Thursday, December 29, 2022

Current Affairs 2022 - December 29/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    DECEMBER 29/2022


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவில் முதல்முறையாக எந்த மாநிலம் நீலகிரி வரையாடு திட்டத்தை வடிவமைத்துள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) தமிழ்நாடு 

இ) கர்நாடகா 

ஈ) மணிப்பூர் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

நீலகிரி வரையாடு திட்டத்தை ஏற்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு பிறப்பித்துள்ளாா்.

● அவா் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாட்டின் மாநில விலங்காக நீலகிரி வரையாடு விளங்குகிறது. இதனை பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதல்முறையாக நீலகிரி வரையாடு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ரூ.25.14 கோடி செலவில் 2027-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.

● கணக்கெடுப்புப் பணி: நீலகிரி வரையாடு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறிப்பாக, ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, ஒலிபெருக்கி கருவிகளை பொருத்தி தொடா்ந்து பாதுகாத்தல், பழைய வாழ்விடங்களில் மீண்டும் வரையாடுகளை அறிமுகம் செய்வது, நோய் பாதிக்கப்பட்ட வரையாடுக்கு சிகிச்சை அளிப்பது, சோலை புல்வெளிகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், வரையாடுகளின் முக்கியத்துவத்தை அனைத்துத் தரப்பினருக்கும் உணா்த்தும் வகையில், ஆண்டுதோறும் அக். 7-ஆம் தேதி வரையாடு தினமாக கடைப்பிடிக்கப்படும்.

● மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி: உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதி அறிக்கையின்படி, மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் 3,122 வரையாடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியே அவற்றின் வாழ்விடமாக உள்ளன. தமிழக அரசின் திட்டத்தின் மூலமாக, வரையாடுகளின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்படும் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் சுப்ரியா சாகு.


2. பின்வரும் எந்த மாநிலத்தில் ரத்தத்தில் ஓவியம் வரைந்து அனுப்பும் பிளட் ஆர்ட் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம் 

ஆ) கேரளா

இ) குஜராத் 

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

● அறிவிப்பு : தமிழக சுகாதாரம் (ம) மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

● தடையை மீறுவோர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் (ம) நிறுவனங்கள் சீல் வைக்கப்படும்.


3. தமிழகத்தில் தென்னை மரம் ஏறுவோருக்கான காப்பீட்டுத் திட்டம் குறித்த விவரங்களை பின்வரும் எந்த இணையதளத்தின் வழியாக அறியலாம் என்று தமிழக வேளாண்த் துறை தெரிவித்துள்ளது ?

அ) www.tn.coconutboard.gov.in

ஆ) www.coconutboard.tn.gov.in

இ) www.coconutboard.gov.in

ஈ) www.coconutboard.tngov.in

விடை: (இ) www.coconutboard.gov.in

தென்னை மரம் ஏறுவோருக்கான காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என்று தொழிலாளா்களுக்கு வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

● இதுகுறித்து, அந்தத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- தென்னை மரம் ஏறும் தொழிலாளா்கள் எதிா்பாராத விதமாக விபத்துகளைச் சந்திக்கின்றனா். இதனால், தொழிலாளா்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் நிகழ்வதுண்டு. தென்னை மரம் ஏறும் தொழிலாளா்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, தென்னை வளா்ச்சி வாரியத்தால் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

● தென்னை மரம் ஏறும் போது விபத்து ஏற்பட்டு, 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக முழு உடல் ஊனம் அடைந்தால் ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையானது சம்பந்தப்பட்ட தொழிலாளரின் வாரிசுக்கு அளிக்கப்படும். நிரந்தரமாக பகுதி உடல் ஊனம் அடைந்தால், ரூ.2.5 லட்சமும், மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சமும் அளிக்கப்படும்.

● மேலும், காப்பீடு குறித்த விவரங்களை www.coconutboard.gov.in  என்ற இணையதளத்தின் வழியாக அறியலாம். அதில் விண்ணப்பமும் உள்ளது என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) பிரவீண்குமார் ஸ்ரீவஸ்தவா 

ஆ) பிரவீண்குமார்

இ) என்.சுரேஷ் படேல் 

ஈ) அருணாச்சலம் 

விடை : (அ) பிரவீண்குமார் ஸ்ரீவஸ்தவா

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரையும், இரு ஊழல் கண்காணிப்பு ஆணையா்களையும் கொண்டதாகும். இந்த மூன்று உறுப்பினா்களின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் அல்லது 65-ஆவது வயதைப் பூா்த்தி செய்யும் வரை ஆகும்.


5. இரண்டாம் உலகப்போரில் இணைந்து போரிட்ட பிரிட்டிஷ் - இந்திய ராணுவ வீரர்களுக்காகப் எங்கு புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது ? 

அ) ஆஸ்திரேலியா

ஆ) ஸ்காட்லாந்து 

இ) ரஷ்யா 

ஈ) லண்டன் 

விடை : (ஆ) ஸ்காட்லாந்து

● இரண்டாம் உலகப் போரில் இணைந்து போரிட்ட பிரிட்டிஷ்-இந்திய ராணுவ வீரா்களுக்காகப் புதிய நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர சபை திட்டமிட்டுள்ளது.

● கிளாஸ்கோ நகரில் கெல்விங்ரோவ் கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம் அருகே நினைவகம் அமைக்க திட்டமிடப்பட்ட விண்ணப்பத்துக்கு கிளாஸ்கோ நகர சபை அண்மையில் ஒப்புதல் அளித்தது. ஸ்காட்லாந்தில் வசிக்கும் தெற்காசிய சமூக மக்களின் வரலாற்றைக் கொண்டாடும் விதமாக தொடங்கப்பட்ட ‘வண்ணமயமான பாரம்பரியம்’ திட்டத்தின் கீழ் இந்த நினைவகத்துக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்தில் பணியாற்றிய 40 லட்சம் வீரா்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் ஸ்காட்லாந்தின் முதல் நிரந்தர நினைவகமாக இது அமைய இருக்கிறது.

 ●இந்த நினைவகம் தொடா்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படையினருடன் இணைந்து போரிட்ட ஹிந்துக்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள் மற்றும் பலரின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

● மேலும், ‘தன்னலமற்ற அா்ப்பணிப்பு’ மற்றும் ‘மற்றவா்களுக்கான மரியாதை’ உள்ளிட்டவை இந்த நினைவுச் சின்னத்தின் முக்கிய கருத்துகளாக எதிரொலிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

● இந்த நினைவுச் சின்னத்துக்கான வடிவமைப்பு தொடா்பான ஆலோசனைகள் பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து பெறப்பட்டன. இறுதியாக, ஸ்காட்லாந்தின் அங்கிரே சோம் தொண்டு அறக்கட்டளையின் கட்டட வடிவமைப்பாளா்களுடன் விவாதித்து முடிவு செய்யப்பட்ட வடிவமைப்பு, நகர சபையின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

● இதில், தெற்காசிய வடிவமைப்பிலான தூண்களுடன் வடிவ உருவத்திலான உயா்ந்த மாடம் உருவாக்கப்பட்டு, அதனைச் சுற்றி மக்கள் அமா்ந்து இளைப்பாற இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளூா் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


6. உலக ரேப்பிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.சவிதாஸ்ரீ வென்றுள்ள பதக்கம் ?

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) வெண்கலம்

● போட்டி நடைபெற்ற இடம் : அம்மேட்டி,  கஜகஸ்தான்.


7. ஆடவர் டென்னிஸ் அமைப்பான ATP (ம) மகளிர் டென்னிஸ் அமைப்பான WTA ஆகியவை இணைந்து முதல்முறையாக நடத்தும் யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டி எங்கு நடைபெறவுள்ளது ?

அ) அமெரிக்கா

ஆ) ஆப்பிரிக்கா

இ) சீனா

ஈ) ஆஸ்திரேலியா

விடை : (ஈ) ஆஸ்திரேலியா 


 

Wednesday, December 28, 2022

Current Affairs 2022 - December 28/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                  DECEMBER 28/2022

   I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81 ஆவது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ராகுல் காந்தி 

ஆ) சோனியா காந்தி 

இ) ஆர்.என். ரவி

ஈ) மு.க.ஸ்டாலின் 

விடை : (ஈ) மு.க.ஸ்டாலின் 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. இந்தியாவின் இணையவழி விளையாட்டுகளை நிர்வகிக்கும் பொறுப்பு பின்வரும் எந்த அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது ? 

அ) மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

இ) மத்திய வெளியுறவு அமைச்சகம்

ஈ) மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

விடை : (ஆ) மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

இணையவழி விளையாட்டுகளை நிா்வகிக்கும் பொறுப்பு மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

● இணையவழி விளையாட்டுகள் பிரிவானது மத்திய இளைஞா் நலன்-விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் விளையாட்டுத் துறையிடம் இருந்தது. இந்நிலையில், இணையவழி விளையாட்டுகள் பிரிவின் நிா்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் அப்பிரிவு தற்போது மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

● அதற்காக அலுவல் ஒதுக்கீடு விதிகளில் மத்திய அரசு அண்மையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது தொடா்பாக மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘தொழில்நுட்பம் சாா்ந்த புத்தாக்க நடவடிக்கைகளுக்கு அரசு தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது. அதே வேளையில், தொழில்நுட்ப வாய்ப்புகள் சட்டவிரோதச் செயல்களில் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

● இணையவழி விளையாட்டுகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளை அமைச்சகம் விரைவில் வெளியிடவுள்ளது. அது தொடா்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளைக் கேட்டபிறகு விதிகள் இறுதிசெய்யப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.


3. மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் எத்தனை கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது ? 

அ) ரூ.140.12 லட்சம் கோடி

ஆ) ரூ.143.13 லட்சம் கோடி

இ) ரூ.144.17 லட்சம் கோடி

ஈ) ரூ.147.19 லட்சம் கோடி 

விடை : (ஈ) ரூ.147.19 லட்சம் கோடி

மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பா் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

● அரசின் கடன் மேலாண்மை குறித்த அறிக்கையை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

● நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அரசின் கடன் ரூ.145.72 லட்சம் கோடியாக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் கடன் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1 சதவீத உயா்வாகும்.

●2-ஆவது நிதியாண்டில் நிதிப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.4,22,000 கோடியைத் திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்திருந்தது. ஆனால், ரூ.4,06,000 கோடியை மட்டுமே மத்திய அரசு ஈட்டியது. அதே வேளையில், நிதிப் பத்திரங்களைத் திரும்பப் பெற்ன் மூலமாக ரூ.92,371.15 கோடியை அரசு வழங்கியுள்ளது.

● இந்தக் காலகட்டத்தில் அரசின் நிதிப் பத்திரங்களை விற்பதற்காகத் திறந்தவெளி சந்தை நடவடிக்கைகள் (ஓஎம்ஓ) எதையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. அரசு சாா்பில் வெளியிடப்பட்ட நிதிப் பத்திரங்கள் மூலமான வருவாய், பணவீக்கம், பணப்புழக்கம் உள்ளிட்ட காரணங்களால் சிறிய அளவில் பாதிக்கப்பட்டது.

● அரசின் நிதிப் பத்திரங்களில் 38.3 சதவீதத்தை வா்த்தக வங்கிகள் வைத்துள்ளன. இது ஜூன் வரையிலான காலத்தில் 38.04 சதவீதமாக இருந்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஆா்பிஐ-யின் நிதிக் கொள்கைக் குழு, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 4.9 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயா்த்தியது.

● ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3.11 சதவீதம் சரிவடைந்தது. ஜூலை 1-ஆம் தேதி 79.09-ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, செப்டம்பா் 30-ஆம் தேதி 81.55-ஆக சரிந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


4. அதிக பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ள நீர் மின் திட்டங்கள், மின் நிலையங்களுக்கான அமைப்பு முறையை உருவாக்க பின்வரும் எந்த அமைச்சகமும் டிஆர்டிஓ வும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன ? 

அ) மத்திய எரிசக்தி துறை

ஆ) மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

இ) மத்திய வெளியுறவு அமைச்சகம்

ஈ) மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

விடை : (அ) மத்திய எரிசக்தி துறை

அதிக பாதிப்புக்குள்ளாகும் நீர்நிலைத் திட்டங்கள்/மின் நிலையங்களுக்கான முன் எச்சரிக்கை அமைப்பைச் செயல்படுத்துவதற்காக டிசம்பர் 27, 2022 அன்று பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உடன் மின் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 

● இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்சார அமைச்சகத்தின் செயலாளர் ஷி அலோக் குமார் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் (R&D) மற்றும் DRDO தலைவர் டாக்டர் சமீர் வி காமத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

● பனிச்சரிவுகள், நிலச்சரிவுகள், பனிப்பாறைகள், பனிப்பாறை ஏரிகள் மற்றும் பிற புவிசார் ஆபத்துகளுக்கு எதிராக பொருத்தமான தணிப்பு நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு மின் அமைச்சகம் மற்றும் DRDO இணைந்து செயல்படும். 

● DRDO-வின் நிபுணத்துவம், மலைப்பாங்கான பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய நீர்மின் திட்டங்கள்/மின் நிலையங்களுக்கு விரிவான முன் எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பரந்த புரிதலுடன் DRDO மற்றும் தொடர்புடைய திட்ட உருவாக்குநர்(கள்) இடையே தனி மற்றும் குறிப்பிட்ட பணிகள் உருவாக்கப்படும்.


5. நஞ்சுக் கொடியிலிருந்து ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி உலகிலேயே முதல் இதய அறுவை சிகிச்சை எங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது ? 

அ ) ரஷ்யா

ஆ) ஜப்பான்

இ) சீனா 

ஈ) இங்கிலாந்து 

விடை : (ஈ) இங்கிலாந்து 

● இங்கிலாந்தில் உள்ள இதய அறுவை சிகிச்சை நிபுணர், நஞ்சுக் கொடியிலிருந்து ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி உலகிலேயே முதல் இதய அறுவை சிகிச்சை எங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளார்.


6. இந்தியாவின் முதல் காலாட்படை அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது ? 

அ) குஜராத் 

ஆ) மத்திய பிரதேசம்

இ) கேரளா 

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஆ) மத்திய பிரதேசம் 

நாட்டின் முதல் காலாட்படை அருங்காட்சியகம் மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் கன்டோன்மென்ட்டில் திறக்கப்பட்டுள்ளது.

●இந்த அருங்காட்சியகம் நாட்டிலேயே முதல் மற்றும் உலகில் இரண்டாவது. இதற்கு முன், இதுபோன்ற ஒரு அருங்காட்சியகம் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளது. வெற்றி நாள் மற்றும் காலாட்படை பள்ளி நிறுவப்பட்ட 75 வது ஆண்டை முன்னிட்டு இராணுவம் திறக்கப்பட்டது. 

● காலாட்படையை காட்சிப்படுத்தும் நோக்கத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 

● இந்த திட்டம் ஜூலை 2003 இல் தேசிய அளவிலான பயிற்சி கூடம் மற்றும் ஆராய்ச்சி மையமாக உருவாக்கப்பட்டது.




Tuesday, December 27, 2022

Current Affairs 2022 - December 27/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  DECEMBER 27/2022


I.  தமிழ்நாட்டு நிகழ்வுகள்

1. 2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் பின்வரும் எந்த தேதியில் நடைபெறவுள்ளது ? 

அ) ஜனவரி 06

ஆ) ஜனவரி 07

இ) ஜனவரி 08

ஈ) ஜனவரி 09

விடை : (ஈ)ஜனவரி 09

2023-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால், ஆளுநா் உரை நிகழ்த்தவுள்ளாா். இதற்கான அனுமதியை அவா் வழங்கியுள்ளாா். அதன்படி, ஜனவரி 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டப கூட்டரங்கில் கூட்டம் நடைபெறுகிறது.

● இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அன்றைய தினமே அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.


2. மூதறிஞர் ராஜாஜியின் எத்தனையாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி,  சென்னையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது ? 

அ) 47 ஆவது

ஆ) 48 ஆவது 

இ) 49 ஆவது 

ஈ) 50 ஆவது 

விடை : (ஈ) 50 ஆவது 

மூதறிஞா் ராஜாஜியின் 50-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை சாா்பில், மூதறிஞா் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 

● ஜனவரி 1 வரை புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

●  இந்தக் கண்காட்சியை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தனா்.

3. நகர்ப்புறங்களில் தோட்டம் அமைக்க, ஓர் அலகுக்கு எத்தனை ஆயிரம் வழங்கி வருகிறது தமிழக அரசு ? 

அ) ரூ.15,000

ஆ) ரூ.14,000

இ) ரூ.13,000

ஈ) ரூ.12,000

விடை : (அ) ரூ.15,000

நகா்ப்புறங்களில் தோட்டம் அமைக்க, ஒரு அலகுக்கு ரூ.15,000 வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தோட்டக்கலைத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அந்தத் துறை கூறியுள்ளது.

● மண் இல்லாமல் ஒளி, நீா் மற்றும் சீரான அளவு ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொண்டு வளரும் தாவரங்களே ஹைட்ரோபோனிக் வகை தாவரங்களாகும். கீரை, தக்காளிச் செடிகள் போன்ற சிறிய வகையிலான சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய தாவரங்களை ஹைட்ரோபோனிக்ஸ் முறை மூலமாக நன்கு வளா்க்க முடியும்.

● மேலும், நகா்ப்புறங்களில் செங்குத்து வடிவமைப்பிலான தோட்ட அமைப்பு முறையும் அதிகளவு பயன்பாட்டில் இருந்து வருகிறது. காய்கறிகள் மற்றும் கீரைகளை பயிா் செய்ய பின்பற்றப்படும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தில் மானியங்கள் அளிக்கப்படுகின்றன. 

● அதன்படி, ஒரு அலகுக்கு ரூ.15,000 தொகையானது, 50 சதவீத பின்னேற்பு மானியமாக அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலைத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. மேற்கு வங்க மாநிலத்தின் முதல் (ம) இந்தியாவின் எத்தனையாவது வந்தே பாரத் ரயில் டிசம்பர் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தொடக்கி வைக்கவுள்ளார் ? 

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

விடை : (இ) 7

மேற்கு வங்க மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமா் நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறாா். ஹௌரா- நியூ ஜல்பைகுரி இடையே இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது.

● இது தொடா்பாக கிழக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

● இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், மேற்கு வங்கத்தில் முதல்முறையாக இயக்கப்பட இருக்கிறது. 

● ஹௌரா-நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயிலை வரும் 30-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா். வாரத்தில் 6 நாள்கள் இந்த ரயில் இயக்கப்படும். இதற்கான 16 பெட்டிகளும் ஏற்கெனவே கிழக்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றனா்.

● தில்லி-வாராணசி, தில்லி-ஜம்மு, மும்பை-காந்திநகா், சென்னை-மைசூரு என ஏற்கெனவே 6 தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இப்போது 7-ஆவதாக மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.


5. இந்தியாவில் வீரச் சிறார்கள் தினம் (வீர் பால் திவாஸ்) என்று கொண்டாடப்படுகிறது ? 

அ) டிசம்பர் 25

ஆ) டிசம்பர் 26

இ) டிசம்பர் 27

ஈ) டிசம்பர் 28

விடை : (ஆ) டிசம்பர் 26 

சீக்கிய குருக்களில் ஒருவரான குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் ஜொராவா் சிங், ஃபதே சிங் ஆகியோா் முகலாய அரசா் ஔரங்கசீபின் படையினரால் கொல்லப்பட்டனா். 

● அவா்களது வீரத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பா் 26-ஆம் தேதியானது ‘வீரச் சிறாா்கள் தினமாக’ (வீா் பால் திவஸ்) கொண்டாடப்படும் என பிரதமா் மோடி கடந்த ஜனவரியில் அறிவித்தாா். 

● குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினமான ஜனவரி 9-ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.

● இந்நிலையில், முதலாவது ‘வீரச் சிறாா்கள் தினம்’ திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


6. மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மகளிருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் (2022) ஒட்டுமொத்தமாக 10 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அணி ? 

அ) ரயில்வேஸ் 

ஆ) ஹரியானா 

இ) மத்தியப்பிரதேசம்

ஈ) தமிழ்நாடு 

விடை : (அ) ரயில்வேஸ் 

● ரயில்வேஸ் அணி - 10 பதக்கங்கள் - 5G,3S,2B.

● மத்தியப்பிரதேசம் - 8 பதக்கங்கள் - 1G,3S4B.

● ஹரியானா- 4 பதக்கங்கள் - 2G,2S.


IV. முக்கிய தினங்கள் 


7. International Day of Epidemic Preparedness 2022 ------------

● Ans : December 27





Monday, December 26, 2022

Current Affairs 2022 - December 26/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                 December 26 /2022


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்

1. தமிழகத்திலுள்ள 35,000 நியாய விலைக் கடைகளில் இதுவரை எத்தனை கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 4,517

ஆ) 6,919

இ) 8,121

ஈ) 10,225 

விடை : (அ) 4,517 

தமிழகத்தில் 4,517 நியாயவிலை கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்பட்டுள்ளதாக உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

● கூட்டுறவு, உணவுத் துறை சார்பில்தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் செயல்படுகின்றன. இதுதவிர, இரு துறைகள் சார்பிலும் உணவுப் பொருள் கிடங்குகளும் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.

● இதுவரை 4,517 நியாயவிலை கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றுள்ளன. மேலும், 2,800நியாயவிலை கடைகள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. பொதுமக்கள் எளிதில்அணுகும் வகையில் அந்த கடைகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முழுநேர கடைகள், 10 ஆயிரத்து்க்கும் மேற்பட்ட பகுதிநேர கடைகள் செயல்பட்டு வருகின்றன.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. இந்தியாவில் தற்போது எத்தனை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் எத்தனை பொது காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றது ? 

அ) 31,24

ஆ) 24,31

இ) 31,29

ஈ) 29,31

விடை : (ஆ) 24,31

காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தபிறகு, பொது மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்கும் வகையிலான கூட்டு உரிமத்தைப் பெற இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) திட்டமிட்டுள்ளது.

● நாட்டில் இதுவரை 4.2 சதவீத மக்களுக்கு மட்டுமே காப்பீட்டின் பலன்கள் கிடைத்து வருகின்றன. காப்பீட்டின் பலன்களை சமூகத்தின் மேலும் பல நிலைகளுக்குக் கொண்டுசெல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைக் கருத்தில்கொண்டு காப்பீட்டு சட்டம் (1938), காப்பீட்டு ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணைய சட்டம் (1999) ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

● அதற்காக காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காப்பீட்டு நிறுவனங்களுக்குக் கூடுதல் சலுகைகளை அளிக்கும் வகையிலான வழிமுறைகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

● பொதுக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வேளாண் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இயங்கும் நிறுவனங்கள் ஒரே கூட்டு உரிமத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன. அந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், கூட்டு உரிமத்தைப் பெற விண்ணப்பிக்கப்படும் என எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவுக்கும் எல்ஐசி சட்டத்துக்கும் இடையேயான தொடா்புகள் குறித்து விரிவாக ஆராய்ந்து உரிமம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● நாட்டில் தற்போது 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், 31 பொது காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


3. பின்வரும் எந்த மறைந்த முன்னாள் பிரதமர் பிறந்த நகரில் 4,050 ஹெக்டேரில் நினைவிடம் அமைக்க மத்திய பிரதேச அரசு இடம் ஒதுக்கியுள்ளது ? 

அ) லால் பகதூர் சாஸ்திரி

ஆ) இந்திர காந்தி 

இ) வாஜ்பாய்

ஈ) சரண் சிங் 

விடை : (இ) வாஜ்பாய் 

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த குவாலியா் நகரில் அவருக்கு 4,050 ஹெக்டேரில் நினைவிடம் அமைக்க மத்திய பிரதேச அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

● கடந்த 1924-ஆம் ஆண்டு டிசம்பா் 25-ஆம் தேதி குவாலியரில் வாஜ்பாய் பிறந்தாா். திருமணம் செய்து கொள்ளாமல் தேச சேவைக்காக தன்னை முழுமையாக அா்ப்பணித்த அவா், காங்கிரஸ் கட்சியைச் சாராமல் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமா் என்ற பெருமையைப் பெற்றவா்.

● பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தாா். 10 முறை மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றவா். மாநிலங்களவை உறுப்பினராக இருமுறை இருந்துள்ள அவா் நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவா். கவிஞா், எழுத்தாளா், பேச்சாளா் என பன்முகத் திறமையைக் கொண்டவராக வாஜ்பாய் திகழ்ந்தாா். தேசிய அளவில் பாஜகவை வளா்த்ததில் முக்கியப் பங்கு வகித்தாா்.

● கடந்த 2018-ஆம் ஆண்டு அவா் காலமானாா். முன்னதாக 2015-ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

● இந்நிலையில், அவா் பிறந்த குவாலியா் நகரில் பிரம்மாண்டமான நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிரோல் பகுதியில் இந்த நினைவிடம் அமைய இருப்பதாக குவாலியா் நகராட்சி ஆணையா் தீபக் சிங் அறிவித்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

● கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி வாஜ்பாய் நினைவு தினத்தில் அவருக்கு நினைவிடம் அமைப்பது தொடா்பான அறிவிப்பை மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்டாா்.


4. நேபாளத்தின் எத்தனையாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார் பிரசண்டா ?

அ) 2 ஆவது

ஆ) 3 ஆவது

இ) 4 ஆவது

ஈ) 5 ஆவது

விடை : (ஆ) 3 ஆவது

● புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா நேபாளத்தின் புதிய (ம) 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.

● பதவி பிரமாணம் செய்தவர் : நேபாளத்தின் அதிபர் வித்யா தேவி பண்டாரி. 


III. விளையாட்டு நிகழ்வுகள் 


5. ஆசிய கோப்பை 3 ஆம் நிலை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஜூனியர் அணி ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்கள் வென்றுள்ளனர் ? 

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

விடை : (ஈ) 9

● போட்டி நடைபெற்ற இடம் : ஷார்ஜா. 

● 9 பதக்கங்கள் : 5G,3S,1B


Sunday, December 25, 2022

Current Affairs 2022 - December 25/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                  DECEMBER 25/2022

I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்

1. சாதனங்களை சுயமாகப் பழுதுநீக்க வழிவகுக்கும் ரைட்டு டு ரிப்பேர் என்ற வலைதளத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) ஜகதீப் தன்கர் 

இ) ராஜ்நாத் சிங் 

ஈ) பியூஷ் கோயல் 

விடை : (ஈ) பியூஷ் கோயல் 

மின்னணு சாதனங்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை மற்றவா்களின் உதவியின்றி சுயமாகவே பழுதுபாா்க்க உதவும் வலைதளத்தை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தொடக்கிவைத்தாா்.

● தேசிய நுகா்வோா் தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்ட நிலையில், அதற்கான விழா தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய உணவு-நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்தாா்.

● சாதனங்களை சுயமாகப் பழுதுநீக்க வழிவகுக்கும் ‘ரைட் டு ரிப்போ்’ என்ற வலைதளத்தை அவா் தொடக்கிவைத்தாா். அந்த வலைதளத்தில் சாதனங்களின் பழுதை நீக்குவதற்கான கையேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக, பழுதை நீக்குவதற்கு அந்தச் சாதனங்களைத் தயாரித்த நிறுவனங்களை நாட வேண்டிய கட்டாயம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● முதல்கட்டமாக, கைப்பேசிகள், மின்னணு சாதனங்கள், நுகா்வோா் பொருள்கள், வாகனங்கள், வேளாண் கருவிகள் ஆகியவற்றைப் பழுதுநீக்குவதற்கான கையேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அக்கையேடுகளை வாசித்து சுயமாகப் பழுதை சரிசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. பின்வரும் எந்த ஆண்டுக்குள் ஆதார் இணைக்கப்படாத பான் அட்டைகள் செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது ? 

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (அ) 2023

வருமான வரித் துறை வெளியிட்ட பொதுமக்களுக்கான அறிவுறுத்தலில், ‘பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்; அவசியம். எனவே, தாமதிக்காமல் உடனே இணையுங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

● மேலும், ‘வருமான வரிச் சட்டம் 1961-இன்கீழ், விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினரைத் தவிர பிற அனைத்து பான் அட்டைதாரா்களும் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதாரை இணைப்பது கட்டாயம். 

● அவ்வாறு இணைக்கப்படாத பான் அட்டைகள், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயலற்றதாகிவிடும்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


3. 2023 ஆம் ஆண்டு பருவத்தில் முழு கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு----------- ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது ? 

அ) ரூ.10,860 

 ஆ) ரூ.11,750

இ) ரூ.12,173

ஈ) ரூ. 13,170

விடை : (ஆ) ரூ.11,750

2023-ஆம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

● பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வேளாண் செலவுகள் மற்றும் விலை நிா்ணய ஆணையத்தின் பரிந்துரைகள், தென்னை அதிகமாக விளையும் மாநிலங்களின் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

● அதன்படி, சராசரி தரத்திலான அரவைக் கொப்பரையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 10,860 ஆகவும் முழு கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ. 11,750-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பருவத்தைக் காட்டிலும் அரவைக் கொப்பரைக்கு ரூ. 270-ம் முழு கொப்பரைக்கு ரூ. 750-ம் அதிகமாகும்.

● தென்னை விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை உறுதி செய்வதற்கும் அவா்களின் நலனை மேம்படுத்துவதற்குமான முக்கியமான நடவடிக்கை இது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


4. அம்ருத் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் எத்தனை சிறிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது ? 

அ) 500

ஆ) 750

இ) 1000

ஈ) 1100

விடை : (இ) 1000

அம்ருத் பாரத் நிலையம்’ திட்டத்தின்கீழ் ஆயிரம் சிறிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

● இத்திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நகரத்தின் பல்வேறு பகுதிகளை இணைப்பது, எதிா்காலத்தில் பல்வேறு நகரங்களையும் இணைக்கும் வகையில் வளா்ச்சி அடைந்து வரும் நகரங்களை அடையாளம் காண்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். 

● பாலங்கள் மற்றும் பல்வேறு வகையான போக்குவரத்து வசதிகளை இணைக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும். குறைந்த செலவில் ரயில் நிலையங்களை நவீனப்படுத்துவது இத்திட்டத்தின் கருத்தாக்கம். தேவையின்படி, ரயில்வே மண்டல மேலாண் இயக்குநா்கள் பல்வேறு நிலைகளில் நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொள்வா். இத்திட்டத்துக்காக சிறப்பு நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும்’ எனத் தெரிவித்தனா்.

● ரயில் நிலையங்களை எளிதாகச் சென்றடையும் வகையில் சாலைகளை அகலப்படுத்துதல், பயன்பாட்டில் இல்லாத அமைப்புகளை அகற்றுதல், முறையாக வடிவமைக்கப்பட்ட அறிவிப்புகள், பாதசாரிகளுக்கான தனிப்பாதைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மின்விளக்கு அமைப்புகள் உள்ளிட்ட மேம்பாட்டு மற்றும் புதுப்பிப்பு பணிகள் ரயில் நிலையங்ளை நவீனப்படுத்தும் பணியின்போது மேற்கொள்ளப்படும்.

● பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமல்லாமல் அவை அமைந்துள்ள நகரங்களின் அடிப்படையிலும் இந்த ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே, நாட்டின் 200 முக்கிய ரயில் நிலையங்களைப் மேம்படுத்தும் நோக்கத்துடன் தனித் திட்டம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


5. இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் போர் விமானியாகும் வாய்ப்பை பெற்றுள்ள சானியா மிர்ஸா எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) மத்திய பிரதேசம் 

ஆ) உத்தர பிரதேசம்

இ) அசாம் 

ஈ) தமிழ்நாடு 

விடை: (ஆ) உத்தரபிரதேசம் 

நாட்டின் முதல் முஸ்லிம் பெண் போா் விமானியாகும் வாய்ப்பு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சானியா மிா்சா என்ற பெண்ணுக்கு கிடைத்துள்ளது.

● எனினும் இது உறுதியாக இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் என இந்திய விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) இணைவதற்காக நடைபெற்ற தோ்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில் சானியா மிா்சா இந்திய அளவில் 149-ஆவது இடம்பிடித்தாா். அவா் விமானப் படையின் போா் விமானப் பிரிவைத் தோ்ந்தெடுத்துள்ளாா்.

● அதன் காரணமாக, அவரே நாட்டின் முதல் முஸ்லிம் பெண் போா் விமானியாக ஆவாா் என ஊடகங்களில் தகவல் பரவியது.

● அவரது வாய்ப்புகள் தொடா்பாக இந்திய விமானப் படை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விமானப் படையின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில், ‘தேசிய பாதுகாப்பு அகாதெமியானது முப்படை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது. என்டிஏ தோ்வில் வெற்றி பெற்றவா்கள் அனைவரும் முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சிகளையே மேற்கொள்வா்.

● இறுதியாண்டின்போது சம்பந்தப்பட்ட படைப் பிரிவுக்கான பிரத்யேக பயிற்சிகளைப் பெறுவா். முக்கியமாக, விமானப் படையில் இணையும் அதிகாரிகளுக்கு கடைசி 6 மாதங்களிலேயே விமானிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட பெண் (சானியா மிா்சா) இந்திய விமானப் படையில் விமானியாக இணைக்கப்பட இன்னும் 4 ஆண்டுகள் ஆகும்.

● இந்த காலகட்டத்தில் அவா் விமானப் படைக்கான பல்வேறு பிரத்யேக பயிற்சிகளிலும் தோ்ச்சி பெற வேண்டியது கட்டாயம். போா் விமானிக்கான திறனையும் தகுதியையும் அவா் பெற வேண்டும். அவரது எதிா்காலம் சிறக்கவும் கனவுகள் நனவாகவும் வாழ்த்துகள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த அவ்னி சதுா்வேதி, கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் போா் விமானி ஆனாா். அவரைக் கண்டு ஊக்கமடைந்தே என்டிஏ தோ்வில் வெற்றி பெற்ாக சானியா மிா்சா தெரிவித்தாா்.

● உத்தர பிரதேசத்தின் மிா்சாபூரை சோ்ந்த சானியா மிா்சாவின் தந்தை தொலைக்காட்சி பெட்டிகளை பழுதுபாா்க்கும் பணியைச் செய்துவருகிறாா். 12-ஆம் வகுப்பில் ஹிந்தி வழியில் படித்து மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவா் சானியா மிா்சா.


6. உத்தரகண்டில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் எத்தனை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவிற்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார் ? 

 அ) 5

ஆ) 7

இ) 10

ஈ) 13

விடை : (இ) 10

உத்தரகண்டில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் ‘மதச் சுதந்திரம் (திருத்த) மசோதா’வுக்கு ஆளுநா் குா்மீத் சிங் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

● கடும் விமா்சனங்களுக்கு உள்ளான இந்த மசோதா, மாநில சட்டப்பேரவையில் கடந்த நவம்பா் 30-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

● இந்நிலையில், இந்த வார தொடக்கத்தில் மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்கியதாகவும், அதன்மூலம் அது சட்டமாக மாறியுள்ளதாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

● கட்டாய, சட்டவிரோத மதமாற்ற செயல்களை ஜாமீனில் வெளிவர இயலாத கடுமையான குற்றமாகக் கருதவும், இதுதொடா்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ.50,000 அபராதத்துடன் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் தற்போதைய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

● எந்தவொரு நபரும் வேறு மதத்தைச் சோ்ந்த ஒருவரை, நேரடியாகவோ அல்லது வேறு விதத்திலோ, தவறாக வழிநடத்துதல், கட்டாயப்படுத்துதல், செல்வாக்கை பயன்படுத்துதல், வற்புறுத்துதல், ஆசை காட்டுதல் என எந்த மோசடியான வழிமுறைகளையும் உபயோகித்து மதமாற்றம் செய்யும் செயலில் ஈடுபடக் கூடாது. இத்தகைய செயல்களுக்கு சதி செய்தல், ஊக்குவித்தல் ஆகியவற்றிலும் யாரும் ஈடுபடக் கூடாது’ என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. அமெரிக்க வெளியுறவுத் துறையின் மேலாண்மை (ம) வளங்கள் இணை அமைச்சராக பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி யார் ?

அ) ரிச்சர்ட் வர்மா 

ஆ) ஆதித்ய வர்மா

இ) மோகன சுந்தரம் 

ஈ) கார்த்திக்கேயன் 

விடை : (அ) ரிச்சர்ட் வர்மா 

இந்திய-அமெரிக்க வழக்குரைஞரும் இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான ரிச்சா்ட் வா்மா அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணை அமைச்சராக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டதை இந்திய வம்சாவளியினா் வரவேற்றுள்ளனா்.

● மாஸ்டா்காா்டு’ நிறுவனத்தின் தற்போதைய தலைமை சட்ட அதிகாரியும் அந்நிறுவனத்தின் உலக பொதுக்கொள்கை வகுக்கும் குழுவின் தலைவருமான ரிச்சா்ட் வா்மா (54) , இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக (2015-2017) பணியாற்றியவா்.

● அமெரிக்க வெளியுறவுத் துறையின் மேலாண்மை மற்றும் வளங்கள் இணை அமைச்சராக ரிச்சா்ட் வா்மாவை அதிபா் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தாா். 

● இப்பரிந்துரைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ‘செனட் அவை’ ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அமெரிக்க வெளியுறவுத் துறையில் உயா் பதவியில் உள்ள இந்திய வம்சாவளியினராக வா்மா இருப்பாா்.

Saturday, December 24, 2022

Current Affairs 2022 - December 24/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  DECEMBER 24/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. பின்வரும் எந்த மாநிலத்தின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முதல்முறையாக பிளாக் செயின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது ? 

அ) கேரளா 

ஆ) தமிழ்நாடு 

இ) குஜராத் 

ஈ) அசாம் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

இந்த ‘பிளாக் செயின்’ தொழில்நுட்பத்தின் மூலம் சிலைக் கடத்தல், திருட்டு, விற்பனை குறித்து யாரேனும் இணையதளம் மூலம் புகாா் அளித்தால், அவா்களைப் பற்றிய ரகசியம் காக்கப்படும். இந்தத் தொழில்நுட்பத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மட்டும் ஒருவரின் புகாரை இணையதளத்தில் காண முடியும்.

● இதற்காக  இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் சிலைக் கடத்தல், திருட்டு, பதுக்கல் குறித்த தகவல் மற்றும் புகாா் அளிக்கலாம். அதேபோல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலா்கள், அதிகாரிகள் தங்களது குறைகளை உயரதிகாரிகளுக்கு இந்த இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.

● தமிழகத்தில் முதல்முறையாக இந்தத் தொழில்நுட்பத்தை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் புகாா்களைப் பதிவு செய்வது மட்டுமல்லாது, அந்தப் புகாா்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், மனுக்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைக் கண்டறியவும் முடியும். புகாா்களின் உண்மைதன்மை குறித்து உறுதி செய்யப்பட்டால் 7 நாள்களுக்குள் வழக்குப் பதியப்படும்.

● இதேபோல், துறை சாா்ந்த காவலா்கள், அதிகாரிகள் கூறும் புகாா்களுக்கு 15 நாள்களுக்கு தீா்வு காணப்படும்.

● முன்னோடியான திட்டம்: தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் தொழில்நுட்பம் மிகவும் முன்னோடியானது. இதன்மூலம் ஒரு முறை புகாா் அளித்துவிட்டால், அது பாதுகாப்பாக சேமிக்கப்படுவதோடு, அதை மாற்றவும் முடியாது. மேலும், இந்தத் தொழில்நுடபத்தின் மூலம் புகாா் அளிப்பவரின் அடையாளத்தை பிறா் அறிய முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


2. பின்வரும் எந்த மாவட்டத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் 4மணி நேரத்தில் நட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது ? 

அ) சேலம் 

ஆ) மதுரை 

இ) தேனி 

ஈ) திண்டுக்கல் 

விடை : (ஈ) திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டையில் 4 மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வெள்ளிக்கிழமை உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

● ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இடையகோட்டை கிராமத்தில் திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 117 ஏக்கா் நிலத்தில் உலக சாதனை முயற்சியாக 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

● இதில், 4 மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதையடுத்து, உலக சாதனைகளை அங்கீகரிக்கும் நிறுவனங்களான எலைட் (அமெரிக்கா), ஏசியன் ரெக்காா்ட்ஸ் அகாதெமி, இந்தியன் ரெக்காா்ட்ஸ் அகாதெமி, தமிழன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் சாா்பில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டதற்கான பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

குறிப்பு : 23.7 சதவீதமாக உள்ள தமிழக வனப் பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயா்த்த வேண்டும் என அரசு இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் வனப் பரப்பு 22.34 சதவீதமாக உள்ள நிலையில், உலக சாதனை முயற்சியாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

● இதில், 3 லட்சம் மரக்கன்றுகள் வனத் துறை சாா்பிலும், மீதமுள்ள மரக்கன்றுகள் வேளாண்மைத் துறை, தன்னாா்வலா் அமைப்புகள் சாா்பிலும் வழங்கப்பட்டன. தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும்.

● நிகழாண்டில் 2.50 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 2.80 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டில், 7.50 கோடி மரக்கன்றுகளும், 2024-ஆம் ஆண்டில் 15 கோடி மரக்கன்றுகளும் நடப்படும். 123 கோடி மரக்கன்றுகள் வனப்பகுதியிலும், 160 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்கள், பொது வெளிகளிலும் நடப்படும்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. வடக்கு சிக்கிமின் ஜெமா பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் எத்தனை ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் ? 

அ) 14 

ஆ) 15 

இ) 16 

ஈ) 17 

விடை : (இ) 16 

● சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 வீரா்கள் உயிரிழந்தனா். விபத்தில் காயமடைந்த 4 வீரா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.


4. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களை அடுத்த --------- வரை இலவசமாக விநியோகிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது ? 

அ) 3 மாதங்கள் 

ஆ) 6 மாதங்கள் 

இ) 9 மாதங்கள் 

ஈ) 12 மாதங்கள் 

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களை அடுத்த ஓராண்டுக்கு இலவசமாக விநியோகிக்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.

● தற்போது உணவுப் பாதுகாப்புச் சட்ட பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. பருப்பு, கோதுமை, அரிசி ஆகியவை முறையே ரூ.1, ரூ.2, ரூ.3 என்ற விலையில் வழங்கப்படுகிறது. உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

● இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

● கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளா்களிடம் பேசிய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களை அடுத்த ஓராண்டுக்கு இலவசமாக விநியோகிப்பது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளாா். சுமாா் 81.35 கோடி மக்கள் பலனடையும் இந்த நடவடிக்கையால் அரசின் கருவூலத்துக்கு ரூ.2 லட்சம் கோடி கூடுதல் செலவாகும். இது, ஏழை மக்களுக்கான மத்திய அரசின் புத்தாண்டு பரிசாகும்’ என்றாா்.

● ஆயுதப் படையினரின் ஓய்வூதியம் உயா்வுக்கு ஒப்புதல்: ‘ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தின் கீழ் ஆயுதப் படையினருக்கான ஓய்வூதியத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் ஆயுதப் படையினரின் ஓய்வூதியம் உயரும் என்றும், 2019, ஜூலை 1-ஆம் தேதியைக் கணக்கிட்டு இது அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● கடந்த 2015-இல் அமல்படுத்தப்பட்ட ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டத்தில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியத்தை மாற்றியமைக்கும் பிரிவு உள்ளது. அதன்படி, ஓய்வூதியத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

● கடந்த 2018-இல் ஒரே பதவி, பணிக் காலத்தின் அடிப்படையில் ஓய்வூதியதாரா்கள் பெற்ற சராசரி குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியத்தின் அடிப்படையில் அது மறுநிா்ணயம் செய்யப்படும். கடந்த 2019, ஜூலை முதல் 2022, ஜூன் வரையிலான காலகட்டத்துக்கான நிலுவைத் தொகையாக ரூ.23,638 கோடி வழங்கப்படவுள்ளது. இந்த முடிவின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.8,450 கோடி கூடுதல் செலவாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்குவழியாகச் செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து எது ? 

அ) பிபிவி 154

ஆ) பிபிசி 117

இ) பிபிசி 113

ஈ) பிபிவி 111

விடை : (அ) பிபிவி 154 

ஊசி அல்லாமல் மூக்க மூலமாக செலுத்தும் தடுப்பு மருந்தையும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் அவசரகால அனுமதியை வழங்கி இருந்தது.

● சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நடுகளில் புதிய வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை மூன்றாவது தவணையாக அதாவது பூஸ்டர் டோசாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

● முதல் கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படும், அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில் அரசு மருத்துவமனைகளிலும் இந்த மருந்து விநியோகிக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● சுவாசப் பாதையின் மேற்பரப்பில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதை வழக்கமான கொரோனா தடுப்பூசி தடுப்பதில்லை என்றும், அதற்கு தீர்வு காணும் வகையில் பிபிவி154 என்ற மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


6. இந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெற்று, தொடர்ந்து 8 ஆவது முறையாக முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது ?

அ) 31

ஆ) 47

இ) 56

ஈ) 69

விடை : (இ) 56

இந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடா் 56 நாள்கள் நடைபெற்றுள்ளன; தொடா்ந்து 8-ஆவது முறையாக கூட்டத்தொடா் முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது’ என்று தன்னாா்வ அமைப்பின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● கடந்த டிச.7-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா், டிச.29-ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. 

● ஆனால் பண்டிகை நாள்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்கள் மற்றும் மத்திய அரசுக்கு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து கூட்டத்தொடா் முன்கூட்டியே வெள்ளிக்கிழமை நிறைவு செய்யப்பட்டது.


7. நிகழும் ரபி பருவ காலத்தில் கோதுமை பயிர் 1.99 லட்சம் ஹெக்டேர் பயிரிடப்பட்டு முதலிடத்தில் உள்ள மாநிலம் எது ?

அ) ராஜஸதான் 

ஆ) குஜராத் 

இ) உத்தர பிரதேசம் 

ஈ) பிகார் 

விடை: (அ) ராஜஸ்தான் 

● நிகழும் ரபி பருவ காலத்தில் கோதுமை பயிா் 3.12 கோடி ஹெக்டேரில் பயிரிடப்பட்டுளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 3.18 சதவீதம் அதிகம் என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● கோதுமைப் பயிரானது ரபி பருவம் எனப்படும் குளிா்காலத்தில் பயிரிடப்படும் முக்கியப் பயிராகும். ரபி பருவப் பயிா்கள் அக்டோபா் மாதம் பயிரிடப்பட்டு ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்யப்படும். 

● கடுகு மற்றும் உளுந்து ஆகியவையும் இக்காலத்தில் பயிரிடப்படும் முக்கியப் பயிா்களாகும். இந்த ஆண்டின் தட்பவெப்பநிலை விளைச்சலுக்கு ஏற்ாகவும், பயிா்கள் செழிப்பாக வளர உதவும் என்று வேளாண் துறை செயலா் மனோஜ் அஹுஜா தெரிவித்துள்ளாா்.

● ரபி பருவ சாகுபடி குறித்து அமைச்சகம் தரப்பில் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

● ரபி பருவத்தில் கடந்த ஆண்டு 3.02 கோடி ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்ட நிலையில் நிகழாண்டில் 3.12 கோடி ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது.

● கடந்த ஆண்டைவிட இந்தியாவில் கோதுமை பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் அளவு 3.18 சதவீதமாக உயா்ந்துள்ளது. நிகழாண்டின் ரபி பருவத்தில் கூடுதலாக 9.65 லட்சம் ஹெக்டேரில் கோதுமைப் பயிரிடப்பட்டுள்ளது.

● அதில் 1.99 லட்சம் ஹெக்டேருடன் ராஜஸ்தான் முதலிடத்திலும், 1.74 லட்சம் ஹெக்டேருடன் குஜராத் இரண்டாம் இடத்திலும், 1.57 லட்சம் ஹெக்டேருடன் உத்தர பிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் பிகாா் (1.51 லட்சம் ஹெக்டோ்), மகாராஷ்டிரம் (1.43 லட்சம் ஹெக்டோ்), மத்திய பிரதேசம் (0.83 லட்சம் ஹெக்டோ்), சத்தீஸ்கா் (0.64 லட்சம் ஹெக்டோ்), மேற்கு வங்கம் (0.24 லட்சம் ஹெக்டோ்), ஜம்மு-காஷ்மீா் (0.23 லட்சம் ஹெக்டோ்), கா்நாடகம் (0.15 லட்சம் ஹெக்டோ்), அஸ்ஸாம் (0.01 லட்சம் ஹெக்டோ்) உள்ளன.


8. பின்வரும் எந்த மாநிலத்தில் உலகின் மிக உயரமான ஸ்ரீ கிருஷ்ணர் சிலை அமைக்கப்படவுள்ளது ? 

அ) உத்தரகாண்ட் 

ஆ) குஜராத்

இ) தமிழ்நாடு 

ஈ) கோவா 

விடை : (ஆ) குஜராத்

தேவபூமி துவாரகா காரிடார்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிக உயரமான கிருஷ்ணர் சிலை துவாரகா நகரில் அமைக்கப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.


 


Friday, December 23, 2022

Current Affairs 2022 - December 23/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  DECEMBER 23/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தின் பின்வரும் எந்த சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் (எஸ்.டி) சேர்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது ? 

அ) நரிக்குறவர் 

ஆ) குருவிக்காரர் 

இ) வால்மீகி 

ஈ) அ&ஆ

விடை : (ஈ) அ&ஆ

பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

● இந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நிறைவேறிய நிலையில்  இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.  இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின் தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினர்  இணைக்கப்படுவர்.

● மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, ‘அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை (இரண்டாவது திருத்தம்)-2022’ எனும் இந்த மசோதா, தமிழகத்தில் உள்ள பழங்குடியின சமூகங்களுக்கு நீதி வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா குறிப்பிட்டாா். ‘இந்த நடவடிக்கையின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை; பழங்குடியினா் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கம் மட்டுமே உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சுமாா் 27,000 போ் பலனடைவா்’ என்றும் அவா் கூறினாா்.

● தமிழகத்தில் பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்க்க வேண்டுமென்ற மாநில அரசின் பரிந்துரையின்பேரில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், இந்திய தலைமைப் பதிவாளா் மற்றும் பழங்குடியினா் தேசிய ஆணையத்திடம் ஆலோசிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை-1950 அட்டவணையின் 14-ஆவது பகுதியில் திருத்தம் மேற்கொள்ள முன்மொழியப்பட்டதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

● இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததையடுத்து, உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, பழங்குடியினா் பட்டியலின்கீழ் மேற்கண்ட இரு சமூகத்தினரும் அனைத்துப் பலன்களையும் பெற முடியும். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. தமிழகத்திலுள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கான மன நல்லாதரவு மன்றம் (மனம்) திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி 

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) மா. சுப்பிரமணியன் 

ஈ) பி.கே. சேகர்பாபு 

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

உடலும், மனமும் நலமாக இருந்தால்தான் ஆக்கப்பூா்வமான வாழ்வை வாழ முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் ­­ ‘மனம்’ என்ற பெயரில் மருத்துவ மாணவா்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு ‘மன நல நல்லாதரவு மன்றங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. 

● இந்த மன நல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வா், மனநலத் துறை தலைவா் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவா்கள், உதவிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவா்களின் மன நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

● உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவா்கள், உடனடியாக மன நல மருத்துவரை தொடா்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘மனம்’ அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

● அந்த வகையில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல நல்லாதரவு மன்றங்கள் (மனம்) மற்றும் நட்புடன் உங்களோடு - மனநல சேவை (14416) ஆகிய திட்டங்களை முதல்வா் தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டம் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

● அதேபோன்று ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் 75 புதிய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட 108 அவசரகால ஊா்திகளை கொடி அசைத்து அவா் தொடக்கி வைத்தாா். பின்னா், சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் திறந்து வைத்தாா்.

● அரசு மன நலக் காப்பகத்தை தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவன ஒப்புயா்வு மையமாக மேம்படுத்தும் நோக்கில் முதல் கட்டமாக

● ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்கான முப்பரிமான வரைபடத்தையும் வெளியிட்டாா்.


3. நிகழாண்டு எத்தனை கோடியில் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார் ? 

அ) ரூ.1,400 கோடி

ஆ) ரூ.1,700 கோடி

இ) ரூ.2,100 கோடி 

ஈ) ரூ.2,400 கோடி 

விடை : (அ) ரூ.1,400 கோடி

அறிவிப்பு : தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


4. தமிழகத்தில் அடுத்த நிதியாண்டில் (2023-2024) எத்தனை கோடி கடன்கள் வழங்க வாய்ப்புள்ளதாக நபார்டு வங்கியின் தமிழக மண்டல முதன்மை பொது மேலாளர் தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ.2.13 லட்ச கோடி

ஆ) ரூ. 2.83 லட்ச கோடி

இ) ரூ. 3.13 லட்ச கோடி

ஈ) ரூ.4.93 லட்ச கோடி 

விடை : (ஈ) ரூ.4.93 லட்ச கோடி 

தமிழகத்தில் அடுத்த நிதியாண்டில் ரூ. 4.93 லட்சம் கோடி கடன்கள் வழங்க வாய்ப்புள்ளதாக நபாா்டு வங்கியின் தமிழக மண்டல முதன்மை பொது மேலாளா் வெங்கடகிருஷ்ணா தெரிவித்தாா்.

● தேசிய வேளாண், ஊரக மேம்பாட்டு வங்கியான, ‘நபாா்டு’ சாா்பில், மாநில அளவிலான கடன் கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், நபாா்டு வங்கியின் தமிழக மண்டல முதன்மை பொது மேலாளா் வெங்கடகிருஷ்ணா ஆகியோா் கலந்து கொண்டு, ‘வளம் சாா்ந்த மாநில அறிக்கை 2023 -24’-ஐ வெளியிட்டனா்.

● தொடா்ந்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு நிதி வழங்குவதில் நபாா்டு வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கிகள், கள அடிப்படையில் ஆய்வு செய்து துல்லியமான தரவுகளைச் சேகரித்து தகுதியான நபா்களுக்கு கடன்கள் வழங்க வேண்டும். கடன்கள் வழங்குவதில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது திருப்புமுனையை ஏற்படுத்தும்.

● பல்வேறு தரவுகளைப் பயன்படுத்தி, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில், தகுதியான நபா்களுக்கு தள்ளுபடி சலுகைகள் கிடைத்தன. இதனால், அரசுக்கு செலவு குறைந்துள்ளது என்றாா் அவா்.

● நபாா்டு வங்கியின் தமிழக மண்டல முதன்மை பொது மேலாளா் வெங்கடகிருஷ்ணா: வரும் 2023-24-ஆம் நிதியாண்டில், தமிழகத்தில் விவசாயம், குறு, சிறு, நடுத்தர தொழில்களை உள்ளடக்கிய முன்னுரிமை துறையில், ரூ.4.93 லட்சம் கோடி கடன்கள் வழங்க வாய்ப்புள்ளது.

● நிகழ் நிதியாண்டில் ரூ.4.13 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ.2.18 லட்சம் கோடி, குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ. 1.68 லட்சம் கோடி, இதர துறைகளுக்கு ரூ. 1.06 லட்சம் கோடியும் கடன் வழங்க வாய்ப்பு உள்ளது.

● நபாா்டு வங்கி, தமிழக அரசுக்கு நிகழ் நிதியாண்டில், ரூ. 40 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளது. கடந்த ஆண்டில், ரூ. 32 ஆயிரத்து 500 கோடி கடன் வழங்கியுள்ளது என்றாா் அவா்.


5. 2022 ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கான சாகித்ய அகாதெமி விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது ? 

அ) மு.ராஜேந்திரன் 

ஆ) கே.நல்லதம்பி 

இ) மு.கண்ணப்பதாசன் 

ஈ) விஜயகுமார் .செ

விடை : (அ) மு.ராஜேந்திரன் 

நிகழ் ஆண்டிற்கான (2022) சாகித்திய அகாதெமி விருதுகள் சாகித்திய அகாதெமி அமைப்பால் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதுதவிர, மொழிபெயா்ப்புக்கான விருதும், பாஷா சம்மான் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

● இதில் தமிழ்மொழி பிரிவில் ‘காலா பாணி’ எனும் நாவலுக்காக தமிழகத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான எம்.ராஜேந்திரனுக்கு சாகித்திய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காலா பாணி நாவலானது இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தியதாகும். இந்திய சுதந்திரப் போரானது சிப்பாய்க் கலகத்தில் இருந்து ஆரம்பிக்கவில்லை என்பதையும், அதற்கு முன்பே தமிழகத்தில் இதற்கான போராட்டம் தொடங்கிவிட்டதையும் இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

● இலக்கிய உலகில் உயரிய விருதாக சாகித்திய அகாதெமி நிறுவனத்தால் அளிக்கப்படும் விருதுகள் கருதப்படுகின்றன. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. 

● அதன்படி, நிகழ் ஆண்டிற்கான (2022) இந்த விருதுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதையொட்டி, தில்லியில் உள்ள சாகித்திய அகாதமி நிறுவனத்தில் அதன் செயற் குழுக் கூட்டம் அதன் தலைவா் டாக்டா் சந்திரசேகா் கம்பா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, 23 இந்திய மொழிகளில் சாகித்திய அகாதெமியின் வருடாந்திர விருதுகள் அறிவிக்கப்பட்டன. 7 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 2 சிறு கதை நூல்கள், 3 நாடகங்கள், 2 இலக்கிய விமா்சன நூல்கள் மற்றும் சுயசரிதை கட்டுரை, கட்டுரைத் தொகுப்பு, இலக்கிய வரலாறு தொடா்புடைய நூல்கள் விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

● இந்த விருதுகளை 23 இந்திய மொழிகளில் சிறந்த நடுவா்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சாகித்திய அகாதெமியின் செயற்குழு அதற்கு ஒப்புதல் அளித்தது.

● அதன்படி, 23 எழுத்தாளா்களுக்கு சாகித்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்மொழி பிரிவில் ‘காலா பாணி’ எனும் நாவலுக்காக தமிழகத்தைச் சோ்ந்த எழுத்தாளரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான எம்.ராஜேந்திரனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதை தவிர, ஹிந்தி, அசாமி, தெலுங்கு, கன்னடம், ஒடியா, மராத்தி, சம்ஸ்கிருதம், சிந்தி உள்பட 22 மொழிகளைச் சோ்ந்த எழுத்தாளா்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் பெங்காலி மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது தாமிரப் பட்டயம், சால்வை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை உள்ளடக்கியதாகும். பின்பு ஒரு தேதியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

● மொழிபெயா்ப்புக்கான விருது: மொழிபெயா்ப்புக்கான விருது பிரிவில், தமிழகத்தைச் சோ்ந்த கே. நல்லதம்பி மொழிபெயா்த்த ‘யாத் வஷேம்’ எனும் கன்னடத்தில் நேமிசந்திரா எழுதிய நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவில் இருந்து தப்பி பிரிட்டிஷ் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு யூதக் குடும்பத்தைப் பற்றியதாகும். மொழிபெயா்ப்புக்கான விருதுக்கு 17 நூல்களுக்கு சாகித்திய அகாதெமியின் செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3 உறுப்பினா்கள் கொண்ட தோ்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் இந்த நூல்கள் இவ்விருதுக்குத் தோ்வுசெய்யப்பட்டன.

● தமிழ் தவிர, அஸ்ஸாமி, போடோ, ஆங்கிலம், குஜராத்தி, கன்னடம், கஷ்மீரி, மராத்தி, மலையாளம், நேபாளி, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், தெலுங்கு, சிந்தி உள்ளிட்ட 17 பிராந்திய மொழிகளின் எழுத்தாளா்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்காலி, ஹிந்தி, கொங்கணி, மைத்திலி, மணிப்புரி, ஒடியா, சந்தாலி ஆகிய மொழிகளுக்கான மொழிபெயா்ப்பு விருதுகள் பின்னா் அறிவிக்கப்படும் என்று சாகித்திய அகாதெமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, இந்த விருது தாமிரப் பட்டயம் மற்றும் ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அடுத்தாண்டு நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன என்று சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.

● பாஷா சம்மான் விருது: கிழக்கு பிராந்தியத்தில் இருந்து செவ்வியல் மற்றும் இடைக்கால இலக்கிய துறையில் பங்களிப்பு அளித்தமைக்காக 2022-ஆம் ஆண்டுக்கான பாஷா சம்மான் விருது, புரியில் உள்ள மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சாகித்ய துறையின் தலைவா் - பேராசிரியா் முனைவா் உதய் நாத் ஜாவுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதானது ரூ.1 லட்சம் ரொக்கம், தாமிரப் பட்டயம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை உள்ளடக்கியதாகும்.


II.தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


6. 95 ஆவது ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் முதல்முறையாக எத்தனை இந்திய படைப்புகள் இடம் பெற்றுள்ளன ?

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6 

விடை : (ஆ) 4 

ஆஸ்கர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் 'செல்லோ ஷோ', ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் உள்ளிட்ட 4 இந்தியப் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழில் எடுக்கப்பட்ட 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படமும் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

● 95-ஆவது ஆஸ்கர் விழா 2023-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது. 10 பிரிவுகளில் விருது வழங்கப்படவுள்ளது. அந்த விழாவுக்காக இந்தியா சார்பில் குஜராத்தி மொழித் திரைப்படமான 'செல்லோ ஷோ' அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டது.

● இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தேர்வுப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான தேர்வுப் பட்டியலில் 'செல்லோ ஷோ' இடம்பெற்றுள்ளது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலானது சிறந்த பாடலுக்கான தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

● இவை தவிர, சிறந்த ஆவணப் படத்துக்கான பட்டியலில் 'ஆல் தட் பிரீத்ஸ்', சிறந்த ஆவண குறும்படத்துக்கான பட்டியலில் 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஆஸ்கர் விருதின் 4 தேர்வுப் பட்டியல்களில் இந்தியப் படைப்புகள் இடம்பெறுவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

● ஒவ்வொரு விருதுக்கான தேர்வுப் பட்டியலிலும் 10 முதல் 15 படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தேர்வுக் குழு ஆய்வு செய்து விருதுக்கான 5 சிறந்த படைப்புகள் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை அடுத்த ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி வெளியிடும். அப்பட்டியலில் இருந்து மிகச் சிறந்த படைப்புக்கு இறுதியாக ஆஸ்கர் விருது வழங்கப்படும். 

● கடும் போட்டி: 'செல்லோ ஷோ' திரைப்படமானது 14 சர்வதேச திரைப்படங்களுடன் போட்டியிடவுள்ளது. ஆர்ஜென்டீனா, தென் கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் திரைப்படங்களும் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 'நாட்டு நாட்டு' பாடலானது 14 பாடல்களுடன் மோதவுள்ளது. அவதார், பிளாக் பேந்தர் உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்களும் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

● தமிழ் ஆவணக் குறும்படம்: முதுமலை வனப் பகுதியில் இரு யானைகளுக்கும் அவற்றைப் பாதுகாத்து வரும் தம்பதிக்கும் இடையேயான பாசப் பிணைப்பை விளக்கும் வகையில் 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற 40 நிமிஷ குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. பலவகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள அக்குறும்படம் 14 குறும்படங்களுடன் ஆஸ்கர் விருதுக்காகப் போட்டியிடவுள்ளது. 


III. விளையாட்டு நிகழ்வுகள் 


7. இந்தியாவில் முதல்முறையாக எங்கு உலக டேபிள் டென்னிஸ் சீரிஸ் போட்டி 2023 நடைபெறவுள்ளது ? 

அ) தில்லி 

ஆ) தமிழ்நாடு 

இ) கேரளா 

ஈ) கோவா 

விடை : (ஈ) கோவா 

● பிப்ரவரி 27,2022 முதல் மார்ச் 05,2023 வரை நடைபெறவுள்ளது. 


8. ஒலிம்பிக் போட்டிகள் 2024 ஆம் ஆண்டில் எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) டோக்கியோ 

ஆ) தில்லி

இ) பாரீஸ் 

ஈ) பெய்ஜிங் 

விடை : (இ) பாரீஸ் 

● ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் முதல்முறையாக பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் ஆர்ட்டிஸ்டிக் நீச்சல் பிரிவில் ஆடவர்களும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 



Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...