JULY 09 / 2022
I. தமிழ்நாட்டுச் செய்திகள்
1. தமிழகம் முழுவதும் எத்தனை லட்ச இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (ஜூலை 10) நடைபெறவுள்ளது ?
அ) 1 லட்சம்
ஆ) 2 லட்சம்
இ) 3 லட்சம்
ஈ) 4 லட்சம்
விடை : (அ) 1 லட்சம்
● இந்த முகாமில் இரண்டாம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
● குறிப்பு : இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16, 2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
2. தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை முதல்வர் எங்கு தொடக்கி வைத்தார் ?
அ) சேலம்
ஆ) திருவண்ணாமலை
இ) கோயம்புத்தூர்
ஈ) மதுரை
விடை : (ஆ) திருவண்ணாமலை
● இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை திருவண்ணாமலை மாவட்டம், பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
● முதன்முதலில் தொடங்கப்பட்டது :
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், முதலியார் குப்பம் கிராமத்தில் அக்டோபர் 27, 2021 ம் தேதி முதல்வரால் தொடங்கப்பட்டது.
3. தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தொடர் வாசிப்பு இயக்கப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மாவட்டம் ?
அ) திருச்சி
ஆ) சேலம்
இ) மதுரை
ஈ) திருநெல்வேலி
விடை : (இ) மதுரை
● குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க நடத்தப்பட்ட தொடர் வாசிப்பு இயக்கப்போட்டி.
● 1st - திருச்சி, லால்குடி வட்டாரம்
2nd - மதுரை,அலங்காநல்லூர், வட்டாரம்.
3rd - மதுரை, மேலூர் வட்டாரம்.
● ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் :
மதுரை மாவட்டம்.
II. தேசியச் செய்திகள்
4. அண்மையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ?
அ) சீனா
ஆ) ரஷ்யா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
விடை : (ஈ) ஜப்பான்
● அவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டது.
5. இந்திய மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எத்தனை உறுப்பினர்கள் அண்மையில் பதவியேற்றுள்ளனர் ?
அ) 27
ஆ) 31
இ) 20
ஈ) 18
விடை : (அ) 27
● 27 உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
● குறிப்பு : தமிழகத்தைச் சேர்ந்த தர்மர் தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.
6. ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத் குகை கோயில் அருகே நிகழ்ந்த திடீர் மேக வெடிப்பைத் தொடர்ந்து பெய்த பலத்த மழை வெள்ளத்தில் சிக்கி எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் ?
அ) 31
ஆ) 13
இ) 25
ஈ) 18
விடை : 13
● வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
7. கடந்த நிதியாண்டில் எத்தனை கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை செய்துள்ளது ?
அ) ரூ. 13,000 கோடி
ஆ) ரூ. 25,000 கோடி
இ) ரூ. 31,000 கோடி
ஈ) ரூ. 41,000 கோடி
விடை : (அ) ரூ.13,000 கோடி
● அறிவிப்பு : மத்திய பாதுகாப்பு உற்பத்தி துறையின் கூடுதல் செயலாளர் சஞ்சய் ஜாஜூ.
8. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக:
1) வெளிநாட்டு விமானங்களை இயக்குவதற்காக இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விமான எரிபொருளுக்குக் கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2) இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட பாலியஸ்டர் தேசியக் கொடிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ?
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 (ம) 2 மட்டும்
ஈ) ஏதுமில்லை
விடை : (இ) 1 (ம) 2
● அறிவிப்பு : மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
III. விளையாட்டுச் செய்திகள்
9. விம்பிள்டன் போட்டி 2022 ல் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள டெனசரே கிராவ்ஸிக் (ம) நீல் ஸ்குப்ஸ்கி கீழ்க்கண்ட எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ?
அ) அமெரிக்கா
ஆ) ஆஸ்திரேலியா
இ) இங்கிலாந்து
ஈ) அ & இ
விடை : (ஈ) அ & இ
No comments:
Post a Comment