Friday, July 8, 2022

Current Affairs 2022 - JULY 08 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                        GK SHANKAR 
                      JULY 08 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் புதிதாக 20 அரசு கலை (ம) அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தவர் யார் ? 

அ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஆ) கே. பொன்முடி 
இ) மு.க. ஸ்டாலின்
ஈ) அ & இ 

விடை : (இ) மு.க. ஸ்டாலின் 

● நோக்கம் : அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வியை வழக்கவும்,  மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

2. திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்
ஆ) சோனியா காந்தி
இ) ஆர். என். ரவி
ஈ) பினராயி விஜயன்

விடை : (அ) மு.க. ஸ்டாலின்

● திருவண்ணாமலை, வேலூர் சாலையில் புதிதாக அண்ணா நுழைவு வாயில் கட்டப்பட்டுள்ளது.

● இதன் அருகிலேயே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை அமைத்து திறக்கப்பட்டுள்ளது. 

● மேலும் : 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையத்தை கீழ்பென்னாத்தூர் வட்டம் , ஆராஞ்சி ஊராட்சியில் முதல்வர் திறந்து வைத்தார். 

II. தேசியச் செய்திகள் 

3. இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) டி. ஸ்ரீகாந்த் 
ஆ) ஆர். கே. குப்தா 
இ) ஸ்ரீதர் குமார் 
ஈ) சுரப்சுக்லா 

விடை : (ஆ) ஆர்.கே. குப்தா 

● உத்தரவு : மத்திய பணியாளர் அமைச்சகம்.  
● முன்பு : மத்திய தலைமைச் செயலக அதிகாரியாக பணியில் இருந்தார்.  
● பதவிக்காலம் : அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெறும் வரை இப்பதவியில் நீட்டிப்பார்.  

4. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) மும்பை
ஆ) சென்னை
இ) வாராணசி
ஈ) கொல்கத்தா 

விடை : (இ) வாராணசி 

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் மாநாடு, வாரணாசியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதனை தொடங்கிவைத்து பிரதமர் மோதி பேசியதாவது.

● ஆங்கிலேயர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியாளர் வர்க்கத்தை உருவாக்கும் வகையில் இந்தியாவில் கல்வி முறையை அறிமுகப்படுத்தினர்; அதில் இன்னும் நிறைய மாற்றம் தேவைப்படுகிறது" என்று பிரதமர் மாநாட்டில் கூறினார். 

5. நடப்பு நிதியாண்டில் நீண்டகால முதலீட்டுத் திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு எத்தனை கோடி வட்டியில்லா கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது ? 

அ) ரூ. 80,000 கோடி
ஆ) ரூ. 50,000 கோடி
இ) ரூ. 75,000 கோடி
ஈ) ரூ. 97,000 கோடி 

விடை : (அ) ரூ. 80,000 கோடி

● அறிவிப்பு : மத்திய நிதியமைச்சகம்.  
● குறிப்பு : பிரதமரின் துரித சக்தி திட்டத்தின் கீழான முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

6. மத்திய உருக்குத்துறை (ம) சிறுபான்மை நலத்துறை அமைச்சர்களாக அண்மையில் கூடுதல் பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் யார் ? 

அ) நிர்மலா சீதாராமன் 
ஆ) ஜோதிராதித்ய சிந்தியா 
இ) ஸ்மிருதி இரானி 
ஈ) ஆ & இ 

விடை : (ஈ) ஆ & இ 
மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, உருக்குத்துறையின் அமைச்சராகவும், ஸ்மிருதி இரானி சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டனா்.

●மத்திய உருக்குத் துறையின் அமைச்சராக இருந்த ராம் சந்திர பிரசாத் சிங் மற்றும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி ஆகியோரது மாநிலங்களவை உறுப்பினா் பதவி காலம் நிறைவுறுவதால்,இருவரும் தங்கள் அமைச்சா் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா்.

● இந்நிலையில், விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உருக்கு அமைச்சகமும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

● மத்திய அமைச்சரவை பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை அதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா்.

7.  ஜி20 அமைப்பின் இந்திய தூதராக (ஷெர்பா) நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) பியூஷ் கோயில

ஆ) சுரப்சுக்லா 

இ) ஆர். கே. குப்தா

ஈ) அமிதாப் காந்த்

விடை : (இ) ஆர்.கே. குப்தா 

● இவர் நீதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

● குறிப்பு : ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை நிகழாண்டு இறுதியில் இந்தியா ஏற்கவுள்ளது. 

8. ஐ.நா. அமைப்புகளில் ஒன்றான யுனெஸ்கோவின் கலை , கலாசார பாரம்பரிய குழுவின் உறுப்பினராக இந்தியா எத்தனையாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ?  

அ) முதலாவது 

ஆ) இரண்டாவது

இ) மூன்றாவது 

ஈ) ஐந்தாவது 

விடை : (இ) மூன்றாவது 

●  UNESCO சார்பில் 2003 ஆம் ஆண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது அக்குழுவில் பல நாடுகளில் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெறுவர் . 

● அக்குழுவின் உறுப்பினராக இந்தியா : 

1st time : 2006 - 2010

2nd time : 2014 - 2018

3rd time : 2022 - 2026 .

9. கரோனா தீநுண்மியின் ஓமைக்ரான் பி.ஏ.2.75 வகை வைரஸ் பரவல் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ள நாடு எது ? 

அ) அமெரிக்கா

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) பிரிட்டன்

விடை : (ஆ) இந்தியா 

அறிவிப்பு : உலக சுகாதார அமைப்பு 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...