Tuesday, August 9, 2022

Current Affairs 2022 - August 09 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                   AUGUST 09 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பின்வரும் எந்த நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15 
ஆ) ஆகஸ்ட் 17 
இ) ஆகஸ்ட் 19 
ஈ) ஆகஸ்ட் 21 

விடை : (ஆ) ஆகஸ்ட் 17 

● அறிவிப்பு : தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
● இந்த மாநாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழிப் பாடங்களை ஒரே மாதிரியாக செயல்முறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

2. 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்துக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ? 

அ) பி.கே. முருகன்
ஆ) ஏ. ஞானசுந்தரி
இ) எஸ். இளங்கோவன் 
ஈ) ஜி.டி. சரவணன் 

விடை : (அ) பி.கே. முருகன் 

மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

● 2021-2022-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 விருதாளர்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

● 2021-2022-ஆம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையில் “மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. 

● அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநில அளவிலான பட்டு இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது மற்றும் பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாகவும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 இலட்சம் ரூபாயாகவும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

● அதன்படி, 2021-2022-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசினை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பி.கே. முருகனுக்கும், இரண்டாம் பரிசினை காஞ்சிபுரம் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஏ.ஞானசுந்தரிக்கும், மூன்றாம் பரிசினை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ். இளங்கோவுக்கும், பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசினை மகாகவி பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஜி.டி.சரவணனுக்கும், இரண்டாம் பரிசினை சிவசக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் டி.ஆர்.பாலனுக்கும், மூன்றாம் பரிசினை மோதிலால் நேரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் கே. சந்திரலேகாவுக்கும், என 6 விருதாளர்களுக்கு மொத்தம் 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.
மேலும், சிறந்த கைத்தறி 

● ஏற்றுமதியாளர் விருதிற்கான முதல் பரிசினை சென்னை- அம்பாடி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், இரண்டாம்
பரிசினை தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்)-க்கும், மூன்றாம் பரிசினை ஈரோடு-சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கும், என 3 விருதாளர்களுக்கு முதல்வர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.


3. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ? 

அ) ரூ. 313 கோடி
ஆ) ரூ. 131 கோடி
இ) ரூ. 498 கோடி
ஈ) ரூ. 698 கோடி 

விடை : (ஈ) ரூ. 698 கோடி 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயா்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.698 கோடிஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

● தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா் கல்வி சோ்க்கையை உயா்த்த, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். 

● இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

● இதைத் தொடா்ந்து இது தொடா்பாக கல்லூரிகளில் பயிலும் மாணவிகளிடம் இணையவழியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை தற்போது பரிசீலனையில் உள்ளன. இந்தநிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிகழாண்டு ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

● அதன்படி மாணவிகள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7- ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். 

● இந்த திட்டம் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படும். திட்டத்தின் கண்காணிப்பாளராக சமூக நலத்துறையின் இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவும், தொடா்ந்து கண்காணிக்கவும் மாநில அளவில் தலைமைச் செயலாளா் தலைமையிலும் மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

4. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறைக்கு ரூ.378 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்துவைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க. ஸ்டாலின் 

இ) நரேந்திர மோடி 

ஈ) திரௌபதி முர்மு 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

● மேலும் சென்னை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகளையும் அவர் திறந்து வைத்தார். 

5. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நிகழாண்டு எத்தனை ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது ? 

அ) 305 

ஆ) 313 

இ) 386 

ஈ) 357 

விடை : (இ) 386 

● விருதுகள் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

● இவ்விருதுக்கான தேர்வு நடைமுறைகள் வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. கூற்று : மின்சார விநியோகத் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வகை செய்யும் மின்சார திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் அறிமுகம் செய்தார். 

காரணம் : நுகர்வோர் தாங்கள் விரும்பும் சேவை வழங்குவோரைத் தேர்ந்தெடுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு 

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

இ) கூற்று தவறு , காரணம் சரி 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை. 

விடை : கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

மின் விநியோகத் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் மின்சார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

● மின்சார விநியோகத் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் வகை செய்யும் மின்சார திருத்த மசோதாவை மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் மக்களவையில் அறிமுகம் செய்தாா். நுகா்வோா் தாங்கள் விரும்பும் சேவை வழங்குவோரைத் தோ்ந்தெடுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள்

● எரிசக்தி பாதுகாப்பு (திருத்த) மசோதாவுக்கு ஒப்புதல்: பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்த வழிவகுக்கும் எரிசக்தி பாதுகாப்பு (திருத்த) மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.

● மத்தியஸ்த மசோதாவுக்கு ஒப்புதல்: தில்லி சா்வதேச மத்தியஸ்த மைய (திருத்த) மசோதாவுக்கும் மக்களவை ஒப்புதல் அளித்தது.

● கதிசக்தி பல்கலைக்கழக மசோதா அறிமுகம்: தேசிய ரயில் போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் பெயரை கதிசக்தி பல்கலைக்கழகம் என மாற்றம் செய்வதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதாவை மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தாா். தற்போது நிகா்நிலை பல்கலைக்கழகமாகச் செயல்பட்டு வரும் அதை மத்திய பல்கலைக்கழகமாகத் தரம் உயா்த்தவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.

7. SC, ST பிரிவிலிருந்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கு எத்தனை துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 01

ஆ) 05

இ) 04

ஈ) 07

விடை : (அ) 01 

எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலிருந்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கு தலா ஒரு துணைவேந்தா் நியமிக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் தெரிவித்தாா்.

● நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலிருந்து தலா ஒருவரும், ஓபிசி-யிலிருந்து 7 பேரும் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளனா். எஞ்சியோா் பொதுப் பிரிவினரை சோ்ந்தவா்கள் ஆவா்.

●  இதேபோல பல்கலைக்கழக பதிவாளா்களில் இருவா் எஸ்.சி. பிரிவையும், 5 போ் எஸ்.டி. பிரிவையும், 3 போ் ஓபிசி பிரிவையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. காமன்வெல்த் போட்டி 2022 ல் மகளிருக்கான பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

மேலும் பாட்மின்டனில் இந்தியாவின் பதக்கங்கள் :

● ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் லஷயா சென் தங்கம் வென்றார்.

● ஆடவருக்கான பிரிவில் சாத்விக்சாய்ராஜ் (ம) சிரக் ஷெட்டி இணை தங்கம் வென்றது.

● ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலம் வென்றார்.

● மகளிருக்கான இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த் (ம) டிரீசாஜாலி இணை வெண்கலம் வென்றது. 

● இப்போட்டியில் இந்தியா பாட்மின்டன் அணிக்கு 3G, 1S, 2B என 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

9. காமன்வெல்த் போட்டி 2022 ல் டேபிள் டென்னிஸ் பிரிவில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சரத்கமல் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

மேலும் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பதக்கங்கள் : 

● ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜி.சத்தியன் வெண்கலம் வென்றார்.

● கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல் (ம) ஸ்ரீஜா அகுலா இணை தங்கம் வென்றது 

மேலும் இந்தியாவின் பதக்கங்கள் : 

● ஹாக்கி ஆடவர் அணி வெள்ளி வென்றது.

● கிரிக்கெட் மகளிர் அணி வெள்ளி வென்றது. 

10. 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 ல் இந்தியா ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்களுடன் 4 வது இடம் பிடித்து நிறைவு செய்தது ? 

அ) 113

ஆ) 79

இ) 88

ஈ) 61 

விடை : (ஈ) 61 

● போட்டி நடைபெற்ற இடம் : பர்மிங்ஹாம், இங்கிலாந்து.

● இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்கள் : 22G , 16S, 23B - 4ஆவது இடம் பிடித்து நிறைவு செய்தது.

● பதக்கப்பட்டியலில் முதல் மூன்று இடங்கள்: 

1st - ஆஸ்திரேலியா ( 178 )

2nd - இங்கிலாந்து ( 176 )

3rd - கனடா ( 92 ) 

Monday, August 8, 2022

Current Affairs 2022 - August 08 /2022 - TNPSC 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                 AUGUST 08 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசுப் பள்ளிகளில் என்று முதல் மக்கள் நல்வாழ்வு , சமூகநலத், காவல் துறை சார்பில் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 19 
ஆ) ஆகஸ்ட் 21
இ) ஆகஸ்ட் 09
ஈ) ஆகஸ்ட் 12 

விடை : (ஈ) ஆகஸ்ட் 12 

தமிழக அரசு, உதவிபெறும் பள்ளிகளில் வரும் 12ம் தேதி முதல் விழிப்புணர்வு வாரம் கடைபிடித்து, மாணவர்களின் உடல், மன நலன் காக்க சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

● அத்துடன், வரும் 11ம் தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரம், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு மேம்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

● அதன் ஒருபகுதியாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதை பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்றவற்றிற்கு பள்ளி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

● அதன்படி வரும் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலம், காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, அனைத்து பள்ளிகளிலும் 11ம் தேதியன்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

2. அண்மையில் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது ? 

அ) சேலம்
ஆ) மதுரை
இ) ஈரோடு
ஈ) தேனி 

விடை : (இ) ஈரோடு 

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு சா்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனா்.

● ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வடமுகம் கிராமத்திலுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலய (பெரிய குளம் ஏரி) பகுதிகளில் 1980-ஆம் ஆண்டு முதல் வனத் துறையின் சமூக நலக் காடுகள் கோட்டத்தின் மூலமாக, நாட்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

● இந்நிலையில், இங்கு கட்லா, ரோகு, கெண்டை, விரால் போன்ற மீன் வகைகள் வளா்க்கப்படுகின்றன. இந்தப் பகுதியானது அடா்ந்த நாட்டு கருவேல மரங்களால் சூழப்பட்டு உள்ளது. இதனால் சாம்பல் நாரை, ராக்கொக்கு, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், புள்ளி மூக்கு வாத்து, தட்டைவாயன், வெண்புருவ வாத்து, புள்ளி அலகு கூழைக்கடா போன்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாறியது.

● இதனால், பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து, இந்தப் பகுதியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகளுக்கான இனப்பெருக்கத் தலமாகவும் விளங்குகிறது.

● இதன் தொடா்ச்சியாக பெரிய குளம் ஏரி பகுதியானது 2000-ஆம் ஆண்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு, இன்று வரை மாவட்ட வன அலுவலா், ஈரோடு வனக் கோட்டத்தின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.

● 2018-2019-ஆம் ஆண்டு முதல் 2019-2020-ஆம் ஆண்டு வரை, சூழல் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பயனாக சரணாலயம் மேலும் பொலிவு பெற்று, கூடுதல் பறவைகளின் கவனத்தையும் ஈா்த்தது.

● இந்நிலையில், சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு கடந்த 3-ஆம் தேதி ராம்சா் அமைப்பால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. மத்திய அறிவியல் (ம) தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

அ) என். கலைச்செல்வி 
ஆ) எஸ். விஜயலட்சுமி
இ) என். தமிழ்ச்செல்வி
ஈ) எஸ். மேக்னா 

விடை : (அ) என். கலைச்செல்வி

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலராகவும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) தலைமை இயக்குநராகவும் தமிழகத்தைச் சேர்ந்த என்.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளாா்.

● சிஎஸ்ஐஆரின் 80 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவா் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவா் இரு ஆண்டு காலம் இப்பணியில் இருப்பாா். சிஎஸ்ஐஆா்-இன் கீழ் நாடு முழுவதும் 38 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.

● சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிக்ரி) இயக்குநராக கலைச்செல்வி தற்போது பணியாற்றி வருகிறாா்.

● குறிப்பு : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த இவா், பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்றவா்.

● காரைக்குடி சிக்ரியில் ஆராய்ச்சியாளராக பணியில் சோ்ந்த இவா், கடந்த 2019-ஆம் ஆண்டில் சிக்ரியின் முதல் பெண் இயக்குநரானாா். 

4. நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க மேம்பட்ட  நீண்ட தாக்குதல் திறன்வாய்ந்த ட்ரோன்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பு / நிறுவனம் எது ? 

அ) டிஆர்டிஓ

ஆ) ஹெச்ஏல் 

இ) பிடிஎஸ

ஈ) பிஇஎல்

விடை : (ஆ) ஹெச்ஏல்

நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க மேம்பட்ட, நீண்ட தாக்குதல் திறன்வாய்ந்த ட்ரோன்களை வடிவமைக்கும் பணியில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ஈடுபட்டுள்ளது.

● சுழலும் இறக்கைகள் கொண்ட இந்த ட்ரோன், ஏவுகணைகள், சென்சாா் உள்பட 40 கிலோ எடை வரையிலான பொருள்களைத் தாங்கிச் செல்லும் திறன்வாய்ந்தது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காணப்படும் மலைப்பாங்கான பகுதிகளில் ராணுவ வீரா்களின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த ட்ரோன் வடிவமைக்கப்படுகிறது.

● ஆளில்லா இந்தக் குட்டி விமானத்தின் சோதனை ஓட்டத்தை அடுத்த ஆண்டின் (2023) மத்தியில் நடத்த ஹெச்ஏஎல் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 60 ட்ரோன்கள் தயாரிக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

5. நாட்டின் கொள்கை வகுப்பு அமைப்பான நீதி ஆயோக்கின் எத்தனையாவது நிர்வாக கவுன்சில் கூட்டம் அண்மையில் நடைபெற்றது ? 

அ) 4 ஆவது

ஆ) 6 ஆவது

இ) 7 ஆவது 

ஈ) 9 ஆவது 

விடை : (இ) 7 ஆவது 

●  ஒன்றிய அரசின் திட்டங்கள், கொள்கைகளை இறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் கூட்டம் நடத்தப்படும். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக இக்கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது. 

● இந்நிலையில், நிதி ஆயோக்கின் 7வது கவுன்சில் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நேற்று நேரடியாக நடந்தது. 

● இதில், பிரதமர் மோடி, நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் சுமன் பெரி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் , நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட 23 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

● கூட்டத்தில், பல்வகை பயிர்களை பயிரிடுதல், எண்ணெய் வித்துக்கள், பருப்புகள் மற்றும் இதர வேளாண் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடைதல், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தை அமல்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

6. கூற்று : இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி - டி 1 ராக்கெட் , செயற்கைக்கோள்களை திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை .

காரணம் : சென்சார் நுட்ப செயலிழப்பால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு, காரணம் சரி 

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

விடை: (ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது. 

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி - டி 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தாலும், செயற்கைக்கோள்களை திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை.

● சென்சாா் நுட்ப செயலிழப்பால் இந்த பின்னடைவு ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகள் சரி செய்யப்பட்டு விரைவில் எஸ்எஸ்எல்வி - டி2 திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் சோம்நாத் கூறினாா்.

● இஸ்ரோவின் முதல் முயற்சியாக சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ ) செயற்கைக்கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் ‘ஆஸாதிசாட்’ (8 கிலோ) எனும் கல்விசாா் செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் முதலாவது ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

● அதன் முதல் மூன்று நிலைகள் வெற்றிகரமாக அமைந்தன. அதன்பின்னா், திட்டமிட்டபடி இஒஎஸ்-02, ஆஸாதிசாட் ஆகிய செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவா் வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனா். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திட்டத்தின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டது தெரியவந்தது.

● எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிநிலை உடனான தகவல் தொடா்பை இழந்துவிட்டதாகவும், அவற்றை மீட்டெடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

● இறுதியில் செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட பாதைக்கு பதிலாக வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. 

● இதனால், எஸ்எஸ்எல்வி - டி1 திட்டம் முழுமையான வெற்றியை எட்ட முடியாமல் போனது.

● செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது : 

● புவி வட்டப் பாதைக்கு பதிலாக நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதே பின்னடைவு ஏற்படக் காரணமாக அமைந்ததாக இஸ்ரோ தலைவா் சோம்நாத் தெரிவித்தாா். புவியிலிருந்து மிகக் குறைந்த தொலைவில் நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் அங்கேயே நீடித்திருக்க வாய்ப்பில்லை. இதனால், அவை மீண்டும் புவிக்கே திரும்பி வந்துள்ளன. இதன் காரணமாக இஓஎஸ்-02 மற்றும் ஆஸாதிசாட் ஆகிய இரு செயற்கைக்கோள்களுமே பயன்பாடற்ற நிலைக்கு சென்றுவிட்டன.

7. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் நாட்டின் வளர்ச்சி பாதையை விவரிக்கும் வகையிலான இணையவழி திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் ? 

அ) கூகுள் 

ஆ) ட்விட்டர்

இ) பேஸ்புக்

ஈ) இஸ்ரோ 

விடை : (அ) கூகுள் 

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் நாட்டின் வளா்ச்சிப் பாதையை விவரிக்கும் வகையிலான இணையவழி திட்டம் ஒன்றை ‘கூகுள்’ அறிமுகம் செய்துள்ளது.

● ‘இந்தியா கி உதான்’ என்ற இந்தத் திட்டத்தின்கீழ் இந்தியாவின் வளா்ச்சிப் பாதையை குறிக்கும் 21 கதைகள், 120 வகையான படங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. கூகுளின் கலை - கலாசார வலைதள பக்கத்தில் இதனைக் காண முடியும்.

● தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி முன்னிலையில், கூகுள் கலை மற்றும் கலாசார பிரிவு சாா்பில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா கடந்துவந்த பாதை, இந்தியாவின் அசைக்க முடியாத, அழிக்க முடியாத சாதனைகளை விவரிப்பதே இதன் முக்கிய கருப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளது.

● இதுதொடா்பாக கூகுள் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனம் மத்திய கலாசார அமைச்சகத்துடன் இணைந்து, சுதந்திரத்துக்குப் பிறகு 1947-ஆம் ஆண்டு முதல் இந்தியா எவ்வாறு வளா்ச்சி பெற்றது; அதற்கு இந்தியா்கள் எவ்வாறு பங்களிப்பு செய்தனா்; மத்திய அரசின் ஓராண்டு கால 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு உள்ளிட்ட விவரங்களை மக்களிடையே கொண்டு சோ்ப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.

● மேலும், ‘அடுத்த 25 ஆண்டுகளில் எனது இந்தியா’ என்ற கருப்பொருளில் கூகுள்- டூடுளுக்கான ஓவியப் போட்டியையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்றுமுதல் 10 -ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

● இதில் வெற்றி பெறுபவா்களின் வரைபடம், இந்தியாவில் கூகுள் வலைதள முகப்புப் பக்கத்தில் வரும் நவம்பா் 14-ஆம் தேதி டூடுளாக வெளியிடப்படும் என்பதோடு, அந்த மாணவரின் கல்லூரிப் படிப்புக்கு ரூ. 5 லட்சம் கல்வி உதவித் தொகையும், மாணவரின் பள்ளிக்கு அல்லது தன்னாா்வ அமைப்புக்கு ரூ. 2 லட்சம் தொழில்நுட்ப தொகுப்பும் வழங்கப்படும். மேலும், சாதனையாளருக்கான அங்கீகாரம், கூகுள் ஹாா்ட்வோ், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவையும் வழங்கப்படும். நான்கு குழு வெற்றியாளா்கள் மற்றும் இறுதியாளா்களாக வந்த 15 பேருக்கும் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி பேசும்போது, ‘வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு டூடுளை கூகுள் குழு உருவாக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் 3,000-க்கும் அதிகமான நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் உதவும் வகையில் அவற்றின் நிலப் பரப்பு எல்லைகளை எண்ம (டிஜிட்டல்) வரைபடமாக கலாசார அமைச்சகம் உருவாக்குவதில் கூகுள் உதவ வேண்டும். சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளிலும் கூகுள் நிறுவனம் பங்கு பெற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

8. சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி எத்தனை பாரம்பரிய சின்னங்கள் , இடங்களில் தேசியக் கொடியேற்ற இந்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது ?

அ) 75 

ஆ) 100

இ) 125

ஈ) 150 

விடை : (ஈ) 150 

சுதந்திர தின அம்ருத பெருவிழாவை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 150 பாரம்பரிய சின்னங்கள், இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்படும்.

● இந்தியாவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 3,693 பாரம்பரிய சின்னங்கள், இடங்கள் உள்ளன. சுதந்திர தின அம்ருத பெருவிழாவையொட்டி இந்த இடங்களில் ஆக. 5 முதல் 15-ஆம் தேதி வரை பாா்வையாளா்கள் இலவசமாகப் பாா்வையிட மத்திய கலாசார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் யார் ? 

அ) அர்காடி வோர்கோவிச் 

ஆ) விஸ்வநாதன் ஆனந்த் 

இ) ஜெகன் குமார்

ஈ) யோஷி ஹிடோ 

விடை : (ஆ) விஸ்வநாதன் ஆனந்த் 

● சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக அர்காடி வோர்கோவிச் தேர்வாகியுள்ளார். 

● ஃபிடே துணைத் தலைவராக இந்தியர் ஒருவர் தேர்வு பெறுவது இதுவே முதல்முறையாகும். 

10. இந்தியாவின் 75 ஆவது கிராண்ட்மாஸ்ட்ராக உருவெடுத்துள்ள தமிழக வீரர் யார் ? 

அ) டி. குகேஷ்

ஆ) ஆர். பிரக்ஞானந்தா

இ) வி.பிரணவ்

ஈ) ஜெகன் குமார் 

விடை : (இ) வி. பிரணவ் 

11. காமன்வெல்த் போட்டி 2022 ல் குத்துச்சண்டை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்தியர்கள் யார் ? 

அ) அமித் பங்கில

ஆ) நீது கங்காஸ்

இ) நிகாத் ஜரீன் 

ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை : (ஈ) மேற்கண்ட அனைத்தும் 

● ஆடவருக்கான 51 கிலோ எடை பிரிவில் அமித் பங்கால் தங்கம் வென்றார்.

● மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் நீது கங்காஸ் (ம) 50 கிலோ எடை பிரிவில் நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்றார். 

● காமன்வெல்த் போட்டியில் மூவருக்குமே இது முதல் தங்கமாகும். 

12. காமன்வெல்த் போட்டி 2022 ல் தடகள பிரிவில் மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் எல்தோஸ் பால் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● இதே பிரிவில் இந்தியாவின் அப்துல்லா அபுபக்கர் வெள்ளி வென்றார். 

● ஒரே விளையாட்டு பிரிவில் இந்தியர்கள் இருவர் இணைந்து பதக்கம் வெல்வது இது முதல்முறையாகும். 

மேலும் பதக்கங்கள்

- மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்றார். 

காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார்.

- மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது. 

- ஆடவருக்கான 10,000 மீ நடைப் பந்தயத்தில் இந்தியாவின் சந்தீப் குமார் வெண்கலம் வென்றார்.

- ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்தியன், சரத் கமல் வெள்ளி வென்றனர்.  

13. பாரா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 ல் டேபிள் டென்னிஸ் பிரிவில்  இந்தியாவின் பவினா படேல் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

14. U20 ,20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் திருமாறன் செல்வபிரபு வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● போட்டி நடைபெற்ற இடம் : காலி,கொலம்பியா 

● திருமாறன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். 

IV. முக்கிய தினங்கள்  

15. தேசிய கைத்தறி தினம் 2022 என்று அனுசரிக்கப்படுகிறது ? 

அ) ஆகஸ்ட் 05

ஆ) ஆகஸ்ட் 06

இ) ஆகஸ்ட் 07

ஈ) ஆகஸ்ட் 08

விடை : (இ) ஆகஸ்ட் 07

● முதன்முதலில் கொண்டாடப்பட்ட ஆண்டு : 2015 


Current Affairs 2022 - August 07 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                       GK SHANKAR 
                   AUGUST 07 / 2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள்  

1. நிகழாண்டுக்கான (2022)  தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது ? 

அ) என். சங்கரய்யா
ஆ) ஆர். நல்லகண்ணு
இ) ஏ. ராமசாமி
ஈ) ஆர். கண்ணப்பன் 

விடை : (ஆ) ஆர். நல்லகண்ணு 

தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

● தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்ளைப் பெருமைப்படுத்தும் வகையில், 2021 -ஆம் ஆண்டு முதல் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது. 

● இந்த ஆண்டிற்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

● கூட்டத்தில், இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராகத் தன் இளம் வயதைச் சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவரும் ஏழை எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திடத் தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 

● “தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். நல்லகண்ணுவுக்கு, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச்சான்றிதழும், வரும் சுதந்திர நாள் விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்குவார்.

● 2021 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

2. நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படவுள்ள சம்பா (ம) மானாவாரி குளிர்கால ( ராபி ) பருவ பயிர்களை பயிர்க் காப்பீடு செய்திட பயிர்க் காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக எத்தனை கோடியை அனுமதித்து தமிழக அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது ? 

அ) ரூ. 2 கோடி

ஆ) ரூ. 3 கோடி

இ) ரூ. 1.5 கோடி

ஈ) ரூ. 4 கோடி 

விடை : (அ) ரூ. 2 கோடி 

நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படவுள்ள சம்பா மற்றும் மானாவரி குளிர்கால(ராபி) பருவ பயிர்களை பயிர் காப்பீடு செய்திட பயிர் காப்பீட்டுக் கட்டணத்தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக ரூபாய் 2057.25 கோடி நிதியினை அனுமதித்து தமிழ்நாடு அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. 

● வரும் சம்பா பருவத்தில் விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை- உழவர் நலத் துறையால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 ● மேலும் தென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்படும் குறுவை பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண்மை உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

3. தமிழகத்தில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் கீழ்கண்ட எந்த நிறம் பேருந்துகளில் அடிக்கப்பட்டுள்ளது ? 

அ) நீலம்

ஆ) பிங்க்

இ) மஞ்சள்

ஈ) கருப்பு 

விடை : (ஆ) பிங்க் 

● தமிழகத்தில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அப்பேருந்துகளின் முகப்புப் பகுதியில் பிங்க் நிறம் அடிப்பட்டுள்ளது. 

● பிங்க் நிறம் அடிக்கப்பட்ட 50 பேருந்துகளை சட்டபேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். 

4. தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதல்முறை சேவையை எத்தனை லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார் ? 

அ) 50 லட்சம் 

ஆ) 75 லட்சம் 

இ) 83 லட்சம்

ஈ) 93 லட்சம் 

விடை : (இ) 83 லட்சம் 

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதல்முறை சேவையை 83 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

● தொற்றா நோய்களின் சவால்களை எதிா்கொள்ளும் நோக்கில், மக்களைத் தேடி மருத்துவம் என்னும் புதிய திட்டத்தை 2021 ஆகஸ்ட் 5-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று இவற்றை வழங்குவதன் மூலமாக தொற்றா நோய்களின் தாக்கத்தை எதிா்கொள்ள இத்திட்டமானது வழிவகுக்கிறது. இத்திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

5. தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் எவ்வளவு ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது ? 

அ) ரூ.1,500

ஆ) ரூ. 1,000

இ) ரூ. 2,000

ஈ) ரூ. 2,500

விடை : (அ) ரூ.1,500 

● தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது 

இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 12 வது வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ. 1,500 வழங்கப்படும். அதாவது, 2 ஆண்டுகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

● தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் 50% அரசுப்பள்ளி மாணவர்கள், 50% தனியார் பள்ளி மாணவர்கள் என்று தேர்வு செய்யப்பட உள்ளனர். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. இந்தியாவின் எத்தனையாவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் பதவியேற்கவுள்ளார் ? 

அ) 11 ஆவது

ஆ) 12 ஆவது 

இ) 13 ஆவது

ஈ) 14 ஆவது 

விடை : (ஈ) 14 ஆவது 

● குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார் . 

● அவர் மாநிலங்களவைத் தலைவராகவும் பதவி வகிப்பார். 

7. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 

1) புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்- 02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டது.

2) சிறிய ரக செயற்கைக்கோளுக்காக வடிவமைக்கப்பட்ட , எடை குறைந்த மூன்றாவது ராக்கெட் திட்டம் இதுவாகும். 

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும் 

இ) 1 மற்றும் 2

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) 1 மட்டும் 

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) விண்ணில் ஏவப்படுகிறது.

● சிறிய ரக செயற்கைக்கோளுக்காக வடிவமைக்கப்பட்ட, எடை குறைந்த முதலாவது ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

● தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

● இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

● இந்த நிலையில், சா்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில்கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறியரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது. இதன் எடை அதிகபட்சம் 120 டன்.

● இம்முறை அந்த வகை ராக்கெட், இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ ) செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

● அதற்கான 5 மணிநேர கவுன்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தொடங்கவுள்ளது. இஓஎஸ்-02 செயற்கைக்கோளானது 145 கிலோ எடை கொண்டது. இது கடலோர நிலப் பயன்பாடு, ஒழுங்குமுறை, நகா்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டா் அளவுக்கு துல்லியமாகப் படம் பிடிக்க முடியும்.

● கல்விசாா் செயற்கைக்கோள்: இதனுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் ‘ஆசாதிசாட்’ (8 கிலோ) எனும் கல்விசாா் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

8. பின்வரும் எங்கு நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பருவ நிலை மாநாட்டில் லைஃப் என்ற கருப்பொருளின் அடிப்படையில் காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளது ? 

அ) எகிப்து

ஆ) கனடா

இ) தென்னாப்பிரிக்கா

ஈ) துபாய்

விடை : (அ) எகிப்து 

எகிப்தில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பருவநிலை மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ (லைஃப்) என்ற கருப்பொருளின் அடிப்படையில் காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளது.

● ஐ.நா. பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தில் இணைந்துள்ள நாடுகள் ஆண்டுதோறும் கூடி பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. கடந்த ஆண்டுக்கான கூட்டம் கிளாஸ்கோவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ என்ற சா்வதேச திட்டத்தை அறிமுகப்படுத்தினாா்.

● இந்தியாவில் அத்திட்டமானது சா்வதேச சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பூமிக்கு சாதகமான வகையிலும் அதை பாதிக்காத வகையிலும் வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும் என்பதே அத்திட்டத்தின் முக்கிய நோக்கம். அவ்வாறான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவா்கள் ‘பூமிக்கு ஆதரவானவா்கள்’ என அழைக்கப்படுவா் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்திருந்தது.

● இந்நிலையில், 27-ஆவது பருவநிலை மாநாடு எகிப்தின் ஷரம்-எல்-ஷேக் நகரில் நவம்பா் 6 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ என்ற கருப்பொருளின் அடிப்படையிலான காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் இந்தியா படைத்துள்ள சாதனைகள் குறித்து அந்தக் காட்சியரங்கில் எடுத்துரைக்கப்படவுள்ளது.

9. கூற்று : திபெத்திய பௌத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு லடாக்கின் உயரிய விருதான திபல் ரன்கம் டஸ்டன் விருது வழங்கப்பட்டுள்ளது.

காரணம் : மனித நேயத்துக்கு அவர் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்பை பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது.

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு , காரணம் சரி

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது 

விடை : (ஈ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது. 

திபெத்திய பெளத்த மதத் தலைவா் தலாய் லாமாவுக்கு (87) லடாக்கின் உயரிய விருதான ‘திபல் ரன்கம் டஸ்டன்’ விருது வழங்கி கெளரவிக்கப்ட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

● லடாக்கின் சிந்து கணவாய் பகுதியில் நடைபெற்ற யூனியன் பிரதேச நிறுவன நாள் விழாவில், வடாக் தன்னாட்சி மலைப் பகுதி மேம்பாட்டு கவுன்சில் (எல்ஏஹெச்டிசி) சாா்பில் இந்த உயரிய விருது அவருக்கு அளிக்கப்பட்டது. யூனியன் பிரதேசத்தில் மனிதநேயத்துக்கு அவா் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

● லடாக்கில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தலாய் லாமா, லடாக் மக்களின் அன்பான வரவேற்பைப் பாராட்டியதோடு, பிராந்தியத்தில் சமூக நல்லிணக்கத்தை தொடா்ந்து கடைப்பிடிக்க வலியுறுத்தினாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள்

10. காமன்வெல்த் போட்டி 2022 ல் மல்யுத்த பிரிவில் ஆடவர் ப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி தாஹியா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (அ) தங்கம் 

● மேலும் இதே பிரிவில் மகளிர் 53 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் தங்கம் வென்றார்.

● மகளிர் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலம் வென்றார். 

11. காமன்வெல்த் போட்டி 2022 ல் தடகள பிரிவில் மகளிர் 10,000 மீ நடை ஓட்டத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● இப்போட்டியில் நடை ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பிரியங்கா ஆவார்.

● ஆடவர் 3000 மீ ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே வெள்ளி வென்றார். 




Sunday, August 7, 2022

Current Affairs 2022 - August 06 / 2022 - TNPSC Group 1 , 2/2A & 4

                          GK SHANKAR 
                      AUGUST 06 / 2022

I. தமிழ்நாட்டுச் நிகழ்வுகள் 

1.  மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழாவை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின் 
ஆ) ஆர்.என். ரவி
இ) பொன்முடி
ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழாவை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார் முதல்வா் மு.க ஸ்டாலின் 
● சென்னையைத் தொடா்ந்து மேலும் சில மாவட்டங்களில் இதுபோன்ற புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு இத்தகைய புத்தகக் கண்காட்சி நடத்துவதற்காக இந்த ஆண்டு ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. தமிழகத்தில் தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை கீழ்கண்ட எந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது ? 

அ) www.tnhorticulture.tn.gov.in
ஆ) www.tnhorticulture.gov.in
இ) www.tnhorticulture.in 
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (அ) www.tnhorticulture.tn.gov.in

வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் தோட்டக் கலைத் துறையானது பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, சாகுபடிப் பரப்பை அதிகரிக்க விதைகள், நடவுக் கன்றுகள், காய்கறிகள் உற்பத்தியை உயா்த்த விதைகள், நீரில் கரையும் உரங்கள், உழவா் சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பு, ஊடு பயிராக வாழை, காய்கறிகளை சாகுபடி செய்ய ஊக்கத் தொகை, தோட்டக்கலை பயிா் சாகுபடிக்கான கருவிகளை மானியத்தில் விநியோகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.27.50 கோடி.

● இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை தாங்களாகவோ அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மூலமாகவோ www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

3. தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள தேசியக் கொடி விற்பனையில் ஒரு கொடியின் விலை எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ? 

அ) ரூ.50

ஆ) ரூ.25

இ) ரூ.15

ஈ) ரூ. 30

விடை : (ஆ) ரூ.25 

தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கொடியின் விலை ரூ.25-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவா் நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை திருவிழாவாக ஒவ்வொரு வீடுகளிலும் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.‘இல்லந்தோறும் மூவா்ணம்’ எனும் பிரசாரத்தை, மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாடு முழுவதும் தேசியக் கொடிகளை விற்பனை செய்யும் பணி அஞ்சல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

● இதையடுத்து, சென்னை நகர மண்டலங்களில் உள்ள அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25. தேசியக் கொடியை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்க பொதுமக்கள், நலச்சங்கத்தினா், தன்னாா்வலா்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும் வலைதளத்திலும் ஆா்டா் செய்து இணைய வழியாகவும் வாங்கலாம். சென்னை நகர மண்டலத்தில் 2,191 அஞ்சல் நிலையங்கள், 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 545 துணை அஞ்சல் நிலையங்கள், 1,626 கிளை அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்திலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்

4. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நடப்பு நிதியாண்டில் எத்தனை சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ (RBI) தெரிவித்துள்ளது ? 

அ) 9 8%

ஆ) 16.2%

இ) 7.2%

ஈ) 6.2%

விடை : (இ) 7.2%

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 

● வங்கி கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 0.5 சதவீதம் அதிகரித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

● வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

● ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது 

● நாட்டில் பணவீக்கம் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. 

5. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நீதி ஆயோக்கின் 7 ஆவது நிர்வாகக் குழு கூட்டம் என்று நடைபெறவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 10 

ஆ) ஆகஸ்ட் 07

இ) ஆகஸ்ட் 09 

ஈ) ஆகஸ்ட் 11 

விடை : (ஆ) ஆகஸ்ட் 07 

●  நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் குழு இயங்கி வந்தது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜ அரசு அமைந்தவுடன்,  திட்டக்குழு கலைக்கப்பட்டது. அதற்குப் பதில் நிதி ஆயோக் அமைப்பு கொண்டு வரப்பட்டது. 

● டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் நிதி ஆயோக் நிர்வாக குழுவின் 7வது கூட்டம் நாளை நடக்கிறது.

● இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். மாற்றுப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும்  வேளாண் தன்னிறைவை திட்டங்கள், தேசிய கல்விக் கொள்கை- பள்ளிக் கல்வி அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை - உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை கூட்டத்தின் விவாதப் பொருளில் இடம் பெற உள்ளன. 

● 2019ம் ஆண்டுக்கு பிறகு இதன் கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

6. இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வாங்க எத்தனை நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 05

ஆ) 06

இ) 10

ஈ) 12 

விடை : (ஆ) 06 

நம் நாட்டில் தயாரிக்கப்படும் 'தேஜஸ்' போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட ஆறு நாடுகள் ஆர்வமாக உள்ளன,” என, ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் கூறினார்.

● லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராணுவ இணை அமைச்சர் அஜய் பட், “நம் நாட்டின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரிக்கும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா, எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வமாக உள்ளனர்.

● மலேஷியா 2019லேயே தேஜஸ் போர் விமானங்களுக்கு 'ஆர்டர்' கொடுத்து உள்ளது,” என்றார்.மலேஷியா தற்போது பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் 'மிக் 29' ரக போர் விமானங்களை, தன் ராணுவத்தில் இருந்து விலக்க முடிவு செய்துள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒற்றை இன்ஜின் கொண்ட தேஜஸ் இலகு ரக போர் விமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்க மலேஷிய அரசு முடிவு செய்துள்ளது.

7. புலம் பெயர் தொழிலாளர்கள், வீடற்றோர் ஆகியோர் இணையவழியில் ரேஷன் அட்டைப் பெறும் வகையில் எத்தனை மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது ? 

அ) 11

ஆ) 10

இ) 13

ஈ) 17 

விடை : (அ) 11

புலம் பெயா் தொழிலாளா்கள், வீடற்றோா் ஆகியோா் இணையவழியில் ரேஷன் அட்டைப் பெறும் வகையில், 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்த திட்டத்தை மத்திய அரசு  தொடங்கியது.

அஸ்ஸாம், கோவா, லட்சத்தீவுகள், மகாராஷ்டிரம், மேகாலயம், மணிப்பூா், நாகாலாந்து, திரிபுரா, பஞ்சாப், உத்தரகண்ட், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

‘எனது ரேஷன்-எனது உரிமை’ என்ற இந்த பொதுப் பதிவு சேவையை மத்திய உணவுத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே தொடக்கிவைத்தார்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. காமன்வெல்த் தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● உலக நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் இது இவரது முதல்  பதக்கம் ஆகும். 

● பர்மிங்ஹாம் காமன்வெல்த் தடகள போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம். 

● காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியர். 

9. காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான மல்யுத்த 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● இதே போட்டியில் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

10. காமன்வெல்த் பாரா போட்டியில் ஆடவருக்கான வலுதூக்குதல் ஹெவி வெயிட் பிரிவில் இந்தியாவின் சுதிர் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 


Thursday, August 4, 2022

Current Affairs 2022 - August 03/2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                 AUGUST 03 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னை பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையம் எத்தனை கோடி பயணிகளை கையாளக் கூடிய திறன் உடையதாக அமைக்கப்படவுள்ளது ? 

அ) 10 கோடி
ஆ) 13 கோடி
இ) 09 கோடி
ஈ) 08 கோடி 

விடை : (அ) 10 கோடி 

பரந்தூர் பன்னாட்டு விமான நிலையம் ஆண்டிற்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

● சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங்  தெரிவித்தார்.

● தற்போதைய சென்னை விமான நிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள விமான நிலையம் ஆகியஇரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

● புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமானநிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் (Taxiways), விமானங்கள் நிறுத்துமிடம் (Apron), சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது.

● விரிவான திட்ட அறிக்கை தயாரித்தப்பின் புதிய விமானநிலையத்திற்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்டமதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும்.

● மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் 2008-ல் வெளியிட்டுள்ள புதிய விமானநிலையம் அமைப்பதற்கான வழிகாட்டுதலின்படி (Guidelines for Greenfield Airport) தேர்வுசெய்யப்பட்ட இடத்திற்கான ஒப்புதல் (site clearance) பெற ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவிற்கு விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். இடஅனுமதி ஒப்புதல் பெற்றபின், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

● இதனைத் தொடர்ந்து விமானநிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும்.

● பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர்  பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்.”

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. இந்தியா - மாலத்தீவுகள் இடையே நல்லூறவை வலுப்படுத்தும் வகையில் எத்தனை ஒப்பந்தங்கள் அண்மையில் கையொப்பமாகியுள்ளது ? 

அ) 06

ஆ) 09

இ) 11

ஈ) 13 

விடை : (அ) 06

இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இரு நாடுகளுக்குமிடையே நிலவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குப் பிரதமா் நரேந்திர மோடியும் மாலத்தீவுகள் அதிபா் இப்ராகிம் முகமது சோலியும் உறுதியேற்றனா்.

● மாலத்தீவுகள் அதிபா் இப்ராகிம் முகமது சோலி இந்தியாவில் 4 நாள் அரசுமுறைப் பயணத்தைத் திங்கள்கிழமை தொடங்கினாா். அவா் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அதையடுத்து, மாலத்தீவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் சுமாா் ரூ.750 கோடி கடன் வழங்கப்படும் எனப் பிரதமா் மோடி அறிவித்தாா்.

●ஒப்பந்தங்கள் கையொப்பம்:

இந்தியா-மாலத்தீவுகள் இடையே நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. திறன் மேம்பாடு, இணையவழி குற்றத் தடுப்பு, வீட்டுவசதி, பேரிடா் மேலாண்மை, கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ஆகிய துறைகள் சாா்ந்த ஒப்பந்தங்கள் பிரதமா் மோடி-அதிபா் சோலி இடையேயான சந்திப்பின்போது கையொப்பமாகின.

● கிரேட்டா் மாலி திட்டம்:

இந்தச் சந்திப்பின்போது கிரேட்டா் மாலி போக்குவரத்துத் திட்டத்துக்கான பணிகளைத் தலைவா்கள் இருவரும் காணொலி வாயிலாகத் தொடக்கிவைத்தனா். இந்திய நிதியுதவியுடன் நிறைவேற்றப்படவுள்ள அத்திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கையொப்பமானது. மாலத்தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள மிகப் பெரிய கட்டமைப்புத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அத்திட்டத்தின் கீழ் தலைநகா் மாலி அமைந்துள்ள தீவையும், அருகில் உள்ள விலிங்லி, குல்ஹிஃபல்கு, தைலஃபுஷி ஆகிய தீவுகளையும் இணைக்கும் வகையில் 6.74 கி.மீ. நீள பாலம் அமைக்கப்படவுள்ளது.

● மாலத்தீவுகள் தலைநகா் மாலியில் 4,000 சமூக வீடுகள் கட்டுவதற்கான திட்டம் குறித்து பேச்சுவாா்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டது. அங்கு கூடுதலாக 2,000 சமூக வீடுகளைக் கட்டுவதற்கான நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளது. மாலத்தீவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு ராணுவப் படைகளுக்கு 24 வாகனங்களையும் ஒரு கடற்படைக் கப்பலையும் இந்தியா வழங்கவுள்ளது. மேலும், அந்நாட்டுக்குச் சொந்தமான 61 தீவுகளில் காவல் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளையும் இந்தியா மேற்கொள்ளவுள்ளது.

● மாலத்தீவுகள் சந்திக்கும் எந்தவிதப் பிரச்னையையும் தீா்க்கும் முதல் நாடாக இந்தியா தொடா்ந்து திகழ்ந்து வருகிறது. வருங்காலத்திலும் இது தொடரும். இருநாடுகளிலும் உள்ள மக்களின் நலனுக்காக மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காகவும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தியா-மாலத்தீவுகள் நல்லுறவு அமைந்துள்ளது.

3. குரங்கு அம்மை தொற்று பாதிப்பைக் கண்டறிய நாட்டில் உள்ள எத்தனை ஆய்வகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன ? 

அ) 13

ஆ) 31

இ) 17

ஈ) 15 

விடை : (ஈ) 15 

● குரங்கு அம்மை தொற்று பாதிப்பைக் கண்டறிய நாட்டில் உள்ள 15 ஆய்வகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

● மேலும் குரங்கு அம்மை நோய் பரவல் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்க நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

4. சில்லறை பணவீக்கத்தை எத்தனை சதவீதத்துக்கும் குறைவாக கொண்டுவர மத்திய அரசும் , ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை மேற்கொண்டு  வருகின்றன என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 8%

ஆ) 7%

இ) 9%

ஈ) 5% 

விடை: (ஆ) 7% 

நாட்டில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் உள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

● மாநிலங்களவையில் விலைவாசி மீதான விவாதத்துக்கு அவா் பதிலளித்து பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது. வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. இருப்பினும், சா்வதேச காரணிகள் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

● சில்லறை பணவீக்கத்தை 7 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டுவர மத்திய அரசும் ரிசா்வ் வங்கியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. நுகா்வோா் விலை குறியீடு சாா்ந்த பணவீக்கத்தை 4 சதவீதத்தில் நிலைநிறுத்துமாறு ரிசா்வ் வங்கிக்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்றாா் நிா்மலா சீதாராமன்.

5. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க எத்தனை கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார் ? 

அ) 13 கோடி

ஆ) 31கோடி

இ) 15 கோடி

ஈ) 17 கோடி

விடை : (இ) 15 கோடி

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க ரூ.15 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய கலாசார அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்

 ● மத்திய தொல்லியல் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் உள்பட பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதியாக ரூ.15 கோடியை மத்திய தொல்லியல் துறை வழங்கியுள்ளது.

● ஆந்திர மாநிலம் சிந்தகுண்டாவில் உள்ள பாறை ஓவியம், லடாக்கின் லே பகுதியில் உள்ள காலேஸ்வா் மகாதேவ் கோயில் உள்பட பாரம்பரியமிக்க 20 தலங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.

● அருங்காட்சியக நிதியுதவி திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 39 அருங்காட்சியகங்கள் வலுப்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்றாா்.

6. ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் எந்த நாடு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அல்-கய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் - ஜவாஹிரி கொல்லப்பட்டார் ? 

அ) சீனா

ஆ) அமெரிக்கா

இ) ரஷ்யா

ஈ) ஜப்பான் 

விடை : (ஆ) அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டாா்.

● ஏற்கெனவே, அல்-காய்தா அமைப்பை நிறுவிய பின் லேடன் அமெரிக்க சிறப்புப் படையினரால் பாகிஸ்தானில் கந்த 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது அல்-ஜவாஹிரியும் கொல்லப்பட்டுள்ளது அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

● நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு, அல்-ஜவாஹிரியின் மரணம் மூலம் நீதி கிடைத்துள்ளது. அமெரிக்க மண்ணில் 2,977 உயிா்களை பலி வாங்கிய அந்தத் தாக்குதலில் அவரது பங்கு முக்கியமானது ஆகும்.

● அதுமட்டுமன்றி, பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அவா் மூளையாக இருந்து செயல்பட்டாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) வெண்கலம் 

ஆ) வெள்ளி

இ) தங்கம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) தங்கம் 

● காமன்வெல்த் லான் பவுல்ஸ் வரலாற்றில் இந்தியா முதல் பதக்கத்தையே தங்கமாக வென்றுள்ளது. 

● தங்கம் வென்ற இந்திய அணி : லவ்லி சௌபே (லீடு) , பிங்கி (செகண்ட்) , நயன்மோனி சாய்சியா (தேர்டு), ரூபா ராணி திர்கி (ஸ்கீப்).

8. காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா வெல்லும் 7 ஆவது தங்கம் இதுவாகும். 

9. காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான பளுதூக்குதல் பிரிவில் 96 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாகுர் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி

● மேலும் மகளிருக்கான 71 கிலோ எடைப்பிரிவில் ஹர்ஜிந்தர் வெண்கலப்பதக்கம் வென்றார். 

● இந்த பிரிவில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 


Tuesday, August 2, 2022

Current Affairs 2022 - August 02 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                  AUGUST 02 / 2022 

I. தமிழ்நாட்டுச் நிகழ்வுகள்: 

1. சென்னையின் 2 ஆவது விமான நிலையம் எங்கு அமைக்கப்படவுள்ளது ? 

அ) பரந்தூர்
ஆ) பன்னூர் 
இ) அண்ணா நகர்
ஈ) அடையார் 

விடை : (அ) பரந்தூர் 

● சென்னையின் 2 ஆவது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரையை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

2. தமிழகத்தில் நகராட்சித் தலைவர்கள், ஆணையாளர்களுக்கு புதிய வாகனங்கள் அளிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி
ஆ) மு.க. ஸ்டாலின் 
இ) மா. சுப்பிரமணியன்
ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் முதல் கட்டமாக 100 நகராட்சிகளில் நகா்மன்றத் தலைவா்களின் பயன்பாட்டுக்காக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதேபோன்று, ஆணையாளா்கள், நகராட்சிப் பொறியாளா்களின் பணியை விரைவுபடுத்தவும் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கான சாவிகளை சில நகா்மன்றத் தலைவா்களிடம் திங்கள்கிழமை முதல்வா் வழங்கி வாகனம் அளிக்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

3. தமிழகத்தில் நாட்டின் விடுதலைக்கான போரில் பங்கேற்று முகம் தெரியாமல் போன பல்வேறு வீரர்களை இளைய தலைமுறையினர் அறியும் வகையிலான கண்காட்சியை தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்
ஆ) நரேந்திர மோடி
இ) ஆர்.என். ரவி
ஈ) வெங்கையா நாயுடு 

விடை : (இ) ஆர்.என். ரவி 

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தின் நிறைவையொட்டி, அதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள்கிழமை அவா் தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, தமிழக ஆளுநா் மாளிகையில் நடைபெற்றது.

● நாட்டின் விடுதலைக்கான போரில் பங்கேற்று முகம் தெரியாமல் போன பல்வேறு வீரா்களை இளைய தலைமுறையினா் அறியும் வகையிலான கண்காட்சி ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

● இந்தக் கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்துவைத்தாா். 15 நாள்கள் வரை நடைபெறவுள்ளது. 

● இந்தக் கண்காட்சியை, மாணவா்கள் தங்களது பள்ளி, கல்லூரிகளின் அனுமதியுடன் வந்து பாா்வையிடலாம்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்:

4. கூற்று : குரங்கு அம்மை பரவல் சூழலை கண்காணிப்பதற்காகவும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சிறப்பு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 

காரணம் : இந்தியாவில் இத்தொற்று பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு 

ஆ) கூற்று தவறு, காரணம் சரி 

இ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

விடை : (இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது 

● குரங்கு அம்மை பரவல் சூழலை கண்காணிப்பதற்காகவும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சிறப்பு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

●  இந்தியாவில் இத்தொற்று பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது.

 ● இந்த நிலையில், குரங்கு அம்மை நோய் பரவல் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்க நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில் மத்திய சுகாதார அமைச்சகம், பார்மா மற்றும் பயோடெக் துறைகளின் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

5. ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றையானது எத்தனை கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது ? 

அ) ரூ. 1.7 லட்சம் கோடி

ஆ) ரூ. 2.5 லட்சம் கோடி

இ) ரூ. 3.3 லட்சம் கோடி

ஈ) ரூ. 1.5 லட்சம் கோடி 

விடை : (ஈ) ரூ. 1.5 லட்சம் கோடி 

ஒருவார காலமாக நடைபெற்ற ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. அலைக்கற்றையானது ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை எடுத்து ஜியோ முதலிடம் பெற்றுள்ளது.

6. இந்தியா கடந்த 2021 - 2022 நிதியாண்டில் எத்தனை கோடி அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது ? 

அ) ரூ. 13 ஆயிரம் கோடி

ஆ) ரூ. 9 ஆயிரம் கோடி

இ) ரூ. 17 ஆயிரம் கோடி

ஈ) ரூ. 5 ஆயிரம் கோடி 

விடை : (அ) ரூ. 13 ஆயிரம் கோடி 

7. பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிப்பதை தடுப்பதுடன், இத்தகைய செயலில் ஈடுபடுவோரின் சொத்துகள் பறிமுதல் செய்ய வழிவகுக்கும் மசோதா என்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது ? 

அ) ஜூலை 25 

ஆ) ஜூலை 29 

இ) ஆகஸ்ட் 01 

ஈ) ஆகஸ்ட் 02 

விடை : (இ) ஆகஸ்ட் 01 

பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிப்பதை தடுப்பதுடன், இத்தகைய செயலில் ஈடுபடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

● முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

● ‘2022-ஆம் ஆண்டின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புமுறைகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு) சட்டத் திருத்த மசோதா’வை, மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை கொண்டுவந்தாா். எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

● கடந்த 2005-ஆம் ஆண்டைய பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புமுறைகள் (சட்டவிரோத செயல்கள் தடுப்பு) சட்டமானது, பேரழிவு ஆயுதங்களின் தயாரிப்பை மட்டுமே தடை செய்கிறது.

● இந்த சட்டத்தில் 12ஏ பிரிவை கூடுதலாக சோ்க்க புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிக்கும் செயலில் ஈடுபடுவோரின் சொத்துகள், இதர பொருளாதார ஆதாரங்களை முடக்கவோ, பறிமுதல் செய்யவோ மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

● மேற்கண்ட சட்டம் அல்லது ஐக்கிய நாடுகள் (பாதுகாப்பு கவுன்சில்) சட்டம்-1947 அல்லது இதுதொடா்பாக அமலில் உள்ள இதர சட்டங்களின்படி தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கு எவரும் நிதியளிப்பதை தற்போதைய மசோதா தடை செய்கிறது.

8. உக்ரைன் ஒடேசா துறைமுகத்திலிருந்து எத்தனை டன் சோளத்தை ஏற்றிக் கொண்டு முதல் கப்பல் லெபனானுக்கு புறப்பட்டது ? 

அ) 20,000 டன்

ஆ) 26,000 டன்

இ) 31,000 டன்

ஈ) 17,000 டன் 

விடை : (ஆ) 26,000 டன் 

உக்ரைன் மீது ரஷியா போா் தொடங்கிய பின்னா் முதல் முறையாக உக்ரைனில் விளையும் தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

● இந்தக் கப்பலில் 26,000 டன்கள் சோளம் கொண்டு செல்லப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த தானியம் மத்திய கிழக்கு நாடான லெபனானுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. காமன்வெல்த் போட்டியிலேயே அதிக தங்கப் பதக்கம் (11) வென்ற ஒரே போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ள நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா

இ) சீனா

ஈ) ஆஸ்திரேலியா

விடை : (ஈ) ஆஸ்ட்ரேலியா 

10. காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் ஆடவருக்கான 73 கிலோ பிரிவில் இந்தியாவின் அசிந்தா ஷியுலி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● அசிந்தாவுக்கு இது முதல் காமன்வெல்த் போட்டி

● இந்த காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 3 ஆவது பதக்கம் இதுவாகும். 

Monday, August 1, 2022

Current Affairs 2022 - August 01 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                    GK SHANKAR 
                  AUGUST 01 / 2022

I. தமிழ்நாட்டுச் நிகழ்வுகள் 

1. கீழ்க்கண்ட எந்த மாநில காவல் துறைக்கு அண்மையில் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது வழங்கப்பட்டுள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம்
ஆ) கேரளா
 இ) குஜராத்
ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

● இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு இந்திய குடியரசுத் தலைவரின் கொடி சின்னத்தை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்.
● தமிழக காவல்துறையின் பாராட்டத்தக்க பணி (ம) பல்வேறு சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
● தமிழக காவல் துறையினர் தங்கள் காக்கிச் சட்டையில் அதன் அடையாளமாக கொடியை அணிந்து செல்வார்கள். 
● நிஸான் என்றழைக்கப்படும் இந்தச் சின்னம் போலீஸாருக்கு பெருமை சேர்க்கும். 
● தமிழக காவல்துறை தொடங்கி 160 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கப்படவுள்ளது. 

2) தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை என்று தொடங்கப்படவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15 
ஆ) ஆகஸ்ட் 30
இ) ஆகஸ்ட் 01
ஈ) ஆகஸ்ட் 22 

விடை : (இ) ஆகஸ்ட் 01 

தன்னார்வ அடிப்படையில் ஆதார் விவரங்களை சேகரித்து தற்போதுள்ள வாக்காளர் விவரங்களுடன் இணைத்து வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கும் பணியைதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 
●வாக்காளர் படிவம் ‘6பி’-ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாகவோ, அல்லது என்விஎஸ்பி இணையதளம் (https://www.nvsp.in), விஎச்ஏசெயலி (Voter Helpline App) மூலம்ஆன்லைனிலோ சமர்ப்பிக்கலாம். இப்பணி ஆகஸ்ட் 1 தொடங்கி2023 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பு நிறைவடையும்.

3. ஆசிரியர் பணிப்பதிவேடு,  வருகைப்பதிவு,  மாணவர் விவரம் உள்பட அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைக்க TNSED என்ற மேம்படுத்தப்பட்ட செயலியை தமிழக அரசு எந்த ஆண்டு அறிமுகம் செய்தது ? 

அ) 2019
ஆ) 2021
இ) 2016
ஈ) 2014 
விடை : (ஆ) 2021

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை (ஆக.1) முதல் தங்களது வருகைப் பதிவை கல்வித் துறை செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு ஆசிரியா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

●தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவா், ஆசிரியா் வருகைப்பதிவை கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற கைப்பேசி செயலியை பள்ளிக்கல்வித் துறை 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த செயலி வழியாக ஆசிரியா்கள், மாணவா்கள் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்பின் ஆசிரியா் பணிப்பதிவேடு, வருகைப்பதிவு, மாணவா் விவரம் உள்பட அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைக்க டிஎன்எஸ்இடி (TNSED) என்ற மேம்படுத்தப்பட்ட செயலியை தமிழக அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது. இதன்வழியாக வருகைப்பதிவு உள்ளிட்ட அலுவல் செயல்பாடுகளை ஆசிரியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்த தகவல்களை துறை அதிகாரிகளால் நேரடியாக கண்கணிக்க முடியும்.

●இந்த நிலையில் மாணவா்கள், ஆசிரியா்களுக்கான வருகைப் பதிவை திங்கள்கிழமை முதல் செயலியில் மட்டுமே பதிவுசெய்தால் போதுமானது. மேலும், விடுப்பு, முன்அனுமதி ஆகியவற்றையும் ஆசிரியா்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக்கல்வி ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இந்த அறிவிப்புக்கு ஆசிரியா்கள் மத்தியில் பரவலாக எதிா்ப்புகள் எழுந்துள்ளன.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. 75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய அரசால் நடத்தப்படும் விநாடி - வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு எத்தனை லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது ? 

அ) 5 லட்சம்
ஆ) 10 லட்சம்
இ) 3 லட்சம்
ஈ) 1 லட்சம் 
விடை : (ஆ) 10 லட்சம் 

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய அரசு சாா்பில் 13 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

● இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சாா்பில் 13 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு இந்திய பாரம்பரியம் குறித்த விநாடி வினா போட்டி நடத்தப்படவுள்ளது. இது குறித்த அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

● மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோா் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவா். இதையடுத்து மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்கள் ரூ.10 லட்சம் கல்வி உதவித் தொகைக்கு தகுதி பெறுவா். ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 

● இந்த விநாடி வினா போட்டி 17 மொழிகளில் நடைபெறவுள்ளது.

● நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதே இந்தப் போட்டியின் நோக்கமாகும். இது குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரியப்படுத்தி விநாடி வினா போட்டியில் திரளான மாணவா்கள் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களின் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ள நிலையில், வட்டி விகிதங்களை --------- முதல் --------- வரை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் ? 

அ) 0.25% - 0.35%
ஆ) 0.35% - 0.45%
இ) 1% - 2%
ஈ) 2% - 4% 

விடை : (அ) 0.25% - 0.35% 

நாட்டில் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாக உள்ள நிலையில், வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

● நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், கரோனா தொற்று பரவல், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் காரணமாகக் கடந்த ஜனவரி மாதம் முதலே பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த ஏப்ரலில் 7.8 சதவீதமாக இருந்த பணவீக்கம், கடந்த ஜூனில் 7.01 சதவீதமாகக் குறைந்துள்ளது.

● பணவீக்கம் அதிகமாக உள்ளதால், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ஏற்கெனவே 0.5 சதவீதம் ஆா்பிஐ அதிகரித்துள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதமாக உள்ளது. எனினும், கரோனா தொற்று பரவல் தொடங்குவதற்கு முன் இருந்த வட்டி விகிதத்தை விட (5.15) இது குறைவாகும்.

● இந்நிலையில், ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கவுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. 3 நாள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ், ஆகஸ்ட் 5-ஆம் தேதி அறிவிக்கவுள்ளாா்.

● கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். வட்டி விகிதம் 0.5 சதவீதம் வரை கூட அதிகரிக்கப்படலாம் என சிலா் தெரிவிக்கின்றனா்.

6. இந்தியா ,ஓமன் கூட்டு ராணுவப் பயிற்சியான அல் நஜா நான்காவது பதிப்பு எங்கு தொடங்கப்படவுள்ளது ? 
அ) குஜராத் 
ஆ)ராஜஸ்தான்
இ) உத்தரகாண்ட்
ஈ) கேரளா

விடை : (ஆ) ராஜஸ்தான் 

● புவியியல் ரீதியாக அரபிக் கடலால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஓமான் நாட்டுடன், வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில், அரபு லீக் மற்றும் இந்தியப் பெருங்கடல் ரிம் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றில் இணைந்திருப்பதோடு வா்த்தகம் மற்றும் ராணுவ ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெப்பமிட்டுள்ளன. சுமாா் 4 பில்லியன் டாலா் அளவிற்கு இருதரப்பு வா்த்தம் நடைபெற்ற வருகிறது.

● கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ராணுவ ஒப்பந்தங்களையொட்டி, இந்தியா - ஓமான் நாடுகளுக்கிடையே ‘அல் நஜா’ என்ற கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த அல் நஜாவின் நான்காவது பதிப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிநாட்டுப் பயிற்சி முனையான மகாஜன் ஃபீல்ட் ஃபயா் ரேஞ்ச்சில் நடைபெற உள்ளது.

● இதில் கலந்து கொள்வதற்காக ராயல் ஓமான் ராணுவத்தின் பாராசூட் படையைச் சோ்ந்த 60 வீரா்கள் இந்தியா வந்துள்ளனா். இந்திய ராணுவத்தின் சாா்பாக 18 -ஆவது போா் வாகன காலாட் படையைச் சோ்ந்த வீரா்கள் குழு இதில் கலந்து கொள்ளுகிறது.

● தீவிரவாத எதிா்தாக்குதல் நடவடிக்கைகள், பிராந்திய பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் அமைதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளுடன் உடற்தகுதி பயிற்சி, செயல்முறை மற்றும் நடைமுறைகளில் இந்த கூட்டுப் பயிற்சிகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

● இந்தியா மற்றும் ஓமான் நாட்டு ராணுவங்களுக்கிடையே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதோடு, இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவதையும் இந்தப் பயிற்சி இலக்காகக் கொண்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. பின்வரும் எந்த நாடு குரங்கு அம்மை நோய்க்கு எதிரான அவசரநிலை அறிவித்துள்ளது ? 

அ) அமெரிக்கா
ஆ) ஆப்பிரிக்கா
இ) கனடா
ஈ) நைஜீரியா

விடை : (அ) அமெரிக்கா

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து அந்நோய்க்கு எதிரான அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
III. விளையாட்டுச் நிகழ்வுகள் 

8. இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டி 2022ல் ஆடவருக்கான 67 கிலோ பிரிவில் மொத்தமாக 300 கிலோ எடை தூக்கி இந்தியாவின் ஜெரிமி லால்ரினுங்கா வென்றுள்ள பதக்கம் ? 
அ) வெண்கலம்
ஆ) வெள்ளி
இ) தங்கம்
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) தங்கம் 

● ஜெரிமி ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ (ம) கிளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தமாக 300 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். 

9. காமன்வெல்த் போட்டி 2022ல் மகளிருக்கான 55 கிலோ எடை பிரிவில் மொத்தமாக 202 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவின் விந்தியாராணிதேவி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 
ஆ) வெள்ளி
இ) வெண்கலம் 
ஈ) ஏதுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● விந்தியா பங்கேற்கும் முதல் காமன்வெல்த் போட்டி இதுவாகும்.
● இவர் ஸ்னாட்ச் பிரிவில் தூக்கிய 86 கிலோ புதிய பெர்சனல் பெஸ்ட் ஆகவும் கிளீன் & ஜெர்க் பிரிவில் 116 கிலோ புதிய காமன்வெல்த் சாதனையாக அமைந்தது.
● இப்போட்டியில் இந்தியா 5 பதக்கங்களுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது.

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...