Sunday, November 6, 2022

Current Affairs 2022 - November 06 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR 
                    NOVEMBER 06 /2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சம்பா உள்பட 3 வகை நெல் பயிர்களை பயிரிடும் விவசாயிகள் பின்வரும் எந்த இணையதளம் மூலம் வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டுமென தமிழக வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது ?

அ) www.pmfby.gov.in

ஆ) www.pmkusun.tn.gov.in

இ) www.aed.tn.gov.in

ஈ) www.pmfby.tn.gov.in 

விடை : (அ) www.pmfby.gov.in 

சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. 

● வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், முதல்வர் 2022-23 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக்கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து, உத்தரவிட்டுள்ளார்.

● தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.13 இலட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 இலட்சம் ஏக்கர், 10.38 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

● காப்பீடு செய்வதற்கான கடைசி நாள்
¤ தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.11.2022 ஆகும்.

¤ கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இம்மாவட்ட நெல் விவசாயிகள் 15.12.2022க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

● காப்பீடு செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இடம்
பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் (இ-சேவை மையங்கள்) காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், https://pmfby.gov.in/ என்ற இணையதளத்தில் “விவசாயிகள் கார்னர் எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரிடையாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

● காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள்
முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற அடங்கல் அல்லது இ-அடங்கல் அல்லது விதைப்பு
அறிக்கை, வங்கிக் கணக்குக் புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல்கள்.

2. தமிழகத்தில் முதல்முறையாக பன்னாட்டு புத்தகத் திருவிழா எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) மதுரை

ஆ) சேலம் 

இ) தேனி 

ஈ) சென்னை 

விடை : (ஈ) சென்னை 

● தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் முதலாவது பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

 ● இதற்கான இலச்சினையை சென்னை கோட்டூா்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை வெளியிட்டாா்.

● நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: சென்னையில் தற்போதுதான் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி முடித்தோம். இதையடுத்து ஜன.16 முதல் 18 வரை பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னையில் நடைபெறவுள்ளது.

● பபாசி சாா்பில் ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் உள்ள தனி அரங்கிலேயே இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழாவும் நடைபெறும். இதில் பங்கேற்க ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 20 நாடுகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

3. தமிழகத்தில் மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது ? 

அ) 2%

ஆ) 3%

இ) 4%

ஈ) 5% 

விடை : (இ) 4%

தமிழகத்தில் மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்களுக்கு பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்டாா்.

● அவரது உத்தரவு: அரசுப் பணியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், சென்னை உயா் நீதிமன்றம், மதுரையில் உள்ள சென்னை உயா் நீதிமன்றக் கிளை ஆகியவற்றில் இதுதொடா்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டன.

● இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆய்வு செய்ய துணைக் குழுவை அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

● இந்தக் குழு ஒரு மாத காலத்துக்குள் உயா்நிலைக் குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

● இதன்படி, துணைக் குழுவில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை துணைச் செயலாளா், மனிதவள மேலாண்மைத் துறை துணைச் செயலாளா், சட்டத் துறை துணைச் செயலாளா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய துணைச் செயலாளா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக துணை இயக்குநா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக உதவி இயக்குநா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக சட்ட ஆலோசகா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

● இந்தக் குழு அரசிடம் அளிக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்படும் கருத்துகளை ஆய்வு செய்ய உயா்நிலைக் குழு அமைப்பது தொடா்பாக உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்படும்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. இந்திய கடற்படை பங்கேற்வுள்ள சர்வதேச கடற்படை திறனாய்வு என்ன நிகழ்ச்சி எந்த நாட்டில் நடைபெறவுள்ளது ? 

அ) அமெரிக்கா 

ஆ) கனடா 

இ) பிரிட்டன்

ஈ) ஜப்பான் 

விடை : (ஈ) ஜப்பான் 

ஜப்பானில் உள்ள சகாமி கடற்பகுதியில் ‘சா்வதேச கடற்படை திறனாய்வு’ என்ற கடற்படை கப்பல்கள், விமானங்கள், நீா்மூழ்கி கப்பல்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. 

● ஜப்பான் கடற்படை உருவாக்கப்பட்டதன் 70-ஆம் ஆண்டையொட்டி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கின்றன.

● நவ.7, 8-ஆம் தேதிகளில் யோகோஹாமாவில் 18-ஆவது மேற்கு பசிபிக் கடற்படை கருத்தரங்கு நடைபெறுகிறது.

● நவ.8 முதல் நவ.18-ஆம் தேதி வரை யுகோசுகாவில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா கடற்படைகள் பங்கேற்கும் மலபாா் கூட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது.

● இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் 5 நாள் பயணமாக சனிக்கிழமை ஜப்பான் சென்றாா்.

● இந்த பயணத்தில் ஜப்பான் கடற்படை தலைமைத் தளபதியை சந்தித்து இருநாட்டு கடற்படை உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் அவா் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்.

● சா்வதேச கடற்படை திறனாய்வு அணிவகுப்பு மற்றும் மலபாா் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க சிவாலிக், கமோா்டா ஆகிய இந்திய கடற்படை போா்க் கப்பல்கள் ஜப்பான் சென்றுள்ளன என்று இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

5. 27 ஆவது ஐ.நா. பருவநிலை மாநாடு எங்கு தொடங்கவுள்ளது ? 

அ) பிரிட்டன் 

ஆ) இந்தியா 

இ) எகிப்து 

ஈ) சீனா 

விடை : (இ) எகிப்து 

எகிப்தில் 27-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

● எகிப்தில் உள்ள ஷா்ம்-அல்-ஷேக் நகரில் நவ.6 முதல் நவ.8-ஆம் தேதி வரை 27-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் 198 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதில் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு அனைவரும் இணைந்து எதிா்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

● இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்பட 100-க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.

● இதில் பிரதமா் மோடி பங்கேற்பாரா என்பது உறுதிபடுத்தப்படவில்லை. எனினும் மாநாட்டில் இந்தியா சாா்பில் பங்கேற்கும் குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமை தாங்க உள்ளாா்.

● மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை’ இயக்கத்தில் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● கடந்த 2009-ஆம் ஆண்டு டென்மாா்க் தலைநகா் கோபன்ஹேகனில் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. 

● அந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள வளரும் நாடுகளுக்கு உதவும் நோக்கில், 2020-ஆம் ஆண்டுக்குள் வருடந்தோறும் 100 பில்லியன் டாலா்களை கூட்டாக திரட்ட வளா்ந்த நாடுகள் உறுதியேற்றன. ஆனால் அதனை அந்த நாடுகள் செய்யவில்லை. 

● அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மாநாட்டில் இதர வளரும் நாடுகளுடன் இணைந்து வளா்ந்த நாடுகளுக்கு இந்தியா அழுத்தம் தரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

6. அண்மையில் காலமான சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நெகி எத்தனை முறை வாக்களித்துள்ளார் ? 

அ) 31 

ஆ) 34

இ) 36

ஈ) 40

விடை : (ஆ) 34 

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஹிமாச்சல்பிரதேசத்தைச் சேர்ந்த 106 வயதான ஷ்யாம் சரண் நெகி வயது மூப்பின் காரணமாக காலமானார். 

● ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த ஷ்யாம் சரண் நெகி சுதந்திர இந்தியாவின் முதல் வாக்களாராக அறியப்படுகிறது. 1951ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் கல்பா தொகுதியில் வாக்களித்த இவர் இதுவரை 34 தேர்தல்களில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். 

● நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் நெகி தபால் மூலம் வாக்களித்ததே அவரது கடைசி தேர்தல் வாக்குப்பதிவாக மாறியுள்ளது. 


III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ? 

அ) பி. அசோக் சிகாமணி 

ஆ) ஆதம் சேட் 

இ) ஆர்.ஐ. பழனி 

ஈ) ஆர்.என். பாபா 

விடை : (அ) பி.அசோக் சிகாமணி 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 90-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணைய முன்னாள் கமிஷனர் டி.டி.சந்திரசேகரன் தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். 

● தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக டாக்டர் பி.அசோக் சிகாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். ஆடம் சேட் துணைத்தலைவராகவும், ஆர்.ஐ. பழனி செயலாளராகவும், கே.சிவகுமார் இணை செயலாளராகவும், டாக்டர் ஆர்.என்.பாபா உதவி செயலாளராகவும், ஸ்ரீனிவாசராஜ் பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

8. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (எஃப்ஐஎச்) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் யார் ? 

அ) தைய்யப் இக்ரம் 

ஆ) சையத் முஷ்டக் 

இ) ஆதம் சேட்

ஈ) அர்ஜூன் சிங்

விடை : (அ) தைய்யப் இக்ரம் 

● ஹாக்கி கூட்டமைப்பு சிஇஓ தைய்யப் இக்ரம் தேர்வாகியுள்ளார்.

● பதவிக்காலம் : இரண்டு ஆண்டுகள்.



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...