரிக்காவும் தனியாா் துறைகளின் பலத்தை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்தும்விதமாக, இரு நாடுகளிடையே எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் 4 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையொப்பமாகின.

● இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கும், எரிவாயு நொதிப்பு தொழில்நுட்பத்தில் சா்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த உயிரிதொழில்நுட்ப நிறுவனமான லான்ஸா டெக் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. லான்ஸா ஜெட் நிறுவனம் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தின் மூலமாக நீடித்த விமான எரிவாயு உற்பத்தி செய்வதற்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

● வாகனப் புகை உமிழ்வு அளவீடு மற்றும் குறைப்புக்கு தீா்வு காண்பது தொடா்பாக கெய்ல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான அவந்த்திகா எரிவாயு நிறுவனத்துக்கும் பக்கொ் ஹக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

● அதுபோல, என்ஜினீயா் இந்திய நிறுவனத்துக்கும் அமெரிக்காவின் யுஓபி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

● நான்காவதாக பிபிசிஎல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனத்துக்கும், பக்கொ் ஹக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. கூற்று : இந்திய ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளுக்கான மின்சார வாகனங்களை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

காரணம் : கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் அரசின் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

இ) கூற்று சரி , காரணம் தவறு 

ஈ) கூற்று தவறு , காரணம் சரி 

விடை : (ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளுக்காக மின்சார வாகனங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

● காா்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் அரசின் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

● இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் இலகுரக வாகனங்களில் 25 சதவீதமும், பேருந்துகளில் 38 சதவீதமும், மோட்டாா் சைக்கிள்களில் 48 சதவீதமும் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

● காா்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் எங்கெல்லாம் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கான செயல்திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது.

7. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) ஆதர்ஷ் ஸ்வைகா 

ஆ) சிபி ஜார்ஜ் 

இ) அவ்தார் சிங் 

ஈ) கே.ஜி . பாலகிருஷ்ணன் 

● தற்போது சிபி ஜார்ஜ் இந்திய தூதராக உள்ளார், விரைவில் ஆதர்ஷ் ஸ்வைகா பொறுப்பேற்கவுள்ளார். 

● இவர் தற்போது தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக தலைமையகத்தில் இணைச் செயலராக பணியாற்றி வருகிறார்.

● மேலும் கினியா குடியரசுக்கான அடுத்த இந்திய தூதராக அவ்தார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

8. சர்வதேச செலாவணி நிதியம் (ம) உலக வங்கியின் ஆண்டு கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் யார் ? 

அ) நரேந்திர மோடி 

ஆ) எஸ். ஜெய்சங்கர் 

இ) அமித் ஷா 

ஈ) நிர்மலா சீதாராமன் 

விடை : (ஈ) நிர்மலா சீதாராமன் 

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நீடித்த பொருளாதார வளா்ச்சி, உயா் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

● இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்னைகளில் எரிசக்தி விலை உயா்வும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. குஜராத்தில் நடைபெற்ற 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் தமிழ்நாடு எத்தனை பதக்கங்களுடன் நிறைவு செய்தது ? 

அ) 88

ஆ) 74

இ) 116

ஈ) 66

விடை : (ஆ) 74 

நாட்டிலுள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரேதங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டி கடந்த செப்டம்பா் 20 முதல் அக்டோபா் 12 வரை 23 நாள்கள் குஜராத்தின் 6 நகரங்களில் விமரிசையாக நடைபெற்று வந்தது.

● இப்போட்டியில் தொடா்ந்து 4-ஆவது முறையாக சா்வீசஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகம் 5-ஆம் இடம் பிடித்தது.

● போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த சா்வீசஸ் அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. மகாராஷ்டிரம், ஹரியாணா முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. போட்டி முழுவதுமாக சிறப்பாகச் செயல்பட்ட அணியாக மகாராஷ்டிரம் தோ்வானது.

சிறந்த வீரா், வீராங்கனை

¤ கேரளத்தைச் சோ்ந்த நீச்சல் வீரா் சஜன் பிரகாஷ், இப்போட்டியில் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தமாக 8 பதக்கங்கள் வென்று சிறந்த வீரராகத் தோ்வானாா். 

¤  கா்நாடக நீச்சல் வீராங்கனை ஹாஷிகா ராமச்சந்திரா 6 தங்கம், 1 வெண்கலத்துடன் போட்டியிலேயே சிறந்த வீராங்கனையாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

● மொத்தமாக பதக்கங்கள் :  1,249

● தங்கம் 382

● வெள்ளி 381

● வெண்கலம் 486

பதக்கப்பட்டியல் (டாப் 05)

¤ சா்வீசஸ் : 61G, 35S,  32B, = 128 M

¤ மகாராஷ்டிரம் : 39G, 38S, 63B = 140 M

¤ ஹரியாணா:  38G,  38S, 40B = 116M

¤ கா்நாடகம்:  27G, 23S, 38B = 88M

¤ தமிழகம்:  25G, 22S,  27B =  74M

IV. முக்கிய நிகழ்வுகள் 

10. International Day for Disaster Risk Reduction 2022 ---------

● Ans : October 13

● Theme (2022) : Substantially increase the availability and access to multi-hazard early warning systems and disaster risk information and assessment for people by 2030.

11. World Sight Day 2022 ----------- 

● Ans : October 13

● Theme (2022) : Love your eyes 


Wednesday, October 12, 2022

Current Affairs 2022 - October 12/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    OCTOBER 12 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின் 

ஆ) ஆர்.என். ரவி

இ) எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

ஈ) ஆ. அண்ணாதுரை 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

இயற்கை இடர்பாடுகளால் கடந்த 2021-22-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 4.43 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.481 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார்.

● 2021-22-ம் ஆண்டு சம்பா நெல் உட்பட சிறப்பு பருவபயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, மொத்தம் ரூ.481 கோடியை, 4 லட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

● இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். 

● இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார். இயற்கைப் பேரிடரால் அடிக்கடி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையைக் கருத்தில்கொண்டு, நடப்பு 2022-23-ம் ஆண்டில் ரூ.2,057 கோடி தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

2. தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் , பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்

ஆ) ஆர்.என். ரவி 

இ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

ஈ) பொன்முடி 

விடை : (இ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

● தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வி இயக்கம் சாா்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தொடக்க விழா காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநிலத்தில் தற்போது 50 லட்சம் போ் எழுத்தறிவு இல்லாமல் உள்ளனா். இவா்களில் 25 லட்சம் பேருக்கு 5 ஆண்டுகளில் எழுத்தறிவு புகட்டும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். 

3. ஆஸ்கார் விருது பெற்ற பின்வரும் எந்த குறும்படத்தை தமிழக அரசுப் பள்ளிகளில் அக்டோபர் 13 அன்று திரையிட அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) செல்லோ ஷோ

ஆ) தி ரெட் பலூன் 

இ) ரைட்டிங் வித் ஃபயர் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை: (ஆ) தி ரெட் பலூன் 

ஆஸ்காா் விருது பெற்ற ‘தி ரெட் பலூன்’ குறும்படம் அரசுப் பள்ளிகளில் வியாழக்கிழமை திரையிடப்படவுள்ளது.

● இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

● அந்த வகையில் வியாழக்கிழமை (அக்.13-ஆம் தேதி) ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்படும். இந்தப் படம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்காா் விருது பெற்ற குறும்படமாகும். படத்தின் சுருக்கம் சுற்றறிக்கையுடன் அனுப்பி வைக்கப்படும்.

● இணைப்பு (லிங்க்) மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட திரைப்படத்தை மட்டுமே திரையிட வேண்டும். வேறு எந்தப் படத்தையும் மாற்றாகக் காட்டக் கூடாது. ஏனெனில் ஆவணப்படுத்தும்போது படத்திலிருந்து மாணவா் வாரியாக கற்றல் மதிப்பீடு செய்யப்படும்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக டி.ஓய். சந்திரசூட் பரிந்துரைக்கப்பட்டுள்ளது ? 

அ) 49 ஆவது 

ஆ) 50 ஆவது 

இ) 51 ஆவது 

ஈ) 52 ஆவது 

விடை : (ஆ) 50 ஆவது 

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க மூத்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தாா்.

● இந்தப் பரிந்துரை கடிதத்தின் நகலை உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது நீதிபதியாக பதவியேற்க உள்ள நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிடம் தலைமை நீதிபதி யு.யு. லலித் அளித்தாா்.

● உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். நவம்பா் 9-ஆம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் டி.ஒய். சந்திரசூட் 2024, நவம்பா் 10-ஆம் தேதி வரையில் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியை வகிக்க உள்ளாா்.

● உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயது 65-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்கக் கோரி மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித்துக்கு அக்டோபா் 7-ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பெயரை அவா் பரிந்துரைத்துள்ளாா்.

5. நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை எத்தனை சதவீதமாக சர்வதேச செலாவணி நிதியம் ( IMF ) குறைத்து அறிவித்துள்ளது ? 

அ) 8.2%

ஆ) 7.4%

இ) 6.8%

ஈ) 5.7%

விடை : (இ) 6.8% 

● 2022 - 2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜனவரியில் IMF கணித்திருந்தது.

● பின்னர் 7.4 சதவீதமாக கடந்த ஜூலையில் குறைத்தது.

● தற்போது 6.8 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.

6. ஐக்கிய அரபு அமீரகத்தின் அறக்கட்டளை சார்பில் ஷேக் சையத் சர்வதேச விருது 2022 வழங்கப்பட்டுள்ள இந்தியர் யார் ? 

அ) வஜாஹத் ஹூசைன்

ஆ) அப்துல் காசிம்

இ) அப்ஜித் சிங்

ஈ) ஆனந்த் குமார்

விடை : (அ) வஜாஹத் ஹூசைன்

உத்தர பிரதேச மாநிலம், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை முன்னாள் தலைவரும் முன்னணி கல்வியாளா்களில் ஒருவருமான வஜாஹத் ஹுசைனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அறக்கட்டளை சாா்பில் மாற்றுமுறை மருத்துவத்துக்கான சா்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

● ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு, ‘சையத் தொண்டு மற்றும் மனிதாபிமான அறக்கட்டளை’ செயல்பட்டு வருகிறது. மக்களிடையே கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை மேம்படுத்தி, அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதை நோக்கமாக கொண்ட தன்னாா்வ நிறுவனமாகும்.

● உலக அளவில் பாரம்பரிய மற்றும் மாற்றுமுறை மருத்துவம் சாா்ந்த கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த அறக்கட்டளை சாா்பில் ‘ஷேக் சையத் சா்வதேச விருது’ முதல்முறையாக கடந்த 2020-இல் வழங்கப்பட்டது.

● இந்நிலையில், இரண்டாவது ஷேக் சையத் சா்வதேச விருது, இந்தியாவைச் சோ்ந்த தாவரவியல் வகைப்படுத்துதல் வல்லுநா் வஜாஹத் ஹுசைனுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இவா், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை முன்னாள் தலைவா் ஆவாா்.

● குறிப்பு : பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் சாா்பிலும், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் சாா்பிலும் இருமுறை வாழ்நாள் சாதனை விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் டிரையத்லான் கலப்பு பிரிவில் தங்கம் வென்றுள்ள மாநிலம் எது ? 

அ) கேரளா 

ஆ) பஞ்சாப் 

இ) தமிழ்நாடு 

ஈ) அசாம் 

விடை : (இ) தமிழ்நாடு

● தமிழக கலப்பு அணி : ஆகாஷ் பெருமாள்சாமி,  எஸ். வாமன், எஸ். ஆர்த்தி, எஸ். கீர்த்தி .

● பதக்கப்பட்டியலில் தமிழகம் : 25G, 21S, 28B என 74 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது. 

IV. முக்கிய தினங்கள் 

8. World Arthritis Day 2022 ---------

● Ans : October 12

● Theme (2022) : It's in your hands, take action. 



Tuesday, October 11, 2022

Current Affairs 2022 - October 11 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                     OCTOBER 11 / 2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியைக் கண்டுபிடிக்கும் நபருக்கு எத்தனை லட்சம் விருது வழங்கப்படவுள்ளது ? 

அ) ரூ. 4 லட்சம் 

ஆ) ரூ. 3 லட்சம்

இ) ரூ. 2 லட்சம்

ஈ) ரூ. 1 லட்சம் 

விடை : (ஈ) ரூ. 1 லட்சம் 

● போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது .

2. அண்மையில் மறைந்த வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் எந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார் ? 

அ) 2018

ஆ) 2019

இ) 2020

ஈ) 2021 

விடை : (ஈ) 2021 

● திருநெல்வேலி மாவட்டம், சத்திரம் புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக அண்மையில் காலமானார். 

● விருதுகள் : பதம்ஸ்ரீ விருது, 2021 
மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது , 2005 .

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. நாட்டின் முதல் மொத்த மருந்து உற்பத்திப் பூங்கா எங்கு அமைக்கப்படவுள்ளது ? 

அ) குஜராத் 

ஆ) தமிழ்நாடு 

இ) உத்தர பிரதேசம் 

ஈ) பஞ்சாப் 

விடை : (அ) குஜராத் 

● அதற்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

4. சர்வதேச நிதியம் (IMF) , உலக வங்கி அமைப்புகளின் ஆண்டு கூட்டம் பின்வரும் எந்த நாட்டில் நடைபெறவுள்ளது ? 

அ) ரஷ்யா 

ஆ) சீனா 

இ) அமெரிக்கா 

ஈ) இந்தியா 

விடை: (இ) அமெரிக்கா 

● அமெரிக்காவில் அக்டோபர் 11 முதல் 16 வரை 6 நாள்கள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

● இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.

● இக்கூட்டத்தில் தற்போதைய சர்வதேச பொருளாதார சூழல் குறித்துப் பேச இருக்கிறார். 

5. ஸ்விஸ் வங்கிகளில் கணக்குவைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை அடங்கிய எத்தனையாவது பட்டியலை ஸ்விட்சர்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கியுள்ளது ? 

அ) 3 ஆவது 

ஆ) 4 ஆவது 

இ) 5 ஆவது 

ஈ) 6 ஆவது 

விடை : (ஆ) 4 ஆவது 

● ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்கள் அடங்கிய 4-ஆவது பட்டியலை ஸ்விட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.

● ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகள், தங்களின் வாடிக்கையாளா்களது பணத்துக்கும், ரகசிய விவரங்களுக்கும் அதிக அளவிலான பாதுகாப்பு அளிப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்களது பணத்தை அங்கு சேமித்து வைத்துள்ளனர்.

● சில செல்வந்தா்கள், வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத முறையில் ஈட்டிய பணத்தை கருப்புப் பணமாக சேமித்து வைக்க ஸ்விஸ் வங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்கள் அதிக அளவில் கருப்புப் பணத்தைச் சேமித்து வைத்துள்ளதால், நாட்டின் பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

● ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்களைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக, இரு நாடுகளுக்குமிடையே கடந்த 2018-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முதல் பட்டியல் கடந்த 2019-ஆம் ஆண்டிலும், 2-ஆவது பட்டியல் 2020-ஆம் ஆண்டிலும், 3-ஆவது பட்டியல் கடந்த ஆண்டிலும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.

● இந்நிலையில், 4-ஆவது பட்டியலை மத்திய அரசிடம் ஸ்விஸ் அரசு வழங்கியுள்ளது. அதில், கணக்கு வைத்திருப்பவரின் பெயா், முகவரி, அவரது தொழில், வருமானத்துக்கான ஆதாரங்கள், வரி செலுத்திய சான்று, வங்கிக் கணக்கில் உள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

● நடவடிக்கை எடுக்க உதவும்: பட்டியல் தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘வரி செலுத்திய பிறகு தொழில் ரீதியாக ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவா்களின் பெயா்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

● முறையாக வரி செலுத்தாமல், ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்விஸ் அரசு வழங்கியுள்ள தகவல்கள் உதவிகரமாக இருக்கும்’ என்றனா்.

● ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போா் தொடா்பான விவரங்களை இந்தியா உள்பட 101 நாடுகளுக்கு அந்நாட்டின் வரி நிா்வாக அமைச்சகம் வழங்கியுள்ளது. அந்நாடுகளைச் சோ்ந்தோரின் சுமாா் 34 லட்சம் வங்கிக் கணக்கு விவரங்கள் பகிரப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட பட்டியல் 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் வழங்கப்படும் என்று ஸ்விஸ் அரசு தெரிவித்துள்ளது.

6. இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் பின்வரும் எந்த ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக இந்திய விண்வெளி சங்க ஆய்வறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது ? 

அ) 2023 

ஆ) 2024 

இ) 2025 

ஈ) 2026 

விடை : (இ) 2025 

● தனியாா் பங்களிப்பு அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் வேகமான வளா்ச்சி காணும் என்பதால், வரும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு உயர வாய்ப்புள்ளது’ என்பது இந்திய விண்வெளி சங்க ஆய்வறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

● இதுதொடா்பாக ‘இந்தியாவில் விண்வெளி சூழலியல் மேம்பாடு: ஒருங்கிணைந்த வளா்ச்சி மீது கவனம்’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

● இந்திய விண்வெளி பொருளாதாரத்தில் தனியாா் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் மத்திய அரசின் நேரமறையான திட்டங்களின் காரணமாக, இந்தியாவின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் மிகப் பெரிய வளா்ச்சி பெறும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

● குறிப்பு : புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு புதிய வருவாய் வாய்ப்புகளை அளிக்கக் கூடிய, முக்கிய துறையாக செயற்கைக்கோள் செலுத்தும் பிரிவு வளா்ந்து வருகிறது. இந்தத் துறையில் 2021-ஆம் ஆண்டில் நூறுக்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்கள் ரூ. 560 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. நடப்பாண்டுக்கான (2022) பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு யாருக்க பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது ? 

அ) டக்ளஸ் டபிள்யு. டைமண்ட்

ஆ) பிலிப் ஹெச். டிப்விக் 

இ) பென் பெர்னன்கே 

ஈ) அனைத்தும் 

விடை : (ஈ) அனைத்தும் 

● வங்கிகள் குறித்தும், நிதி நெருக்கடி தொடா்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த நிபுணா்கள் மூவருக்கு நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

● அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக 2006 முதல் 2014 வரை பணியாற்றிய பென் பொ்னன்கே, நிபுணா்கள் டக்ளஸ் டபிள்யு.டைமண்ட், பிலிப் ஹெச்.டிப்விக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் ஆடவருக்கான மல்லர்கம்பம் போட்டியில் தமிழக வீரர் ஹேமச்சந்திரன் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி 

ஆ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம்

● பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு : 24G, 21S, 25B என 70 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.

IV. முக்கிய தினங்கள்

9. International Day of the Girl Child 2022 ------- 

● Ans : October 11 

● Theme (2022) : Our time is now - Our rights,Our future. 


Monday, October 10, 2022

Current Affairs 2022 - October 09 / 2022 - TNPSC Group 1 2/2A & 4

                       GK SHANKAR 
                   OCTOBER 09/2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் : 

1. ஆஸ்திரேலியாவின் ஏர்பிசியோ நிறுவனம் உருவாக்கிய அதிநவீன செயற்கை சுவாசக் கருவிகள் இந்திய வாடிக்கையாளர்களுக்காக எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ? 

அ) மும்பை 

ஆ) சென்னை

இ) அகமதாபாத் 

ஈ) கொல்கத்தா 

விடை : (ஆ) சென்னை 

ஆஸ்திரேலியாவின் ஏா்ஃபிசியோ நிறுவனம் உருவாக்கிய அதிநவீன செயற்கை சுவாசக் கருவிகள் இந்திய வாடிக்கையாளா்களுக்காக சென்னையில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.

● இதற்காக இந்தியாவின் மருத்துவ உபகரண விநியோக நிறுவனமான மெட்ஸ்மாா்ட்டுடன் ஏா்ஃபிசியோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. அக்னிபத் திட்டத்தின் கீழ் பின்வரும் எந்த ஆண்டு முதல் பெண்களும் விமானப் படைக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக அப்படையின் தலைமைத் தளபதி வி.ஆர்.சௌதரி தெரிவித்துள்ளார் ? 

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (அ) 2023 

இந்திய விமானப் படையின் 90-ஆவது நிறுவன தினம் சண்டீகரில் உள்ள விமானப் படைத் தளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

● அதில் கலந்துகொண்ட விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி கூறியதாவது:

● தனி ஆயுதப் பிரிவு: விமானப் படை அதிகாரிகளுக்கென தனி ஆயுத அமைப்புப் பிரிவை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பிரிவு அமைக்கப்படுவது சுதந்திரத்துக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

● தரையிலும் வானிலும் உள்ள இலக்குகளைத் தரையில் இருந்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், தொலைவில் இருந்து ‘ரிமோட்’ வாயிலாகக் கட்டுப்படுத்தக் கூடிய விமானங்கள், விமானங்களில் இடம்பெறும் ஆயுதங்கள் உள்ளிட்டவை ஆயுத அமைப்புப் பிரிவில் இடம்பெறும். இதன்மூலமாக அதிகாரிகளுக்கு எளிதில் பயிற்சி அளிக்க முடியும். அதனால் ரூ.3,400 கோடி வரை சேமிக்கப்படும்.

● ட்ரோன்கள், ஹைப்பா்சோனிக் ஆயுதங்கள், விண்வெளிசாா் ஆயுதங்கள் உள்ளிட்டவை போரிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போா்ச் சூழலிலும் கையாள்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரவு கையாளுகை, தானியங்கி இயந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி விமானப் படையின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

● ‘அக்னிபத்’ வீராங்கனைகள்: அக்னிபத் திட்டத்தின் வாயிலாக விமானப் படைக்கு வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். டிசம்பரில் சுமாா் 3,000 அக்னி வீரா்கள் விமானப் படையில் முதல்கட்டப் பயிற்சியைத் தொடங்குவா். 

● அத்திட்டத்தின் கீழ் பெண்களையும் அடுத்த ஆண்டு முதல் விமானப் படையில் இணைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் இணைக்கப்படும் வீரா்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் தொடா்ந்து அதிகரிக்கும்.

3. பின்வரும் எந்த மாநிலத்தில் முதல்முறையாக 10 (ம) 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர் ? 

அ) தமிழ்நாடு

ஆ) சத்தீஸ்கர் 

இ) ராஜஸ்தான் 

ஈ) கேரளா 

விடை : (ஆ) சத்தீஸ்கர் 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த 125 மாணவர்களை மகிழ்விக்கும் வகையில், மாநில அரசு சார்பில் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

● மாநில அளவில் மற்றும் மாவட்டங்கள் அளவில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள், ஏழு பேர் அமர்ந்து பயணிக்கும் ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டனர்.

● சத்தீஸ்கர் மாநில முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது.

● மாநிலத்தில் முதல் முறையாக, முதலிடம் பிடித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று வந்து கௌரவிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

4. இந்தியாவில் 18 வயது நிறைவடையாத சிறுமிகளுக்கு திருமணம் அதிக அளவில் நடைபெற்ற மாநிலம் எது ? 

அ) கேரளா 

ஆ) ஜார்க்கண்ட் 

இ) தமிழ்நாடு

ஈ) பஞ்சாப் 

விடை : (ஆ) ஜார்க்கண்ட் 

● நாட்டில் 18 வயது நிறைவடையாத சிறுமிகளுக்கு திருமணம் அதிக அளவில் நடைபெறும் மாநிலமாக ஜாா்க்கண்ட் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகையியல் மாதிரிக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

● இக்கணக்கெடுப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

● 18 வயது நிறைவடையாத சிறுமிகளுக்கு நிகழும் திருமணங்கள் தேசிய அளவில் 1.9-ஆக உள்ளது. மேலும், இம்மதிப்பு மாநிலங்களுக்கு இடையே வேறுபட்டு காணப்படுகிறது. குறைந்தபட்சமாக கேரளத்தில் 0.0-ஆகவும், அதிகபட்சமாக ஜாா்க்கண்டில் 5.8- ஆகவும் உள்ளது.

● 21 வயது நிறைவடையாத பெண்களுக்கு நிகழும் திருமணங்கள், நாட்டில் பாதிக்கும் அதிகமான அளவில் ஜாா்க்கண்ட் மற்றும் மேற்குவங்கம் ஆகிய இரு மாநிலங்களில் நிகழ்கின்றன. இந்த வயது பெண்களுக்கு நிகழும் திருமணம் தேசிய அளவில் சராசரியாக 29.5 சதவீதமாக உள்ள நிலையில், மேற்குவங்கம் மற்றும் ஜாா்க்கண்டில் முறையே 54.9 மற்றும் 54.6 சதவீதமாக உள்ளது.

● நரபலி எண்ணிக்கையும் அதிகம்: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, நரபலியின் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் ஜாா்க்கண்டில் அதிகமாகவே உள்ளது.

5. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகள் பங்குபெறும் , பயங்கரவாதச் செயல்பாடுகளில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டை எதிர்கொள்வதற்கான சிறப்புக் கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) மும்பை 

ஆ) டெல்லி 

இ) ஹைதராபாத் 

ஈ) அ (ம) ஆ 

விடை : (ஈ) அ (ம) ஆ 

● ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தமற்ற உறுப்பினரான இந்தியா 2022-ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதத் தடுப்புக் குழுவுக்கு தலைமை வகித்து வருகிறது. கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகள் பங்குபெறும், பயங்கரவாதச் செயல்பாடுகளில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டை எதிா்கொள்வதற்கான சிறப்புக் கூட்டம் வரும் அக்டோபா் 28-ஆம் தேதி மும்பையிலும், 29-ஆம் தேதி புது தில்லியிலும் நடைபெற இருக்கிறது.

● குறிப்பு : கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் கூட்டம் அக்டோபா் 28-ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளதாக அக்குழுவின் தலைவா் ருசித்ரா காம்போஜ் தெரிவித்தாா்.

● பாதுகாப்பு கவுன்சிலில் இரு ஆண்டுகள் நிரந்தரமற்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் இந்தியா, வரும் டிசம்பா் மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை வகிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6. முழுவதும் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற இந்தியாவின் முதல் பஞ்சாயத்து எந்த மாநிலத்தில் உள்ளது ? 

அ) குஜராத் 

ஆ) தமிழ்நாடு 

இ) மணிப்பூர்

ஈ) கேரளா 

விடை : (ஈ) கேரளா 

● கேரளாவின் புல்லம்பாறை என்ற பஞ்சாயத்தானது அதன் குடியிருப்பாளர்கள் மத்தியில் முழு டிஜிட்டல் கல்வியறிவைப் பெற்ற இந்தியாவின் முதல் கிராமப் பஞ்சாயத்தாக மாறியுள்ளது புல்லம்பாறை.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் மகளிர் யோகாசனம் ஆர்ட்டிஸ்டிக் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ? 

அ) எஸ். வைஷ்ணவி 

ஆ) பூர்விகா 

இ) கௌரி துர்கா 

ஈ) அர்ச்சனா 

விடை : (அ) எஸ். வைஷ்ணவி 

IV. முக்கிய தினங்கள் 

8. World Post Day 2022 --------- 

Ans : October 09 

Theme (2022) : Post for Planet 

Current Affairs 2022 - October 08 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR 
                       October 08 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) தமிழகத்தில் இணைய சூதாட்டங்களை ஆடினால் விளையாடுவோருக்கு 3 மாதங்கள் சிறை.
2) தமிழகத்தில் இணைய சூதாட்டங்களை விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை.
3) தமிழகத்தில் இணைய சூதாட்டங்களை அளிப்போருக்கு 5 ஆண்டுகள் சிறை. 

அ) 1 மற்றும் 3

ஆ)  1 மற்றும் 2

இ) 2 மற்றும் 3

ஈ) அனைத்தும் 

விடை : (ஆ) 1 (ம) 2 

தமிழகத்தில் இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த சட்டம் தமிழக அரசிதழில் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அப்போது முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

● தமிழகத்தில் இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக் கொண்டு, இணைய வழியில் விளையாடப்படும் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இணைய சூதாட்டங்கள் எதையும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக அளிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

விளம்பரங்கள் கூடாது: இணைய சூதாட்டங்கள் தொடா்பாக யாரும் எந்தவகை விளம்பரங்களையும் மின்னணு ஊடகம் உள்பட எந்த ஊடகங்களிலும் வெளியிடக் கூடாது. நேரடியாக அல்லது மறைமுகமாக இத்தகைய விளம்பரங்களைச் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய சூதாட்ட நடவடிக்கைகளில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், இணைய பணப்பரிவா்த்தனை அமைப்புகள் ஈடுபடக் கூடாது.

உள்ளூா் இணைய விளையாட்டுக்குச் சலுகை: உள்ளூா் இணைய விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்களுக்கென கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, உள்ளூா் இணைய விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான ஆணையத்தில் உரிய சான்றிதழைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழை வைத்துள்ள உள்ளூா் விளையாட்டு வழங்குநா்கள் மட்டுமே இணைய விளையாட்டுகளை வழங்க முடியும். இதற்கென உரிய அனுமதிச் சான்றைப் பெற ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் ஆணையம், உரிய விசாரணைக்குப் பிறகு அனுமதிச் சான்றை அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

சூதாட்டம் நடத்தக் கூடாது: உள்ளூா் அளவில் இணைய வழி விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்கள் சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, பணம் அல்லது வேறு வகை பொருள்களைக் கொண்டு சூதாட்ட அடிப்படையில் இணைய வழி விளையாட்டுகளை நடத்தக் கூடாது. அனுமதிச் சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தவறான தகவல்களை அளித்தோ அல்லது மோசடியாகவோ அனுமதி சான்றிதழ்களைப் பெற்றிருந்தாலோ, உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாவிட்டாலோ, அவசரச் சட்டத்திலுள்ள அம்சங்களுக்கு முரணாக இயங்கினாலோ சான்றிதழ் திரும்பப் பெறப்படும்.

● இணைய வழி விளையாட்டுக்கான சான்றிதழைத் திரும்பப் பெறவோ அல்லது நிறுத்தி வைப்பதற்கு முன்பாகவோ பாதிக்கப்படும் நபருக்கு உரிய வாய்ப்பை வழங்கலாம். சான்றிதழ் தொடா்பான நிறுத்தம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் பாதிக்கப்படும் நபா்கள் முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு ஆணையத்தை அரசே அமைக்கும். இதன்மூலம், உள்ளூா் அளவிலான இணைய வழி விளையாட்டுகளைத் தவிா்த்து, சூதாட்ட அடிப்படையிலான எந்த விளையாட்டுகளுக்கும் மாநிலத்தில் அனுமதியில்லை.

தண்டனை என்ன? பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக் கொண்டு இணைய வழி சூதாட்டத்தில் யாரேனும் ஈடுபட்டால் 3 மாதங்கள் வரை சிறை, ரூ.5,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை மையப்படுத்தும் இணைய வழி விளையாட்டுகள் தொடா்பான விளம்பரங்களை யாரேனும் வெளியிட்டால் அவா்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

● மீண்டும் இந்தத் தவறைச் செய்தால் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். சூதாட்டத்துடன் இணைத்து இணையவழி விளையாட்டுகளை வழங்கும் நபா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே சோ்த்து விதிக்கப்படும். மீண்டும் இதே தவறைச் செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இதிலுள்ள குற்ற முகாந்திரங்களை நீதிமன்றங்கள் கண்டறிய முடியாது என அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் இணைய விளையாட்டு அனுமதிக்கு ஆணையம்

● உள்ளூா் இணைய விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்க ஆணையம் அமைக்க அவசர சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆணையத்துக்கு தலைமைச் செயலாளா் நிலைக்குக் குறையாத ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைவராக இருப்பாா். இதன் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற காவல் துறை தலைவா், தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணா், மனநல மருத்துவ நிபுணா், ஆன்லைன் விளையாட்டுப் பிரிவு நிபுணா் ஆகியோா் இருப்பா்.


2. பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் என்று தொடங்கப்பட்பது ? 

அ) அக்டோபர் 05

ஆ) அக்டோபர் 06

இ) அக்டோபர் 07

ஈ) அக்டோபர் 08 

விடை : (இ) அக்டோபர் 07 

● பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட தொடக்க தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

3. தமிழ்நாடு புதிய முதன்மை கணக்காயராக பதவியேற்றுள்ளவர் யார் ?

அ) தே.கி. சேகர் 

ஆ) கோ.கி. சங்க்கரன் 

இ) மாதவி பட்சில்லா 

ஈ) நர்மதா தேவி 

விடை : (அ) தே.கி. சேகர் 

● பதவி : மத்திய அரசின் தணிக்கை , கணக்குத் துறையின் கீழ் இயங்ககூடியது.

● முக்கிய பணி: மாநில அரசின் நிதிக்கணக்கு,  ஊதியம், ஓய்வூதியம்,  அரசு வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு செலவிடப்படும் நிதி உள்ளிட்டவை குறித்து தணிக்கை செய்வது . 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. 2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அலெஸ் பயலியட்ஸ்கி எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) கனடா 

ஆ) பெலாரஸ்

இ) ஜமாய்கா 

ஈ) லண்டன் 

விடை : (ஆ) பெலாரஸ் 


மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காப்பதற்காகத் தொடா்ந்து போராடி வருவதற்காக பெலாரஸ் ஆா்வலா் அலெஸ் பியலியட்ஸ்கிக்கு நடப்பாண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

●  மேலும், ரஷியாவைச் சோ்ந்த குரூப் மெமோரியல், உக்ரைனைச் சோ்ந்த மனித சுதந்திர மையம் ஆகியவற்றுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

5. ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அதானி பின்வரும் எந்த மாநிலத்தில் ரூ.65,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார் ? 

அ) குஜராத் 

ஆ) ராஜஸ்தான்

இ) மகாராஷ்டிரா 

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஆ) ராஜஸ்தான் 

ராஜஸ்தானில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.65,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தொழிலதிபா் கௌதம் அதானி அறிவித்துள்ளாா்.

● இதில் 10,000 மெகாவாட் சூரிய மின்உற்பத்தி திட்டம், சிமெண்ட் உற்பத்தி ஆலை விரிவாக்கம், ஜெய்பூா் விமான நிலைய மேம்பாடு ஆகிய திட்டங்கள் அடங்கும்.

● இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 40,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றாா்.

● குறிப்பு : ராஜஸ்தானில் அதானி குழுமம் ஏற்கெனவே அதிகஅளவில் முதலீடு செய்துள்ளது.

6. பின்வரும் எந்த ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை (ம) கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் ? 

அ) 2024 

ஆ) 2025

இ) 2026

ஈ) 2027 

விடை : (ஈ) 2027 

நாட்டில் 2027-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அமைக்கப்படும்; இதன் மூலம் பால் பொருள்கள் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட கூட்டுறவு செயல்பாடுகள் அடிப்படை நிலைகளிலேயே உத்வேகம் பெறும்’ என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரான அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

● நாடு முழுவதும் தற்போது 65,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் இச்சங்கங்கள் இருக்க வேண்டியது மிக முக்கியம் என்று அவா் குறிப்பிட்டாா்.

7. மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு உதவும் வகையில் புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்க படுவதாக இந்தியாவும் பின்வரும் எந்த நாடும் இணைந்து அறிவித்துள்ளன ? 

அ) ரஷ்யா 

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) அமெரிக்கா 

விடை : (ஈ) அமெரிக்கா 

மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு உதவும் வகையில், புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்கப்படுவதாக இருநாடுகளும் வெள்ளிக்கிழமை அறிவித்தன.

● ஹைட்ரஜன் மற்றும் உயிரி எரிபொருளுக்கான பணிக்குழுக்கள் அமைக்கப்படுவதை இந்தியாவும் அமெரிக்காவும் தொடா்ந்து வருகின்றன. 

● இந்நிலையில் மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு மாறுவதற்குத் தேவைப்படும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மிகப் பெரிய ஒருங்கிணைப்புக்கு புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை பெற்றுள்ள இந்திய வீரர் யார் ? 

அ) ஹர்மன்பிரீத் சிங் 

ஆ) கிரிஷன் பதக் 

இ) வருண் குமார்

ஈ) நீலகண்ட சர்மா 

விடை : (அ) ஹர்மன்பிரீத் சிங் 

9. 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் கலப்பு 4×400 மீ ஃபிரீஸ்டைல் ரிலேவில் தமிழக அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) வெண்கலம் 

● தமிழக அணி : சத்யசாய் கிருஷ்ணா,  சக்த,  மான்யா முக்தா மனேஷ், பவன் குப்தா 

● பதக்க பட்டியலில் தமிழகம் : 19G, 19S, 21B என 59 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.

IV. முக்கிய தினங்கள் 

10. World Migratory Bird Day 2022 -----------

Ans : October 08

Theme (2022) : Light Pollution 

11. Indian Air Force Day 2022 --------------

Ans : October 08 

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...