Wednesday, October 12, 2022

Current Affairs 2022 - October 12/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    OCTOBER 12 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின் 

ஆ) ஆர்.என். ரவி

இ) எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

ஈ) ஆ. அண்ணாதுரை 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

இயற்கை இடர்பாடுகளால் கடந்த 2021-22-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 4.43 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.481 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார்.

● 2021-22-ம் ஆண்டு சம்பா நெல் உட்பட சிறப்பு பருவபயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, மொத்தம் ரூ.481 கோடியை, 4 லட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

● இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். 

● இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார். இயற்கைப் பேரிடரால் அடிக்கடி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையைக் கருத்தில்கொண்டு, நடப்பு 2022-23-ம் ஆண்டில் ரூ.2,057 கோடி தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

2. தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் , பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்

ஆ) ஆர்.என். ரவி 

இ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

ஈ) பொன்முடி 

விடை : (இ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

● தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வி இயக்கம் சாா்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தொடக்க விழா காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநிலத்தில் தற்போது 50 லட்சம் போ் எழுத்தறிவு இல்லாமல் உள்ளனா். இவா்களில் 25 லட்சம் பேருக்கு 5 ஆண்டுகளில் எழுத்தறிவு புகட்டும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். 

3. ஆஸ்கார் விருது பெற்ற பின்வரும் எந்த குறும்படத்தை தமிழக அரசுப் பள்ளிகளில் அக்டோபர் 13 அன்று திரையிட அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) செல்லோ ஷோ

ஆ) தி ரெட் பலூன் 

இ) ரைட்டிங் வித் ஃபயர் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை: (ஆ) தி ரெட் பலூன் 

ஆஸ்காா் விருது பெற்ற ‘தி ரெட் பலூன்’ குறும்படம் அரசுப் பள்ளிகளில் வியாழக்கிழமை திரையிடப்படவுள்ளது.

● இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

● அந்த வகையில் வியாழக்கிழமை (அக்.13-ஆம் தேதி) ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்படும். இந்தப் படம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்காா் விருது பெற்ற குறும்படமாகும். படத்தின் சுருக்கம் சுற்றறிக்கையுடன் அனுப்பி வைக்கப்படும்.

● இணைப்பு (லிங்க்) மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட திரைப்படத்தை மட்டுமே திரையிட வேண்டும். வேறு எந்தப் படத்தையும் மாற்றாகக் காட்டக் கூடாது. ஏனெனில் ஆவணப்படுத்தும்போது படத்திலிருந்து மாணவா் வாரியாக கற்றல் மதிப்பீடு செய்யப்படும்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக டி.ஓய். சந்திரசூட் பரிந்துரைக்கப்பட்டுள்ளது ? 

அ) 49 ஆவது 

ஆ) 50 ஆவது 

இ) 51 ஆவது 

ஈ) 52 ஆவது 

விடை : (ஆ) 50 ஆவது 

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க மூத்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தாா்.

● இந்தப் பரிந்துரை கடிதத்தின் நகலை உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது நீதிபதியாக பதவியேற்க உள்ள நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிடம் தலைமை நீதிபதி யு.யு. லலித் அளித்தாா்.

● உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். நவம்பா் 9-ஆம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் டி.ஒய். சந்திரசூட் 2024, நவம்பா் 10-ஆம் தேதி வரையில் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியை வகிக்க உள்ளாா்.

● உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயது 65-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்கக் கோரி மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித்துக்கு அக்டோபா் 7-ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பெயரை அவா் பரிந்துரைத்துள்ளாா்.

5. நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை எத்தனை சதவீதமாக சர்வதேச செலாவணி நிதியம் ( IMF ) குறைத்து அறிவித்துள்ளது ? 

அ) 8.2%

ஆ) 7.4%

இ) 6.8%

ஈ) 5.7%

விடை : (இ) 6.8% 

● 2022 - 2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜனவரியில் IMF கணித்திருந்தது.

● பின்னர் 7.4 சதவீதமாக கடந்த ஜூலையில் குறைத்தது.

● தற்போது 6.8 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.

6. ஐக்கிய அரபு அமீரகத்தின் அறக்கட்டளை சார்பில் ஷேக் சையத் சர்வதேச விருது 2022 வழங்கப்பட்டுள்ள இந்தியர் யார் ? 

அ) வஜாஹத் ஹூசைன்

ஆ) அப்துல் காசிம்

இ) அப்ஜித் சிங்

ஈ) ஆனந்த் குமார்

விடை : (அ) வஜாஹத் ஹூசைன்

உத்தர பிரதேச மாநிலம், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை முன்னாள் தலைவரும் முன்னணி கல்வியாளா்களில் ஒருவருமான வஜாஹத் ஹுசைனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அறக்கட்டளை சாா்பில் மாற்றுமுறை மருத்துவத்துக்கான சா்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

● ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு, ‘சையத் தொண்டு மற்றும் மனிதாபிமான அறக்கட்டளை’ செயல்பட்டு வருகிறது. மக்களிடையே கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை மேம்படுத்தி, அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதை நோக்கமாக கொண்ட தன்னாா்வ நிறுவனமாகும்.

● உலக அளவில் பாரம்பரிய மற்றும் மாற்றுமுறை மருத்துவம் சாா்ந்த கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த அறக்கட்டளை சாா்பில் ‘ஷேக் சையத் சா்வதேச விருது’ முதல்முறையாக கடந்த 2020-இல் வழங்கப்பட்டது.

● இந்நிலையில், இரண்டாவது ஷேக் சையத் சா்வதேச விருது, இந்தியாவைச் சோ்ந்த தாவரவியல் வகைப்படுத்துதல் வல்லுநா் வஜாஹத் ஹுசைனுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இவா், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை முன்னாள் தலைவா் ஆவாா்.

● குறிப்பு : பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் சாா்பிலும், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் சாா்பிலும் இருமுறை வாழ்நாள் சாதனை விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் டிரையத்லான் கலப்பு பிரிவில் தங்கம் வென்றுள்ள மாநிலம் எது ? 

அ) கேரளா 

ஆ) பஞ்சாப் 

இ) தமிழ்நாடு 

ஈ) அசாம் 

விடை : (இ) தமிழ்நாடு

● தமிழக கலப்பு அணி : ஆகாஷ் பெருமாள்சாமி,  எஸ். வாமன், எஸ். ஆர்த்தி, எஸ். கீர்த்தி .

● பதக்கப்பட்டியலில் தமிழகம் : 25G, 21S, 28B என 74 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது. 

IV. முக்கிய தினங்கள் 

8. World Arthritis Day 2022 ---------

● Ans : October 12

● Theme (2022) : It's in your hands, take action. 



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...