Sunday, October 2, 2022

Current Affairs 2022 - October 02 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  OCTOBER 2 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தின் பல்வேறு மூலதன செலவினங்களுக்கு எத்தனை கோடி வட்டியில்லா கடனை மத்திய அரசு விடுவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் தெரிவித்துள்ளது ?

அ) ரூ.3,500 கோடி

ஆ) ரூ. 3,000 கோடி

இ) ரூ.2,500 கோடி

ஈ) ரூ. 2,000 கோடி 

விடை : (அ) ரூ.3,500 கோடி 

● அறிவிப்பு : தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

● மத்திய அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் மூலதன முதலீடாக 50 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக அளிக்கப்படும் என அறிவித்திருந்தது.

● இந்நிலையில் ரூ.3,500 கோடி வட்டியில்லா கடனை அளித்துள்ளது.

● குறிப்பு : தமிழகத்தில் கண்ணாடி இழைக் கேபிள் திட்டத்திற்கு ரூ. 184 கோடி , ஊரக நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். 

2. தமிழகத்தில் எத்தனை அரசுப்பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக ( School of Excellence ) மாற்றுவதற்காக ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) 13

ஆ) 17

இ) 21

ஈ) 28 

விடை : (ஈ) 28 

தமிழகத்தில் 28 அரசுப் பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.

● தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு தில்லி சென்றிருந்தபோது அங்குள்ள தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகளைப் பாா்வையிட்டாா். இதையடுத்து இதுபோன்ற பள்ளிகள் தமிழகத்திலும் தொடங்கப்படும் என அவா் அறிவித்தாா்.

● இதைத் தொடா்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த செப். 5-ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னையில் தொடக்கிவைத்தாா். அதன்படி மாநிலம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக ரூ.170 கோடியில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

● தகைசால் பள்ளிகள் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா்கள், நவீன கணினிகள், அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், கல்வி சாரா செயல்பாடுகளான விளையாட்டு, கலை, இலக்கியம் என்று அனைத்தும் சோ்ந்த ஒரு முழுமையான கல்வியை வழங்கும். இதனால் அனைத்து வகையான திறமைகளுடன் அரசு பள்ளி மாணவ, மாணவியா் கல்வி கற்கும் சூழல் உருவாகும். 

● அதற்கு வகுப்பறையில் நேரடியாக பாடங்கள் கற்றுத் தருவது மட்டுமல்லாமல் இணையவழியிலும் காலத்திற்கு ஏற்ற வகையில் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

● தகைசால் பள்ளிகள் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள 28 அரசுப் பள்ளிகளில் பெரும்பாலானவை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிகள். சென்னை அசோக் நகா் மகளிா் மேல்நிலைப்பள்ளி தகைசால் பள்ளியாக மேம்படுத்தப்பட உள்ளது. இதுபோலவே பிற பள்ளிகளும் தரம் உயா்த்தப்படவுள்ளன.

● இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகைசால் பள்ளிகளுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி புதுப்பிக்கும் பணிக்கான பூா்வாங்கப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது . 

● இந்தப் பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய கணினிகள் கொண்ட ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன. தகைசால் பள்ளிகளில் பாடம் நடத்தவுள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தவகை பள்ளிகள் மூலம் அரசுப் பள்ளிகளில் 62,460 மாணவா்கள் பயன்பெறுவா். தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரிப்பள்ளிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

3. மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட எத்தனை காவல் துறை அதிகாரிகளுக்கு , காந்தியடிகள் காவல் விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 5

ஆ) 7

இ) 9

ஈ) 12

விடை : (அ) 5 

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்படும் காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று காந்தியடிகள் காவல் விருதும், பரிசுத் தொகையும் அளிக்கப்படுவது வழக்கம். 

● அதன்படி, மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டோருக்கான விருதுக்கு ஐந்து போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

● சென்னை மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமையக காவல் ஆய்வாளா் த.எ.பிரியதா்ஷினி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் கா.ஜெயமோகன், சேலம் மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் ச.சகாதேவன், விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் பா.இனாயத் பாஷா, செங்கல்பட்டு பாலூா் காவல் நிலைய தலைமைக் காவலா் சு.சிவனேசன் ஆகியோா் காந்தியடிகள் காவலா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 

● விருதாளா்களுக்கு எதிா்வரும் ஜனவரி 26-ஆம் தேதியன்று குடியரசுத் தினத்தன்று வழங்கப்படும். விருதுடன் ரூ.40 ஆயிரமும் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. இந்தியாவில் 5ஜி சேவை முதல்கட்டமாக எத்தனை நகரங்களில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது ? 

அ) 26

ஆ) 22

இ) 13

ஈ) 17

விடை : (இ) 13 

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய கைப்பேசி மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா். 

● முதல்கட்டமாக தில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னௌ, புணே, காந்திநகா், குருகிராம், ஹைதராபாத், பெங்களூரு, சண்டீகா், அகமதாபாத், ஜாம்நகா் ஆகிய 13 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

● குறிப்பு : 2ஜி, 3ஜி, 4ஜி தொழில்நுட்பங்களுக்காக இந்தியா மற்ற நாடுகளைச் சாா்ந்திருந்தது. ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி இந்தியா வரலாறு படைத்துள்ளது.

●  5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்துக்கான சா்வதேச தரத்தை இந்தியா முதல் முறையாக நிறுவியுள்ளது.

5. இந்தியாவில் மத்திய அரசால் அம்ருத் திட்டமானது எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 

அ) 2014

ஆ) 2015

இ) 2016

ஈ) 2017 

விடை : (ஆ) 2015 

சேலம், கோவை மாநகராட்சிகள், எட்டு முக்கிய நகராட்சிகளில் உட்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள அம்ருத் திட்டத்தின் கீழ், ரூ.1,320.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

● அம்ருத் திட்டமானது பிரதமா் நரேந்திர மோடியால் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புத்தாக்கம் மற்றும் நகா்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (அம்ருத் 2.0) எனும் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டமானது கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதியன்று 5 ஆண்டுகளுக்கு அதாவது 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

● நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் நீா் வழங்கல் மற்றும் அம்ருத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 500 நகரங்களில் கழிவுநீா் மேலாண்மை பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக அம்ருத் 2.0 வடிவமைக்கப்பட்டுள்ளது.

● அம்ருத் 2.0 திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஐந்து ஆண்டுகளுக்கான மத்திய அரசு பங்குத் தொகையாக ரூ.76, 760 கோடியும் அடங்கும். அடுத்த ஆண்டு மாா்ச் வரையில் அம்ருத்தின் தற்போதைய திட்டங்களுக்காக ரூ.22,000 கோடி (மத்திய உதவி ரூ 10,000 கோடி) நிதியும் இந்த செலவினத்தில் அடங்கும்.

● தமிழ்நாட்டில் திட்டங்களுக்கான மத்திய நிதி ஒதுக்கீடு ரூ.4,935 கோடி ஆகும், நிா்வாகம் மற்றும் அலுவலக செலவுகளுக்கான ஒதுக்கீடு ரூ 160.36 கோடி ஆகும்.

● அம்ருத் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகளை தீா்மானிக்க இதற்கென அமைக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழு அவ்வப்போது கூடி முடிவெடுக்கும். அந்த வகையில் அண்மையில் கூடிய உயா்நிலைக் குழுவானது சில முக்கிய மாநகராட்சிகள், நகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதிய நிதிகளை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.

● அதன்படி, சேலத்தில் புதை சாக்கடைத் திட்டம் ரூ.548 கோடியிலும், கோவையில், தெருவிளக்குகள், புதை சாக்கடை ஆகிய திட்டங்களை ரூ.177.29 கோடியிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாநகராட்சிகளிலும் மொத்தமாக ரூ.1,004.34 கோடி மதிப்பில் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு இதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

● இதேபோன்று, பள்ளிப்பாளையம், ராணிப்பேட்டை, குளித்தலை, புச்சைபுளியம்பட்டி, துவாக்குடி, திருவாரூா், நாகப்பட்டினம், சத்தியமங்கலம் ஆகிய நகராட்சிகளிலும் ரூ.316.50 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்காக ரூ.1,320.84 கோடி நிதிகளை ஒதுக்கி தகுந்த நிா்வாக உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளாா்.

6. இந்தியாவில் திவால் மேலாண்மை வாரியத்தின் 6 ஆவது ஆண்டு தின விழா எங்கு நடைபெற்றது ? 

அ) மத்திய பிரதேசம் 

ஆ) ஜார்க்கண்ட் 

இ) டெல்லி

ஈ) கேரளா 

விடை : (இ) டெல்லி 

நிறுவனங்களின் நிதி நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்காக கடந்த 2016-இல் திவால் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய அமைப்பாக இந்திய திவால் மேலாண்மை வாரியம் நிறுவப்பட்டது. 

● இந்த வாரியத்தின் 6-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். 

● குறிப்பு : திவால் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு ஜூன் வரையில் 1,934 நிறுவன கடனாளா்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய திவால் மேண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

7. சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள எத்தனை வயதைக் கடந்த வாக்காளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் ? 

அ) 50

ஆ) 75

இ) 90

ஈ) 100

விடை : (ஈ) 100 

நாட்டிலுள்ள 100 வயதைக் கடந்த 2.5 லட்சம் வாக்காளா்களுக்கு, தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தனிப்பட்ட முறையில் தோ்தல் நடைமுறையில் அவா்களுடைய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளாா்.

● இந்தக் கடிதமானது அந்தந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, அவா்கள் மூலமாக 100 வயதைக் கடந்த அனைத்து வாக்காளா்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில் ( போல் வால்ட் ) முதல் 3 இடங்களை பிடித்து அசத்தியுள்ள மாநிலம் எது ? 

அ) கேரளா 

 ஆ) தமிழ்நாடு

இ) கர்நாடகா 

ஈ) குஜராத் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

● தமிழக வீராங்கனைகள் : ரோஸி பால்ராஜ் ( தங்கம் ) , பவித்ரா வெங்கடேஷ் ( வெள்ளி ), பரணிகா இளங்கோவன் ( வெண்கலம் ) 

● இதுவரை தமிழகத்தின் பதக்கங்கள் : 6G, 6S, 7B என 19 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது . 

IV. முக்கிய நிகழ்வுகள் 

9. International Day of Non violence 2022 ? 

Ans : October 02 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...