● ஆஸ்திரேலியாவின் ஏா்ஃபிசியோ நிறுவனம் உருவாக்கிய அதிநவீன செயற்கை சுவாசக் கருவிகள் இந்திய வாடிக்கையாளா்களுக்காக சென்னையில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.
● இதற்காக இந்தியாவின் மருத்துவ உபகரண விநியோக நிறுவனமான மெட்ஸ்மாா்ட்டுடன் ஏா்ஃபிசியோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
2. அக்னிபத் திட்டத்தின் கீழ் பின்வரும் எந்த ஆண்டு முதல் பெண்களும் விமானப் படைக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக அப்படையின் தலைமைத் தளபதி வி.ஆர்.சௌதரி தெரிவித்துள்ளார் ?
அ) 2023
ஆ) 2024
இ) 2025
ஈ) 2026
விடை : (அ) 2023
● இந்திய விமானப் படையின் 90-ஆவது நிறுவன தினம் சண்டீகரில் உள்ள விமானப் படைத் தளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
● அதில் கலந்துகொண்ட விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி கூறியதாவது:
● தனி ஆயுதப் பிரிவு: விமானப் படை அதிகாரிகளுக்கென தனி ஆயுத அமைப்புப் பிரிவை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பிரிவு அமைக்கப்படுவது சுதந்திரத்துக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
● தரையிலும் வானிலும் உள்ள இலக்குகளைத் தரையில் இருந்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், தொலைவில் இருந்து ‘ரிமோட்’ வாயிலாகக் கட்டுப்படுத்தக் கூடிய விமானங்கள், விமானங்களில் இடம்பெறும் ஆயுதங்கள் உள்ளிட்டவை ஆயுத அமைப்புப் பிரிவில் இடம்பெறும். இதன்மூலமாக அதிகாரிகளுக்கு எளிதில் பயிற்சி அளிக்க முடியும். அதனால் ரூ.3,400 கோடி வரை சேமிக்கப்படும்.
● ட்ரோன்கள், ஹைப்பா்சோனிக் ஆயுதங்கள், விண்வெளிசாா் ஆயுதங்கள் உள்ளிட்டவை போரிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போா்ச் சூழலிலும் கையாள்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரவு கையாளுகை, தானியங்கி இயந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி விமானப் படையின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
● ‘அக்னிபத்’ வீராங்கனைகள்: அக்னிபத் திட்டத்தின் வாயிலாக விமானப் படைக்கு வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். டிசம்பரில் சுமாா் 3,000 அக்னி வீரா்கள் விமானப் படையில் முதல்கட்டப் பயிற்சியைத் தொடங்குவா்.
● அத்திட்டத்தின் கீழ் பெண்களையும் அடுத்த ஆண்டு முதல் விமானப் படையில் இணைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் இணைக்கப்படும் வீரா்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் தொடா்ந்து அதிகரிக்கும்.
3. பின்வரும் எந்த மாநிலத்தில் முதல்முறையாக 10 (ம) 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர் ?
அ) தமிழ்நாடு
ஆ) சத்தீஸ்கர்
இ) ராஜஸ்தான்
ஈ) கேரளா
விடை : (ஆ) சத்தீஸ்கர்
● சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த 125 மாணவர்களை மகிழ்விக்கும் வகையில், மாநில அரசு சார்பில் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
● மாநில அளவில் மற்றும் மாவட்டங்கள் அளவில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள், ஏழு பேர் அமர்ந்து பயணிக்கும் ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டனர்.
● சத்தீஸ்கர் மாநில முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது.
● மாநிலத்தில் முதல் முறையாக, முதலிடம் பிடித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று வந்து கௌரவிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
4. இந்தியாவில் 18 வயது நிறைவடையாத சிறுமிகளுக்கு திருமணம் அதிக அளவில் நடைபெற்ற மாநிலம் எது ?
அ) கேரளா
ஆ) ஜார்க்கண்ட்
இ) தமிழ்நாடு
ஈ) பஞ்சாப்
விடை : (ஆ) ஜார்க்கண்ட்
● நாட்டில் 18 வயது நிறைவடையாத சிறுமிகளுக்கு திருமணம் அதிக அளவில் நடைபெறும் மாநிலமாக ஜாா்க்கண்ட் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகையியல் மாதிரிக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
● இக்கணக்கெடுப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
● 18 வயது நிறைவடையாத சிறுமிகளுக்கு நிகழும் திருமணங்கள் தேசிய அளவில் 1.9-ஆக உள்ளது. மேலும், இம்மதிப்பு மாநிலங்களுக்கு இடையே வேறுபட்டு காணப்படுகிறது. குறைந்தபட்சமாக கேரளத்தில் 0.0-ஆகவும், அதிகபட்சமாக ஜாா்க்கண்டில் 5.8- ஆகவும் உள்ளது.
● 21 வயது நிறைவடையாத பெண்களுக்கு நிகழும் திருமணங்கள், நாட்டில் பாதிக்கும் அதிகமான அளவில் ஜாா்க்கண்ட் மற்றும் மேற்குவங்கம் ஆகிய இரு மாநிலங்களில் நிகழ்கின்றன. இந்த வயது பெண்களுக்கு நிகழும் திருமணம் தேசிய அளவில் சராசரியாக 29.5 சதவீதமாக உள்ள நிலையில், மேற்குவங்கம் மற்றும் ஜாா்க்கண்டில் முறையே 54.9 மற்றும் 54.6 சதவீதமாக உள்ளது.
● நரபலி எண்ணிக்கையும் அதிகம்: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, நரபலியின் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் ஜாா்க்கண்டில் அதிகமாகவே உள்ளது.
5. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகள் பங்குபெறும் , பயங்கரவாதச் செயல்பாடுகளில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டை எதிர்கொள்வதற்கான சிறப்புக் கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது ?
அ) மும்பை
ஆ) டெல்லி
இ) ஹைதராபாத்
ஈ) அ (ம) ஆ
விடை : (ஈ) அ (ம) ஆ
● ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தமற்ற உறுப்பினரான இந்தியா 2022-ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதத் தடுப்புக் குழுவுக்கு தலைமை வகித்து வருகிறது. கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகள் பங்குபெறும், பயங்கரவாதச் செயல்பாடுகளில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டை எதிா்கொள்வதற்கான சிறப்புக் கூட்டம் வரும் அக்டோபா் 28-ஆம் தேதி மும்பையிலும், 29-ஆம் தேதி புது தில்லியிலும் நடைபெற இருக்கிறது.
● குறிப்பு : கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் கூட்டம் அக்டோபா் 28-ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளதாக அக்குழுவின் தலைவா் ருசித்ரா காம்போஜ் தெரிவித்தாா்.
● பாதுகாப்பு கவுன்சிலில் இரு ஆண்டுகள் நிரந்தரமற்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் இந்தியா, வரும் டிசம்பா் மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை வகிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6. முழுவதும் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற இந்தியாவின் முதல் பஞ்சாயத்து எந்த மாநிலத்தில் உள்ளது ?
அ) குஜராத்
ஆ) தமிழ்நாடு
இ) மணிப்பூர்
ஈ) கேரளா
விடை : (ஈ) கேரளா
● கேரளாவின் புல்லம்பாறை என்ற பஞ்சாயத்தானது அதன் குடியிருப்பாளர்கள் மத்தியில் முழு டிஜிட்டல் கல்வியறிவைப் பெற்ற இந்தியாவின் முதல் கிராமப் பஞ்சாயத்தாக மாறியுள்ளது புல்லம்பாறை.
III. விளையாட்டு நிகழ்வுகள்
7. 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் மகளிர் யோகாசனம் ஆர்ட்டிஸ்டிக் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ?
அ) எஸ். வைஷ்ணவி
ஆ) பூர்விகா
இ) கௌரி துர்கா
ஈ) அர்ச்சனா
விடை : (அ) எஸ். வைஷ்ணவி
IV. முக்கிய தினங்கள்
8. World Post Day 2022 ---------
Ans : October 09
Theme (2022) : Post for Planet
No comments:
Post a Comment