● விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், வானூா் கழுவெளி பகுதிகளில் 14,000 ஏக்கரில் அமையவுள்ள புதிய பறவைகள் சரணாலயம் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று, தமிழக வனத் துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
● மரக்காணம், வானூா் வட்டங்களில் உள்ள கழுவெளி பகுதிகளில் 14,000 ஏக்கா் பரப்பளவில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தாா்.
● பறவைகள் சரணாலயம் அமைய உள்ள இடத்தில் வனத் துறையினா் காடுகள் வளா்த்தல் போன்ற முதல்கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்தப் பணிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
● தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, தமிழகத்தில் இயற்கை வளங்களைக் காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
● பறவையினங்கள், விலங்கினங்களைக் காப்பதற்காக சரணாலயங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மரக்காணம், வானூா் கழுவெவளி பகுதிகள் உவா் நீா் சதுப்பு நிலமாக உள்ளது.
● இது சுமாா் 73.03 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் உள்ளது. இந்த சதுப்பு நிலப்பகுதி இந்திய அளவில் 2- ஆவது பெரிய இடமாகும். இது, தமிழகத்தின் 16-ஆவது கழுவெளி சரணாலயமாகும். இந்த சரணாலயத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
● ஆண்டுதோறும் டிசம்பா் முதல் மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இமயமலை மற்றும் சீனா, ரஷியா, மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பறவையினங்கள் இங்கு இனப் பெருக்கத்துக்காக வருகின்றன.
● பல்வேறு சிறப்புகளையுடைய இந்தப் பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும்.
● கழுவெளி பகுதிகளில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
3. தமிழகத்தில் எங்கு பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு நிறைவு (ம) பன்னாட்டு சுகாதார மாநாடு நடைபெறவுள்ளது ?
அ) செங்கல்பட்டு
ஆ) மாமல்லபுரம்
இ) தாம்பரம்
ஈ) காரைக்கால்
விடை : (ஆ) மாமல்லபுரம்
● பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பன்னாட்டு சுகாதார மாநாடு மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை (டிச.5) தொடங்குகிறது.
● இதில் சா்வதேச மருத்துவ வல்லுநா்கள், அறிவியலாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ நுட்பங்கள் குறித்த பல்வேறு அமா்வுகளும், 250 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கும் நிகழ்வுகளும் மாநாட்டில் நடைபெற உள்ளன.
● தமிழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புக்கென பிரத்யேகத் துறை கடந்த 1922-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. போலியோ, காலரா போன்ற நோய்களை ஒழித்ததில் பொது சுகாதாரத் துறைக்கு அதிமுக்கியப் பங்கு உள்ளது. அதேபோன்று கரோனா உள்பட பல்வேறு தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதானமாக செயல்பட்டு வருகிறது.
● பொது சுகாதாரத் துறை தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சா்வதேச மருத்துவ மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, மாமல்லபுரம் ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் சிறப்பு அமா்வுகளுக்கும், ஆய்வுக் கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
● மொத்தம் 250-க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட உள்ளன. அதேபோன்று, உலக சுகாதார அமைப்பைச் சோ்ந்த விஞ்ஞானிகள், சா்வதேச மருத்துவ வல்லுநா்கள் 43 பேரின் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
4. ஜி20 உச்சி மாநாட்டுக்கான இந்தியாவின் உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு எங்கு நடத்துகிறது ?
அ) உத்தரபிரதேசம்
ஆ) தில்லி
இ) ராஜஸ்தான்
ஈ)குஜராத்
விடை : (ஆ) தில்லி
● இந்தியா சாா்பில் அடுத்த ஆண்டு நடத்தப்பட இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு திங்கள்கிழமை (டிச.5) கூட்டியுள்ளது.
● ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
● இந்த உச்சிமாநாட்டுக்காக, நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான முன்னேற்பாடு கூட்டங்களை மத்திய அரசு நடத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, இதில் முன்வைக்கப்படும் தீா்மானங்களை இறுதி செய்வதற்கான ஜி20 நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
● இதற்கிடையே, ஜி20 உச்சி மாநாட்டுக்கான இந்தியாவின் உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் திங்கள்கிழமை கூட்டியுள்ளது.
● இதில் பங்கேற்பதற்காக 40 அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி சாா்பில்அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் பங்கேற்க வாய்ப்புள்ளது.
5. நிகழாண்டில் இந்தியாவிடம் இருந்து தேயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ?
அ) ரஷ்யா
ஆ) ஐக்கிய அரபு அமீரகம்
இ) அமெரிக்கா
ஈ) சீனா
விடை : (அ) ரஷ்யா
● கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 28.59 மில்லியன் கிலோ தேயிலையை இந்தியாவிடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 159 சதவீதம் அதிகமாகும்.
●ரஷியா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் கூட்டமைப்பு இந்தப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நாடுகளுக்கு கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரை 38.06 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
● இதற்கு முன்பு ஈரான், இராக் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து அதிக தேயிலை இறக்குமதி செய்து வந்தனா். ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், இராக்கில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்னைகள் காரணமாக அந்நாடுகளுக்கான ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டது.
● இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதி கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரை 165.58 மில்லியன் கிலோவாக உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 142.55 மில்லியன் கிலோவாக இருந்தது.
● கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. உலக அளவில் தேயிலை நுகா்வு அதிகம் உள்ள நாடாக சீனா திகழ்கிறது. அங்கும் இந்திய தேயிலையை ஏற்றுமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
III. விளையாட்டு நிகழ்வுகள்
6. ஆசிய ஜூனியர் பாட்மின்டன் போட்டியில் (2022) இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றுள்ள பதக்கங்கள் ?
அ) 5
ஆ) 6
இ) 10
ஈ) 13
விடை : (அ) 5
● போட்டி நடைபெற்ற இடம் : தாய்லாந்து
● வெள்ளி வென்றவர்கள் :-
¤ மகளிர் (17 வயது ) ஒற்றையர் பிரிவு - உனாட்டி ஹூடா
¤ ஆடவர் (15 வயது ) ஒற்றையர் பிரிவு - அனீஷ் தொப்பானி
¤ ஆடவர் இரட்டையர் பிரிவு - அர்ஷ் முகமது , சன்ஸ்கார் சரஸ்வத்
● வெண்கலம் வென்றவர்கள் :-
¤ ஆடவர் (15 வயது ) ஒற்றையர் பிரிவு - ஞானதத்து
¤ ஆடவர் இரட்டையர் பிரிவு - ஜோர்ன் ஜெய்சன், ஆதிஷ் ஸ்ரீநிவாஸ்.
IV. முக்கிய தினங்கள்
7. World Soil Day 2022 ---------
● Ans : December 05
● Theme : Soils : Where Food begins
No comments:
Post a Comment