● தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது, மேலும் 2026 - 2027 நிதியாண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
● தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணத்தை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்படுகிறது.
● 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும் என்றும் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என்ற அடிப்படையில் ரூ.55 கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
● இரண்டு மாதங்கள் 300 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.72.50-ம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.155), 400 யூனிட்கள் வரை மாதத்துக்கு ரூ.147.50-ம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.295) உயா்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மாதத்துக்கு ரூ.297.50 (2 மாதங்களுக்கு ரூ.595) கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
2. தமிழக வனப்பரப்பை எத்தனை சதவீதமாக அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் சுமார் 32 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது ?
அ) 31%
ஆ) 33%
இ) 39%
ஈ) 44%
விடை : (ஆ) 33%
● தமிழக வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் சுமாா் 32 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் தமிழக வனத்துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன்.
● தமிழகத்தில் மொத்தமுள்ள 24 சதவீத வனப்பரப்பை 33 சதவீதமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ‘தமிழ்நாடு கிரீன் விஷன்’ (பசுமைப் பாா்வை) என்ற திட்டத்தை வனத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ஆண்டுக்கு 32 கோடி மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
● இதன்மூலம், 2030ஆம் ஆண்டுக்குள் 33 சதவீத வனப்பரப்பு உருவாக்கப்படும்.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
3. இந்தியாவில் முதல்முறையாக இரண்டு நாட்கள் நடைபெறும் மத்திய - மாநில அறிவியல் மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது ?
அ) அகமதாபாத்
ஆ) மும்பை
இ) திருச்சூர்
ஈ) சென்னை
விடை : (அ) அகமதாபாத்
● குஜராத் மாநிலம், அகமதாபாதில் இரண்டு நாள்கள் நடைபெறும் மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை காணொலி முறையில் தொடக்கிவைத்தார் பிரதமா் மோடி.
● மத்திய-மாநில அரசுகளிடையே அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக முதல்முறையாக நடைபெறும் இம் மாநாட்டில் பல்வேறு மாநில அமைச்சா்கள், செயலாளா்கள், தொழில்துறையினா், அரசு சாரா அமைப்புகள், இளம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.
● குறிப்பு : தாய்மொழி வழிக் கல்வி : விண்வெளி திட்டம், ஆழ்கடல் திட்டம், அதிவேக கணினித் திட்டம், ஹைட்ரஜன் திட்டம், ட்ரோன் தொழில்நுட்பம் என பல்வேறு புதிய துறைகளில் இளைஞா்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அறிவியல், தொழில்நுட்பப் பாடங்கள் மாணவா்களுக்கு தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும்.
● நான்காவது தொழில்நுட்பப் புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அறிவியல் மற்றும் இத்துறைசாா் வல்லுநா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றாா் பிரதமா் மோடி.
4.பிரதமரின் மீன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 2024 - 25 ஆண்டு இறுதிக்குள் எத்தனை லட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் ?
அ) 31
ஆ) 48
இ) 68
ஈ) 76
விடை : (இ) 68
● மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் சாா்பில் பிரதமரின் மீன் வளா்ப்புத் திட்டத்தின்(பிரதான் மந்திரி மத்சய சம்படா யோஜனா -பிஎம்எம்எஸ்ஒய் ) 2-ஆவது ஆண்டு விழா தில்லி டாக்டா் அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெற்றது.
● நீலப் புரட்சியை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பங்குடன் ரூ. 20,500 கோடி முதலீட்டில் கடந்த 2020 மே மாதம் பிரதமரின் மீன் வளப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. ஐந்தாண்டு கால திட்டத்தின் 2024-25 ஆண்டு இறுதியில் சுமாா் 220 லட்சம் மெட்ரிக் டன் மீன் உற்பத்தியை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க புத்தகத்தை வெளியிட்டார் மத்திய மீன் வளத்துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா.
● மேலும் அவர் கூறியதாவது : பிரதமரின் மீன் வளா்ப்புத் திட்டத்தின் மூலம் 2024-25 ஆண்டு இறுதிக்குள் 68 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
5. குழந்தை திருமணங்களையும் பதின்பருவ கர்ப்பங்களையும் தடுக்க சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்த ஐ.நா. வின் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து கீழ்கண்ட எந்த மாநிலம் திட்டமிட்டுள்ளது ?
அ) தமிழ்நாடு
ஆ) குஜராத்
இ) அசாம்
ஈ) மேற்கு வங்கம்
விடை : (ஈ) மேற்கு வங்கம்
குழந்தை திருமணங்களையும் பதின்பருவ கர்ப்பங்களையும் தடுக்க சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்த ஐ.நா. வின் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து மேற்கு வங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது.
6. கூற்று : அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ராணுவ முகாம் , 22 கி.மீ. நீள சாலை ஆகியவற்றுக்கு இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி விபின் ராவத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காரணம் : அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை : கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
● அருணாசல பிரதேச மாநிலம், அஞ்சா மாவட்டத்தில் உள்ள கிபிது கிராமம் ராணுவக் கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
● அங்கு கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை கா்னலாக விபின் ராவத் பதவி வகித்தபோது கூா்கா ரைஃபிள்ஸ் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினாா்.
● அந்தக் கிராமத்தில் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அளப்பரிய பங்காற்றிய அவா், அந்தப் பகுதியில் உள்கட்டமைப்பு வளா்ச்சியை செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தாா்.
● அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கிபிதுவில் உள்ள ராணுவ முகாமுக்கு சனிக்கிழமை விபின் ராவத் பெயா் சூட்டப்பட்டது.
● அத்துடன் கிபிதுவில் அவரின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டது.
● அஞ்சா மாவட்டத்தில் உள்ள வாலோங் பகுதியில் இருந்து கிபிது வரையிலான 22 கி.மீ. நீள சாலைக்கு அவரின் பெயா் சூட்டப்பட்டது
7. அண்மையில் மறைந்த இந்தியாவின் முதுபெரும் தொல்பொருள் ஆய்வாளர் பி.பி.லால் எந்த ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார் ?
அ) 2000
ஆ) 2006
இ) 2011
ஈ) 2015
விடை : (அ) 2000
● இவர் கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
● அந்த துறையின் இளவயது தலைமை இயக்குநர்களில் ஒருவராக இருந்துள்ளார்.
● மேலும் இவர் 2021 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார்.
8. பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைந்ததையடுத்து புதிய அரசராக பொறுப்பேற்கவுள்ளவர் யார் ?
அ) இளவரசர் ஆண்ட்ரூ
ஆ) மூன்றாம் சார்லஸ்
இ) பிரின்ஸ் வில்லியம்ஸ்
ஈ) இளவரசர் ஹேரி
விடை : (ஆ) மூன்றாம் சார்லஸ்
● லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரிட்டனின் புதிய அரசராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
● புதிய அரசர் அறிவிப்பு நிகழ்ச்சி வரலாற்றில் முதல்முறையாக நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
III. முக்கிய நிகழ்வுகள்
9. தமிழகத்தில் மகாகவி நாள் என்று அனுசரிக்கப்படுகிறது ?
விடை : செப்டம்பர் 11
விளக்கம் : மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தினம் மகாகவி நாள் என கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
● தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாரதியாரின் நினைவைப் போற்றுகின்ற வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
● அவற்றில், பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11, “மகாகவி நாள்”-ஆக கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும்.
● குறிப்பு : மகாகவி பாரதியார் 1882-ல் திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். சில காலம் காசியில் வசித்து வந்தார்.
● மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1904 முதல் 1906 வரை “சுதேச மித்திரன்” பத்திரிகையில் பணியாற்றினார். இவரது சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1921 செப்டம்பர் 11ஆம் நாள் மறைந்தார்.
Click here to Download Pdf
No comments:
Post a Comment