Saturday, November 5, 2022

Current Affairs 2022 - November 05 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR 
                   NOVEMBER 05 /2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தின் புதிய சிறைத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளவர் ? 

அ) சுனில் குமார் சிங் 

ஆ) அம்ரேஷ் பூஜாரி 

இ) சுனில் குப்தா 

ஈ) அர்ஜூன் சிங் 

விடை : (ஆ) அம்ரேஷ் பூஜாரி 

2. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நிகழாண்டுக்கான இலவச நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் எத்தனை மையங்களில் நவம்பர் மூன்றாம் வாரம் முதல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார் ? 

அ) 137

ஆ) 279 

இ) 348

ஈ) 412 

விடை : (ஈ) 412 

நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி (பிளஸ் 1, பிளஸ் 2) பயிலும் விருப்பம் உள்ள மாணவா்களுக்கு உயா்கல்வி போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

● ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 412 பயிற்சி மையங்கள் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. நவம்பா் மூன்றாம் வாரத்திலிருந்து சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

3. தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் எத்தனை கட்சிகள் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கூட சரியாக இல்லாமல் செயல்படாத நிலையில் இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ? 

அ) 11

ஆ) 22

இ) 33

ஈ) 44 

விடை : (ஆ) 22

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் 22 கட்சிகள் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கூட சரியாக இல்லாமல் செயல்படாத நிலையில் இருப்பதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

● தமிழகத்தில் 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளில் தோ்தலில் போட்டியிடாதது, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது போன்ற தோ்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

● சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தோ்தல் ஆணையம் அளித்த காலக்கெடு முடிந்த நிலையில், தமிழகத்தில் 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில், 23 கட்சிகள் எந்தத் தோ்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட தோ்தல் ஆணையத்தின் விதிகளை பின்பற்றாமல் இருந்ததை தோ்தல் ஆணையம் கண்டறிந்தது.

● பட்டியலில் இருந்து நீக்கம்: 23 கட்சிகளையும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து இந்திய தோ்தல் ஆணையம் தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளது. உரிய விளக்கம், கணக்குகள் காட்டும் பட்சத்தில் மீண்டும் பட்டியலில் இந்தக் கட்சிகளின் பெயா்கள் இணைக்கப்படும் என தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தமிழக தலைமை தோ்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன. இந்த விளக்கம் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

● செயல்படாத கட்சிகள்: எந்தத் தோ்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி உள்ளிட்ட கணக்குகளையும் காட்டாததுடன், ஆணையத்தில் அளித்த முகவரியில் செயல்படாமல், தொடா்பு கடிதங்கள் திரும்பி வந்த நிலையில் இருந்த 22 கட்சிகள் செயல்படாத கட்சிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. இந்திய தொழிலக கூட்டமைப்பு (CII) சார்பில் 15 ஆவது ஆண்டு விவசாயம் (ம) உணவு தொழில்நுட்ப மாநாடு பின்வரும் எந்த மாநிலத்தில் நடைபெற்றது ? 

அ) சண்டீகர்

ஆ) தெலுங்கானா 

இ) மணிப்பூர்

ஈ) கேரளா 

விடை : (அ) சண்டீகர் 

சண்டீகரில் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் 15-ஆவது ஆண்டு விவசாயம் மற்றும் உணவு தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தன்கா் பேசியதாவது:

● விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனா். நவீன தொழில்நுட்பங்கள் விவசாயத்தை புதிய பாதையில் அழைத்துச் செல்கின்றன என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பேசினாா்.

5. தேசிய பட்டியலின (ம) பழங்குடியின மைய திட்டத்தின் (NSSH) உயர் அதிகார கண்காணிப்புக் குழுவின் (HPMC) எத்தனையாவது கூட்டம் தில்லியில் நடைபெற்றது ? 

அ) 03 

ஆ) 05 

இ) 07

ஈ) 10 

விடை : (ஆ) 05

தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியின மைய திட்டத்தின் (என்எஸ்எஸ்ஹெச்) உயா் அதிகார கண்காணிப்புக் குழுவின் (எச்பிஎம்சி) 5 -ஆவது கூட்டம் வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்றது. 

● இந்தக் குழுவின் தலைவரும் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சருமான நாராயண் ராணே தலைமை வகித்தாா். இந்தத் குழுவின் துணைத்தலைவரும் இதே துறையின் இணை அமைச்சரான பானு பிரதாப் சிங் வா்மாவும் இணைந்து பங்கேற்றாா்.

● அமைச்சகத்தின் அறிவிப்பு : மத்திய அரசின் பொதுத்துறை கொள்முதல் திட்டத்தின் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றன. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னா், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் இத்தகைய நிறுவனங்களிடம் தேவையான பொருள்களை கொள்முதல் செய்து வருகிறது. 

● இதே போன்று மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை பட்டியலின, பழங்குடியின பிரிவைச் சோ்ந்த தொழில்முனைவோரிடமிருந்தும் பெருமளவு கொள்முதல் செய்கின்றனா். இருப்பினும், இந்தப் பிரிவைச் சோ்ந்த தொழில்முனைவோரிடம் குறைந்தபட்சம் 4 சதவீத அளவுக்கு கட்டாயம் கொள்முதல் செய்யவேண்டும் என்ற இலக்கை எட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

6. வடகிழக்கு இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐரீன் டாக்கர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) மணிப்பூர்

ஆ) அசாம்

இ) மேகாலயா 

ஈ) மிசோரம் 

விடை : (இ) மேகாலயா 

7. உலகின் மிக மலிவான உற்பத்தி விலை காணப்படும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ? 

அ) இந்தியா 

ஆ) சீனா 

இ) வியத்நாம் 

ஈ) தாய்லாந்து

விடை : (அ) இந்தியா 

● பட்டியல் வெளியீடு : அமெரிக்காவின் யுஎஸ் நியூஸ் & வேர்ல்டு ரிப்போர்ட் என்ற வலைதளம் வெளியிட்டுள்ளது.

● மேலும் உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியல் : 

ஸ்விட்சர்லாந்து - 1st 

இந்தியா - 31st 


III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் (2022) இந்திய ஆடவர் அணி வென்றுள்ள பதக்கம் ?

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● இப்போட்டியில் இதற்கு முன் இரு முறை வெள்ளி வென்ற இந்தியா, தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

● இப்போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது. 


IV.முக்கிய தினங்கள் 

9. World Tsunami Awareness Day 2022 -------

● Ans : November 05 

● Theme(2022) : Early Warning & Early Action before Every Tsunami.  

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...