Saturday, September 3, 2022

Current Affairs 2022 - September 02 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                          GK SHANKAR 
                    September 02 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் : 

1. தமிழகத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது ? 

அ) மணலூர்
ஆ) ஆதிச்சநல்லூர் 
இ) கீழடி
ஈ) கொந்தகை 

விடை : (இ) கீழடி 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் அகரம் அகழாய்வுத்தளத்தில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது.

● தமிழக தொல்லியல் துறை சாா்பில் கீழடியில் நடைபெற்று வரும் 8 ஆம் கட்ட அகழாய்வில் அகரம் அகழாய்வுத்தளத்தில் தோண்டப்பட்ட ஒரு குழியிலிருந்து 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறை கிணறு சேதமடைந்த நிலையில் வெளிப்பட்டுள்ளது. 

● இதுவரை கீழடியில் 9, அகரத்தில் 6, கொந்தகையில் 4 என மொத்தம் 19 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

●  இதில், கீழடியில் ஒரு உறைகிணறும், அகரத்தில் 4 உறைகிணறுகளும் கண்டறியப்பட்டன. அகரத்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உறைகிணறு சரிந்தவாறு 2 அடுக்குகள் மட்டுமே வெளியே தெரிந்த நிலையில் தற்போது 9 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன.

● குறிப்பு : 8 ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக 9 அடுக்குகள் வரை உறைகிணறு வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உறைகிணறு 80 செ.மீ. விட்டமும், 20 செ.மீ. உயரமும் கொண்டதாக உள்ளது. 

● அகழாய்வுக் குழியின் உயரம் அதிகரிக்கப்படும்போது இந்த உறைகிணற்றின் உயரம் மற்றும் அடுக்குகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

2. பின்வரும் எந்த மாநிலம் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவித்துள்ளது ? 

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) மத்திய பிரதேசம்

ஈ) மணிப்பூர் 

விடை : (அ) தமிழ்நாடு 

ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற புகழ் பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவா்களின் கல்விக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்.

● அதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

3. தென்மண்டல கவுன்சிலின் எத்தனையாவது கூட்டம் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் வரும் செப்.03 ஆம் தேதி நடைபெறவுள்ளது ? 

அ) 27 ஆவது 

ஆ) 30 ஆவது 

இ) 36 ஆவது

ஈ) 42 ஆவது 

விடை : (ஆ) 30 ஆவது 

● மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா (ம) புதுச்சேரி முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர். 

● குறிப்பு : இந்த கூட்டத்தில் தமிழகம் தொடர்பான கருத்துகளை தமிழக முதல்வர் எடுத்து வைக்கிறார்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4.கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள செர்வாவேக் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியவர் யார் ?

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு 

இ) அமித் ஷா 

ஈ) ஜிதேந்திர சிங் 

விடை : (ஈ) ஜிதேந்திர சிங் 

இந்தியாவில் 15 முதல் 44 வயது வரையிலான பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பைவாய் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

● இந்தப் புற்றுநோய்க்கான முக்கியக் காரணியான ‘ஹியூமன் பாப்பிலோமா’ தீநுண்மிக்கு எதிராக தடுப்பாற்றலை அளிக்கும் தடுப்பூசியை ‘சீரம் இந்தியா’ இந்தியா உருவாக்கியுள்ளது.

● ‘சொ்வாவேக்’ என்ற இந்தத் தடுப்பூசியை சந்தைப்படுத்தும் ரீதியில் உற்பத்தி செய்வதற்கான அங்கீகாரத்தை சீரம் இந்தியா நிறுவனத்துக்கு இந்திய தலைமை மருந்துகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகம் அண்மையில் வழங்கியது.

● இந்நிலையில், ‘சொ்வாவேக்’ தடுப்பூசியின் அறிவியல்பூா்வ நடைமுறைகள் நிறைவை முறைப்படி அறிவித்து, அதனை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, தில்லியில் நடைபெற்றது. 

● இதில், மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா, சிஎஸ்ஐஆா் நிறுவனத்தின் தலைமை இயக்குநா் என்.கலைசெல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

● குறிப்பு : ரூ.200 முதல் ரூ.400 விலையில் அடுத்த சில மாதங்களில் தடுப்பூசி கிடைக்கும். அரசுடன் ஆலோசித்த பிறகு இறுதி விலை நிா்ணயிக்கப்படும்’ .

5. நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை எத்தனை சதவீதமாக குறைத்து மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது ? 

அ) 8.8%

ஆ) 7.7%

இ) 6.6%

ஈ) 5.5%

விடை : (ஆ) 7.7% 

2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 7.7 சதவீதமாக மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை கடுமையாகக் குறைத்துள்ளது. 

● முன்பு கனித்தது: 8.8% 

● அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், சீரற்ற பருவமழை மற்றும் மந்தமான உலகளாவிய வளர்ச்சி ஆகியவை பொருளாதார வளர்ச்சியை தொடர்ச்சியான அடிப்படையில் பாதிக்கும் என்று கூறியுள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. பெருவில் நடைபெற்ற உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் 2022 ல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை யார் ? 

அ) அபெக்சா ஃபெர்னாண் 

ஆ) வேதாந்த மாதவி

இ) சம்பவ் ராமபாய் 

ஈ) அபெக்சா குப்தா 

விடை : (அ) அபெக்சா ஃபெர்னாண் 

● இவர் மகளிருக்கான 200மீ பட்டர்ஃப்ளை பிரிவில் 8 ஆவது இடம் பிடித்துள்ளார். 

IV. முக்கிய தினங்கள் 

7. World Coconut Day 2022 

Ans : September 02 

Theme (2022) : Growing Coconut for better future & life. 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...