அ) அபிலாஷா பாரக்
ஆ) ஆஷா சிங்
இ) அனிஷா பேகம்
ஈ) ரோகினி குப்தா
2. தமிழகத்தில் எத்தனை கோடி மதிப்பிலான மத்திய அரசின் 5 பதிய திட்டங்களை பிரதமர் மோடி (may 26 ) தொடங்கி வைக்கிறார் ?
அ) ₹28,000
ஆ) ₹29,000
இ) ₹35,000
ஈ) 50,000
3. ஓய்வூதியதாரருக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எத்தனை ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஏழு
4. இந்தியாவின் எந்த மாநில அரசு தீயை அணைக்க ரோபோக்களை பயன்படுத்தும் தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளது ?
அ) குஜராத்
ஆ) டெல்லி
இ) தமிழ்நாடு
ஈ) கேரளா
5. உலக விமான சக்தி குறியீட்டில் மொத்த போர் வலிமையின் அடிப்படையில் இந்திய விமானப்படை (IAF) பிடித்துள்ள இடம் ?
அ) முதலாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) நான்காவது
6. செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள முதல் இந்திய வீரர் ?
அ) அனீஷ் கிரி
ஆ) கார்ல்சென்
இ) ஆர். பிரக்ஞானந்தா
ஈ) சங்க்கரன்
7. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய தரவரிசையில் ஆல்ரவுண்டர்கள் பிரிவில் முதலிடத்தில் உள்ளவர் ?
அ) ரவீந்திர ஜடேஜா
ஆ) ரவிச்சந்திரன் அஸ்வின்
இ) ஜஸ்பிரீத் புத்ரா
ஈ) கே.எல்.ராகுல்
8. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் 700 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் யார் ?
அ) ஷீகர் தவான்
ஆ) டேவிட் வார்னர்
இ) விராட் கோலி
ஈ) கே.எல். ராகுல்
9. National Sorry Day ( தேசிய மன்னிப்பு நாள் ) 2022 ?
அ) மே 25
ஆ) மே 24
இ) மே 27
ஈ) மே 26
விடைகளும் / விளக்கமும்
1. (அ) அபிலாஷா பாரக்
¤ இந்திய போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
¤ இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் .
¤ கடந்த 2018 , செப்டம்பர் மாதம் விமானப் படையில் சேர்ந்தார்.
2. (ஆ) ₹29,000 கோடி
¤ தொடங்கப்படவுள்ள 5 திட்டங்கள்
1) மதுரை - தேனி( 75 கி.மீ ) இடையேயான அகல ரயில் பாதை
மதிப்பு : ₹500 கோடி.
2) சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு (30 கி.மீ) மூன்றாவது ரயில் பாதை
மதிப்பு : ₹590 கோடி.
3) நிறைவேற்றப்பட்டுள்ள 115 கி.மீ நீளமுள்ள எண்ணூர் - செங்கல்பட்டு பிரிவு ( ₹850 கோடியில் ) மற்றும்
4) 271 கி.மீ. நீளமுள்ள திருவள்ளூர் - பெங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள் .
5) பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ₹116 கோடி மதிப்பீட்டில் சென்னையில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை திறந்து வைக்கிறார்.
¤ மேலும் : ₹28,500 மதிப்பீட்டில் 6 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் .
3. (இ) நான்கு
¤ அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டமானது மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஜூலை 01,2022 - ஜூன் 30, 2026 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
4. (ஆ) டெல்லி
¤ நோக்கம் : அதிக அணுகளைக் கொண்டிருக்கும் (ம) குறுகிய பாதைகளில் செல்லவும் , மனிதர்களால் அணுக முடியாத இடங்களை அடையும் (ம) மக்களுக்கு மிகவும் ஆபத்தான பணிகளைச் செய்யவும் முடியும் .
5. (இ) மூன்றாவது
¤ இந்திய விமானப்படை (IAF) தற்போது 1,645 மொத்த விமானங்களை அதன் செயலில் உள்ள விமானப் பட்டியலில் கொண்டுள்ளது.
6. (இ) ஆர். பிரக்ஞானந்தா
¤ இப்போட்டியில் இந்த நிலைக்கு முன்னேறிய முதல் இந்தியர்.
¤ ஆர். பிரக்ஞானந்தா , தமிழ்நாடு.
¤ இவர் 52 வது (2018) கிராண்ட்மாஸ்டர் ஆவார்.
7. (அ) ரவீந்திர ஜடேஜா
¤ ஆல்ரவுண்டர்கள் பிரிவு ( இந்திய அணி ) :
2nd - ரவிச்சந்திரன் அஸ்வின்
¤ பௌலர்கள் பிரிவு ( இந்திய அணி ) :
அஸ்வின் - 2nd
ஜஸ்பிரீத் பும்ரா - 3rd
¤ பேட்டர்கள் பிரிவு (இந்திய அணி):
ரோஹித் சர்மா - 8 வது
விராட் கோலி - 10 வது
8. (அ) ஷீகர் தவான்
¤ பஞ்சாப் அணியின் வீரர்( 701 பவுண்டரிகள் ) .
¤ அவரை தொடர்ந்து - டேவிட் வார்னர் ( 577 ) & விராட் கோலி ( 576 பவுண்டரிகள் ) .
9. (ஈ) மே 26
¤ 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் பூர்வீக மக்களின சிறுவர்களையும் குழந்தைகளையும் பெற்றோரிடமிருந்து பிரித்துவிட வழி செய்தது. அந்த சிறுவர்களும் குழந்தைகளும் திருடப்பட்ட தலைமுறையினர் என்று அறியப்படுகிறார்கள். அவர்களை நினைவு கூரவும் பூர்வீக மக்கள் தவறாக நடத்தப்பட்டதை உணர்த்தவும், 1998 ஆம் ஆண்டு முதல் மே 26ம் நாள் தேசிய மன்னிப்பு தினமாக அவதானிக்கப்படுகிறது.
அவர்களது வீட்டுக்குத் திரும்பவைப்போம் (Bringing Them Home) என்ற அறிக்கை, 1997ம் ஆண்டு மே 26ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. திருடப்பட்ட தலைமுறைகளுக்கும் பூர்வீக மற்றும் டோர்ரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு சமூகங்களுக்கும் மற்றைய ஆஸ்திரேலியர்கள் மத்தியிலும் மே 26ம் நாளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பெருகிக் கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment