GK SHANKAR OCTOBER 11 / 2022
I.தமிழ்நாட்டு நிகழ்வுகள்
1. தமிழகத்தில் எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியைக் கண்டுபிடிக்கும் நபருக்கு எத்தனை லட்சம் விருது வழங்கப்படவுள்ளது ?
அ) ரூ. 4 லட்சம்
ஆ) ரூ. 3 லட்சம்
இ) ரூ. 2 லட்சம்
ஈ) ரூ. 1 லட்சம்
விடை : (ஈ) ரூ. 1 லட்சம்
● போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது .
2. அண்மையில் மறைந்த வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் எந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார் ?
அ) 2018
ஆ) 2019
இ) 2020
ஈ) 2021
விடை : (ஈ) 2021
● திருநெல்வேலி மாவட்டம், சத்திரம் புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக அண்மையில் காலமானார்.
● விருதுகள் : பதம்ஸ்ரீ விருது, 2021
மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது , 2005 .
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
3. நாட்டின் முதல் மொத்த மருந்து உற்பத்திப் பூங்கா எங்கு அமைக்கப்படவுள்ளது ?
அ) குஜராத்
ஆ) தமிழ்நாடு
இ) உத்தர பிரதேசம்
ஈ) பஞ்சாப்
விடை : (அ) குஜராத்
● அதற்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
4. சர்வதேச நிதியம் (IMF) , உலக வங்கி அமைப்புகளின் ஆண்டு கூட்டம் பின்வரும் எந்த நாட்டில் நடைபெறவுள்ளது ?
அ) ரஷ்யா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) இந்தியா
விடை: (இ) அமெரிக்கா
● அமெரிக்காவில் அக்டோபர் 11 முதல் 16 வரை 6 நாள்கள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
● இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.
● இக்கூட்டத்தில் தற்போதைய சர்வதேச பொருளாதார சூழல் குறித்துப் பேச இருக்கிறார்.
5. ஸ்விஸ் வங்கிகளில் கணக்குவைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை அடங்கிய எத்தனையாவது பட்டியலை ஸ்விட்சர்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கியுள்ளது ?
அ) 3 ஆவது
ஆ) 4 ஆவது
இ) 5 ஆவது
ஈ) 6 ஆவது
விடை : (ஆ) 4 ஆவது
● ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்கள் அடங்கிய 4-ஆவது பட்டியலை ஸ்விட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.
● ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகள், தங்களின் வாடிக்கையாளா்களது பணத்துக்கும், ரகசிய விவரங்களுக்கும் அதிக அளவிலான பாதுகாப்பு அளிப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்களது பணத்தை அங்கு சேமித்து வைத்துள்ளனர்.
● சில செல்வந்தா்கள், வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத முறையில் ஈட்டிய பணத்தை கருப்புப் பணமாக சேமித்து வைக்க ஸ்விஸ் வங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்கள் அதிக அளவில் கருப்புப் பணத்தைச் சேமித்து வைத்துள்ளதால், நாட்டின் பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
● ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்களைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக, இரு நாடுகளுக்குமிடையே கடந்த 2018-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முதல் பட்டியல் கடந்த 2019-ஆம் ஆண்டிலும், 2-ஆவது பட்டியல் 2020-ஆம் ஆண்டிலும், 3-ஆவது பட்டியல் கடந்த ஆண்டிலும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.
● இந்நிலையில், 4-ஆவது பட்டியலை மத்திய அரசிடம் ஸ்விஸ் அரசு வழங்கியுள்ளது. அதில், கணக்கு வைத்திருப்பவரின் பெயா், முகவரி, அவரது தொழில், வருமானத்துக்கான ஆதாரங்கள், வரி செலுத்திய சான்று, வங்கிக் கணக்கில் உள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
● நடவடிக்கை எடுக்க உதவும்: பட்டியல் தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘வரி செலுத்திய பிறகு தொழில் ரீதியாக ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவா்களின் பெயா்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
● முறையாக வரி செலுத்தாமல், ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்விஸ் அரசு வழங்கியுள்ள தகவல்கள் உதவிகரமாக இருக்கும்’ என்றனா்.
● ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போா் தொடா்பான விவரங்களை இந்தியா உள்பட 101 நாடுகளுக்கு அந்நாட்டின் வரி நிா்வாக அமைச்சகம் வழங்கியுள்ளது. அந்நாடுகளைச் சோ்ந்தோரின் சுமாா் 34 லட்சம் வங்கிக் கணக்கு விவரங்கள் பகிரப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட பட்டியல் 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் வழங்கப்படும் என்று ஸ்விஸ் அரசு தெரிவித்துள்ளது.
6. இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் பின்வரும் எந்த ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக இந்திய விண்வெளி சங்க ஆய்வறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது ?
அ) 2023
ஆ) 2024
இ) 2025
ஈ) 2026
விடை : (இ) 2025
● தனியாா் பங்களிப்பு அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் வேகமான வளா்ச்சி காணும் என்பதால், வரும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு உயர வாய்ப்புள்ளது’ என்பது இந்திய விண்வெளி சங்க ஆய்வறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.
● இதுதொடா்பாக ‘இந்தியாவில் விண்வெளி சூழலியல் மேம்பாடு: ஒருங்கிணைந்த வளா்ச்சி மீது கவனம்’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
● இந்திய விண்வெளி பொருளாதாரத்தில் தனியாா் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் மத்திய அரசின் நேரமறையான திட்டங்களின் காரணமாக, இந்தியாவின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் மிகப் பெரிய வளா்ச்சி பெறும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
● குறிப்பு : புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு புதிய வருவாய் வாய்ப்புகளை அளிக்கக் கூடிய, முக்கிய துறையாக செயற்கைக்கோள் செலுத்தும் பிரிவு வளா்ந்து வருகிறது. இந்தத் துறையில் 2021-ஆம் ஆண்டில் நூறுக்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்கள் ரூ. 560 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. நடப்பாண்டுக்கான (2022) பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு யாருக்க பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது ?
அ) டக்ளஸ் டபிள்யு. டைமண்ட்
ஆ) பிலிப் ஹெச். டிப்விக்
இ) பென் பெர்னன்கே
ஈ) அனைத்தும்
விடை : (ஈ) அனைத்தும்
● வங்கிகள் குறித்தும், நிதி நெருக்கடி தொடா்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த நிபுணா்கள் மூவருக்கு நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.
● அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக 2006 முதல் 2014 வரை பணியாற்றிய பென் பொ்னன்கே, நிபுணா்கள் டக்ளஸ் டபிள்யு.டைமண்ட், பிலிப் ஹெச்.டிப்விக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
III. விளையாட்டு நிகழ்வுகள்
8. 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் ஆடவருக்கான மல்லர்கம்பம் போட்டியில் தமிழக வீரர் ஹேமச்சந்திரன் வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
ஆ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : (அ) தங்கம்
● பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு : 24G, 21S, 25B என 70 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.
IV. முக்கிய தினங்கள்
9. International Day of the Girl Child 2022 -------
● Ans : October 11
● Theme (2022) : Our time is now - Our rights,Our future.
No comments:
Post a Comment