Sunday, September 4, 2022

Current Affairs 2022 - September 03 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                       GK SHANKAR 
                 September 03 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தினத்தன்று ( செப்.05 ) எத்தனை ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது ? 

அ) 310
ஆ) 396
இ) 407
ஈ) 436 

விடை : (ஆ) 396 

● விருது வழங்கும் விழா : தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில்  செப்.05 ஆம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
● விருது : ரூ.10,000 ரொக்கம்,  36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப்பதக்கம் , பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. 

விருதுகளின் பட்டியல் :-

● அரசு தொடக்க, நடுநிலை , உயர்கல்வி மேல்நிலைப்பள்ளிகளில் 342 ஆசிரியர்கள். 
● 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள்.
● 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்.
● 2 சமூக பாதுகாப்புத்துறை பள்ளி ஆசிரியர்கள்.
● 2 மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள்.
● மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவன (SCERT) 10 பேராசிரியர்கள் என மொத்தம் 396 ஆசியர்கள் ஆவர். 

2. தமிழகத்தில் திமுக முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார் விருது கீழ்க்கண்ட யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) இரா. மோகன்
ஆ) டி.ஆர். பாலு
இ) சம்பூர்ணம் சாமிநாதன் 
ஈ) குன்னூர் சீனிவாசன் 

விடை : (இ) சம்பூர்ணம் சாமிநாதன் 

● திமுக முப்பெரும் விழாவை ஒட்டி, பெரியார், அண்ணா, கலைஞர் உள்பட 5 விருதுகள் பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து விருதுகள் :-
● பெரியார் விருது - சம்பூர்ணம் சாமிநாதன்.
● அண்ணா விருது - கோவை இரா. மோகன்.
● கலைஞர் விருது - டி.ஆர். பாலு.
● பாவேந்தர் விருது - புதுச்சேரி சி.பி. திருநாவுக்கரசு. 
● பேராசிரியர் விருது - குன்னூர் சீனிவாசன். 
விருது வழங்கும் விழா : விருதுநகர் மாவட்டத்தில் செப்.15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
● விருதுகளை வழங்குபவர் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 

3. கிராமப்புற (ம) நகர்ப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவதற்கான உத்தரவை அண்மையில் வெளியிட்டுள்ள மாநிலம் ? 

அ) கேரளா
ஆ) பஞ்சாப் 
இ) அசாம்
ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

● இது தொடா்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் இரா.ஆனந்தகுமாா் வெளியிட்டுள்ள உத்தரவு:

● கிராமப்புறங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் வீடுகள் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்டையில் வீடுகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான கடிதத்தை அரசுக்கு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநா் அனுப்பியுள்ளாா்.

● அதில், 40 சதவீதம், அதற்கு மேல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் மருத்துவச் சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு ஆவணங்களை வைத்திருந்தால் வேறு எந்த நிபந்தனையுமின்றி மாற்றுத் திறனாளிகளை உறுப்பினா்களாகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்கலாம் என கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

● இந்தக் கடிதத்துடன், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை ஆகியவற்றின் ஒப்புதல்களின் அடிப்படையில் வீடுகள் வழங்க அரசு உத்தரவிடுகிறது.

● அதன்படி, ஊரக வளா்ச்சித் துறை, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் மூலம் ஒதுக்கப்படும் வீடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான வீடு ஒதுக்கீட்டில் போதுமான தகுதியான விண்ணப்பதாரா்கள் இல்லாதபட்சத்தில், அந்த வீட்டினை இதர விண்ணப்பதாரா்களுக்கு வழங்கலாம்.

● மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகள், அவா்கள் எளிதில் அணுகும் வகையில் தங்கு தடையற்ற சூழலில் இருக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தரைத்தள குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. உள்நாட்டிலேயே உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க் கப்பலின் பெயர் என்ன ? 

அ) INS Vikrant

ஆ) INS Kadmatt 

இ) INS Pralaya

ஈ) INS sahyadri 

விடை : (அ) INS Vikrant 

● INS Vikrant நாட்டுக்கு அர்ப்பணித்தவர் : பிரதமர் நரேந்திர மோடி.

● நிகழ்ச்சி நடைபெற்ற இடம் : கொச்சி, கேரளா.

● கப்பல் உருவாக்கப்பட்ட வரலாறு : விமானந்தாங்கிப் போர் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை கடந்த 2007 ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. 

● இத்திட்டத்தின் கீழ் முதல் கப்பலாக விக்ராந்த் சுமார் ரூ.20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. 

● கட்டப்பட்ட நிறுவனம் : 2009 ஆம் ஆண்டு கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம், கப்பல் கட்டும் பணியை தொடங்கியது. 

விக்ராந்தின் சிறப்பம்சங்கள்

நீளம் - 262 மீட்டர்

உயரம் - 59 மீட்டர்

அகலம் - 62 மீட்டர்

எடை - 40,000 டன்

அதிகபட்ச வேகம் - 28 கடல் மைல்

அடுக்குகள் - 14

அறைகள் - 2,300

கடற்படை அதிகாரிகள்,

வீரர்கள் - 1,700

போர் விமானங்கள்,

ஹெலிகாப்டர்கள் - 36 

● ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இடம்பெற்றுள்ள 36 விமானங்கள்:

* மிக்-29கே ரக விமானங்கள் - 26

* காமோவ்-31 ரக ஹெலிகாப்டர்கள் - 4

* எம்.எச். 60ஆர் ஹெலிகாப்டர்கள் - 4

* உள்நாட்டு தயாரிப்பு இலகு ரக ஹெலிகாப்டர்கள் - 2.

5. மங்களூரில் ரூ.3800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) அமித் ஷா

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (அ) நரேந்திர மோடி 

6. இந்திய கடற்படைக்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தியவர் யார் ? 

அ) திரௌபதி முர்மு

ஆ) நரேந்திர மோடி

இ) ராஜ்நாத் சிங் 

ஈ) யு.யு.லலித் 

விடை : (ஆ) நரேந்திர மோடி 

●  இந்திய கடற்படைக்காக வடிவமைக்கப்பட்ட 'நிஷான்' என்றழைக்கப்படும் புதிய கொடியை  பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

முன்பு இருந்த கொடி : இதற்கு முன்பு இருந்த கடற்படை கொடி என்பது வெள்ளைத் துணியில் சிவப்பு நிறத்தில் நெடுங்கோடு மற்றும் குறுக்கோடு இருக்கும். இது புனித ஜார்ஜ் அடையாளமாக இருந்தது. அதன் கொடியின் வலது பக்கத்தில் தேசியக் கொடி இருந்தது.

தற்போது அறிமுகப்படுத்திய கொடி : தற்போது அறிமுகமான கடற்படைக்கான புதிய கொடியில், கொடியின் மேல்புற இடதுபக்கத்தில் தேசியக் கொடியும், எண்கோண சட்டமும், அதற்கு தங்கநிற வண்ணமும் தரப்பட்டுள்ளது. அந்த எண்கோணம் அடர்நீலத்தில் வண்ணமிடப்பட்டுள்ளது. அதில் தங்கநிறத்தில் தேசிய சின்னம், சத்தியமே ஜெயதே என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. நங்கூரத்தின் மீது தேசிய சின்னம் அமரவைக்கப்பட்டுள்ளது போன்று கொடி அமைக்கப்பட்டுள்ளது.

● கடற்படையின் கொடியில் உள்ள எண்கோணம் என்பது 8 திசைகளையும் குறிக்கிறது. நங்கூரம் அடையாளம் என்பது, காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் சுதந்திரமாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. கொடியில் உள்ள அடர்நீலம் வண்ணம், இந்திய கடற்படை கடல்பரப்பில் வல்லமைவாய்ந்ததை குறிக்கிறது

● கொடியில் உள்ள எண்கோணத்துக்கு இரு பார்டர்கள் கொடுக்கப்பட்டது என்பது சத்தரபதி சிவாஜி ராஜமுத்திரையைப் பார்த்து எடுக்கப்பட்டது என்று கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பு : கடந்த 1950ம் ஆண்டுக்குப்பின் கடற்படைக்கு 4வது முறையாக கொடி மாற்றப்பட்டுள்ளது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம்தேதி கடற்படைக்கு முதல்முறையாக கொடி மாற்றப்பட்டது. அதற்கு முன் புனித ஜார்க் கிராஸ் மட்டுமே சிவப்பு நிறத்தில் இருந்தது. அதற்கு மேல் தேசியக் கொடி பொறிக்கப்பட்டது.

7. இந்தியாவில் கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகள் பரப்பியதாக அதிக வழக்குகள் பதிவான மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் ? 

அ) தமிழ்நாடு 

ஆ) மேற்கு வங்கம்

இ) குஜராத் 

ஈ) ஹரியானா 

விடை : (ஆ) மேற்கு வங்கம் 

● அறிக்கை வெளியீடு : தேசிய குற்ற ஆவணக் காப்பகம். 

8. உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் அளவைவிட எத்தனை மடங்கு அதிக நுண்துகள்கள் அடங்கிய மாசடைந்த காற்றை இந்தியர்கள் சுவாசித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது ? 

அ) 10

ஆ) 7

இ) 5 

ஈ) 3 

விடை : (இ) 5 

உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் அளவைவிட அதிக நுண்துகள்கள் அடங்கிய, மாசடைந்த காற்றையே 99 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியா்கள் சுவாசித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

● நாட்டில் காற்று மாசுபாடு குறித்த ஆய்வை ‘கிரீன்பீஸ் இந்தியா’ என்ற அமைப்பு நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

● காற்றில் 2.5 மைக்ரான் விட்டமுள்ள நுண்துகள்கள் (பிஎம்-2.5) அதிக அளவில் கலந்துள்ளன. உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் ஆண்டு சராசரி அளவைவிட 5 மடங்குக்கும் அதிகமான நுண்துகள்கள் காற்றில் கலந்துள்ளன. அத்தகைய மாசடைந்த காற்றைத்தான் நாட்டில் உள்ள 99 சதவீதத்துக்கும் அதிகமானோா் சுவாசித்து வருகின்றனா்.

● முதியோா், பச்சிளம் குழந்தைகள், கா்ப்பிணிகள் ஆகியோரே காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். நாட்டில் 56 சதவீத மக்கள் காற்று மிகவும் அதிகமாக மாசடைந்துள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனா். நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கா்ப்பிணிகளில் 62 சதவீதம் பேரும் அப்பகுதிகளில் வசிக்கின்றனா்.

● குறிப்பு : பிஎம்-2.5 மாசு அதிகமாகக் காணப்படும் இடமாக தில்லி உள்ளது. 

● பிஎம்-2.5 நுண்துகள்களை சுவாசிப்பதால், அவை நுரையீரல், சுவாசப் பாதை உள்ளிட்ட பகுதிகளை ஊடுருவிச் சென்று சுவாசக் கோளாறுகள், இதயம் சாா்ந்த பிரச்னைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ? 

அ) கல்யாண் சௌபே 

ஆ) பாய்சங் பூட்டியா 

இ) என்.ஏ. ஹாரிஸ்

ஈ) பிரியரஞ்சன் தஸ்முன்சி 

விடை : (அ) கல்யாண் சௌபே 

● துணைத் தலைவராக தேர்வாகியுள்ளவர்: என்.ஏ.ஹாரிஸ் 

● குறிப்பு : இந்திய கால்பந்தின் 85 ஆண்டுகால வரலாற்றில் முன்னாள் வீரர் ஒருவர் சம்மேளனத் தலைவராகியிருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...