Friday, June 17, 2022

Current Affairs 2022 - June 17 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

1.தமிழகத்தில் புதிதாக எத்தனை அனைத்து மகளிர் நிலையங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்?

அ) 20

ஆ) 31

இ) 13

ஈ) 25 


2. கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த புகார்களை விசாரிக்க நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள்,  கல்லூரிகளில் உயர்நிலைக்குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள அமைப்பு / அமைச்சகம் எது ? 

அ) மத்திய கல்வித்துறை அமைச்சகம்

ஆ) பல்கலைக்கழக மானியக்குழு ( யுஜிசி )

இ) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் 

ஈ) அனைத்தும்


3. சரக்கு - சேவைகள் வரி ( ஜிஎஸ்டி ) கவுன்சிலின் எத்தனையாவது கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெறவுள்ளது ? 

அ) 31

ஆ) 45

இ) 47

ஈ) 53 


4. பிரிக்ஸ் ( BRICS ) கூட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற எத்தனையாவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது ? 

அ) 13 ஆவது 

ஆ) 31 ஆவது

இ) 17 ஆவது 

ஈ) 12 ஆவது 


5. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் இராணுவ வீரர்களைச் சேர்க்கும் திட்டத்தின் பெயர் என்ன ? 

அ) அக்னிபத் 

ஆ) அக்னிதேவி 

இ) தேவிமாதா

ஈ) அக்னிகங்கா 


6. தமிழகத்தில் நிகழாண்டுக்கான (2022) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் பின்வரும் எந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ? 

அ) கோவை 

ஆ) தஞ்சாவூர்

இ) கரூர்

ஈ) அனைத்தும் 


7. இந்தியாவும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பும் ( ஆசியான் ), இருதரப்பின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டிற்கு தலைமையேற்றுள்ளவர்கள் ? 

அ) எஸ். ஜெய்சங்கர் 

ஆ) நரேந்திர மோடி 

இ) விவியன் பாலகிருஷ்ணன்

ஈ) அ & இ 


8. நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி எத்தனை சதவீதம் குறையும் என மத்திய அரசால் மதிப்பிடப்பட்டுள்ளது ? 

அ) 11%

ஆ) 13%

இ) 31%

ஈ) 17%


9. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக எத்தனை இந்திய வீரர்கள் / வீராங்கனைகள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 31

ஆ)13

இ) 37

ஈ) 49 


10. பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்பதற்கான உலக நாள் (World Day to Combat Desertification & Drought ) 2022 ?

அ) ஜூன் 15

ஆ) ஜூன் 16

இ) ஜூன் 14

ஈ) ஜூன் 17 


விடைகளும் (ம)  விளக்கமும் : 


1.அ) 20 

● சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பணிகளில் மகளிா் காவல் துறையினா் திறம்பட செயல்பட்டு வருகின்றனா். இப்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிா் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

● அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட வளசரவாக்கம், தாம்பரம் மாநகரம் சேலையூா், வண்டலூா், ஆவடி மாநகரம் எஸ்.ஆா்.எம்.சி., வேலூா் மாவட்டம் காட்பாடி, திருவண்ணாமலை, கடலூா் மாவட்டம் திட்டக்குடி, கரூா், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம், திண்டுக்கல், தேனி மாவட்டம் பெரியகுளம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி, தென்காசி மாவட்டம் புளியங்குடி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிா் காவல் நிலையங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா்.


2. (ஆ) யுஜிசி 

● இது குறித்து பல்கலைக் கழக மானியக்குழு துணைவேந்தர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘ நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.விரைவில் முதலாமாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

● இந்நிலையில் உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும், பாலியல் புகார்கள் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க உயர்மட்ட குழுவை உடனடியாக உருவாக்குவதில் தாமதம் கூடாது;தனி குழுவின் விவரங்களை பல்கலைக் கழக மானியக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

● ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அதை செயல்படுத்தவில்லை என பல்கலைக் கழக மானியக்குழுவிற்கு புகார் வந்ததன் காரணமாக மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


3. (இ) 47 

● 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 

● தலைமை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

● நடைபெறும் இடம் : ஸ்ரீநகர் - ஜூன் 28, 29 ல் நடைபெறவுள்ளது ( ஸ்ரீநகரில் நடைபெறுவது இரண்டாவது முறையாகும் ) 


4. (ஈ) 12 ஆவது 

● பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் பங்கேற்ற 12-ஆவது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. பல்வேறு துறைகளில் நிா்வாகத்தை மேம்படுத்துவது தொடா்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

● அடுத்த வாரம் சீனா நடத்தவுள்ள 14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டின்போது எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்பட கூட்டத்தின்போது நாடுகள் உறுதியேற்றன. பயங்கரவாத எதிா்ப்பு விவகாரங்கள் தொடா்பாக ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளில் ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவெடுக்கப்பட்டது.

● நடப்பாண்டுக்கான பிரிக்ஸ் கூட்டத்தை சீனா நடத்தவுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பாண்டு கூட்டம் காணொலி வாயிலாக ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.


5. (அ) அக்னிபத் 

● அக்னிபத் திட்டத்தின்கீழ் 10-ஆம் வகுப்பு முடித்து ராணுவத்தில் சேரும் வீரா்கள், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

● இதற்காக ராணுவ சேவையுடன் தொடா்புடைய பாடத் திட்டம் தயாரிக்கப்படும். அந்தச் சான்றிதழை வைத்து நாடு முழுவதும் வேலைவாய்ப்பும் பெறலாம்; உயா்கல்வியும் கற்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

● இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சான்றிதழுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்னிபத் திட்ட நடைமுறையில் இக்னோவுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

● இதற்கு பதிலளித்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்  வெளியிட்ட அறிக்கை விவரம்:

● அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவளிக்க மத்திய கல்வி அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகத்துக்கு உள்பட்ட தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) 10-ஆம் வகுப்பு முடித்த அக்னிபத் வீரா்கள், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி சான்றிதழ் பெறவும், உயா்கல்வி கற்கவும் சிறப்புத் திட்டத்தை வகுக்கும்.

● இதற்காக ராணுவ சேவையுடன் தொடா்புடைய பாடத் திட்டம் தயாரிக்கப்படும். அந்தச் சான்றிதழை வைத்து நாடு முழுவதும் வேலைவாய்ப்பும் பெறலாம்; உயா்கல்வியும் கற்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

● இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சான்றிதழுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்னிபத் திட்ட நடைமுறையில் இக்னோவுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


6. (ஈ) அனைத்தும் 

● தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்தியதில் முதலிடம் பிடித்த கோவை மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தங்கப் பதக்கம் வழங்கினாா்.

● மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

● இதில் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதலிடத்தைப் பிடித்த கோவை மாவட்டத்துக்கான தங்கப் பதக்கம், சான்றிதழை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பெற்றுகொண்டாா்.

● தஞ்சாவூா், கரூா் மாவட்டங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்து வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்றன.


7. (ஈ) அ & இ 

● இந்தியா-ஆசியான் கூட்டமைப்பு இடையேயான அதிகாரபூா்வ நல்லுறவு தொடங்கி 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இருதரப்பின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த இருநாள் மாநாட்டுக்கு வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும், சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணனும் தலைமையேற்றுள்ளனா்.

● இந்தியாவும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பும் (ஆசியான்) பரஸ்பர நலன்சாா்ந்த நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள உறுதியேற்றுள்ளன.


8. (அ) 11% 

● இதுகுறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவிப்பதாவது:

● உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீத பங்களிப்பு கோல் இந்தியா நிறுவனத்தை சாா்ந்தே உள்ளது. இந்த நிறுவனம், வெளிநாடுகளிலிருந்து 24.16 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு கடந்த வாரம் முதன்முறையாக ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து மேலும், 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஏதுவாக தலா இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளை அந்நிறுவனம் கோரியது.

● இருப்பினும், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி இறக்குமதியானது 11 சதவீதம் குறையும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.


9. (இ) 37 

● காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 37 போ் அடங்கிய தடகள அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

● இந்திய தடகள சம்மேளனம் அறிவித்திருக்கும் இந்த அணியில் 19 வீரா்கள், 18 வீராங்கனைகள் அடங்குவா். இதில், சமீபத்தில் 3000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் 8-ஆவது முறையாக தேசிய சாதனையை முறியடித்த அவினாஷ் சப்லே, 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரு முறை தேசிய சாதனை படைத்த ஜோதி யாராஜி, மும்முறை தாண்டுதலில் தேசிய சாதனையை முறியடித்த ஐஸ்வா்யா பாபு ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்களாவா்.

● அவா்களுடன் தமிழகத்தைச் சோ்ந்த ஓட்டப்பந்தய போட்டியாளா்கள் எஸ்.தனலட்சுமி, நாகநாதன் பாண்டி, மும்முறை தாண்டுதல் வீரா் பிரவீண் சித்ரவேல் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனா். தோ்வு செய்யப்பட்ட போட்டியாளா்களில், உடற்தகுதியை நிரூபிக்க வேண்டியவா்கள் மற்றும் வெளிநாடுகளில் போட்டியில் பங்கேற்றிருப்பவா்கள் தவிா்த்து இதர வீரா், வீராங்கனைகள் அமெரிக்காவில் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனா்.


10. (ஈ) ஜூன் 17 

Theme : Rising up from drought together.



1 comment:

  1. One of the best casinos I have have} performed at and method greater win quantities than another casino I’ve performed at.i reccomend rizk casino to everyone. The Mohegan Tribe owns and operates Connecticut’s Mohegan Sun, one of the largest casinos in North America. Mohegan Sun is planning a brand new} casino on this South Korean 우리카지노 island, to open in 2023.

    ReplyDelete

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...