1.காவல் துறையை நவீனப்படுத்த மாநிலங்களுக்கு எத்தனை கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது ?
அ) ரூ. 126.7 கோடி
ஆ) ரூ. 250 கோடி
இ) ரூ. 550 கோடி
ஈ) ரூ. 159 கோடி
2. தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த எத்தனை
மீனவ இளைஞர்களுக்கான உயிர் பாதுகாப்பு (ம) மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார் ?
அ) 500
ஆ) 1000
இ) 2000
ஈ) 5000
3. அண்மையில் திருத்தப்பட்ட முப்படை தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான விதிகளில் நியமிக்கப்படும் நபரின் வயது எத்தனைக்கு குறைவாக இருக்க வேண்டும் ?
அ) 65
ஆ) 70
இ) 62
ஈ) 55
4. உணவுப் பாதுகாப்பு துறைச் செயல்பாடுகளில் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் ?
அ) கேரளா
ஆ) ஆந்திர பிரதேசம்
இ) உத்தர பிரதேசம்
ஈ) தமிழ்நாடு
5. நிகழ் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது ?
அ) 7.5%
ஆ) 8.7%
இ) 6.9%
ஈ) 7.1%
6. இந்தியாவில் சிறுத்தைப் புலி இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக எந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டது ?
அ) 1947
ஆ) 1952
இ) 1994
ஈ) 1998
7. பிரான்ஸில் நடைபெறும் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை யார் ?
அ) எமிலியா பாப்ஸ்கா
ஆ) தீபிகா சிங்
இ) அவனி லெகாரா
ஈ) தனலெட்சுமி
8. இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தின் சென்னையில் எத்தனையாவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது ?
அ) 44 வது
ஆ) 55 வது
இ) 13 வது
ஈ) 31 வது
9. 180 நாடுகள் அடங்கிய நிகழாண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் ?
அ) 113
ஆ) 131
இ) 155
ஈ) 180
10. உலக பெருங்கடல் தினம் ( World Oceans Day ) 2022 ?
அ) ஜூன் 05
ஆ) ஜூன் 06
இ) ஜூன் 07
ஈ) ஜூன் 08
விடைகளும் / விளக்கமும்
1.(அ) ரூ. 126.7 கோடி
● காவலா் படைகளை நவீனமயமாக்கவும், பழுதடைந்த காவல் நிலையங்களை சீரமைக்கவும், காவல் நிலையங்களுக்குத் தேவையான நவீனக் கருவிகளை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காகவும் மாநிலங்களுக்கு ரூ. 126.7 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
● பாதுகாப்பு தொடா்பான செலவுகள் (எஸ்ஆா்இ) திட்டத்தின் கீழ், சத்தீஸ்கா் மாநிலத்துக்கு ரூ. 22.59 கோடியும், ஜாா்கண்ட் மாநிலத்துக்கு ரூ. 2.63 கோடியும், ஒடிஸாவுக்கு ரூ. 14.76 கோடியும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.
● இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:
உள்துறை அமைச்சகம் சாா்பில் மகாராஷ்டிரத்துக்கு சிறப்பு மத்திய உதவி (எஸ்சிஏ) திட்டத்தின் கீழ் ரூ. 7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
● சிறப்பு உள்கட்டமைப்பு திட்டத்தின் (எஸ்ஐஎஸ்) கீழ், பழுதடைந்த காவல் நிலையங்களைச் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஜாா்க்கண்டிற்கு ரூ. 8.39 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ. 1.61 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், காவல்துறையை நவீனமயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ. 69.215 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
● பயங்கரவாதச் செயல்களால் அல்லது பல்வேறு போராட்டங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை எஸ்ஆா்இ மூலமாக வழங்கவும், அதன் கீழ், இந்திய ரிசா்வ் பட்டாலியன்களின் செயல்பாட்டுக்காக மாநிலங்கள் செய்த செலவுகள், மத்திய காவல் படைகள், ராணுவம் போன்றவற்றின் போக்குவரத்துக்குச் செய்த செலவினங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெற முடியும் என்றாா்.
● எஸ்சிஏ முதல் எஸ்சிஎஸ்பி வரையிலான முக்கிய நோக்கம், பட்டியல் இன ஜாதியினருக்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும்.
● மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் அவா்களின் காவல் படைகளை முழுமையாக நவீனப்படுத்தி அதன் மூலம் மக்களுக்குத் தேவையான உதவிகளை உரியச் செய்கிறது. மேலும் காவல் படைகளை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மாநிலங்களின் வளங்களைக் காக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது.
● காவல் படைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் துணைத் திட்டமாக எஸ்ஐஎஸ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2. (ஆ) 1000
● தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(7.6.2022) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக காணொலிக் காட்சி வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் 25 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
3. ( இ) 62
● முப்படை தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
● ராணுவப் படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், வளங்களை முறையாகப் பயன்படுத்த வழிமுறைகளை வகுக்கவும் முப்படை தலைமைத் தளபதி பதவியை மத்திய அரசு உருவாக்கியது. முப்படைகளைச் சோ்ந்த வீரா்களும் ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்கும் வகையிலான நடைமுறைகளை உருவாக்குவது தொடா்பாக ஆராயும் பொறுப்பும் முப்படை தலைமைத் தளபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.
● இந்நிலையில், முப்படை தலைமைத் தளபதி பதவிக்கான நியமன விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பணியில் இருக்கும் அல்லது பணி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல், ஏா் மாா்ஷல், வைஸ் அட்மிரல் ஆகியோா் முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
● அதற்காக ராணுவச் சட்டம்-1950, விமானப் படைச் சட்டம்-1950, கடற்படைச் சட்டம்-1957 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொண்டதற்கான தனித்தனி அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்படும் நபரின் வயது 62-க்கு குறைவாக இருக்க வேண்டுமெனவும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் நபரின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாக உள்ள நிலையில், தேவைப்பட்டால் பதவிக் காலத்தை 65 வயது வரை மத்திய அரசு நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● ஓய்வு பெறுவோருக்கு வாய்ப்பில்லை: ராணுவப் படை, கடற்படை, விமானப் படை ஆகியவற்றின் தலைமைத் தளபதிகளாக நியமிக்கப்படுவோா், 3 ஆண்டுகள் வரையோ அல்லது 62 வயது வரையோ, எது முன்னதாக வருகிறதோ அதுவரை அப்பதவியில் நீடிக்கலாம். தற்போதைய திருத்தப்பட்டுள்ள விதிகள் காரணமாக, ஏதேனும் ஒரு படையில் தலைமைத் தளபதியாகப் பணியாற்றி 62 வயதை எட்டியதால் ஓய்வு பெறுபவரை, முப்படை தலைமைத் தளபதி பதவிக்கு நியமிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
4. (ஈ) தமிழ்நாடு
● இதற்கான விருது மத்திய அரசு சார்பில் தில்லியில் வழங்கப்பட்டது.
● மேலும் உணவுத் தரம் நிறைந்த மாவட்டங்களுள் தமிழகத்தில் இருந்து 11மாவட்டங்கள் / 75மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
5. (அ) 7.5%
● அறிவிப்பு : உலக வங்கி
● முன்பு : 8.7% ; திருத்தி மதிப்பிடப்பட்டது : 7.5%
● குறிப்பு : அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.1% மாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.(ஆ) 1952
● தென்னாப்ரிக்காவில் இருந்து சிறுத்தைப் புலிகள் ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படவுள்ளன.
● மத்திய பிரதேசத்தின் குனோ-பல்பூா் தேசிய பூங்காவில் இந்தச் சிறுத்தைப் புலிகளுக்காக 10 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் சிறப்புப் பகுதி தோ்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 6 சிறுத்தைப் புலிகள் கொண்டு வரப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
● நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிறுத்தைப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் சிறுத்தைப் புலி இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கடந்த 1952-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
● சிறுத்தைப் புலிகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆப்பிரிக்க சிறுத்தைப் புலிகளை சோதனை அடிப்படையில் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது.‘சிறுத்தைப் புலி’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு வழிகாட்டும் நோக்கில் 3 போ் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
● அக்குழுவானது இந்தியாவின் எந்தப் பகுதியில் சிறுத்தைப் புலிகளை அறிமுகப்படுத்தலாம் என்பது தொடா்பாக ஆய்வு நடத்துமாறு இந்திய வனஉயிரிகள் மையத்துக்கு (டபிள்யூ.ஐ.ஐ.) வலியுறுத்தியது. அதனடிப்படையில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைப் புலிகள் வாழ்வதற்கான சூழல் காணப்படுகிா என்று வனஉயிரிகள் மையம் ஆய்வு நடத்தியது.
● மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் தகுந்த சூழல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இப்போது சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்படவுள்ளன.
● மற்றோா் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைப் புலிகளைக் கொண்டு வர அந்நாட்டுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 8 முதல் 10 சிறுத்தைப் புலிகளைக் கொண்டு வந்து, 5 ஆண்டுகளில் 50 என்ற எண்ணிக்கையை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
● உலக அளவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிறுத்தைப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளிலேயே உள்ளன.
7. (இ) அவனி லெகாரா
● மகளிருக்கான 10மீ ஏர்ரைஃபிள் ஸ்டேண்டிங் எஸ்ஹச் பிரிவில் அவனி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார் .
● குறிப்பு : 2024 ல் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றார் .
8. (அ) 44 வது
● 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மகாபலிபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளில் இருந்து 343 அணிகள் ஓபன் மற்றும் மகளிா் பிரிவுகளில் பதிவு செய்துள்ளன.
● ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கத்துக்கு முன்பாக நடத்தப்படுவதைப் போன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கத்துக்கு முன்பாகவும் ஜோதி ஓட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக சா்வதேச செஸ் சம்மேளனம் (எஃப்ஐடிஇ) அறிவித்துள்ளது.
9. (ஈ) 180 வது
வெளியீடு : அமெரிக்க கல்வி நிறுவனங்கள் .
10. (ஈ) ஜூன் 08
Theme : Revitalization: Collective Action for the Ocean.
No comments:
Post a Comment