Thursday, August 4, 2022

Current Affairs 2022 - August 03/2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                 AUGUST 03 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னை பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையம் எத்தனை கோடி பயணிகளை கையாளக் கூடிய திறன் உடையதாக அமைக்கப்படவுள்ளது ? 

அ) 10 கோடி
ஆ) 13 கோடி
இ) 09 கோடி
ஈ) 08 கோடி 

விடை : (அ) 10 கோடி 

பரந்தூர் பன்னாட்டு விமான நிலையம் ஆண்டிற்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

● சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங்  தெரிவித்தார்.

● தற்போதைய சென்னை விமான நிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள விமான நிலையம் ஆகியஇரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

● புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமானநிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் (Taxiways), விமானங்கள் நிறுத்துமிடம் (Apron), சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது.

● விரிவான திட்ட அறிக்கை தயாரித்தப்பின் புதிய விமானநிலையத்திற்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்டமதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும்.

● மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் 2008-ல் வெளியிட்டுள்ள புதிய விமானநிலையம் அமைப்பதற்கான வழிகாட்டுதலின்படி (Guidelines for Greenfield Airport) தேர்வுசெய்யப்பட்ட இடத்திற்கான ஒப்புதல் (site clearance) பெற ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவிற்கு விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். இடஅனுமதி ஒப்புதல் பெற்றபின், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

● இதனைத் தொடர்ந்து விமானநிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும்.

● பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர்  பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்.”

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. இந்தியா - மாலத்தீவுகள் இடையே நல்லூறவை வலுப்படுத்தும் வகையில் எத்தனை ஒப்பந்தங்கள் அண்மையில் கையொப்பமாகியுள்ளது ? 

அ) 06

ஆ) 09

இ) 11

ஈ) 13 

விடை : (அ) 06

இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இரு நாடுகளுக்குமிடையே நிலவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குப் பிரதமா் நரேந்திர மோடியும் மாலத்தீவுகள் அதிபா் இப்ராகிம் முகமது சோலியும் உறுதியேற்றனா்.

● மாலத்தீவுகள் அதிபா் இப்ராகிம் முகமது சோலி இந்தியாவில் 4 நாள் அரசுமுறைப் பயணத்தைத் திங்கள்கிழமை தொடங்கினாா். அவா் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அதையடுத்து, மாலத்தீவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் சுமாா் ரூ.750 கோடி கடன் வழங்கப்படும் எனப் பிரதமா் மோடி அறிவித்தாா்.

●ஒப்பந்தங்கள் கையொப்பம்:

இந்தியா-மாலத்தீவுகள் இடையே நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. திறன் மேம்பாடு, இணையவழி குற்றத் தடுப்பு, வீட்டுவசதி, பேரிடா் மேலாண்மை, கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ஆகிய துறைகள் சாா்ந்த ஒப்பந்தங்கள் பிரதமா் மோடி-அதிபா் சோலி இடையேயான சந்திப்பின்போது கையொப்பமாகின.

● கிரேட்டா் மாலி திட்டம்:

இந்தச் சந்திப்பின்போது கிரேட்டா் மாலி போக்குவரத்துத் திட்டத்துக்கான பணிகளைத் தலைவா்கள் இருவரும் காணொலி வாயிலாகத் தொடக்கிவைத்தனா். இந்திய நிதியுதவியுடன் நிறைவேற்றப்படவுள்ள அத்திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கையொப்பமானது. மாலத்தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள மிகப் பெரிய கட்டமைப்புத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அத்திட்டத்தின் கீழ் தலைநகா் மாலி அமைந்துள்ள தீவையும், அருகில் உள்ள விலிங்லி, குல்ஹிஃபல்கு, தைலஃபுஷி ஆகிய தீவுகளையும் இணைக்கும் வகையில் 6.74 கி.மீ. நீள பாலம் அமைக்கப்படவுள்ளது.

● மாலத்தீவுகள் தலைநகா் மாலியில் 4,000 சமூக வீடுகள் கட்டுவதற்கான திட்டம் குறித்து பேச்சுவாா்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டது. அங்கு கூடுதலாக 2,000 சமூக வீடுகளைக் கட்டுவதற்கான நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளது. மாலத்தீவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு ராணுவப் படைகளுக்கு 24 வாகனங்களையும் ஒரு கடற்படைக் கப்பலையும் இந்தியா வழங்கவுள்ளது. மேலும், அந்நாட்டுக்குச் சொந்தமான 61 தீவுகளில் காவல் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளையும் இந்தியா மேற்கொள்ளவுள்ளது.

● மாலத்தீவுகள் சந்திக்கும் எந்தவிதப் பிரச்னையையும் தீா்க்கும் முதல் நாடாக இந்தியா தொடா்ந்து திகழ்ந்து வருகிறது. வருங்காலத்திலும் இது தொடரும். இருநாடுகளிலும் உள்ள மக்களின் நலனுக்காக மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காகவும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தியா-மாலத்தீவுகள் நல்லுறவு அமைந்துள்ளது.

3. குரங்கு அம்மை தொற்று பாதிப்பைக் கண்டறிய நாட்டில் உள்ள எத்தனை ஆய்வகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன ? 

அ) 13

ஆ) 31

இ) 17

ஈ) 15 

விடை : (ஈ) 15 

● குரங்கு அம்மை தொற்று பாதிப்பைக் கண்டறிய நாட்டில் உள்ள 15 ஆய்வகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

● மேலும் குரங்கு அம்மை நோய் பரவல் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்க நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

4. சில்லறை பணவீக்கத்தை எத்தனை சதவீதத்துக்கும் குறைவாக கொண்டுவர மத்திய அரசும் , ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை மேற்கொண்டு  வருகின்றன என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 8%

ஆ) 7%

இ) 9%

ஈ) 5% 

விடை: (ஆ) 7% 

நாட்டில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் உள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

● மாநிலங்களவையில் விலைவாசி மீதான விவாதத்துக்கு அவா் பதிலளித்து பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது. வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. இருப்பினும், சா்வதேச காரணிகள் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

● சில்லறை பணவீக்கத்தை 7 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டுவர மத்திய அரசும் ரிசா்வ் வங்கியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. நுகா்வோா் விலை குறியீடு சாா்ந்த பணவீக்கத்தை 4 சதவீதத்தில் நிலைநிறுத்துமாறு ரிசா்வ் வங்கிக்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்றாா் நிா்மலா சீதாராமன்.

5. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க எத்தனை கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார் ? 

அ) 13 கோடி

ஆ) 31கோடி

இ) 15 கோடி

ஈ) 17 கோடி

விடை : (இ) 15 கோடி

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க ரூ.15 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய கலாசார அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்

 ● மத்திய தொல்லியல் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் உள்பட பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதியாக ரூ.15 கோடியை மத்திய தொல்லியல் துறை வழங்கியுள்ளது.

● ஆந்திர மாநிலம் சிந்தகுண்டாவில் உள்ள பாறை ஓவியம், லடாக்கின் லே பகுதியில் உள்ள காலேஸ்வா் மகாதேவ் கோயில் உள்பட பாரம்பரியமிக்க 20 தலங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.

● அருங்காட்சியக நிதியுதவி திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 39 அருங்காட்சியகங்கள் வலுப்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்றாா்.

6. ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் எந்த நாடு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அல்-கய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் - ஜவாஹிரி கொல்லப்பட்டார் ? 

அ) சீனா

ஆ) அமெரிக்கா

இ) ரஷ்யா

ஈ) ஜப்பான் 

விடை : (ஆ) அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டாா்.

● ஏற்கெனவே, அல்-காய்தா அமைப்பை நிறுவிய பின் லேடன் அமெரிக்க சிறப்புப் படையினரால் பாகிஸ்தானில் கந்த 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது அல்-ஜவாஹிரியும் கொல்லப்பட்டுள்ளது அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

● நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு, அல்-ஜவாஹிரியின் மரணம் மூலம் நீதி கிடைத்துள்ளது. அமெரிக்க மண்ணில் 2,977 உயிா்களை பலி வாங்கிய அந்தத் தாக்குதலில் அவரது பங்கு முக்கியமானது ஆகும்.

● அதுமட்டுமன்றி, பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அவா் மூளையாக இருந்து செயல்பட்டாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) வெண்கலம் 

ஆ) வெள்ளி

இ) தங்கம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) தங்கம் 

● காமன்வெல்த் லான் பவுல்ஸ் வரலாற்றில் இந்தியா முதல் பதக்கத்தையே தங்கமாக வென்றுள்ளது. 

● தங்கம் வென்ற இந்திய அணி : லவ்லி சௌபே (லீடு) , பிங்கி (செகண்ட்) , நயன்மோனி சாய்சியா (தேர்டு), ரூபா ராணி திர்கி (ஸ்கீப்).

8. காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா வெல்லும் 7 ஆவது தங்கம் இதுவாகும். 

9. காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான பளுதூக்குதல் பிரிவில் 96 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாகுர் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி

● மேலும் மகளிருக்கான 71 கிலோ எடைப்பிரிவில் ஹர்ஜிந்தர் வெண்கலப்பதக்கம் வென்றார். 

● இந்த பிரிவில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...