Wednesday, November 9, 2022

Current Affairs 2022 - November 09 / 2022 - TNPSC Group 1 2/2A & 4

                         GK SHANKAR 
                 NOVEMBER 09 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சிங்கப்பூரில் நடைபெறும் 7 ஆவது உலக சுகாதார மாநாட்டில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற அமைச்சர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) மா. சுப்பிரமணியன் 

இ) பொன்முடி 

ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (ஆ) மா. சுப்பிரமணியன் 

● மாநாட்டின் தலைப்பு : நுண்ணுயிர் எதிர்ப்பு பாதை - தென்கிழக்கு ஆசிரியர் தொற்று நோய்கள் அச்சுறுத்தல்கள். 

2. தமிழகத்தின் எத்தனையாவது சரணாலயமாக, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 15 

ஆ) 16 

இ) 17 

ஈ) 18 

விடை : (இ) 17 

தமிழகத்தின் 17 ஆவது புதிய சரணாலயமாக, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு, வெளியிட்டது.

3. தமிழ் அகராதியியல் நாள் விழாவில் , எத்தனை பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 13 

ஆ) 17 

இ) 21 

ஈ) 27 

விடை : (அ) 13 

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில், 13 பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருதை தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா் ம.சு.சண்முகம் வழங்கி கெளரவித்தாா்.

● ‘தமிழ் அகராதியியலின் தந்தை’ என போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான நவ.8-ஆம் நாள் தமிழ் அகராதியியல் நாள் விழாவாகக் கொண்டாட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த விழா ஆண்டுதோறும் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

● அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் வரவேற்றாா். இதில் முதல்வரின் செயலரும், தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலருமான ம.சு.சண்முகம் கலந்து கொண்டு 2021-ஆம் ஆண்டுக்கான 13 பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருது (2021), இருவருக்கு நற்றமிழ்ப் பாவலா் விருது (2021), இரு ஊடக நிறுவனங்களுக்கு தூய தமிழ் ஊடக விருது (2021) ஆகிய விருதுகளை வழங்கினாா்.

● மேலும், 58 அறிஞா்களின் கருத்துச் செறிவாா்ந்த கட்டுரைகள் அடங்கிய 2022-ஆம் ஆண்டுக்கான அகராதி ஆய்வு மலரை வெளியிட்டாா். முன்னதாக மயூரி நிகழ்த்துக் கலைக்கழகத்தின் சாா்பில் விஜயலட்சுமி பூபதி வழங்கும் ‘எங்கும் தமிழ்’ கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

4. தமிழகத்தில் நாளையை நோக்கி இன்றே - தலை நிமிர்ந்த தமிழ்நாடு எனும் தலைப்பிலான தொழில் வளர்ச்சி மாநாடு எங்கு நடைபெற்றது ? 

அ) சேலம்

ஆ) மதுரை

இ) சென்னை

ஈ) கோவை

விடை : (இ) சென்னை 

தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில், ‘நாளையை நோக்கி இன்றே- தலை நிமிா்ந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பிலான தொழில் வளா்ச்சி மாநாடு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

● ஆளில்லா பைலட்கள்: ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சி மையங்கள் மதுரை, கோவையில் நிறுவப்பட்டுள்ளது. இதனை இந்த நிகழ்ச்சியின் வாயிலாகத் திறந்து வைத்துள்ளேன். இந்த மையங்களில் 200 மாணவா்கள் என்ற விகிதத்தில் பயிற்சி அளித்திட முடியும். 

● இந்தப் பயிற்சி மூலம், நமது கிராமப்புற படித்த இளைஞா்கள் ஆளில்லாத விமான பைலட்டுகளாக தகுதி பெற முடியும். தமிழகத்தின் அனைத்து தொழில் வாய்ப்புகளையும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசிய அளவில் மட்டுமின்றி, தெற்காசியாவிலேயே, தொழில் வளா்ச்சியில் சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை அடைவதற்காக அனைவரும் உழைப்போம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

● வான்வெளி - பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியீடு: 10 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி ஈா்க்க இலக்கு : 

● சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் துறை மாநாட்டின் போது, வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிலுக்கான பிரத்யேக கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

● ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு: வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் இதற்கான விரிவான பணிகள் மேற்கொள்ளப்படும்.

● அரசின் முதலீடுகள் மட்டுமின்றி, அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈா்க்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் ஈா்ப்பால், சுமாா் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. இந்தியா முதல்முறையாக ஜி20 கூட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பை என்று முதல் ஏற்கவுள்ளது ? 

அ) டிசம்பர் 01 

ஆ) டிசம்பர் 11

இ) டிசம்பர் 25

ஈ) டிசம்பர் 31

விடை : (அ) டிசம்பர் 01 

● உலகின் பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதி இந்தியா ஏற்கவுள்ளது. ஓராண்டு அப்பொறுப்பில் நீடிக்கவுள்ள இந்தியா, பருவநிலை மாற்றம், சா்வதேச கடன் பிரச்னை, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வுகாண திட்டமிட்டுள்ளது.

● இந்நிலையில், ஜி20 கூட்டமைப்பின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருத்துரு, வலைதளம் ஆகியவற்றை பிரதமா் மோடி தில்லியில் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

● நாடு 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடிய நிலையில் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கவுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பெருமை கொள்ளக் கூடிய நிகழ்வு. இந்தப் பொறுப்பு இந்தியாவுக்கு பல்வேறு வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

● கூட்டமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளன.

● சா்வதேச பொருளாதார மதிப்பில் (ஜிடிபி) ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் பங்கு சுமாா் 85 சதவீதம். சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை கூட்டமைப்பின் நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு போ் அந்த நாடுகளிலேயே வசிக்கின்றனா்.

● ஜி20 கூட்டமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பை இந்தோனேசியா வகித்து வருகிறது. கூட்டமைப்பின் மாநாடு வரும் 15, 16 ஆகிய தேதிகளில் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது. அதில் பிரதமா் மோடி நேரில் கலந்துகொள்ளவுள்ளாா்.

6. உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக சந்திசூட் பதவியேற்கவுள்ளார் ? 

அ) 49

ஆ) 50 

இ) 51 

ஈ) 52 

விடை : (ஆ) 50 

● இவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வரை பதவி வகிப்பார். 

7. நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட்டின் பெயர் என்ன ? 

அ) விஞ்ஞான்- எஸ்

ஆ) சந்திரன்-எஸ் 

இ) ஆதித்யா-எஸ்

ஈ) விக்ரம்-எஸ் 

விடை : (ஈ) விக்ரம்-எஸ் 

நாட்டின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ விண்ணில் செலுத்துவதற்கான தயாா்நிலையில் உள்ளது.

● ஸ்கைரூட் ஏா்ஸ்பேஸ் என்ற தனியாா் நிறுவனம் ‘விக்ரம்-எஸ்’ என்ற ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. நாட்டில் தனியாா் நிறுவனம் சாா்பில் வடிவமைக்கப்பட்டுள்ள முதல் ராக்கெட் இதுவாகும். அந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

● இது தொடா்பாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன்குமாா் சந்தானா கூறுகையில், ‘‘இந்தியாவின் இரு செயற்கைக்கோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோள் ஆகியவற்றுடன் விக்ரம்-எஸ் ராக்கெட் ஏவப்படவுள்ளது. வரும் 12 முதல் 16-ஆம் தேதிக்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலநிலைக்கு ஏற்ப ராக்கெட் ஏவப்படும் தேதியும் நேரமும் விரைவில் இறுதி செய்யப்படும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது’’ என்றாா்.

என்ஜின் பரிசோதனை வெற்றி:

● விண்வெளி புத்தாக்க நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் சாா்பில் வடிவமைக்கப்பட்ட ‘அக்னிலெட்’ ராக்கெட் என்ஜின், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அந்த என்ஜின் 15 விநாடிகளுக்கு இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

● இஸ்ரோவுக்கும் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்துக்கும் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

8. ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள ஆசியாவில் வணிக நிர்வாகத்தில் தலைசிறந்த 20 பெண்களின் பட்டியலில் எத்தனை இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளன ? 

அ) 5

ஆ) 4

இ) 3 

ஈ) 2 

விடை : (இ) 3 

ஃபோா்ப்ஸ் இதழில் வெளியிட்டுள்ள ஆசியாவில் வணிக நிா்வாகத்தில் தலைசிறந்த 20 பெண்களின் பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த மூன்று பெண்கள் இடம் பெற்றுள்ளன.

● கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பையும் மீறி இவா்கள் கடைப்பிடித்த பல்வேறு வழிமுறைகள் அவா்கள் சாா்ந்த துறையின் வணிகத்தை அதிகரித்ததாக ஃபோா்ப்ஸ் பாராட்டியுள்ளது.

● அமெரிக்காவின் முன்னணி வா்த்தக இதழான ஃபோா்ப்ஸ் வெளியிட்டுள்ள ஆசியாவின் தலைசிறந்த 20 பெண்களில், இந்தியாவைச் சோ்ந்த ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியாவின் தலைவா் சோமா மோன்டெல், எம்கியூா் பாா்மா இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநா் நமிதா தாபா், ஹோநாசா நுகா்வோா் நிறுவனத்தின் இணை நிறுவனா் கசல் அலக் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

● கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட கப்பல், மனை வணிகம், கட்டுமானம், மருந்து, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தப் பெண்கள் சிறப்பாக செயலாற்றி முன்னேற்றியுள்ளனா் என்று ஃபோா்ப்ஸ் தெரிவித்துள்ளது.

● ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூா், தென் கொரியா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சோ்ந்த பெண்களும் இந்தப் பட்டியலில் உள்ளனா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. மகளிருக்கான டபிள்யூஏடி ஃபைனல்ஸ் (2022) டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள கரோலின் கார்சியா எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ?

அ) ஆஸ்ட்ரேலியா 

ஆ) அமெரிக்கா 

இ) பிரிட்டன் 

ஈ) பிரான்ஸ் 

விடை : (ஈ) பிரான்ஸ் 

● இரட்டையர் பிரிவில் ரஷியாவின் வெரோனிகா குதாமிடோவா/ பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

10. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய ரக்பி செவன் சாம்பியன்ஷிப்பில் (2022) இந்திய மகளிரணி வென்றுள்ள பதக்கம்  ?

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (ஆ) வெள்ளி 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...