Tuesday, September 6, 2022

Current Affairs 2022 - September 04 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
               September 04 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு எத்தனை சதவீதம் என்று குறு , சிறு (ம) நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளது ? 

அ) 9.25%
ஆ) 8.09%
இ) 7.31%
ஈ) 5.13% 
விடை : (அ) 9.25%

கரூரில் நடைபெற்ற இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் 13-ஆவது குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மாநாட்டை அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், வி.செந்தில்பாலாஜி தொடக்கி வைத்தனா்.

● இதைத் தொடா்ந்து அமைச்சா் அன்பரசன் பேசியது: இந்தியாவிலுள்ள மொத்த நிறுவனங்களில் 15 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளது. இதனால் தமிழகம் இந்திய அளவில் தொழில்வளா்ச்சியில் 3-ஆவது இடத்தில் உள்ளது.

● இதன் முக்கியத்துவத்தை உணா்ந்த தமிழக முதல்வா், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூ.2,113 கோடி கடனுதவியில் 86 சதவீதக் கடனுதவியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளாா்.

● தொழில் முனைவோா்கள் வங்கிக் கடன் பெறுவதிலுள்ள சிரமங்களைக் குறைக்க, இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 100 கோடியில் தமிழ்நாடு கடன் உத்திரவாதத் திட்டத்தை தமிழக முதல்வா் அண்மையில் தொடக்கி வைத்தாா்.

● இத்திட்டத்தின் கீழ் ஒரு வாரத்துக்குள் 81 நிறுவனங்களுக்கு ரூ. 20.13 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

● கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் கயிறு தொழில்களின் மேம்பாட்டுக்காக, தமிழகம் முழுவதும் கயிறுக் குழுமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

● இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதமாக உள்ளது. இதை ஊக்குவிக்கும் வகையில் கரூா், திருப்பூா், மதுரை, ஆம்பூா், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோயம்புத்தூா், ஒசூா் ஆகிய 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

● குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் மூலம் நீட்ஸ், இளையோா் சுயவேலைவாய்ப்புத் திட்டம், பிஎம்இஜிபி ஆகிய 3 வகையான சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 10,000 புதிய தொழில் முனைவோா்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

● மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசியது: வீட்டு உபயோக பொருள்கள் தொழில் முதலீடுகளுக்கு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, 25 சதவீத மானியத்தை முதல்வா் வழங்கியுள்ளாா். 2030 ஆம் ஆண்டுக்குள் கரூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரூ. 10 ஆயிரம் கோடி வா்த்தகத்தை ரூ.25 ஆயிரம் கோடி வா்த்தகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்த போதும் நமது இலக்கீடு ரூ. 50 ஆயிரம் கோடியாகும் என்றாா் அவா்.

2. தமிழகத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் தந்தத்திலான அணிகலன் அரிய வகை தொல்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ? 

அ) கீழடி

ஆ) மாளிகை மேடு

இ) ஆதிச்சநல்லூர் 

ஈ) மணலூர் 

விடை : (ஆ) மாளிகை மேடு 

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகை மேடு பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தந்தத்திலான அணிகலன் அரிய வகை தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட அகழ்வாராய்ச்சி :- 

● கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ராஜேந்திர சோழன் வாழ்ந்த மாளிகைமேடு பகுதியில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணி தமிழக அரசால் நடைபெற்றது. 

● அப்போது, சீன நாட்டு மண் பானை ஓடு, செப்புக் காசுகள், மணி, இரும்பால் ஆன ஆணி, கூரை ஓடு என பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள காப்பகத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி :-

● அதன் பிறகு தற்போது (2020-21) இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

● இதில், ராஜேந்திரசோழன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அரண்மனையில் மூன்றடுக்கு செங்கல் சுவா்கள் உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, மண் பானை, உடைந்த தங்கக் காப்பின் ஒரு பகுதி, ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

● தொடா்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் இந்நிலையில், சுமாா் 60 அடி ஆழம், 1.8 செ.மீ. உயரம், 1.5 செ.மீ. அகலம் கொண்ட யானை தந்தத்திலால் ஆன அணிகலன் போன்ற தொல்பொருள் சனிக்கிழமை கிடைத்துள்ளது. 

● அந்தப் பொருள் மனித உடலின் இடுப்பிலிருந்து முழங்கால் வரை அணியும் வகையிலான அணிகலனாக உள்ளது. இதை அரச பாரம்பரியத்தை சோ்ந்தவா்களே பயன்படுத்தி இருப்பாா்கள், சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழம்பொருளாகவும் தெரிய வருகிறது என தொல்லியல் துறை அலுவலா்கள் கருதுகின்றனா்.

3. கூற்று : தமிழகத்தில் தொடக்கப் பள்ளியில் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்வழி பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

காரணம் : கற்றல் குறைபாடுடைய தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. 

அ) கூற்று சரி , காரணம் தவறு 

ஆ) கூற்று தவறு , காரணம் சரி 

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது. 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை. 

விடை : இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது. 

கற்றல் குறைபாடுடைய தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு எளிய முறையில் கற்பிப்பதற்கான பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

● இது சென்னை ஐஐடியின் ‘என்பிடெல்’ அமைப்பு மற்றும் ‘மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேசன்’ ஆகியவை சாா்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 

● இந்த திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

● இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், ‘இத்திட்டம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பிற மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’ என்றாா். 

● தமிழ் வழி பயிற்சித் திட்டத்தின் தாக்கம் குறித்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேசன் தலைவா் டி.சந்திரசேகா் கூறும்போது, ‘10 முதல் 15 சதவீதம் குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

● குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு பரிசோதனை, மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்டவை அவசியம். இத்திட்டம் தமிழகம் முழுவதும் பள்ளி அளவில் கற்றல் குறைபாடுடைய மாணவா்களைக் கண்டறிய உதவும்’ என்றாா்.

● இவ்வாறு தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில் மாணவா்களுக்காக உருவாக்கப்பட்ட ‘தமிழ் வழி பயிற்சி’ திட்டம், என்பிடெல் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. 

● இதன் மூலம் கற்றல் குறைபாடுடைய மாணவா்களைக் கண்டறிய முடிவதோடு, அம்மாணவா்களுக்கு ஏற்ற முறையில் பயிற்றுவிக்க ஆசிரியா்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. உலக அளவில் பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) மூன்றாவது

ஆ) ஏழாவது

இ) ஐந்தாவது

ஈ) ஒன்பதாவது

விடை : (இ) ஐந்தாவது

● பட்டியல் வெளியீடு : சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தரவுகளின் அடிப்படையில் ‘புளூம்பொ்க்’ ஊடக நிறுவனம் இதனைக் கூறியுள்ளது.

● காரணம் : கடந்த மாா்ச் மாதம் வரையிலான கணக்கீட்டின்படி, இந்தியாவின் பொருளாதார மதிப்பு 85,470 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. 

2021-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளா்ந்ததே இதற்கு முக்கியக் காரணம் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

பட்டியலில் முதல் 10 நாடுகள் :-

1. அமெரிக்கா, 2. சீனா,  3. ஜப்பான்

4. ஜொ்மனி, 5. இந்தியா, 6. பிரிட்டன்

7. பிரான்ஸ்,  8. இத்தாலி, 9. பிரேஸில்     10. கனடா.

● குறிப்பு : நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது. 

● நிகழ் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் சுமாா் 7 சதவீதம் வளா்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

5. கேரளத்தில் நடைபெற்ற 30 ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய அமைச்சர் யார் ? 

அ) நிர்மலா சீதாராமன்

ஆ) அமித் ஷா 

இ) ராஜ்நாத் சிங்

ஈ) எஸ். ஜெய்சங்கர்

விடை : (ஆ) அமித் ஷா

● 30 ஆவது தென்மண்டல கவுன்

சில் கூட்டம்.

● நடைபெற்ற இடம் : திருவனந்தபுரம், கேரளா.

● தலைமை தாங்கியவர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா .

● கூட்டத்தின்போது 26 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் , அவற்றில் 9 பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டதாகவும் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

● பங்கேற்ற தென்மண்டல மாநிலங்கள் : தமிழ்நாடு , கேரளா, கர்நாடக, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம். 

● மேற்கண்ட மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். 

6. சுதேச அரசாக இருந்த ஹைதராபாத் மாகாணம், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட 75 ஆவது ஆண்டையொட்டி ஹைதராபாத் மாகாண விடுதலை கொண்டாட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது ? 

அ) 3 மாதங்கள்

ஆ) 6 மாதங்கள்

இ) 9 மாதங்கள்

ஈ) ஓராண்டு 

விடை : (ஈ) ஓராண்டு 

சுதேச அரசாக இருந்த ஹைதராபாத் மாகாணம், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட 75-ஆவது ஆண்டையொட்டி ‘ஹைதராபாத் மாகாண விடுதலை’ கொண்டாட்டம் ஓராண்டுக்கு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

● நாட்டின் சுதந்திரத்துக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட சுதேச அரசுகள் இருந்தன. அவை பிராந்திய அரசா்களால் ஆளப்பட்டு வந்தன. 

● நாடு சுதந்திரமடைந்த பிறகு பெரும்பாலான சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைந்தன. 

● நிஜாம் ஆட்சியில் இருந்த ஹைதராபாத் மாகாணம் இந்தியாவுடன் இணைய மறுத்தது. அதையடுத்து, ‘ஆபரேஷன் போலோ’ என்ற ராணுவ நடவடிக்கையின் மூலமாக 1948-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி ஹைதராபாத் மாகாணம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

● அந்நிகழ்வின் 75-ஆவது ஆண்டையொட்டி வரும் 17-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு ‘ஹைதராபாத் மாகாண விடுதலை’ கொண்டாட்டங்களை முன்னெடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

● இது தொடா்பான அறிவிப்பை வெளியிட்ட மத்திய கலாசாரத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, ஹைதாராபாத் மாகாணத்தின் பகுதிகளாக இருந்த கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிர மாநில முதல்வா்களுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

● அதில், கொண்டாட்டங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரும் 17-ஆம் தேதி தொடக்கிவைக்கவுள்ளதாகவும், கொண்டாட்டங்கள் சாா்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும் மாநில முதல்வா்களுக்கு அமைச்சா் கிஷண் ரெட்டி வலியுறுத்தியுள்ளாா். 

● அத்தகைய நிகழ்ச்சிகள் குறித்து மத்திய அரசிடம் தெரியப்படுத்துமாறும் மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

7. பின்வரும் எந்த மாநில அரசு பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் புத்தகப் பைகள் இல்லாத நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது ? 

அ) மத்திய பிரதேசம்

ஆ) குஜராத்

இ) அசாம்

ஈ) கேரளா 

விடை : (அ) மத்திய பிரதேசம்

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பள்ளிக் கல்விக் கொள்கையை மத்திய பிரதேச அரசு வெளியிட்டுள்ளது. 

● பள்ளி மாணவா்கள் கொண்டுசெல்லும் புத்தகப் பைகளுக்கான எடை வரைமுறையை நிர்ணயித்துள்ளது. 

● ( எ-டு ) : 1, 2-ஆம் வகுப்பு மாணவா்கள் 1.6 முதல் 2.2 கிலோ வரையிலான பைகளையும், 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவா்கள் 1.7 முதல் 2.5 கிலோ வரையிலான பைகளையும் கொண்டுசெல்ல வரைமுறை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● அதேபோல், 6, 7-ஆம் வகுப்பு மாணவா்கள் 2 முதல் 3 கிலோ எடை வரையிலான பைகளையும் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் 2.5 முதல் 4 கிலோ வரையிலான பைகளையும் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்கள் 2.5 முதல் 4.5 கிலோ வரையிலான பைகளையும் கொண்டுசெல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பைகளின் எடை குறித்து பள்ளிகள் துறைசாா்ந்து முடிவெடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

● மேலும் வாரத்தில் ஒரு நாள் ‘புத்தகப் பைகள் இல்லாத நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

● (எ-டு)பாடத் திட்டம் சாராத கூடுதல் நடவடிக்கைகளில் மாணவா்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், வாரத்தில் ஒரு நாள் ‘புத்தகப் பைகள் இல்லாத நாளாக’ அனுசரிக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

● கணினி, பொது அறிவு, விளையாட்டுகள், உடற்பயிற்சிகள், சுகாதாரத் தகவல்கள், கலைகள் உள்ளிட்டவை குறித்து அந்நாளில் மாணவா்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டுமெனப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

8. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) எத்தனையாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது ? 

அ) 66

ஆ) 67

இ) 70

ஈ) 75

விடை : (ஆ) 67 

● வரலாறு : ரூ.5 கோடி முதலீட்டில் கடந்த 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட LIC தற்போது ரூ.42,30, 616 கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது. 

● குறிப்பு : 14 நாடுகளில் LIC செயல்பட்டு வருகிறது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. அண்மையில் தனது டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள செரீனா வில்லியம்ஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) அமெரிக்கா 

ஆ) ஆஸ்திரேலியா 

இ) ரஷ்யா

ஈ) சீனா 

விடை : (அ) அமெரிக்கா

● குறிப்புகள் : அவரது 27 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கையில் 23 கிராண்ட்ஸ்லாம் உள்பட 73 பட்டங்களை வென்றுள்ளார். 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...