Friday, January 6, 2023

இந்தியாவின் 79 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக ஆகியுள்ளார் தமிழகத்தின் பிரனேஷ்.

இந்தியாவின் 79 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக ஆகியுள்ளார் தமிழகத்தின் பிரனேஷ். 

இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார், காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ்.

● இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் : காமன்வெல்த் போட்டியில் வெள்ளி,ஆசிய செஸ் போட்டியில் தங்கம்,16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்.

● குறிப்பு : தமிழகத்தின் 28வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரனேஷ்.


தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்கள் தொடர்பான ஆலோசனைகள் - குறைகளை தெரிவிக்க இலவச எண் 1800 425 1757 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்கள் தொடர்பான ஆலோசனைகள் - குறைகளை தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1757.

தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்கள் தொடா்பான ஆலோசனைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1757 (ம) 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் ஆகியவற்றை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடக்கி வைத்தாா்.

● காரணம் : பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் திருக்கோயில்கள் தொடா்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், நிறை, குறைகளை தெரிவிக்கும் வகையிலும் தொடங்கப்பட்டுள்ளது.


Current Affairs 2023 - January 06/2023 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 JANUARY 06 / 2022 


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்


1. தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எத்தனை கோடியாக உயர்ந்துள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார் ? 

அ) 6.10 கோடி 

ஆ) 6.12 கோடி

இ) 6.15 கோடி

ஈ) 6.20 கோடி

விடை : (ஈ) 6.20 கோடி

தமிழகத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளா் பட்டியல் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மாநில தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது.

● மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179-ஆக உயா்ந்துள்ளது. 

● இதில், ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 866. பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 3 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 286. மூன்றாம் பாலின வாக்காளா்களின் எண்ணிக்கை 8,027.

● அதிகம், குறைவு: தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூா் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 66 ஆயிரத்து 295 வாக்காளா்கள் உள்ளனா். 

● குறைந்தபட்ச வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 125 வாக்காளா்கள் உள்ளனா்.

● வெளிநாடுகளில் வசித்து, தமிழ்நாட்டில் வாக்குரிமை வைத்திருப்போரின் எண்ணிக்கை 3,310 ஆகும். 

● மொத்த வாக்காளா்களில் மாற்றுத் திறன் படைத்தவா்களாக அறியப்பட்டவா்கள் 4 லட்சத்து 48 ஆயிரத்து 138. 

● குறிப்பு : 

மொத்த வாக்காளா்கள்: 6,20,41,179

ஆண்கள்: 3,04,89,866

பெண்கள்: 3,15,43,286

மூன்றாம் பாலினத்தவா்: 8,027.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. வடகிழக்கு மாநிலங்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் தொடர எத்தனை கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது ?

அ) ரூ. 10,170 கோடி

ஆ) ரூ.12,882 கோடி

இ) ரூ. 13,170 கோடி

ஈ) ரூ. 13,999 கோடி

விடை : (ஆ) 12,882 கோடி

வடகிழக்கு மாநிலங்கள் வளா்ச்சி திட்டங்கள் தொடர ரூ. 12,882 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 

● அறிவிப்பு :  வடகிழக்கு மாநிலங்களுக்கான அமைச்சா் கிஷண் ரெட்டி.

● வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கு 15-ஆவது நிதி ஆணையம் 2024-26 வரையில் பரிந்துரைத்திருந்த ரூ.19,482 கோடியில் மீதமுள்ள ரூ.12,882 கோடியை விடுவிக்க பிரதமா் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

● பெரும்பாலான வளா்ச்சித் திட்டங்கள் 2026-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். 


3. தில்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் மோடி எந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார் ?

அ) 2019

ஆ) 2020

இ) 2021

ஈ) 2022

விடை : (ஆ) 2020

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமா்வு வரும் 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10-ஆம் தேதி வரையும், இரண்டாம் அமா்வு மாா்ச் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இன்னும் தேதிகள் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

● பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

● இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் நுழைவின்போது எம்.பி.க்கள் பயன்படுத்துவதற்கான ஸ்மாா்ட் காா்டு அடிப்படையிலான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

● மேலும், புதிய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் ஒலி-ஒலி கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து எம்.பி.களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


4) பின்வரும் எங்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் முதலாவது தேசிய மாநாடு தொடங்கப்பட்டுள்ளது ?

அ) போபால் 

ஆ) கொல்கத்தா 

இ) காந்திநகர்

ஈ) சென்னை 

விடை : (அ) போபால் 

மாநில நீா்வளத் துறை அமைச்சா்களின் முதலாவது தேசிய மாநாடு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சாா்பில் மத்திய பிரதேச தலைநகா் போபாலில் வியாழக்கிழமை தொடங்கியது. 

● இருநாள் மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமா் மோடி பங்கேற்று உரையாற்றினார் .


5. உலகின் மிக நீண்டதூர நதிவழி சொகுசு கப்பல் சேவை பின்வரும் எந்த நாட்டில் தொடங்கப்படவுள்ளது ?

அ) சீனா 

ஆ) ரஷ்யா

இ) இந்தியா

ஈ) பிரிட்டன் 

விடை : (இ) இந்தியா 

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மற்றும் அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகா் இடையே வங்கதேசம் வழியாக இயக்கப்படவிருக்கும் ‘கங்கா விலாஸ்’ நதி சுற்றுலா கப்பலை பிரதமா் நரேந்திர மோடி ஜனவரி 13-இல் தொடக்கிவைக்கவுள்ளாா்.

● கங்கை, பிரம்மபுத்ரா என நாட்டின் இரு பெரும் நதிகளில் 3,200 கி.மீ. தொலைவுக்கு இக்கப்பல் பயணிக்கும். 

● ஐம்பது நாள்கள் நடைபெறும் இந்த சுற்றுலா பயணத்தில் உலக பாரம்பரிய சின்னங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கப்பல் நின்று செல்லும். 

● உலகிலேயே மிக நீளமான நதி சுற்றுலா என்ற சிறப்பும் ‘கங்கா விலாஸ்’ கப்பல் பயணத்துக்கு சொந்தமாக உள்ளது.


6. சமுத்ரயான் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் எத்தனை ஆய்வாளர்களை கடலில் 500 மீ ஆழத்துக்கு அனுப்பி ஆய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது ?

அ) 6

ஆ) 5

இ) 4

ஈ) 3

விடை : (ஈ) 3

இந்தியாவிலேயே கட்டப்பட்ட சமுத்ராயன் என்ற கப்பலில் கடலுக்கு அடியில் 500 மீட்டர் ஆழத்திற்கு இந்த ஆண்டு மூன்று ஆய்வாளர்களை இந்தியா அனுப்பவுள்ளது.


7. பின்வரும் எந்த ஆண்டுக்குள் பெங்களூரு - சென்னை விரைவுச் சாலைப் தயாராகிவிடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து (ம) நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளனர் ?

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026

விடை : (ஆ) 2024

பெங்களூரு: பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை அமைக்கும் திட்டம் வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

● பெங்களூருவிலிருந்து சென்னை வரை ரூ. 16,730 கோடி மதிப்பில் 262 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

● இந்த விரைவுச் சாலையானது கர்நாடகத்திலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தை இணைக்கிறது.


8. 108 ஆவது இந்திய அறிவியல் மாநாடு பின்வரும் எங்கு நடைபெற்று வருகிறது ?

அ) நாகபுரி 

ஆ) சென்னை

இ) கொல்கத்தா 

ஈ)திருச்சூர் 

விடை : (அ) நாகபுரி 

ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளா்கள், கல்வியாளா்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம்.

● நாகபுரியில் நடைபெறும் 108-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

● குறிப்பு : இந்தியாவில் குறைந்து வரும் ஆராய்ச்சியாளா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் திட்ட முயற்சிகளுக்கு மாநில அரசுகள் நிதி ஒதுக்கி ஒத்துழைப்பு அளிக்க மத்திய அரசின் அறிவியல் ஆலோசகா் அஜய் குமாா் சூட் கோரிக்கை விடுத்துள்ளாா்.


III. முக்கிய நிகழ்வுகள் 


9. World Day of War Orphans 2023 ---------

Ans : January 06 


Tuesday, January 3, 2023

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனல்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனல் ஜனவரி 02/2023 முதல்  தொடங்கப்பட்டுள்ளது. 

● மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

● நோக்கம் : மாநில சுகாதார நலத் திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்று நோய் விழிப்புணா்வு, தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அதில் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● முன்பு : ஏற்கெனவே பொது சுகாதாரத் துறைக்கென பிரத்யேக யூ-டியூப் சேனல் இயங்கி வருகிறது. 

Monday, January 2, 2023

Current Affairs 2023 - January 02 / 2023 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    JANUARY 02 /2023


 I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயர்த்தி ஜனவரி 01,2023 முதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் ?

அ) 2%

ஆ) 3%

இ) 4%

ஈ) 5%

விடை : (இ) 4%

 ● அரசு ஆசிரியர், ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 

● இதன்மூலம், 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2,359 கோடி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு தொடங்கப்படவுள்ள யூ-டியூப் சேனல் ?

அ) நலம் 108

ஆ) நலம் 212

இ) நலம் 317

ஈ) நலம் 365 

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனல் திங்கள்கிழமை (ஜன.2) முதல் தொடங்கப்படவுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கவுள்ளாா்.

● மாநில சுகாதார நலத் திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்று நோய் விழிப்புணா்வு, தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அதில் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● முன்பு : ஏற்கெனவே பொது சுகாதாரத் துறைக்கென பிரத்யேக யூ-டியூப் சேனல் இயங்கி வருகிறது. தற்போது, அடுத்த கட்டமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முழுமையான செயல்பாடுகளை விளக்கும் வகையில் ‘நலம் 365’ சேனல் தொடங்கப்படவுள்ளது.


3. தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1000 இல் இருந்து எத்தனை ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது ?

அ) ரூ.1,500

ஆ) ரூ.2000

இ) ரூ.2,500

ஈ) ரூ.3,000

விடை : (அ) ரூ.1,500

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,000-இல் இருந்து ரூ.1,500 ஆக உயா்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

● வருவாய் துறைவழியாக ஓய்வூதியம் பெற்றுவரும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது மாத ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. 

● இது, ரூ.1,500 ஆக ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயா்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263.56 கோடி கூடுதல் செலவாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் எத்தனையாவது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறவுள்ளது ?

அ) 100

ஆ) 108

இ) 111

ஈ) 120

விடை : (ஆ) 108 

1914-ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. இப்போது 108-ஆவது மாநாடு நாகபுரியில் உள்ள ஆா்.டி.எம். நாகபுரி பல்கலைக்கழகத்தில் ஜனவரி 03 முதல் ஜனவரி 07 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. 

● இதில் அறிவியல், தொழில்நுட்பத்தின் வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறது. இந்தத் தலைப்பில் பிரபல பெண் விஞ்ஞானிகளும் பேச இருக்கின்றனா்.

● அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடா்பாகவும், உயா் கல்வி, ஆய்வுப் படிப்புகள் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு சம வாய்ப்பை மேம்படுத்துவது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.


5. கைப்பேசி ஏற்றுமதியை எத்தனை கோடிக்கு உயர்த்துவது 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கு என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ.50,000 கோடி

ஆ) ரூ.1லட்சம் கோடி

இ) ரூ.1.5 லட்சம் கோடி 

ஈ) ரூ.2 லட்சம் கோடி

விடை : (ஆ) 1 லட்சம் கோடி

கைப்பேசி ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடிக்கு உயா்த்துவது பிரதமா் நரேந்திர மோடியின் 2023-ஆம் ஆண்டுக்கான இலக்கு என மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா்.

● நாட்டில் மின்னணு சாதனங்கள் தயாரிப்பை அதிகரிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும். கைப்பேசிகளின் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடிக்கு உயா்த்துவதுடன் ஏற்றுமதி பட்டியலில் முதன்மையான 10 பொருள்களில் ஒன்றாக கைப்பேசியையும் இடம்பெறச் செய்வதே பிரதமா் மோடியின் 2023-ஆம் ஆண்டுக்கான இலக்காகும்.

● தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கைப்பேசிகளின் மதிப்பு ரூ.45 ஆயிரம் கோடியாகும். கைப்பேசி தவிா்த்து பிற மின்னணு சாதனங்களைத் தயாரிப்பதற்கான சூழலை விரிவுபடுத்த உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

● இத்திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத்துக்கான வன்பொருள்களைத் தயாரிக்க டெல், ரைஸிங் ஸ்டாா், லாவா இண்டா்நேஷனல் உள்ளிட்ட 14 நிறுவனங்களை மத்திய அரசு தோ்ந்தெடுத்துள்ளது.


6. 2021 ஆம் ஆண்டில் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டியதன் காரணமாக எத்தனை பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ?

அ) 1040

ஆ) 1235

இ) 1317

ஈ) 1997

விடை : (அ) 1040

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 2021-இல் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகள்’ என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

● இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு மொத்தம் 4.12 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1.53 லட்சம் போ் உயிரிழந்தனா். 3.84 லட்சம் போ் படுகாயமடைந்தனா்.

● கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டியதன் காரணமாக 1,997 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 1,040 போ் உயிரிழந்தனா். 

● சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகளைக் கவனத்தில் கொள்ளாமல் விதியை மீறிச் சென்ன் காரணமாக நிகழ்ந்த 555 சாலை விபத்துகளில் 222 போ் உயிரிழந்தனா். 

● சாலைகளில் காணப்படும் பள்ளங்களின் காரணமாக 3,652 சாலை விபத்துகள் நேரிட்டத்தில் 1,481 போ் உயிரிழந்தனா்.


7. நேபாளத்தில் பின்வரும் எந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை நேபாள பிரதமர் பிரசண்டா அண்மையில் திறந்து வைத்தார் ?

அ) ஜப்பான்

ஆ) இந்தியா

இ) ஆஸ்திரேலியா

ஈ) சீனா

விடை : (ஈ) சீனா

நேபாளத்தில் சீன உதவியுடன் அமைக்கப்பட்ட சா்வதேச விமான நிலையத்தை பிரதமா் பிரசண்டா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

● மேற்கு நேபாளத்தின் சுற்றுலா மையமாக கருதப்படும் பொக்காராவில் சீனாவின் உதவியுடன் இந்த பிராந்திய சா்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

● இந்த விமான நிலையத்துக்காக 215 மில்லியன் டாலா் கடனுதவி பெற கடந்த 2016-இல் சீனாவுடன் நேபாளம் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது.


III. முக்கிய நிகழ்வுகள் 


8. World Introvert Day 2023 -------

● Ans : January 02

● Theme : Celebrating the power of Introvert

● First Observed : 2011


Sunday, January 1, 2023

Current Affairs 2023 - January 01 / 2023 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                    JANUARY 01/2023


I. தமிழ்நாட்டு செய்திகள் 


1. தமிழகத்தில் எங்கு மேம்படுத்தப்பட்ட காவல் செயலிகளின் பயன்பாடு முதல்முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது ?

அ) கேரளா

ஆ) பஞ்சாப்

இ) அசாம்

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

● மேம்படுத்தப்பட்ட காவல் செயலிகள் :-

¤ சேலம் மாநகரில் முக்கியமான 1,100 இடங்களை ரோந்து போலீசார் நேரடியாக சென்று கண்காணிப்பதை உறுதி செய்து, அவர்களது பணியை ஒருங்கிணைக்கும் வகையில் இ-பீட் ரோந்து செல்போன் செயலி.
¤ காவல் நிலைய வரவேற்பாளர் பணி மீனாய்வு செயலி.
¤ நெடுஞ்சாலை ரோந்து செல்போன் செயலி.
¤ மின்னணு காவல் ரோந்து செயலி.

● தொடக்கி வைத்தவர் : சேலம் மாநகர காவல் ஆணையர் நம்மல் ஹோடா.



II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) புதிய தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளவர் யார் ? 

அ) பங்கஜ் குமார்

ஆ) சுஜோய் லால் தாவ்சென்

இ) பங்கஜ் லால்

ஈ) சுந்தர் சேத்ரி

விடை : (ஆ) சுஜோய் லால் தாவ்சென்

● இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக சுஜோய் லால் தாவ்சென் பொறுப்பேற்றுள்ளார்.

● இவருக்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்தவர் : பங்கஜ் குமார்.

● சுஜோய் லால் தாவ்சென்

¤ இவர் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) தலைமை இயக்குநராக உள்ள சுஜோய் கூடுதல் பொறுப்பாக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுள்ளார்.

● குறிப்பு: இவர் ஏற்கெனவே BSF சிறப்பு தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

● BSF படை : சுமார் 2.65 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
¤ பாகிஸ்தான்,வங்தேசத்துடன் இந்தியா பகிர்ந்து வரும் 6,300 கி.மீ. க்கும் மேலான எல்லையை இந்தப் படையினர் பாதுகாத்து வருகின்றனர்.


3. பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) நிர்வாக இயக்குநர் (ம) தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

அ) அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா 

ஆ) பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா 

இ) பாலசுப்பிரமணியன் . கே

ஈ) பங்கஜ் சிங் 

விடை : (அ) அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா


4. மலிவு விலையில் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்து வரும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 2024 ஆம் ஆண்டுக்குள் -------- ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ? 

அ) 5,300

ஆ) 6,600

இ) 8,700

ஈ) 10,000

விடை : (ஈ) 10,000

● மக்கள் மருந்தகம் :- 
தரமான மருந்து பொருளாகள் மக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் மருந்தகம் திட்டத்தை 2008 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

● மத்திய வேதிப் பொருள்கள் - உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்துப் பொருள்கள் துறை இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

● இந்நிலையில் மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.


5. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் ( NFSA ) கீழ்  81.35 கோடி பயனாளிகளுக்கு என்று முதல் 2023 ஆம் முழுவதும் இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட உள்ளது ?

அ) ஜனவரி 01

ஆ) ஜனவரி 12

இ) ஜனவரி 26 

ஈ) ஜனவரி 31

விடை : (அ) ஜனவரி 01

● கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தை என்எஃப்எஸ்ஏ வுடன் மத்திய அரசு அண்மையில் இணைந்துள்ளது.

●  இந்த புதிய திட்டத்தின் படி என்எஃப்எஸ்ஏ வின் கீழ் நாட்டில் உள்ள 81.35 கோடி பயனாளிகளுக்கு 2023 ஆம் ஆண்டு முழுவதும் இலவச தானியங்கள் விநியோகிக்கப்படவுள்ளது.


6.2022 ஆம் ஆண்டின் தேசிய புலனாய்வு முகமை (NIA) சார்பில் எத்தனை பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது ? 

அ) 60

ஆ) 67

இ) 72

ஈ) 79

விடை : (இ) 72 

● வெளியீடு : மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

● குறிப்பு : இதுவரை இல்லாத வகையில் 72 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


7. பெட்ரோலில் கலப்பதற்காக விநியோகிக்கப்படும் எத்தனால் மீதான சரக்கு - சேவை வரி (GST) குறைப்பானது என்று முதல் அமலுக்கு வருகிறது ? 

அ) ஜனவரி 01

ஆ) ஜனவரி 11

இ) ஜனவரி 17

ஈ) ஜனவரி 26

விடை : (அ) ஜனவரி 01

● பெட்ரோலுடன் கலப்பதற்காக பயன்படுத்தப்படும் எத்தனால் மீதான ஜிஎஸ்டி வரி 18% ல் இருந்து 5% குறைத்து ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்திருந்தது.

● இந்த வரி குறைப்பானது ஜனவரி 01/2023 முதல்  அமலுக்கு வந்துள்ளது.


8. கால்நடைகளின் ஏற்படும் தோல் கழலை (லும்பி ஸ்கின் ) நோயைத் தடுப்பதற்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் பெயர் ?

அ) லும்பி - நோவோவேக் 

ஆ) லும்பி - கோவோவேக்

இ) புரோவேக்- லும்பி

ஈ) லும்பி - புரோவேக் 

விடை : (ஈ) லும்பி - புரோவேக் 

● தடுப்பூசி தயாரிப்பு : 

¤ ஹரியாணாவின் தேசிய கால்நடை தடுப்பூசி மையம், தேசிய கால்நடைகள் ஆராய்ச்சி மையம், உத்தர பிரதேசத்தின் இந்திய கால்நடைகள் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் லும்பி - புரோவேக் தடுப்பூசி உருவாக்கப்பட்டது.

● மேலும் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை மகாராஷ்டிரத்தின் புனேவைச் சேர்ந்த கால்நடை உயிரியல் பொருள்கள் மையத்துடன் (ஐவிபிபி) மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

● தடுப்பூசியை வர்த்தக நோக்கில் தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் ஆராய்ச்சி னத் துறையானது அந்நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளது . 


9. இந்தியாவில் முதல்முறையாக எங்கு ஓமிக்ரான் எக்ஸ்பி.பி.1.5 வகை தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது ? 

அ) மகாராஷ்டிரா

ஆ) குஜராத்

இ) தமிழ்நாடு

ஈ) மணிப்பூர்

விடை : (ஆ) குஜராத் 


III. முக்கிய தினங்கள் 

10. Global Family Day 2023 -------------

● Ans : January 01 


இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படையின் (BSF) புதிய தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார் சுஜோய் லால் தாவ்சென்

Sujoy Lol Thaosen took over the additional charge of Director General of Border Security Force (BSF).

இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக சுஜோய் லால் தாவ்சென் பொறுப்பேற்றுள்ளார்.

● இவருக்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்தவர் : பங்கஜ் குமார்.

சுஜோய் லால் தாவ்சென்

¤ இவர் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) தலைமை இயக்குநராக உள்ள சுஜோய் கூடுதல் பொறுப்பாக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுள்ளார்.

குறிப்பு: இவர் ஏற்கெனவே BSF சிறப்பு தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

BSF படை : சுமார் 2.65 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
¤ பாகிஸ்தான்,வங்தேசத்துடன் இந்தியா பகிர்ந்து வரும் 6,300 கி.மீ. க்கும் மேலான எல்லையை இந்தப் படையினர் பாதுகாத்து வருகின்றனர்.

 

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...