Monday, August 8, 2022

Current Affairs 2022 - August 07 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                       GK SHANKAR 
                   AUGUST 07 / 2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள்  

1. நிகழாண்டுக்கான (2022)  தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது ? 

அ) என். சங்கரய்யா
ஆ) ஆர். நல்லகண்ணு
இ) ஏ. ராமசாமி
ஈ) ஆர். கண்ணப்பன் 

விடை : (ஆ) ஆர். நல்லகண்ணு 

தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

● தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்ளைப் பெருமைப்படுத்தும் வகையில், 2021 -ஆம் ஆண்டு முதல் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது. 

● இந்த ஆண்டிற்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

● கூட்டத்தில், இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராகத் தன் இளம் வயதைச் சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவரும் ஏழை எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திடத் தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 

● “தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். நல்லகண்ணுவுக்கு, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச்சான்றிதழும், வரும் சுதந்திர நாள் விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்குவார்.

● 2021 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

2. நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படவுள்ள சம்பா (ம) மானாவாரி குளிர்கால ( ராபி ) பருவ பயிர்களை பயிர்க் காப்பீடு செய்திட பயிர்க் காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக எத்தனை கோடியை அனுமதித்து தமிழக அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது ? 

அ) ரூ. 2 கோடி

ஆ) ரூ. 3 கோடி

இ) ரூ. 1.5 கோடி

ஈ) ரூ. 4 கோடி 

விடை : (அ) ரூ. 2 கோடி 

நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படவுள்ள சம்பா மற்றும் மானாவரி குளிர்கால(ராபி) பருவ பயிர்களை பயிர் காப்பீடு செய்திட பயிர் காப்பீட்டுக் கட்டணத்தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக ரூபாய் 2057.25 கோடி நிதியினை அனுமதித்து தமிழ்நாடு அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. 

● வரும் சம்பா பருவத்தில் விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை- உழவர் நலத் துறையால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 ● மேலும் தென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்படும் குறுவை பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண்மை உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

3. தமிழகத்தில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் கீழ்கண்ட எந்த நிறம் பேருந்துகளில் அடிக்கப்பட்டுள்ளது ? 

அ) நீலம்

ஆ) பிங்க்

இ) மஞ்சள்

ஈ) கருப்பு 

விடை : (ஆ) பிங்க் 

● தமிழகத்தில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அப்பேருந்துகளின் முகப்புப் பகுதியில் பிங்க் நிறம் அடிப்பட்டுள்ளது. 

● பிங்க் நிறம் அடிக்கப்பட்ட 50 பேருந்துகளை சட்டபேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். 

4. தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதல்முறை சேவையை எத்தனை லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார் ? 

அ) 50 லட்சம் 

ஆ) 75 லட்சம் 

இ) 83 லட்சம்

ஈ) 93 லட்சம் 

விடை : (இ) 83 லட்சம் 

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதல்முறை சேவையை 83 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

● தொற்றா நோய்களின் சவால்களை எதிா்கொள்ளும் நோக்கில், மக்களைத் தேடி மருத்துவம் என்னும் புதிய திட்டத்தை 2021 ஆகஸ்ட் 5-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று இவற்றை வழங்குவதன் மூலமாக தொற்றா நோய்களின் தாக்கத்தை எதிா்கொள்ள இத்திட்டமானது வழிவகுக்கிறது. இத்திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

5. தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் எவ்வளவு ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது ? 

அ) ரூ.1,500

ஆ) ரூ. 1,000

இ) ரூ. 2,000

ஈ) ரூ. 2,500

விடை : (அ) ரூ.1,500 

● தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது 

இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 12 வது வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ. 1,500 வழங்கப்படும். அதாவது, 2 ஆண்டுகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

● தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் 50% அரசுப்பள்ளி மாணவர்கள், 50% தனியார் பள்ளி மாணவர்கள் என்று தேர்வு செய்யப்பட உள்ளனர். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. இந்தியாவின் எத்தனையாவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் பதவியேற்கவுள்ளார் ? 

அ) 11 ஆவது

ஆ) 12 ஆவது 

இ) 13 ஆவது

ஈ) 14 ஆவது 

விடை : (ஈ) 14 ஆவது 

● குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார் . 

● அவர் மாநிலங்களவைத் தலைவராகவும் பதவி வகிப்பார். 

7. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 

1) புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்- 02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டது.

2) சிறிய ரக செயற்கைக்கோளுக்காக வடிவமைக்கப்பட்ட , எடை குறைந்த மூன்றாவது ராக்கெட் திட்டம் இதுவாகும். 

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும் 

இ) 1 மற்றும் 2

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) 1 மட்டும் 

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) விண்ணில் ஏவப்படுகிறது.

● சிறிய ரக செயற்கைக்கோளுக்காக வடிவமைக்கப்பட்ட, எடை குறைந்த முதலாவது ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

● தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

● இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

● இந்த நிலையில், சா்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில்கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறியரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது. இதன் எடை அதிகபட்சம் 120 டன்.

● இம்முறை அந்த வகை ராக்கெட், இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ ) செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

● அதற்கான 5 மணிநேர கவுன்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தொடங்கவுள்ளது. இஓஎஸ்-02 செயற்கைக்கோளானது 145 கிலோ எடை கொண்டது. இது கடலோர நிலப் பயன்பாடு, ஒழுங்குமுறை, நகா்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டா் அளவுக்கு துல்லியமாகப் படம் பிடிக்க முடியும்.

● கல்விசாா் செயற்கைக்கோள்: இதனுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் ‘ஆசாதிசாட்’ (8 கிலோ) எனும் கல்விசாா் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

8. பின்வரும் எங்கு நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பருவ நிலை மாநாட்டில் லைஃப் என்ற கருப்பொருளின் அடிப்படையில் காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளது ? 

அ) எகிப்து

ஆ) கனடா

இ) தென்னாப்பிரிக்கா

ஈ) துபாய்

விடை : (அ) எகிப்து 

எகிப்தில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பருவநிலை மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ (லைஃப்) என்ற கருப்பொருளின் அடிப்படையில் காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளது.

● ஐ.நா. பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தில் இணைந்துள்ள நாடுகள் ஆண்டுதோறும் கூடி பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. கடந்த ஆண்டுக்கான கூட்டம் கிளாஸ்கோவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ என்ற சா்வதேச திட்டத்தை அறிமுகப்படுத்தினாா்.

● இந்தியாவில் அத்திட்டமானது சா்வதேச சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பூமிக்கு சாதகமான வகையிலும் அதை பாதிக்காத வகையிலும் வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும் என்பதே அத்திட்டத்தின் முக்கிய நோக்கம். அவ்வாறான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவா்கள் ‘பூமிக்கு ஆதரவானவா்கள்’ என அழைக்கப்படுவா் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்திருந்தது.

● இந்நிலையில், 27-ஆவது பருவநிலை மாநாடு எகிப்தின் ஷரம்-எல்-ஷேக் நகரில் நவம்பா் 6 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ என்ற கருப்பொருளின் அடிப்படையிலான காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் இந்தியா படைத்துள்ள சாதனைகள் குறித்து அந்தக் காட்சியரங்கில் எடுத்துரைக்கப்படவுள்ளது.

9. கூற்று : திபெத்திய பௌத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு லடாக்கின் உயரிய விருதான திபல் ரன்கம் டஸ்டன் விருது வழங்கப்பட்டுள்ளது.

காரணம் : மனித நேயத்துக்கு அவர் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்பை பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது.

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு , காரணம் சரி

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது 

விடை : (ஈ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது. 

திபெத்திய பெளத்த மதத் தலைவா் தலாய் லாமாவுக்கு (87) லடாக்கின் உயரிய விருதான ‘திபல் ரன்கம் டஸ்டன்’ விருது வழங்கி கெளரவிக்கப்ட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

● லடாக்கின் சிந்து கணவாய் பகுதியில் நடைபெற்ற யூனியன் பிரதேச நிறுவன நாள் விழாவில், வடாக் தன்னாட்சி மலைப் பகுதி மேம்பாட்டு கவுன்சில் (எல்ஏஹெச்டிசி) சாா்பில் இந்த உயரிய விருது அவருக்கு அளிக்கப்பட்டது. யூனியன் பிரதேசத்தில் மனிதநேயத்துக்கு அவா் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

● லடாக்கில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தலாய் லாமா, லடாக் மக்களின் அன்பான வரவேற்பைப் பாராட்டியதோடு, பிராந்தியத்தில் சமூக நல்லிணக்கத்தை தொடா்ந்து கடைப்பிடிக்க வலியுறுத்தினாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள்

10. காமன்வெல்த் போட்டி 2022 ல் மல்யுத்த பிரிவில் ஆடவர் ப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி தாஹியா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (அ) தங்கம் 

● மேலும் இதே பிரிவில் மகளிர் 53 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் தங்கம் வென்றார்.

● மகளிர் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலம் வென்றார். 

11. காமன்வெல்த் போட்டி 2022 ல் தடகள பிரிவில் மகளிர் 10,000 மீ நடை ஓட்டத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● இப்போட்டியில் நடை ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பிரியங்கா ஆவார்.

● ஆடவர் 3000 மீ ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே வெள்ளி வென்றார். 




No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...