Sunday, May 22, 2022

TNPSC DAILY CURRENT AFFAIRS - MAY 22 2022

1. இந்தியாவின் எந்த மாநிலம் பேருந்து நிலையம் , சந்தை வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் துணிப்பை (மஞ்சப்பை) வழங்கும் இயந்திரங்களை 
நிறுவ திட்டமிட்டுள்ளது ? 

அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) பஞ்சாப்
ஈ) ஆந்திர பிரதேசம் 

2. தமிழகத்தில் எங்கு புதிய வகை கரோனா வைரஸான பிஏ-4 ன் (BA-4) முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது ?

அ) செங்கல்பட்டு 
ஆ) சேலம்
இ) திருச்சி
ஈ) மதுரை 

3. தமிழகத்தில் எங்கு 16 வது தேசிய நெல் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது ?

அ) ஆத்தூர்
ஆ) தருமபுரி
இ) செங்கல்பட்டு
ஈ) திருத்துறைப்பூண்டி

4. பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி 2022 ல் இந்தியா மொத்தமாக வென்றுள்ள பதக்கங்கள் ?

அ) 25
ஆ) 23 
இ) 31 
 ஈ) 41 

5. தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை ( 2 ம் நிலை ) போட்டி 2022 ல் காம்பவுண்ட் ஆடவர் பிரிவில் இந்திய வென்றுள்ள பதக்கம் ?

அ) ஏதுமில்லை 
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) தங்கம் 

6. சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை நாள் ( International Day for Biological Diversity ) என்று அனுசரிக்கப்படுகிறது ? 
 
அ) மே 21
ஆ) மே 23
இ) மே 22
ஈ) மே 20 

விடைகளும் / விளக்கமும் 

1. (ஆ) தமிழ்நாடு 

▪︎தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளின் உபயோகத்தை தடுக்கும் வகையில் பேருந்து நிலையம் , சந்தை வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் துணிப்பை (மஞ்சப்பை) வழங்கும் இயந்திரங்களை நிறுவ தமிழக சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது.
▪︎ நோக்கம் : மக்களுக்கு எளிதாக துணிப்பைகள் கிடைக்கும் வகையில் நிறுவப்படவுள்ளது .
ஒரு பைக்கு எவ்வளவு தொகை என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
 குறிப்பு : மக்கள் அன்றாட பயன்படுத்தும் நெகிழிப் பைகள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம்  அண்மையில் தொடங்கப்பட்டது.

2. (அ) செங்கல்பட்டு 

▪︎ செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது ( அவர்கள் தற்போது நலமாக உள்ளனர் ) 
▪︎ உலகம் முழுவதும் பிஏ-1 முதல் பிஏ-7 வரையிலான கரோனா வைரஸ்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.
▪︎ அதில் பிஏ-1 - பிஏ-2 வரை வைரஸ்கள் தமிழகத்தில் பரவி வருகின்றது . 
▪︎ அறிவிப்பு : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் .

3. (ஈ) திருத்துறைப்பூண்டி

▪︎ 16 வது ஆண்டாக நடைபெறும் 2 நாள் தேசிய நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மே 21 அன்று தொடங்கப்பட்டது.
▪︎ தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்து, பின்னர் வழக்கத்திலிருந்து மறைந்துபோன நெல் ரகங்களை மீட்டுப் பாதுகாக்கவும் , விவசாயிகளிடத்தில் பரவலாக்கவும் இவ்விழா நடைபெறுகிறது .
▪︎ விருதுகள் : 
சிறந்த விவசாயிகளுக்கு மறைந்த நம்மாழ்வார் , நெல் ஜெயராமன் ஆகியோரின் பெயர்களின் விருதுகள் வழங்கப்பட்டது .
பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைநெல்களும் வழங்கப்பட்டது.
மேலும் இதில் பாரம்பரிய நெல் ரகங்கள் , அரிசி வகைகள் (ம) பல்வேறு கைவினைப் பொருட்கள் , வேளாண் இயந்திரங்கள் அடங்கிய கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
▪︎ திருவிழாவை ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் நடத்தியுள்ளது.

4. (ஆ) 23 
▪︎ பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி 2022 
▪︎ பதக்கங்களின் பட்டியல் : 
7 தங்கம் , 3 வெள்ளி , 13 வெண்கலம்
▪︎ இதுவரை இந்தியர்கள் மொத்தமாக வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது.

5. (ஈ) தங்கம் 

 ▪︎ காம்பவுண்ட் ஆடவர் அணி பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா , அமன் சைனி , ரஜத்சௌஹான் அணி தங்கம் வென்றுள்ளது.
▪︎ மொத்தம் ஆறு பதக்கங்கள் : 
காம்பவுண்ட் பிரிவு : 1G , 2S , 2B
ரீகர்வ் பிரிவு : 1B
குறிப்பு : இதே அணி முதல்நிலை போட்டியிலும் தங்கம் வென்றுள்ளது.

6. (இ) மே 22 

▪︎ சில மனித நடவடிக்கைகள் காரணமாக உயிரியல் பன்முகத்தன்மையில் கணிசமான குறைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் மே 22 அன்று உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினத்தை கொண்டாடுகிறது.
▪︎ Theme : Building a Shared Future for all life .

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...