தமிழ்நாட்டில் சீர்திருத்தங்கள்
வட இந்திய சீர்திருத்த இயக்கங்கள் தமிழகத்தின் மீது தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின.
பிரம்ம சமாஜமும் ஆரிய சமாஜமும் தமிழகத்தில் கிளைகளைப் பெற்றிருந்தன.
கேசவ சந்திர சென் சென்னைக்கு வருகை தந்து உரையாற்றினார். ஆனால் தமிழகம் தனக்கே உரித்தான சீர்திருத்த இயக்கங்களைச் சந்தித்தது.
இராமலிங்க சுவாமிகள் (1823-1874)
வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் அல்லது இராமலிங்க அடிகள் சிதம்பரத்திற்கு அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் 1823ஆம் ஆண்டு பிறந்தார்.
19ஆம் ஆண்டு தமிழகத்தில் தோன்றிய சமூக-சமய சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
தன் இளமைக் காலத்தில் சென்னையில் வாழ்ந்தார்.
முறையான கல்வியைப் பெறாத அவர் பெரும் புலமையை வெளிப்படுத்தினார்.
தேவார, திருவாசகப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர் மனம் உருகும் பாடல்களைச் சொந்தமாக இயற்றினார்.
இவர் ஆன்மீகத்தில் கொண்ட பற்று காரணமாக அவரது பாடல்களில் சமுதாய சீர்திருத்தங்கள் மற்றும் சமய உணர்வுகள் இரண்டறக் கலந்திருந்தன.
ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
இராமலிங்க அடிகள், தமிழ் மக்களிடையே சமய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தினார். கடவுள் வழிகாட்டுதலால் மட்டுமே சாதி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று எடுத்துரைத்ததோடு, ‘இறைவன் ஜோதி வடிவானவன்” என்றும் அருட்பெரும் ஜோதியாக” இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
அவருடைய காலத்தில் சைவ சமயமானது திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
இராமலிங்க அடிகளின் பாடல்கள் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டிருந்தன.
தன்னை பின்பற்றுபவர்களை ஒழுங்கமைக்கவும், அது முற்றிலும் மதச்சார்பற்றதாக இருப்பதை உறுதிசெய்யவும் 1872 ஆம் ஆண்டில் அவர் சத்ய ஞான சபையை (உண்மையான ஞான மன்றத்தின் மண்டபம்) நிறுவினார்.
இதனால் வைதீக சைவ சமயத்தினர் இவர்பால் வெறுப்புக் கொண்டனர் இதனால் நிறுவனபடுத்தப்பட்டிருந்த சைவ அமைப்புகளோடு அவர் மோதல் துவங்கியது. இவருடைய சீடர்கள் அவருடைய பாடல்களைத் திரட்டித் ’திருவருட்பா’ (அருளின் பாடல்கள்) எனும் பெயரில் 1867இல் வெளியிட்டபோது மோதல் உச்சத்தை எட்டியது.
இலங்கையைச் சேர்ந்த வைதீக சைவர்கள் சீர்திருத்தவாதி ஆறுமுக நாவலரின் தலைமையில் இதைத் தெய்வநிந்தனை எனக் கூறி இவருக்கு எதிராக கட்டுரை எழுதும் போரில் ஈடுபட்டனர்.
அடிகளார் பிறப்பினால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்தார். சாதி- சமூக வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்று குறிப்பிட்டதோடு அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்றும் பாடுபட்டார்.
வள்ளலார் அன்பு வழியில் ஆன்மீகத்தை அடையாலம் என்ற உறுதியான எண்ணம் கொண்டிருந்தார்.
ஆகவே, மனிதர்களிடத்து மட்டுமன்றி தாவரங்கள், புழு, பூச்சிகள் மற்றும் விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினார். இதனையே ‘ஜீவ காருண்யம்” (உயிர்களிடத்து அன்பு செலுத்துதல்) என்று அழைக்கிறோம்.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” எனக் கூறிய அடிகளார், தான் உயிர்களிடத்து எவ்வாறு அன்பு கொண்டிருந்தார் என்பதை அறிகிறோம்.
சைவ உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பசி மற்றும் வறுமையே சமுதாயத்தின் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் என வள்ளலார் நம்பினார்.
ஏழைக்கு உணவு அளிப்பதே சிறந்த வழிபாடு என உறுதியாக நம்பினார்.
1866இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
சத்திய தருமசாலையின் தொடக்க நாளன்று அடுப்பிற்கு தீமூட்டி, இந்தத் தீ எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கட்டும். சத்திய தருமசாலையின் தொடக்க நாளில், அவர் பற்ற வைத்த நெருப்பு இன்றும் உயிரோடு ஏழைகளுக்கு உணவளித்து கொண்டு இருக்கிறது.
அப்பொழுதுதான் ஏழைகளுக்கு எப்பொழுதும் உணவு அளிக்க முடியும் என உறுதியுடன் கூறினார். இவர் மேற்கொண்ட உறுதி மொழிக்கு ஏற்றவண்ணம் ஆண்டு முழுவதும் சாதி-சமய வேறுபாடின்றி அனைவருக்கும் இன்றும் உணவளித்து வருகிறது
‘மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி” என்பது வள்ளலாரின் போதனைகளில் மிக முக்கியமானதாகும்.
கடவுள், கருணை மற்றும் அறிவு வடிவமாகத் திகழ்கின்றார்.
ஆகவே கடவுளை அடையும் வழி உயிர்களிடத்து காட்டும் கருணையும், இரக்கமும் ஆகும் என்று குறிப்பிட்டார்
அவருடைய எழுத்துக்கள் உலகளாவிய சிந்தனைகளைத் தூண்டி சைவசமயத்துக்குள் இருக்கும் பிரிவினைகளைமதிப்பிழக்கச் செய்தன.
பௌத்தத்தின் மீட்டுருவாக்கமும் அயோத்திதாசப் பண்டிதரும்
பௌத்தம் தமிழ்நாட்டில் இரண்டாவது ஆயிரம் ஆண்டின் தொடக்கத்திலேயே முற்றிலுமாக துடைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பௌத்தம் புத்துயிர்பெறத் துவங்கியது.
சீவகசிந்தாமணி (1887), மணிமேகலை (1898) ஆகிய இரண்டும் முழுமையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த பின்னணியில் மிக முக்கியமான ஆளுமை அயோத்திதாச பண்டிதராவார்.
பண்டிதர் அயோத்தி தாசர் (1845-1914) ஒரு தீவிரத் தமிழ்அறிஞரும் சித்தமருத்துவரும் பத்திரிக்கையாளரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார்.
சென்னையில் பிறந்த அவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். சரளமாகப்பேசக் கூடியவர்.
சமூக நீதிக்காக இயக்கம் நடத்திய அவர்இ சாதியத்தின் கொடிய பிடியிலிருந்து ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெறப் பாடுபட்டார்.
1890களில் ஆதிதிராவிடர்களிடையே இயக்கத்தைத் தொடங்கிய அவர் ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்றும் வாதிட்டார்.
தனது கருத்துக்களை மெய்ப்பிப்பதற்காகத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களையும் பிறவற்றையும் மறுவாசிப்பு செய்தார்.
மக்கள் பௌத்தமதத்திற்கு மாறுவதை அவர் ஊக்குவித்தார்.
பிரம்ம ஞான சபையை நிறுவியவர்களில் ஒருவரான கர்னல் H.S. ஆல்காட் ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாக 1898இல் இலங்கை சென்ற அவர் அங்கே பௌத்தத்தைத் தழுவினார்.
அதே ஆண்டில் பௌத்த மதத்தின் வழியே பகுத்தறிவின் அடிப்படையிலான சமயத்தத்துவத்தைக் கட்டமைப்பதற்காக “சாக்கிய பௌத்த சங்கம்” எனும் அமைப்பை சென்னையில் நிறுவினார்.
அவர் கொள்கையை வட தமிழகப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்பற்றினர். கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் இவரது கொள்கையைப் பின்பற்றினர்.
இவ்வியக்கத்தில் சிங்காரவேலரும் லட்சுமி நரசுவும் முக்கியப்பங்கு வகித்தனர்.
சாதிகளற்ற அடையாளத்தை நிறுவ முயன்ற அவர் சாதிய மேலாதிக்கத்திற்கும் தீண்டாமைக்கும் எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினார்.
கல்வியை வலிமை பெறுவதற்கான கருவியாகக் கருதிய அவர் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கென பல பள்ளிகள் உருவாக்கப்படுவதற்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தார்.
ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர் அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை நிறுவினார்.
1882இல் அயோத்தி தாசரும் ஜான் ரத்தினம் என்பவரும் “திராவிடர்க் கழகம்” எனும் அமைப்பை நிறுவினர். மேலும் 1885இல் “திராவிட பாண்டியன்” எனும் இதழையும் தொடங்கினார்.
“திராவிட மகாஜனசபை” என்ற அமைப்பை 1891இல் நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்.
அயோத்திதாச பண்டிதர் 1907 முதல் ஒரு பைசாத் தமிழன் (பின்னர் தமிழன்) என்ற பெயரில் வாராந்திரப் பத்திரிகை ஒன்றை தொடங்கி 1914 தான் இயற்கை எய்தும் காலம் வரை நடத்தினார்.

No comments:
Post a Comment