Tuesday, September 13, 2022

Current Affairs 2022 - September 13/2022 - TNPSC Group 1,2/2A & 4

                    GK SHANKAR 
              SEPTEMBER 12 / 2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் எங்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதியன்று பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்படவுள்ளது ? 

அ) சென்னை 
ஆ) மதுரை 
இ) விருதுநகர் 
ஈ) சேலம் 

விடை : (இ) விருதுநகர் 

● தொடங்கி வைக்கவுள்ளவர் : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
● குறிப்பு : முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த தினமான செப். 15 ஆம் தேதி இத்திட்டத்தை முதல்வர் தொடக்கிவைக்கவுள்ளார். 

2. தமிழகத்தில் நிகழாண்டு எத்தனை லட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பணிகள் நடைபெற்று வருகின்றது ?

அ) 1.50 லட்சம் 
ஆ) 2.75 லட்சம் 
இ) 3.30 லட்சம் 
ஈ) 4.10 லட்சம் 

விடை : (இ) 3.30 லட்சம் 

● அறிவிப்பு : மாநில வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்.
● காரணம் : தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதமாக உள்ள வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்துவதற்காகவும் தூய்மையான பிராணவாயு கிடைக்கவும். 

3. உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு , சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் என்ற மனம் திட்டத்தை தொடக்கிவைத்தவர் யார் ?
அ) மு.க. ஸ்டாலின்
ஆ) மா. சுப்பிரமணியன் 
இ) ஆர்.என்.ரவி
ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (ஆ) மா.சுப்பிரமணியன் 

● மனம் திட்டம் : மனம் திட்டத்தில் பயிற்சி பெறுபவர்கள் , கல்லூரிக்கு சென்று மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்க வேண்டும்.
● மேலும் விரைவில் அனைத்து கல்லூரிகளிலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. 

4. தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்குநரகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் யார் ? 

அ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஆ) பொன்முடி
இ) க. நந்தகுமார்
ஈ) ச.கண்ணப்பன் 

விடை : (அ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

● அதேபோல, மாநில முதன்மை ஆணையராக, பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமாரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். மேலும், பாடநூல் கழகச் செயலர் ச.கண்ணப்பன் உட்பட 12 பேர் துணைத் தலைவர்களாக தேர்வாகினர்.

● குறிப்பு : சாரண, சாரணிய ஆசிரியர்கள் 268 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

5. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (நீரி) தமிழகத்தில் எங்கு பசுமைப் பட்டாசு ஆய்வுக் கூட்டத்தை அமைக்கத்திட்டமிட்டுள்ளது ? 

அ) விருதுநகர்
ஆ) சேலம்
இ) சிவகாசி
ஈ) தேனி 

விடை : (இ) சிவகாசி 

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ரூ.15 கோடி மதிப்பீட்டில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (நீரி) பசுமைப் பட்டாசு ஆய்வுக்கூடத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

● சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிா்க்க வலியுறுத்தி பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ‘நீரி’ பசுமைப் பட்டாசுகளை தயாரிப்பதற்கான பாா்மூலாவை அறிக்கையாக தயாா் செய்து வழங்கவும் அறிவுறுத்தியது. 

● இதையடுத்து ‘நீரி’ அமைப்பு பட்டாசு வெடிக்கும் போது 30 சதவீதம் புகை குறைவாக இருக்கும் வகையிலான, பசுமைப் பட்டாசு தயாரிப்பு குறித்த பாா்மூலாவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

● இந்நிலையில் ‘நீரி’ அமைப்பினா் சிவகாசி அருகே வெற்றிலையூரணி பகுதியில் பட்டாசு ஆய்வு கூடம் அமைக்க

● 5 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனா். தற்போது அந்த இடத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பட்டாசு ஆய்வுக் கூடம் அமைக்க முடிவு செய்துள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. சர்வதேச பால் பொருள்கள் கூட்டமைப்பின் உலக மாநாட்டை எங்கு பிரதமர் மோடி தொடக்கிவைத்தார் ? 

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) அசாம் 

இ) குஜராத் 

ஈ) உத்தர பிரதேசம் 

விடை : (ஈ) உத்தர பிரதேசம் 

சா்வதேச பால் பொருள்கள் கூட்டமைப்பின் உலக மாநாட்டை உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா்

● அண்மைக்காலமாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களில் தோல் கழலை நோயால் கால்நடைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்நோய் கால்நடைகளிடையே காய்ச்சல், தோலில் தடிப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. 

● அந்நோயால் பாதிக்கப்பட்ட சில கால்நடைகள் உயிரிழந்தன. கால்நடைகளிடையே அந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.

● பால் உற்பத்தியைப் பாதித்து, விவசாயிகளின் வருமானத்தையும் தோல் கழலை நோய் குறைத்து வருகிறது. அந்நோய்க்கான தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளனா்.

●  அத்தடுப்பூசியை கால்நடைகளுக்கு செலுத்துவதற்கான பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்கவுள்ளன. தோல் கழலை நோயைத் தடுப்பதற்காக தற்போது தற்காலிகமாக அம்மை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

● நாட்டில் உள்ள அனைத்துக் கால்நடைகளுக்கும் 2025-ஆம் ஆண்டுக்குள் கோமாரி நோய்க்கான தடுப்பூசியை செலுத்த அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

● பால் கொடுக்கும் விலங்குகளுக்கான பெரும் தரவுத் தளத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. கால்நடைகளுக்கான விவரங்களை எண்மமயமாக்கும் ‘பசு ஆதாா்’ நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

● அதன்மூலமாக கால்நடைகளின் உடல்நலனைத் தொடா்ந்து கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், கால்நடைப் பராமரிப்புத் துறையின் வளா்ச்சியையும் ஊக்குவிக்க முடியும்.

7. இந்திய - அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு (ஐஏசிசி) சார்பில் கீழ்க்கண்ட எங்கு கூட்டம் அண்மையில் நடைபெற்றது ? 

அ) ராஜஸ்தான்

ஆ) மணிப்பூர்

இ) கேரளா

ஈ) தில்லி

விடை : (ஈ) தில்லி

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் , உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கும் விழா எங்கு நடைபெற்றது ? 

அ) சென்னை

ஆ) மதுரை

இ) சேலம்

ஈ) தேனி 

விடை : (அ) சென்னை 

விளையாட்டு வீரா்களுக்கு விருதுகள், உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 1,130 விளையாட்டு வீரா்களுக்கு ரூ.16.28 கோடி ஊக்கத் தொகையை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா். 

● அறிவிப்புகள் : தமிழகம் முழுவதும் கபடி, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபா் மாதம் முதல் நடத்தப்பட இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

● முதல் முறையாக, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவினருக்கென நடத்தப்படவுள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடைபெறும்.

● குறிப்பு : தமிழகத்தில் உள்ள பழங்குடியினா் விளையாட்டுகள் கண்டறியப்பட்டு ஊக்கம் அளிக்கப்படும்.

●ஆடுகளம்’ என்ற விளையாட்டு வீரா்களுக்கான பிரத்யேக தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

●  இது விளையாட்டு வீரா்களுக்கான கோரிக்கைகள், ஆலோசனைகள், புகாா்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்து அவற்றுக்கான நடவடிக்கைகளையும், தீா்வுகளையும் விரைவாக வழங்க துணைபுரியும்.

9. யுஎஸ் ஓபன் 2022 டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) கார்லோஸ் அல்காரஸ் கார்ஃபியா 

ஆ) கேஸ்பர் ரூட் 

இ) ரஃபேல் நடால் 

ஈ) ஜோகோவிச் 

விடை : (அ) கார்லோஸ் அல்காரஸ் கார்ஃபியா 

● இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

● இவர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று உலகின் நம்பர் 1 வீரர் என்ற இடத்தையும் முதல்முறையாக பிடித்திருக்கிறார். 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...